#மந்திராலயம் மாஞ்சாலாவில் குரு #இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணம் பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. குரு இராகவேந்திரரிடம் மாமிசத்தைப் படைத்து அவமரியாதை செய்ய நினைத்த, அந்த இடத்தை ஆண்ட நவாபின் படையலை பழங்களும் மலர்களுமாக
மாற்றிய அவரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும் கேட்க வேண்டினான். அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார். நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம், வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். இராகவேந்திரர் அன்மீக
சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு
வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின் கிராம தேவதை மாஞ்சாலியம்மன். அவர் இராகவேந்திரரிடம் சென்று தாங்கள் வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர் என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார்.
ராகவேந்திரர் பிருந்தாவனத்தை தரிசித்த பிறகு எதிரே மந்திராலய ஹனுமன் உள்ளார். சிவ லிங்கமும் உள்ள்து. இராமர் கிஷ்கிந்தா செல்லும் போது அமர்ந்த கல்லினால் இந்த அனுமான் செய்யப்பட்டுள்ளார். இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பிறகு எஞ்சிய கல்லில் இந்த விக்ரகம் அவரின் விருப்பபடி உருவாக்கி
அவர் எதிரிலியே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கல்லின் ஒரு சிறு பகுதி இன்னும் மாதவரம் கிராமத்தில் உள்ளது அதை இராமராக கருதி வழிபட்டு வருகின்றனர். மஹான் ராகவேந்திரர் பிருந்தாவனம் அருகில் அவரின் பூர்வாசிரம சகோதரரின் கொள்ளுப் பேரனான வாதீந்திர தீர்த்தர் பிருந்தாவனமும் அமைந்துள்ளது.
ராகவேந்திரர் பூஜை செய்த மூலராமர் விக்ரகம் இன்றும் மடாதிபதியால் பூஜை செய்யப்பட்டு வருகிறது. கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது.
அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து
நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது. ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். ஶ்ரீ ராகவேந்திரரே அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி அந்த இடம் சட்டப்படி மடத்துக்கு சொந்தம் என்பதை ஐயம் திரிபுற விளக்கியதைக்
கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார். விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப்
பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மந்தாரலயத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் பஞ்சமுகி க்ஷேத்ரம் உள்ளது. இந்த ஊரை காண தானம்
என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலைக்குகையில் குருராஜர் செய்த தவத்தை மெச்சிப் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி காட்சி தந்தார். இங்கிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் சன்னதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிக்குப் படியேறி மலைக்குகையில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
#அரவான்
மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தன் உயிரையே விட்டவரும் (களப்பலி) மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவரும் இவர் மட்டுமே. அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும்
பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிட சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில்
ஈடுபட வேண்டும், இரண்டாவது மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும். நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்து கொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம் பூண்டு அனைத்து
DMK is not giving good governance, does not care for its state even though the ruling party, all their leaders are only working for their personal gains, yet is in a good position to win elections again. How? 1. Weak opposition 2. Money for votes. 3. King in spreading lies.
What should BJP do to gain vote share? 1. Grass roots level work is needed. 2. keep ambulances and vehicle for carrying the dead to the cremation area, in several areas throughout the state in cities and villages and provide them free of charge to those in need. BJP party sign
and symbol must be well posted on these vehicles. 3. Hire smart, proven professionals to advice strategy to combat the upcoming state election. 4. Revamp the BJP IT cell with smart people to rebut the false narratives set by DMK IT cell and its loyal followers. 5. Spend money
#தவளகிரீஸ்வரர்
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப் பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை
தவளகிரி என்றும் அழைப்பார்கள். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவ பெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய
தலங்களை தரிசிக்க எண்ணினார். அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, தவளகிரீஸ்வரர் என்று
#நெல்லை_சங்கரன்கோவில்_அறியாத_தகவல்கள்
அன்னை கோமதி தவம் செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் தீரும்.
இங்கே அதிகார நந்தி தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.
இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள்
தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டு வந்த காய்கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து
விரதம் இருந்தால், கண்களில் வரும் நோய்கள் நீங்கும்.
சனிதோஷம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று, இத்திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், சனி தோஷம் நீங்கப் பெறுவார்கள். சனி தோஷத்தினால் விளையும் வியாதிகளும் நீங்கப் பெறுவார்கள். புதன்கிழமை அன்று இத்திருத்தலத்தில் விரதம்
#மயிலை_ஸ்ரீஆதிகேசவ_பெருமாள்
ஆதிகேசவ பெருமாள் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது. அங்கு ஆலய மூலவர்களுடன் பேயாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. அவர் திருவவதாரம் செய்தத் தலம் இது. சித்ரை புஷ்கரணி என்ற பெயரில் இருந்த நீர் நிலை காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என தற்போது
அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன் வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். யாகம் முடிந்து
விட்டால் பிருகு முனிவருக்கு தங்களை அழிக்கும் சக்தி வந்துவிடும் என்பதினால் அந்த யாகம் நடந்து கொண்டு இருந்த போது அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது. தப்பி ஓடிய ரிஷி
#வனபத்ரகாளியம்மன்
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.
முன்னொரு காலத்தில் ஈசனிடம்
இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில்
அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் கோவில். வனப்பகுதிக்குள் இருப்பதால் 'வன பத்ரகாளியம்மன்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம், ஆரவல்லி, சூரவல்லி கதையோடு தொடர்பு உடையதாக கூறப்படுகிறது.
ஆண் வாடையே அறியாமல் வாழ்ந்தவர்கள், ஆரவல்லி, சூரவல்லி ஆகியோர். இவர்கள் இருவரும் மந்திரம், சூனியம்