#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ‘விஸ்வம்’ என்றால் பெரிய என்று ஒரு பொருள் உண்டு. ‘ரூபம்’ என்றால் உருவம். ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்று
தான் திருநாமம். பெரிய பெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே! தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும்
பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார். இதனால் தானே என்னவோ ஆகம ரீதியாகவும் காவேரியிலிருந்து யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன், அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி
விளக்குதல்’ என்று பெயர். ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது. அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது. காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய்
திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது. யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது. பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள். யானையின் முகத்தில் வாஸம் செய்கிறாள். பகவான் மஹாலக்ஷ்மியினை கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான். இந்த அழகினை பின்வரும் பாடல்
ரசிக்கின்றார் #ஸ்வாமி_தேசிகர்.
பாடல்
பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||
பொருள்:
ஸ்ரீரங்கநாதா அதிகாலை வேளையில் உனக்கு தொண்டு புரியும்
கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர். துயில் எழ வேண்டும் உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது. இந்த அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர் உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை
அவர்கள் அனுபவிக்க வேண்டும். உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே துயில் எழுவாயாக!
சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அரவான்
மகாபாரதப் போரில் நிறைய வீரர்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். ஆனால், மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காக தன் உயிரையே விட்டவரும் (களப்பலி) மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவரும் இவர் மட்டுமே. அர்ஜுனனுக்கும், நாக இளவரசியான உலுப்பிக்கும் அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும்
பொருந்திய மகனாகப் பிறக்கிறார் அரவான். குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக காளி தெய்வத்திற்கு தன்னையே பலியிட சம்மதிக்கிறார் அரவான். ஆனால், தான் சாவதற்கு முன்னால் இரண்டு ஆசைகள் இருப்பதாகக் கூறுகிறார். முதலாவதாக, தான் திருமணம் செய்துக் கொண்டு திருமண வாழ்க்கையில்
ஈடுபட வேண்டும், இரண்டாவது மகாபாரதப் போரை தான் முழுமையாகக் காண வேண்டும். நாளைக்கு இறக்கப் போகிறவரை திருமணம் செய்து கொள்ள யாருமே சம்மதிக்கவில்லை. இதனால் கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்துக் கொள்கிறார். அரவான் இறந்த பிறகு விதவைக் கோலம் பூண்டு அனைத்து
DMK is not giving good governance, does not care for its state even though the ruling party, all their leaders are only working for their personal gains, yet is in a good position to win elections again. How? 1. Weak opposition 2. Money for votes. 3. King in spreading lies.
What should BJP do to gain vote share? 1. Grass roots level work is needed. 2. keep ambulances and vehicle for carrying the dead to the cremation area, in several areas throughout the state in cities and villages and provide them free of charge to those in need. BJP party sign
and symbol must be well posted on these vehicles. 3. Hire smart, proven professionals to advice strategy to combat the upcoming state election. 4. Revamp the BJP IT cell with smart people to rebut the false narratives set by DMK IT cell and its loyal followers. 5. Spend money
#தவளகிரீஸ்வரர்
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப் பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை
தவளகிரி என்றும் அழைப்பார்கள். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவ பெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய
தலங்களை தரிசிக்க எண்ணினார். அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, தவளகிரீஸ்வரர் என்று
#நெல்லை_சங்கரன்கோவில்_அறியாத_தகவல்கள்
அன்னை கோமதி தவம் செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் தீரும்.
இங்கே அதிகார நந்தி தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.
இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள்
தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டு வந்த காய்கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து
விரதம் இருந்தால், கண்களில் வரும் நோய்கள் நீங்கும்.
சனிதோஷம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று, இத்திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், சனி தோஷம் நீங்கப் பெறுவார்கள். சனி தோஷத்தினால் விளையும் வியாதிகளும் நீங்கப் பெறுவார்கள். புதன்கிழமை அன்று இத்திருத்தலத்தில் விரதம்
#மயிலை_ஸ்ரீஆதிகேசவ_பெருமாள்
ஆதிகேசவ பெருமாள் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது. அங்கு ஆலய மூலவர்களுடன் பேயாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. அவர் திருவவதாரம் செய்தத் தலம் இது. சித்ரை புஷ்கரணி என்ற பெயரில் இருந்த நீர் நிலை காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என தற்போது
அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன் வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். யாகம் முடிந்து
விட்டால் பிருகு முனிவருக்கு தங்களை அழிக்கும் சக்தி வந்துவிடும் என்பதினால் அந்த யாகம் நடந்து கொண்டு இருந்த போது அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது. தப்பி ஓடிய ரிஷி
#வனபத்ரகாளியம்மன்
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.
முன்னொரு காலத்தில் ஈசனிடம்
இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில்
அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் கோவில். வனப்பகுதிக்குள் இருப்பதால் 'வன பத்ரகாளியம்மன்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம், ஆரவல்லி, சூரவல்லி கதையோடு தொடர்பு உடையதாக கூறப்படுகிறது.
ஆண் வாடையே அறியாமல் வாழ்ந்தவர்கள், ஆரவல்லி, சூரவல்லி ஆகியோர். இவர்கள் இருவரும் மந்திரம், சூனியம்