"நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடும் மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும்" என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு 37 கட்சிகளின் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி மு க தலைவர் திரு.மு க ஸ்டாலின் @mkstalin அவர்கள்.(1/16)
நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்த திரு. மு க ஸ்டாலின் அவர்களின் இந்த கடிதமானது வியப்பை அளிக்கிறது. மண்டல் ஆணையத்தை நிறுவியதற்கும், இந்த கடிதத்தை எழுதியுள்ள திரு ஸ்டாலின் அவர்களின் தி மு கவிற்கும், இந்த கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி அவர்களின் காங்கிரஸ் (2/16)
கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்தும், வரலாற்றை திருத்தி உண்மைக்கு புறம்பான தகவலை அளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
1979ம் ஆண்டு பாஜகவின் நிறுவன தலைவர்களான மரியாதைக்குரிய. வாஜ்பாய் அவர்களும்,அத்வானி அவர்களும் அமைச்சர்களாக அங்கம் வகித்த திரு. மொரார்ஜி தேசாய் (3/16)
அவர்களின் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் தான் மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது என்பதையும், அந்த நேரத்தில் தி மு க, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்ததையும் மறைத்து அல்லது மறந்து எழுதியிருக்கிறார் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்.
அதே போல், 1980ம் ஆண்டே மண்டல் ஆணைய பரிந்துரைகள்(4/16)
அரசுக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் 1984 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன், தி மு க கூட்டணியில் இருந்தும், மண்டல் ஆணையத்தை நிறுவாதது ஏன் என்ற கேள்விக்கு திரு. ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்வாரா? 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மண்டல் ஆணையத்தை கிடப்பில் போட்டதை(5/16)
திரு.ஸ்டாலின் அவர்கள் மறைத்ததின் காரணம் என்ன?
1989 பாராளுமன்ற தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்துவோம்' என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். பாஜக ஆதரவு பெற்றதாலேயே வி பி சிங் அரசு மண்டல் ஆணையத்தை (6/16)
பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்க முடிந்தது என்பதை திரு.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா? அல்லது 'இட ஒதுக்கீடு தேசத்தை பிளக்கும்' என பாராளுமன்றத்தில் மண்டல் ஆணைய இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து இரண்டரை மணி நேரம் வாதம் செய்து,அச்சட்டத்தை எதிர்த்தது அன்றைய காங்கிரஸ்(7/16)
தலைவர் ராஜிவ் காந்தி அவர்கள் என்பதை மறந்து விட்டு அவரின் மனைவி சோனியா காந்தி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளாரா திரு. ஸ்டாலின் அவர்கள்?
மண்டல் ஆணையம் நிறுவப்பட்டதையும், மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவதையும்,கடுமையாக எதிர்த்ததோடு,தாங்கள் ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில்(8/16)
பிற்படுத்தப்பட்டவர்களே இல்லை என்று கூறி 'இட ஒதுக்கீடே வேண்டாம்'என்று கூறியது, இன்று தி மு க வுடன் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பதை மறந்து விட்டாரா திரு ஸ்டாலின் அவர்கள்?
மேலும்,இன்றைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள பல கட்சிகளின் தலைவர்கள் மண்டல் ஆணைய பரிந்துரைகள்(9/16)
சட்டமாக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்கள் என்பதை திரு.ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டாரா?அல்லது மறைக்க முயற்சி செய்கிறாரா?
அதே போல்,மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தி மு க தொடுத்த வழக்கினால் தான் 27 % இதர பிற்படுத்தப்பட்ட(10/ 16)
வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக திரு. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளது 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியே'. காங்கிரஸ் கூட்டணியில் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த போதே இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வராதது ஏன் என்பதை திரு.ஸ்டாலின் அவர்கள் விளக்குவாரா?(11/16)
உச்சநீதி மன்றத்தில் 2016 ம் ஆண்டு சலோனி குமாரி வழக்கில் இப்போதைய பாஜக அரசு தான் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்த பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தயார் என்று அறிவித்ததை திரு.ஸ்டாலின் அவர்கள் மறைப்பது ஏன்? மேலும், சமீபத்தில் இது குறித்த வழக்கில் மத்திய (12/16)
பாஜக அரசு 27% இட ஒதுக்கீட்டை வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியமானது என்பதை மறைக்க பார்ப்பது ஏன்? கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அரசாணையை மத்திய பாஜக அரசு தான் பிறப்பித்தது என்பதை மறுத்து விட முடியுமா(13/16)
திரு.மு க ஸ்டாலின் அவர்களால்?
ஒரு பொய்யை நூறு முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்று சொல்லப்படும் கதையை உண்மையென்று நம்பி, திரு. ஸ்டாலின் அவர்கள் இட ஒதுக்கீட்டின் சரித்திரத்தை மாற்றி பெருமை தேடி கொள்ள பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசியல் அதிகாரத்திற்காக (14/16)
இட ஒதுக்கீட்டை மறந்த தி மு க, இட ஒதுக்கீட்டை மறுத்த, எதிர்த்த, வெறுத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை சமூக நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பது வரலாற்று பிழை மட்டுமல்ல என்பதோடு , இரட்டை வேடத்தோடு கூடிய போலி நாடகத்தை அரங்கேற்ற முனைகிறார் (15/16)
தி மு க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் என்பதே உண்மை.
நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.(16/16)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"We must unite with the same purpose for which we established the Mandal Commission."says DMK's president Mr. @mkstalin in an appeal to the leaders of 37 parties insisting them to join the All India Federation for Social Justice.
It is shocking and surprising that in spite(1/16)
of being an experienced and senior politician, Mr.M.K.Stalin has tried to misrepresent and mislead the facts and the history of implementation of Mandal Commission and the achievement of social justice in India. History and the records reveals that both the DMK & the(2/16)
@INCIndia has nothing to do with the establishment of the Mandal Commission.
It is a fact the Mandal Commission was established in the year 1979 during the Janata Party rule led by respected former Prime Minister Shri.Morarji Desai in which our @BJP4India founder leaders (3/16)
"பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்" : தி மு க தலைவர் ஸ்டாலின்.
11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் ஏற்படுத்தி தனியார் கல்வி கொள்ளையை சீரழித்தததை அமபலப்படுத்துவீர்களா?
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்து இலவசமாக செலுத்தி மக்களின் (1/7)
சீரழிவை தடுத்ததை அம்பலப்படுத்துவீர்களா?
காவிரி தீர்ப்பாணையம் அளித்த தீர்ப்பை 7 வருடங்கள் கிடப்பில் போட்டு தமிழக விவசாயிகளை சீரழித்த தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அராஜகத்தை மறைத்து,உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக அரசியல் (2/7)
கட்சிகளின் தண்ணீர் அரசியலை சீரழித்த பாஜகவை அம்பலப்படுத்துவீர்களா?
பல மக்கள் நல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி,கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருந்த இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?(3/7)
மத்திய அரசு, இந்திய ஆட்சிப்பணி விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வருவது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என சில அரசியல் கட்சிகள் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. கூட்டாட்சி என்ற இலக்கணத்தை மீறி செயல்படும் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலினால் தான் இந்நிலை. (1/14)
அகில இந்திய சேவை பணிகளில், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் துறை பணி, இந்திய வனத்துறை பணி ஆகிய மூன்றில் மிக முக்கியமானது இந்திய ஆட்சிப்பணி. இந்த சேவைப்பணிகளில் உள்ளோர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, நிர்வாகத்திற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, பன்முகத்தன்மை (2/14)
வாய்ந்த நம் நாட்டின் அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் முக்கிய பொறுப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில், மாநிலங்களில், சூழ்நிலைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் நிர்வாகத்தில்(3/14)
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 16,725 கோடி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த நிலுவை எந்த அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் (1/6)
இந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டு வரை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகை ரூபாய்.37,134 கோடி மட்டுமே. அதில் தமிழத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய். 2894 கோடி மட்டுமே. இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், (2/6 )
உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, முறையே 6723 கோடி, 3528 கோடி, 3145 கோடி மற்றும் 3125 கோடி செலுத்த வேண்டியுள்ளது, மேலும், ஜி எஸ் டி சட்டத்தில் குறிப்பிட்டது போல் மாநிலங்களுக்கு சேர வேண்டிய மொத்த நிதியையும் மத்திய அரசு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்பதை டிசம்பர் 13,2021 (3/6)
மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். ஒருவருக்கு வெட்டு, ஆறு பேர் கைது என்ற செய்தி கவலை தருகிறது.(1/9)
இந்த நான்கு கல்லூரிகளும் அரசு மற்றும் அறக்கட்டளைகளை சார்ந்தவை. சென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளவை. நீண்ட காலமாக செயல்படுபவை. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்,முதல்வர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழகத்தில் தனியார் கல்லூரிகள்(2/9)
பல இருக்கும் நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே இது போன்ற மோதல்கள் நடைபெறாதது ஏன்? அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளில் மட்டும் ஒழுக்க குறைவு மற்றும் கட்டுப்பாடற்ற மாணவர்கள் உருவாகுவதற்கு காரணம் என்ன? உறுதியாக இதற்கு காரணம் மாணவர்கள் அல்ல,அந்த கல்லூரிகளின்நிர்வாகங்களே.(3/9)
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,
மாநிலக்கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறுவதில்லை என்பது போல் கல்லூரி மாணவர்களிடையே (1/ )
நிலவும் இந்த பகைமை உணர்ச்சி நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும், உயிர் பலியாகும் நிலைக்கு செல்வது கொடூரமானது.கட்டுபாடற்ற கல்வி முறை, ஒழுக்கத்தை போதிக்க மறந்த ஆசிரியர்கள், நிர்வாக திறனற்ற கல்லூரி, பெற்றோர்களின் கண்காணிப்பின்மை,அரசியல் ஆதிக்கம் ஆகியவையே இது போன்ற வெட்கக்கேடான(2/ )
சம்பவங்களுக்கு காரணமாகின்றன. இந்தியாவின் தலைசிறந்த தலைவர்கள் பயின்ற கல்லூரிகளின் மாணவர்கள் தெருக்களில் சண்டையிட்டுக்கொண்டு மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்குவதும், சட்ட ஒழுங்கை சீர்கெடுப்பதும் அராஜகத்தின் உச்சகட்டம். இதை கட்டுப்படுத்த முடியாத கல்லூரிகளின் நிர்வாகங்களும், (3/ )