#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க சிற்பக் கட்டிட கலைக்குச் சான்றாக விளங்கும்
கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நம் தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காகவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ
கோயில் நிர்வாகிகளிடம் சிலை வடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும்போது
தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், தாராசுரம், பெரியகோயில், பெரியபாளையம் உள்ளிட்ட சில கோயில்களில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து கொடுக்கிறோம்
என்று சொல்லித் தான் இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள். அத்தனை அரிய வகை சிற்பங்களைக் கொண்டது இத்திருக்கோவில்(கள்). இங்கு வீற்றிருக்கும் விநாயகரின் தலையில் ஊற்றும் தண்ணீர் நம் கண்களுக்கு புலப்படாமல் வழிந்தோடி கிணற்றுக்குள் விழும் அற்புதமான வடிகால் முறை, இத்தலத்தின் கீழ்பகுதியில்
காற்று புக முடியாத அறைக்குள் வீற்றிருக்கிறார் ஶ்ரீ பாதாள லிங்கேஸ்வரர். 18-ஆயுதங்களை ஏந்திய நடராஜர் சிற்பம், சிங்கத்தின் வாயில் (வெளியே எடுக்க முடியாத) உருளும் கல் சிற்பங்கள் இக்கலையின் மகோன்னத வெளிப்பாடாகும். தாரமங்கலம் கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும்,
மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.
ஓம் நமச்சிவாய🙏🏻
பழைய கோவில்களை நன்றாக பேணி காக்க உறுதியெடுப்போம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை
குருசேஷத்திர போர் முடிந்தவுடன் திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம் நான் குருடனாக இருந்தபோதும் விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், உனக்கு
நான் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் என்றார். நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால்
வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறும் நோக்கில் அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மணை குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான்.
பெண்ணரசு ஆளும் ஊர் #திருநறையூர்
பள்ளிக் கமலத்து நண்டுக்கு கர்ப்ப காலத்தில் இனிமையான பொருட்களைத் தேடித் தர வேண்டும் என்ற ஆசை பட்ட,
பள்ளி வாய் பகு வாயலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ் நறையூர்
(பெரிய திருமொழி 6-7-6)
நள்ளி என்றால் பெண் நண்டு. அலவன் என்றால் ஆண் நண்டு.
ஒரு ஆம்பல் மலரில், நண்டுத் தம்பதிகள் இனிதான இல்லறம் நடத்திக் கொண்டிருந்தன. பெண் நண்டு கர்ப்பம் உற்றது. தன்னுடைய பெண் துணைக்கு ரசமான, இனிப்புப் பொருட்கள் கொண்டுத் தருவதற்கு ஆண் நண்டு ஆசை கொண்டது. சூரியன் மறைந்திடும் நேரத்திற்குச் சற்று முந்திச் சென்று, கொல்லென்று மலர்ந்த ஒரு
தாமரை மலருக்குள் நுழைந்து, வாயிலும், உடலிலும், தாமரைப் பூவின் இனிய மகரந்தங்களைத் தேக்கிக் கொண்டு, தாமரை மலரிலிருந்து வெளிப் புறப்பட முயற்சி செய்யும் பொழுது, சூரியன் அஸ்தமித்த காரணத்தால், வாய் கூம்பிப் போய் மூடிக் கொண்ட தாமரையிலிருந்து ஆண் நண்டு வெளியில் வர முடியாத படி சிறைப்
#பஞ்சகவ்யம்
பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள். பாலில் எடுக்கப் படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையவை, குணம் உடையவை. இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன. பஞ்சகவ்யம் தயார்
செய்ய பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் – 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர். இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப் படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூஜை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும்
பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.
பசும்பால்: ஆரோக்கியம், ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
#சாயா_சோமேஸ்வரர்
நல்கொண்டா தெலுங்கானா.
இக்கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ளது. 10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்ட பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த 3 கருவறைகளில் 3 விதமான மர்ம நிழல்கள் உள்ளன.
1. லிங்க கருவறை -1
இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான்
உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின்
திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப் பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது. இந்த சன்னதியும்,
நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரே மட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தி
உடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தி உள்ளார். வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர். கோயிலில் எழுந்தருளி உள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள்
#Thiruvekka_SriYathothakaari_Perumal
When Thirumizhisai Azhwar was living in Kanchipuram, a very old lady used to clean his house daily and did this as a small service on her part. Happy with her seva, Azhwar blessed her to a become beautiful woman. As luck would have it, the
king married the woman and she became the queen of the place. On hearing the secret of an old lady becoming a beautiful woman, he was eager to meet Thirumizhisai Alwar. Kani Kannan was a devout sishya of Azhwar. The king called Kani Kannan and told him to bring Thirumazhisai
Azhwar to his palace and sing a song in praise of him. Kani Kannan said that all the poems and songs that comes from the mouth of Thirumizhisai Alwar belongs to SriVaikundanathan and it is impossible for him to come to the palace and sing in praise of the king. To entice Kani