அன்பெழில் Profile picture
Mar 25, 2022 11 tweets 5 min read Read on X
ஏன் #நாலு #நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி. இதில் நாலு என்பது நாலடியார்.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”
நான்மறை என்பது வேதங்கள் நான்கு.
சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர். அப்பர், சம்பந்தர்,
சுந்தரர், மாணிக்க வாசகர். இவர்களை நால்வர் என அழைக்கிறோம். மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் நான்கு அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.
வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் அவற்றை நாலு ரிஷிகளிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள் ருக்-
பைலர், யஜூர்-ஜைமினி, சாம-வைசம்பாயன, அதர்வண-சுமந்து.
தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.
நான்கு புருஷார்த்தங்கள். அவை தர்ம, அர்த்த, காம, மோட்சம்.
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு. அவை பிரம்மசர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம்.
பிரம்மாவின் மானச
புத்திரர்கள் நான்கு பேர். சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.
தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள்.
பிரம்மாவுக்கு நான்கு தலைகள். சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு உண்டு.
ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளிலும்/மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி நான்கு சீடர்களை
நியமித்தார்.
அக்னிக்கு கம்பீரா, யமலா, மஹதி, பஞ்சமி என நான்கு வடிவங்கள்.
திசைகள் நான்கு.
ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.
ரத, கஜ, துரக, பதாதி-தேர், யானை, குதிரை, காலாட் படைகள் என நால் வகைப் படைகள்!
அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம- உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.
வெல்ல முடியாத நாலு “நித்ரா ஸ்வப்ன, ஸ்த்ரீ, காமஅக்னி இந்தன கரா பாண” இதன் பொருள்: கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது, பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது, தீயை விறகு நிறைவு
செய்யாது,குடிகாரனை குடி நிறைவு செய்யாது.
யுகங்களும் கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்டிரின் நால் வகை குணங்கள்.
சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்.
நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.
நாலு பேரை போல வாழ்வில் நல்லா
இருக்கனும். நாலு என்பது விசேஷமாக குறிப்பிடப்படுவது, நல்லதுக்கும், கெட்டதுக்கும், நான்கு பேர் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை கொண்டுள்ளது என்பதை தான் காட்டுகிறது.
ஒரு நாலு பேருக்குக்கு தெரியட்டும் என்று நாலு பத்தி எழுதினதை ஒரு நாலு பேராவது படிச்சா சரி😊
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 18
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3 Image
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
Read 7 tweets
Jul 17
#ஆஷாட_ஏகாதசி இன்று 17.7.24
பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார்.
பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன் அவனைப் பாடுங்கள் என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரை பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன
தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் #பண்டரிபுரம் ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை
அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டு உள்ளார்கள். நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து, ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல, பண்டரிபுர விட்டல, ஹர ஹர விட்டல என்று பாடித் Image
Read 5 tweets
Jul 17
#நம்_முன்னோர்கள்_கடைபிடித்த_32அறங்கள்
1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல். Image
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது Image
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு
Read 5 tweets
Jul 17
#ஸந்த்_சக்குபாய்
பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு #சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது.

தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழிகளுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்தார். சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய்,

‘‘தாத்தா, நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கி விட்டீர்களே… இது நியாயமா?’’ என்று கேட்டாள்.

‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்து விட்டது!” என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை.

தனது மணல் வீட் டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார்.

குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறினார்.

‘‘அஷ்டாக்ஷரம் என்ற பெயருடைய பலர் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்களே? அவர்களில் யாருடைய பெயர் இது?” என்று கேட்டாள் சக்குபாய்.

அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.

அனைத்தையும் கேட்ட சக்குபாய், பெரியவரிடம் தான் விளையாட்டாக தம்புராவைக் கேட்டதாகச் சொல்லி, ‘‘அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.

சக்குபாயின் முதுகில் அன்புடன் தடவி, ‘‘தம்புராவை மீட்டி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பஜனைப் பாடல் பாடு!’’ என்று சொல்லி மறைந்தார் முதியவர்.

அதன் பிறகு குழந்தையின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் சொல்லித் தந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போதும் சொல்லிய படியே இருந்தாள். தோழிகளுடன் விளையாடச் செல்லவில்லை.

மனதில் எப்போதும் இறைவன் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அந்தப் பெரியவரைக் காண வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.

10 வயதாகி விட்டதால், உடனே இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வரன் தேடி னர். எப்போதும் மௌனமாக இருப்பதால் இவளை ‘பைத்தியம்!’ என்று ஊரார் பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் சிந்து தேசத் திலிருந்து மித்ருராவ் என்ற இளைஞன் வியாபார விஷயமாக அங்கு வந்தான். அவனது அறிவும் அழகும் சக்குபாயின் பெற்றோருக்குப் பிடித்ததால், அவனைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அதுவரை திருமணமே வேண்டாம் என்று சொன்ன சக்குபாயும் திருமணத்துக்குச் சம்மதித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. சக்குபாய் சிந்து தேசத்துக்குச் சென்றாள்.

கணவர் வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நன்றாக வேலை வாங்கினார்கள். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். மனம் மட்டும் எப்போதும் பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது.

தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ருராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. சக்குபாயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், பஜனை செய்வதுமாக இருந்தாள். இவளை இங்கும் ‘பைத்தியம்’ என்றனர் பலர்.

அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார்கள். அறையில் வைத்து பூட்டி னார்கள். அங்கும் அவள் தியானம் செய்தாள்.

பஜனைப் பாடல்களைக் கண்ணீருடன் மனம் உருகிப் பாடினாள். அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார்.

தான் பேய் ஓட்டுவதில் வல்லவன் என்று முதியவர் கூற, சக்குபாயின் மாமியார் அவரை சக்குபாய் அறைக்குச் சென்று பேய் ஓட்டும் படி கூறினாள். அவரைப் பார்த்ததும், சக்குபாய்க்கு அவரை முதலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.

அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதைப் பார்த்த அவள் கணவரும் மாமியாரும் இவரால் சக்குபாய்க்குப் பைத்தியம் தெளியும் என்று சமாதானம் அடைந்தனர்.

முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும். ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்றார். அப்படியே இருப்பதாக வாக்குக் கொடுத்தாள். கணவருடன் இனிமையாகப் பேசி, அவரை மகிழ்வித்தாள் சக்குபாய்.Image
இவர்களின் இல்லறத்தைப் பார்த்து ஊரே வியந்தது. சக்குபாய் சந்தோஷமாக இருந்தாலும், அந்த முதியவரை இனி ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தோன்றி அவளை வாட்டியது. இதனால், மனநிலை பாதிக்கப்பட்டு, நீர் எடுக்கச் சென்றபோது கிணற்றில் குதித்தாள். இதைப் பார்த்து பகவான் சும்மா இருப்பாரா? பக்தரின் வடிவில் வந்து காப்பாற்றி, நல்ல வார்த்தைகள் பல கூறி அவளை சமாதானப்படுத்தினார். அதனால் தெளிவடைந்த சக்குபாய் அவரிடம் சகஜமாக மனம் விட்டுச் சிரித்துப் பேசினாள். அங்கு தண்ணீர் பிடிக்க வந்த சில பெண்கள், இந்தக் காட்சியைக் கண்டு மித்ருராவிடம் சென்று சக்கு பாய்க்கும் வேறு ஆடவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குளக்கரையில் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறினர். கோபத்துடன் அங்கு வந்த மித்ருராவ், அவளைத் திட்டியதுடன், அவளிடம் பேசிய அந்த மாய பக்தனைப் பார்த்தார். ஆனால், மித்ருராவின் கண்களுக்கு, முன்பு வீட்டுக்கு வந்த முதியவர் போல காட்சி தந்தார் பகவான். சக்குபாய் கால் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், தான் காப் பாற்றியதாகவும் கூறினார். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார் மித்ருராவ். பழைய படி இல்லற வாழ்க்கை இனிமையாகச் சென்றது.
ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது.

கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து தன்னையும் அவர்களுடன் பண்டரிபுரம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் சக்குபாய்.

அதற்கு அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர். இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கணவரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள்.

கணவரோ தற்போது அங்கு செல்ல வசதி இல்லாததால் அடுத்த வருடம் தானே அழைத்துச் செல்வதாகக் கூறி னார். சக்குபாய் பிடிவாதம் பிடிக்கவே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள். ‘எத்தனையோ பேர் பகவானின் திருவிழாவைக் காணும்போது, தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என்று சங்கடப் பட்டாள்.

தன் பக்தை துன்பப்படுவதை பகவான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உருவில் அந்த அறைக்கு வந்தார். பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார். ‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.
வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவரைத் தூணில் கட்டிப் போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வரு வதாகக் கூறினாள். தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார். சக்குபாய் தனது இனிய குரலால் பாடல்களைப் பாடி, எல்லோரையும் மகிழ்வித்தாள். பக்தர்களின், ‘பாண்டுரங்க விட்டல! ஜே! ஜே! விட்டல பண்டரி நாதா’ என்ற குரல் எல்லா இடத்திலும் ஒலித்தது.

சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார்.
அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன்றுமே நடக்காதது போல் அவர் சொல்லுக்குப் பணிந்து நடந்தார்.
வழக்கம் போல அந்த வீட்டில் எல்லோரும் அவளை வேலை வாங்கினார்கள். அவளும் சந்தோஷத்துடன் வேலை செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்தனர்.
பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியை விட்டு வர மனம் இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள். அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டு விட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர். இதைக் கேட்ட மித்ருராவ் கோபத்துடன் அவர்களை நோக்கி, ‘‘எப்போதும் என் மனைவியைக் குறை கூறுவதே உங்கள் பிழைப்பாகி விட்டது. அவள் இங்கேதான் இருக்கிறாள். அவளைக் குறை கூறி இனி யாரும் இங்கே வர வேண்டாம்!’’ என்று வந்தவர்களைத் துரத்தினார்.

பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரிபுரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து மறைந்தார்.

ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த்தாள். ‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.Image
Image
உடனே அந்தப் பெண், சக்குபாய்க்கு பகவானாகக் காட்சி கொடுத்தார். இன்னும் சில காலம் இல்லறத்தில் இருக்கும்படி கூறி மறைந்தார். வீட்டுக்கு வந்த சக்குபாய் தனக்காக, இங்கு இருந்தது பகவானே என்பதை எல்லோரிடமும் சொன்னாள்.

கணவரும் தன் தவறை உணர்ந்தார். செல்வம் நிறைய இருந்தும் தானம் என்பதை மறந்து வாழ்ந்ததற்காக வருந்தினார். சக்குபாயுடன் சேர்ந்து நிறைய தான தர்மங்கள் செய்தார்.

பல க்ஷத்திரங்களுக்கு தம்பதியாகச் சென்று வணங்கினர். பிறகு பண்டரிபுரத்துக்கே வந்து இறைவன் புகழ் பாடி, தியானத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்து இறுதியில் இறைவனடி சேர்ந்தனர்.

ஜெய் ஜெய் விட்டல் ஜெய ஹரி விட்டல்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻Image
Read 4 tweets
Jul 16
#சாதுர்மாஸ்ய_விரதம்
மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களால் பல வகையான விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. சக்தி மிக்க விரதங்களில் ஒன்று சாதுர்மாஸ்ய விரதமாகும். ‘சதுர்’ என்றால் 4 என்று பொருள். ‘மாஸ்ய’ என்றால் மாதம் என்று பொருள். 4 மாதங்கள் கொண்ட இந்த விரதம், ஆடி மாத பௌர்ணமி முதல் Image
கார்த்திகை மாத பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதாவது, ‘குருபூர்ணிமா’ அன்று தங்கள் குருமார்களை நினைவு கூறும் வகையில் வேத வியாசரை வழிபட்டுத் விரதத்தைத் துவக்குவார்கள். இந்த தினத்தை மகான்கள், #வியாச_பூர்ணிமா என்றும்
அழைப்பது வழக்கம். ஆடி மாதத்தில் துவங்கி கார்த்திகை மாதத்தில் ஏகாதசியில் இந்த விரதம் முடிவடையும். இந்த 4 மாதங்களும் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் காலமாகும். ஆஷாட மாதத்தின் சுக்லபட்ச ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை மகாவிஷ்ணு ஆதிசேஷனுடன் திருப்பாற்
Read 9 tweets
Jul 16
#Sri_Purandara_Dasa
Srinivasa Nayaka, also known as Purandara Dasa (c. 1484 – c. 1564) was a composer, singer and a Haridasa philosopher from present day Karnataka, India. He was a follower of Madhvacharya's Dvaita philosophy. He was one of the chief founding proponents of Image
Carnatic music. In honor of his contributions to Carnatic music, he is referred to as the Pitamaha of Carnatic music. According to our Puranas he is considered as an incarnation of Narada. Purandara Dasa was a wealthy merchant of gold, silver and other miscellaneous jewelleryImage
from Karnataka, who gave away all his material riches to become a Haridasa (literally meaning a servant of Vishnu or Krishna), a devotional singer who made the difficult Sanskrit tenets of Bhagavata Purana available to everyone in simple and melodious songs. He was one of the Image
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(