அன்பெழில் Profile picture
Mar 29, 2022 12 tweets 4 min read Read on X
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
#தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அன்னதானம் செய்தால் பூர்வ  ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.)
2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
3. காலணி தானம் செய்தால்  பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
4. மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
5. பொன் மாங்கல்யம் தானம்  செய்தால் மாங்கல்ய தோஷங்கள்  நீங்கும். திருமண  தடங்கல்கள்  நீங்கும்.
6. குடை தானம் செய்தால் தவறான
வழியில் சேர்த்த செல்வத்தினால்  ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான  எதிர்காலம் உண்டாகும்.
7. பாய் தானம் செய்வதால்  பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்தசாபங்கள்  தீரும். கடும் நோய்களுக்கு  நிவாரணம் கிட்டும். அமைதியான  மரணம் ஏற்படும்.
8. பசு தானம் செய்தால்
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள்  கிடைக்கும்.
9. பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
10. காய்கறிகள் தானம் செய்தால்  பித்ரு சாபம் விலகும். குழந்தைகள் ஆரோக்யம் வளரும்.
11. அரிசி தானம் செய்தால் பிறருக்கு  ஒன்றுமே தராமல்
தனித்து வாழ்ந்த  சாபம் தீரும். வறுமை தீரும்.
12. எண்ணெய் தானம் செய்தால்  நாம்  அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
13. பூ தானம் செய்தால் அந்தஸ்து  காரணமாக பிறரை அவமதித்ததால்  ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாக சாந்தமாக  அமையும்.
14. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்.
15. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்.
16. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்.
17. நெய் தானம் தர நோயைப் போக்கும்.
18. பால் தானம் தர துக்கநிலை மாறும்.
19.தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்.
20. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்.
21. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.
22.தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்.
23. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வர தரிசனமும் கிட்டும்.
24. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
25. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
26. வெல்லம் தானம்- குலம் வளறும், துக்கம்
தீரும்.
27. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
28. கம்பளி (போர்வை) தானம் - கெட்ட கனவுகள் நீங்கும். கெட்ட சகுனங்கள் தோன்றாது.
28. சந்தனக்கட்டை தானம் - புகழ்
29. ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்கு இணையான பதவி.
30. புத்தக தானம் - ஞானம்
31. பூணூல் தானம் - பருத்தியிலான பூணூலை தானம்
செய்வதால் புனிதம் அடைகிறோம், மனச்சாந்தி ஏற்படும்.
32. விசிறி தானம் - பனையோலை, மூங்கிலால் ஆன விசிறியை தானம் செய்வதால் ரோகம் அகலும். ஆரோக்கியம் பெறுகும்.
பயன் கருதாது தானம் அளிப்பதே மிகச் சிறந்தது. அவர்களுக்கு மரணம் உன்னதமாக அமைவதோடு மறு பிறவி இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கு தான்
தானம் செய்ய வேண்டும். நமக்கு வேண்டியவர்களுக்கு தானம் செய்தால் அதில் பலனில்லை. வெயில் காலம் வருகிறது. நம்மால் இயன்ற தானத்தை செய்து துயர் துடைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 15
#பட்டீஸ்வரம்_துர்க்கை
இங்கு வந்து துர்கைஅம்மனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள், நன்மைகள் ஏராளம்.
1.ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்
2.மன துக்கம் விலகும்
3.காரிய வெற்றி கிடைக்கும்
4.பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் Image
பெண்களுக்கு விலகும்
5.குடும்ப வாழ்கை அமைதியாகும்
6.எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும்.

பட்டீஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும். காரணம் ராகு Image
தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில் தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது. சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் அரண்மனையைப் பாதுகாக்க 4
Read 17 tweets
Jun 15
#சில_விஷ்ணுகோவில்களின்_சிறப்புகள்
திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.

சோளிங்கரில் நரசிம்மர்Image
யோக நிலையில் மலை மேல் காட்சித் தருகிறார். சப்த ரிஷிகள் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் கடிகாசலம் என்று வழங்கப்Image
Image
படுகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டு உள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும்Image
Image
Read 7 tweets
Jun 15
#ஆனிமாத_விசேஷங்கள்
இன்று ஆனிமாதப் பிறப்பு.
உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் Image
சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம்/ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.
ஆனித்திருமஞ்சனம்!
சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின்Image
நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப் படும். ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
Read 13 tweets
Jun 13
#பலாமரமும்_சிவபெருமானும்
தென்னகத்தின் சுவைமிக்க முக்கனிகளில் இரண்டாவது கனி, பலா. இது வேர்ப்பலா, கிளைப்பலா எனப் பல வகைப்படுகிறது. முள்ளோடு கூடிய கெட்டியான மேல் தோலையும், சடைசடையான உள்தோலையும் அதனுள் கொட்டைகளையுடைய சுளைகளையும் கொண்டது. குற்றாலம், திருநீலக்குடி, இடும்பாவனம், Image
கற்பகநாதர் கோயில், திருவாலங்காடு, திருப்பூவனம், திருச்செந்துறை முதலிய தலங்களில், பலா மரத்தின் அடியில் பெருமான் வீற்றிருக்கின்றார். இதில், குற்றாலத்திலுள்ள பலாமரம் சிவபெருமானாகவும், சிவனின் இருப்பிடமாகவும் வேத வடிவாகவும் போற்றப்படுகிறது. குரும்பலா என்று போற்றப்படும் இம்மரம்Image
இருக்குமிடம் தனிச் சந்நதியாகத் திகழ்கிறது. இம்மரத்திற்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. திருஞானசம்பந்தர், பல தலங்களை சிவபெருமானுக்கு உரிய இடம் இதுவே என்று கூறி அருளியதைப் போலவே, குற்றாலத்திற்கு வந்த போது, நம்பனுக்குரிய இடம் குறும்பலாவே என்று கூறி இம்மரத்தைச் சிறப்பித்துப்Image
Read 13 tweets
Jun 13
சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் #திருப்பாற்றுறை ஒன்றாகும். திருச்சி திருவானைக்கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் காவிரி கொள்ளிடக் கரையில் எழுந்தருளி உள்ளது இத்திருத்தலம்.
இறைவன் ஸ்ரீஆதிமூல நாதர்
அம்பிகை ஸ்ரீ மேகலாம்பிகை, ஸ்ரீநித்ய கல்யாணி
சம்பந்தர்,Image
சேக்கிழார், மார்க்கண்டேயர், சூரியன் முதலியோர் வழிபட்டத் தலம். ஒருமுறை, ஒரு சோழ மன்னன் (இது பராந்தக சோழன் என்று ஒரு புராணக்கதை கூறுகிறது) வேட்டையாடும் போது இங்கு வந்திருந்தான், அப்போது அவர் ஒரு வெள்ளை பறவை பறந்து செல்வதைக் கண்டார். அதைப் பிடிக்க விரும்பிய அரசன் அம்பு எய்தினான் Image
ஆனால் அது பறவையைத் தவறவிட்டது. பறவை கூடு கட்டிய புதர்களை அடையாளம் கண்டுகொண்ட அரசன் வெகுநேரம் காத்திருந்தும் பறவை திரும்பவில்லை. அப்போது மன்னன் புதரிலிருந்து பால் கசிவதைக் கண்டு, என்ன நடக்கிறது என்று புரியாமல் திகிலடைந்து, தன் அரண்மனைக்குத் திரும்பினான். அன்றிரவு, சிவன் மன்னனின் Image
Read 10 tweets
Jun 12
#நடராஜப்பெருமான்
நடராஜர் என்றதும் நம் நினைவில் தோன்றும் தலம் தில்லை அம்பலம் எனும் சிதம்பரம். தில்லைக்காக முதலில் செய்யப்பட நடராஜர் உருவம் அங்கு நிறுவப்படவில்லை. முதலில் நிறுவப்பட்டது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பரை என்ற ஊரில்! அவர் சிதம்பரம் வந்த திருவிளையாடலை பார்ப்போம். Image
தன் தோல் நோயைத் தீர்க்க வேண்டி கெளட தேசத்தில் இருந்து வந்த மன்னன் ஹிரண்ய வர்மன் புனித நீராடியது சிதம்பரம் சிவகங்கைக் குளத்தில் என்று ஒரு சாராரும், பிரம்மானந்த கூபம் என்னும் தீர்த்தம் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இந்த பிரம்மானந்த கூபம் இப்போது கிணறு வடிவில் உள்ளது.
ஹிரண்ய வர்மன், (சிம்ம வர்மன் என்றும் பெயர் உண்டு) பல்லவ வம்சத்தை இங்கே நிறுவினான் என்பதும் வரலாறு. இந்த மன்னன் நடராஜர் பால் பக்தி மிகக் கொண்டு, நடராஜரைச் விக்ரக வடிவில் வடிக்க எண்ணம் கொண்டான். சிற்பிகளிடம் பத்தரை மாற்றுப் பசும் பொன்னிலே, துளிக்கூடச் செம்பு கலக்காமல் சிலை
Read 32 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(