அன்பெழில் Profile picture
Mar 29, 2022 12 tweets 4 min read Read on X
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
#தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அன்னதானம் செய்தால் பூர்வ  ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.)
2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
3. காலணி தானம் செய்தால்  பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
4. மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
5. பொன் மாங்கல்யம் தானம்  செய்தால் மாங்கல்ய தோஷங்கள்  நீங்கும். திருமண  தடங்கல்கள்  நீங்கும்.
6. குடை தானம் செய்தால் தவறான
வழியில் சேர்த்த செல்வத்தினால்  ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான  எதிர்காலம் உண்டாகும்.
7. பாய் தானம் செய்வதால்  பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்தசாபங்கள்  தீரும். கடும் நோய்களுக்கு  நிவாரணம் கிட்டும். அமைதியான  மரணம் ஏற்படும்.
8. பசு தானம் செய்தால்
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள்  கிடைக்கும்.
9. பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
10. காய்கறிகள் தானம் செய்தால்  பித்ரு சாபம் விலகும். குழந்தைகள் ஆரோக்யம் வளரும்.
11. அரிசி தானம் செய்தால் பிறருக்கு  ஒன்றுமே தராமல்
தனித்து வாழ்ந்த  சாபம் தீரும். வறுமை தீரும்.
12. எண்ணெய் தானம் செய்தால்  நாம்  அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
13. பூ தானம் செய்தால் அந்தஸ்து  காரணமாக பிறரை அவமதித்ததால்  ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாக சாந்தமாக  அமையும்.
14. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்.
15. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்.
16. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்.
17. நெய் தானம் தர நோயைப் போக்கும்.
18. பால் தானம் தர துக்கநிலை மாறும்.
19.தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்.
20. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்.
21. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.
22.தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்.
23. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வர தரிசனமும் கிட்டும்.
24. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
25. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
26. வெல்லம் தானம்- குலம் வளறும், துக்கம்
தீரும்.
27. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
28. கம்பளி (போர்வை) தானம் - கெட்ட கனவுகள் நீங்கும். கெட்ட சகுனங்கள் தோன்றாது.
28. சந்தனக்கட்டை தானம் - புகழ்
29. ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்கு இணையான பதவி.
30. புத்தக தானம் - ஞானம்
31. பூணூல் தானம் - பருத்தியிலான பூணூலை தானம்
செய்வதால் புனிதம் அடைகிறோம், மனச்சாந்தி ஏற்படும்.
32. விசிறி தானம் - பனையோலை, மூங்கிலால் ஆன விசிறியை தானம் செய்வதால் ரோகம் அகலும். ஆரோக்கியம் பெறுகும்.
பயன் கருதாது தானம் அளிப்பதே மிகச் சிறந்தது. அவர்களுக்கு மரணம் உன்னதமாக அமைவதோடு மறு பிறவி இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கு தான்
தானம் செய்ய வேண்டும். நமக்கு வேண்டியவர்களுக்கு தானம் செய்தால் அதில் பலனில்லை. வெயில் காலம் வருகிறது. நம்மால் இயன்ற தானத்தை செய்து துயர் துடைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 23
#மதுர_காளியம்மன்
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து 280 கி மீ தொலைவில் உள்ளது இந்த கிராமம். அன்னைக்கு 4 கரங்கள். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு Image
அமர்ந்திருக்கிறாள். அன்னையின் காலடியில் ஒரு சிம்மம் வாலை உயர்த்திக் கொண்டு பற்கள் எல்லாம் தெரிய கர்ஜித்த நிலையில் ஒரு காலைத் தூக்கி அறையக் காத்திருக்கிறது. அன்னையின் தலையில் அழகிய கிரீடம். அன்னையின் முகத்தில் புன்னகை இல்லை. கண்களிலும் புன்னகையின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை. Image
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. தன் கணவனுக்கு அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி வெகுண்டு புயலாக மாறினாள். மன்னனிடம் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்தாள். தவறு செய்த மன்னன் இறந்தான். அவள் கோபம் குறையவில்லை. மதுரையை தன் கற்பின்
Read 11 tweets
Jun 21
#ஸ்ரீமகாலட்சுமி_தாயார் #பெரியபிராட்டி
1. பிறப்பினால் பெருமை
பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அம்ருதத்தை பெறுவதற்காக பெருமாள் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வதை விட மகாலட்சுமியை பெறவே அவர் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வது தான் சரி. அம்ருதம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம்.Image
தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாக தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது!

ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் Image
தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம்.

பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று Image
Read 13 tweets
Jun 20
#தண்டு_மாரியம்மன்
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தல் இருந்து அவினாசி சாலையில் 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அன்னை தண்டு மாரியம்மன் திருக்கோவில். அழகிய 3 நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு Image
திசை நோக்கி அமர்ந்த நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அன்னைக்கு 4 கரங்கள். மேல் 2 கரங்களில் சுதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடனும் அன்னை அருள் பாலிக்கிறாள். தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் Image
அன்னை காட்சி தருகிறாள்.
அன்னையின் தேவக்கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராஜ கணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் துர்க்கையும், தென் பகுதியில் தட்சிணா மூர்த்தியும், மேற்கு பகுதியில் மகாலட்சுமியும் பால முருகனும் அருள் பாலிக்கின்றனர். நுழைவாயிலில் மகிஷாசுரமர்த்தினி, கஜலட்சுமி
Read 15 tweets
Jun 20
#உண்மையான_பக்தி
தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார்.

என் மனத்தில் ஓடுகிற
Image
Image
எந்த சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளை சென்று சந்திப்போம் வா
என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர். தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி
Read 19 tweets
Jun 20
#நற்சிந்தனை
திருப்பதி பெருமாளுக்கு பூ கட்டும் திருப்பணியைச் செய்தவர் #அனந்தாழ்வான் என்ற அடியவர். ஒருநாள் பூக்கள் தொடுக்கும் போது பாம்பு அவரது விரலைத் தீண்டியது. பதறாமல் பூமாலை கட்டி பெருமாளுக்கு சாற்றப் போனார். பெருமாள் பதறினாராம். பாம்பு கடித்துவிட்டதே என்று பெருமாள் கூறியதற்கு Image
அனந்தாழ்வார், "சுவாமி, கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே. கடியுண்ட பாம்புக்கு விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே. பின் என்ன கவலை" என்றார். பாம்பு கடித்து விஷம் அதிகமானால் வைகுந்தம். அங்கும் மாலை கட்டி தொண்டு செய்யலாம். அப்படி இறக்கவில்லை என்றால் இங்கேயே Image
தொடர்ந்து திருப்பணி செய்யலாம் என்று உறுதியாக அனந்தாழ்வான் கூறினார்.

நம்மவர்களின் பலர் கஷ்டங்களால் சாவதை விட கஷ்டங்கள் பற்றிய கற்பனையிலேயே சாகிறார்கள். ஆபத்துகளைவிட ஆபத்துக்கள் பற்றிய கற்பனைதான் ஆபத்தானவை.

ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒருவர் தன் கையை வெளியே தொங்கவிட்டு
Read 8 tweets
Jun 19
#சந்திரமௌலீஸ்வரர்_ஆலயம்
அண்ணா நகர் சென்னை
இறைவன்: சந்திரமௌலீஸ்வரர்
இறைவி: திரிபுரசுந்தரி
சென்னை அண்ணாநகரில் பல
நூற்றாண்டுகளுக்கு முன் #பாலீஸ்வரர் என்ற பெயரில் ஒரு கோவில் இருந்துள்ளது. காலப் போக்கில் சிதைந்து கவனிப்பாரற்றுப் போய் விட்டது. அப்பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் Image
கையகப்படுத்தி வீட்டுமனைகளாகப் பிரித்து ஒதுக்கீடு செய்தது. அப்போது அப்பகுதியை ஒட்டி காலியாக இருந்த மனையில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அது சூரியபிம்ப வகையிலான அபூர்வ சிவலிங்கம் ஆகும். சிவலிங்கத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை வெளியில் Image
எடுத்து மேற்கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். 1970-ஆம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரை நேரில் சந்தித்த மக்கள் இச்சிவலிங்கம் பற்றிய விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர், அந்தச் சிவலிங்கம் முன்பு அந்தப் பகுதியில் இருந்த பாலீஸ்வரர் கோவிலுக்கு உரிய சிவலிங்கம் என்பதைத் தெரிவித்தார். Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(