அன்பெழில் Profile picture
May 5, 2022 8 tweets 3 min read Read on X
தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா, கவிஞர் கண்ணதாசன் இருவரும் சம காலத்தவர். அவர் ஒரு விழாவில் பேசியது:
நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார், நான் சொல்லுவேன். அதே போல
நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்து கொள்வேன். அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா?
#லட்சுமிகல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய #ராமன்_எத்தனை_ராமனடி என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப் படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார், Image
இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பிறகு வரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பிய
போது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டு இருப்பான். அப்போது இலக்குவன் அண்ணன் ராமனைப் பார்த்து ஏனண்ணா இது என்ன, நீங்கள்தான் ஆணையிட்டீர்கள். இப்போது அழுது கொண்டிருப்பதென்ன என்று கேட்க,
ராமன் சொல்லியது, “ஆணையிட்டது கோசலராமன், அழுது கொண்டிருப்பது சீதாராமன்” என்று. Image
இப்பொறிதான் இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.

கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்..
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்..
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்..
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் ..

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்..
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்..
வீரம் என்னும் வில்லை Image
ஏந்தும் கோதண்டராமன்..
வெற்றி என்று போர் முடிக்கும்
ஸ்ரீஜெயராமன்.

வம்சத்துக்கொருவன் ரகுராமன்.
மதங்களை இணைக்கும் சிவராமன்.
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்.
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்..
ராமஜெயம் ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்.. ImageImage
என ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!

ஜெய் ஸ்ரீ ராம்!

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 2
#திலதர்ப்பணபுரி_திருக்கோவில்
ஸ்ரீ ராமரே நேரில் வந்திருந்து தர்ப்பணம் செய்த கோவில் இது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
தல மூர்த்தி: Image
ஸ்ரீ முக்தீஸ்வரர்
தல இறைவி : சொர்ணவல்லி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தாரம்
திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம்,
Image
Image
திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் Image
Read 15 tweets
Oct 1
#நவராத்திரி_ஸ்பெஷல்
துர்கையையும், லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கொண்டாடும் 9 நாட்களை நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நம் முயற்சிகள் வெற்றி தெய்வத்தின் துணை கட்டாயம் வேண்டும். இறைவன் நாம் கேட்கும் வரங்களை தாயாரின் பரிந்துரையின் பேரில் தான் நமக்கு அளிக்கிறார். சக்தி இல்லையே சிவன் Image
இல்லை. எனவே, அந்த சக்தியை நாம் நவராத்திரி நாட்களில் வழிபடும் போது, திருமகளின் திருவருளையும், திருமாலின் திருவருளையும் ஒருசேரப் பெற்றிட முடியும். நவராத்திரியின் 9 நாட்களுமே நம் வீட்டிற்கு வரும் பெண்களை சக்தி ஸ்வரூபமாகவே பாவித்து, அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் பூ பழங்கள்
என கொடுத்து அவர்களை மகிழ்விக்கும்போது சக்தி வடிவமான அம்பாளும் மகிழ்கிறாள். நவராத்திரியின் 9 நாட்களில், முதல் 3 நாட்கள் துர்கை வழிபாடு செய்கிறோம். இந்த நாட்களில், மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி என்ற பெயர்களில் துர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த 3 நாட்கள் திருமகளை
Read 9 tweets
Sep 29
#ஒப்பிலியப்பன்_கோவில்
108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் 6. அவற்றில் ஒன்று தான் உப்பிலியப்பன் கோவில். மற்றவை
சீராம விண்ணகரம்,
அரிமேய விண்ணகரம்,
வைகுந்த விண்ணகரம்,
நந்திபுரம் விண்ணகரம்,
பரமேஸ்வர விண்ணகரம்.
5 நிலை ராஜகோபுரங்களுடன் உள்ள இந்தImage
ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது. திருவிண்ணகரப்பன் எனப் போற்றப்படும் உப்பிலியப்பன் மூலவராகவும், பொன்னப்பன் என்ற திருநாமத்துடன் உற்சவராகவும் பூமாதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாள் Image
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். இங்கு புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. தென்திருப்பதி என அழைக்கப்Image
Read 13 tweets
Sep 28
#விஷ்ணு_பாதம் #கயா
பித்ரு ஸ்ராத்தம் கயாவில் செய்வது நல்லது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதில் அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். 16 ஸ்லோகங்கள்Image
கொண்டது மாத்ரு ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள்
சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்
Read 28 tweets
Sep 26
#பிராமணர்கள்_மேல்_சேற்றை_இறைக்கும்_அனைவரும்_படிக்க_வேண்டிய_பதிவு
குதர்க்கமாக கேள்வி கேட்கும் இளைஞனுக்கு திரு சோ அவர்கள் பதில் அளிக்கிறார்.

இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே?
சோ: அவை கற்பனை
Image
Image
என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!
சோ: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத்
தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?
இளைஞன்: ஆமாம்.
சோ: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?
இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.
சோ: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
இளைஞன்: என் தாத்தா
Read 12 tweets
Sep 26
#ராஜகாளி_அம்மன்
பாண்டிய வம்சத்தின் முதல் மன்னர் நம் அனைவருக்கும் கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய சிவபெருமான் தான். இந்த பாண்டி வம்சத்தின் 108 வது மன்னராக அன்னை மீனாட்சி பொறுப்புக்கு வந்தாள். அப்பேர்ப்பட்ட பாண்டிய வம்சத்தின் ராஜ தெய்வம் தான் ராஜகாளி அம்மன். மதுரையில் இருந்து Image
ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் கன்னிவாடி என்ற கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தெத்துப்பட்டி ஆகும். திண்டுக்கல்லில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை டவுன் பஸ் வசதி இருக்கிறது இது கோயில் வாசல் வரை செல்கிறது. அல்லது கன்னிவாடியில் இறங்கி நடந்தே Image
செல்லலாம். இந்த கிராமத்தில் இருந்து கொண்டு பாண்டிய வம்சத்திற்கு வழி காட்டியாகவும் பாதுகாவலாகவும் இருந்து அருள் வாழ்த்த வருபவள் அன்னை ராஜகாளி!
சோழர்களின் சாம்ராஜ்யம் தான் மிகப் பிரமாண்டமானது என்று நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் பாண்டியர்களின் சாம்ராஜ்யம் அதையும் விட பெரியது
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(