Hyder♥♠ Profile picture
May 14 10 tweets 2 min read
#வாழ்க்கை

*எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!*

*கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!*
*உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!*

*கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!*

*சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!*
*பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!*

*இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!*

*உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம்
எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்...!!*

*கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்...!!*

*மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள்
என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.*

*வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.*

*தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.*
*கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான்.அதனதன் வலிமை அதனதன் உயரம்.*

*தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.*

*அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்...!*
*இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது...!!*

*தினம் தவறாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டே இருக்கும் உறவிடம் திடீரென எதையும் மறைத்துவிடவும் இயலாது. மறைக்க மனம் முன்வருவதும் கிடையாது....!!!*

*உங்களின் தோல்வி எங்கே
ஒளிந்து உள்ளது தெரியுமா..?பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும் போது...!!*

*சுயக்கட்டுப்பாடுடையமனிதன் பலமடங்கு சக்தியைப்பெறுவான்.*

*என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில்..இது வரை யாருடனும் போட்டி போடவில்லை.*

*வெல்வதற்கு செல்வம் தேவை
இல்லை.. உள்ளம் தான் தேவை..!*

*நீங்கள் திறமையானவன் என்பது புதிதல்ல.. அதை நீங்கள் இவ்வளவு காலம் மறந்திருந்தீர்கள்..*

*விழித்திருங்கள்..எழுந்திருங்கள்..வென்றிடுங்கள்..!!*

*வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமெனில் கொஞ்சம் ஞாபகமறதியும் வேண்டும்.*
*இல்லையேனில் சில நினைவுகள் நம்மை கொன்றுவிடும்.*

*கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் இருக்கு..!!*

*சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது..!*

*பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது..!!*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder♥♠

Hyder♥♠ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

May 15
லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி.பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒருஜெட் விமானம் உள்ளது அதில்பயணித்தார். ஒருநாள் அதுகடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிட்டிக்க மில்லியன் கணக்கில்டாலர்கள் செலவு செய்யப்பட்டன.
இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.

அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசிவரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.

பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம்.
ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.

ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை.
Read 7 tweets
May 15
#மோடிக்கு_காவல்துறைஉயர் அதிகாரியின் பதில்...*

💥60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ? என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...*
*#திரு.ஜூலியஸ்ரெபைரோஓய்வு பெற்ற காவல்துறைஅதிகாரி அவர்களின் பதில்...*
*Mr. JULIUS REBERIO I.P.S.,Ex Director General of Police - Image
Maharashtra Ex Police Commissioner - Mumbai*
*Ex Director General of Police - Gujarat*
*Ex Director General of Police - Punjab*

*💥ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...*

*💥மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன
சாதித்தோம் என்பதை பாருங்கள்...

💥இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்...*

💥நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.*

💥இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.
Read 20 tweets
May 15
எங்கோ யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்

இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்

ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்

காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்

இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்

மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்

சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்

ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்

பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
Read 8 tweets
Apr 18
இளையராஜாவுக்கு ஒரு கடிதம்!

எழுதியவர் B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்

அன்புக்குரிய இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு வணக்கம்,
பாபாசாகேப் Dr.அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு BlueKraft Digital Foundation என்ற அமைப்பு வெளியிட்ட "Ambedkar & Modi -
Reformer’s Ideas, Performer’s Implementation"என்ற புத்தகத்திற்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை தமிழகத்தில்பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதை அறிவீர்கள்.
உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், சமூகவலைத்தளங்களில், உங்களை கடுமையாக விமர்சித்துவரும் நபர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாதீர்கள்.
அவர்களுக்கு பிடிக்காத நரேந்திரமோடியை,அவர்களுக்கு பிடித்த அம்பேத்காரோடு நீங்கள் ஒப்பிட்டு எழுதியதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.

அதனால் தாறுமாறாக விமரிசித்து வருகின்றனர்.

உண்மையில்,,பிரதமர் நரேந்திரமோடியை நீங்கள் அம்பேத்காரோடு ஒப்பிட்டு எழுதியதில் எந்த தவறும் இல்லை.
Read 26 tweets
Apr 17
பசும்பொன் தேவருக்கு பாலூட்டியவர் இஸ்லாமிய தாய், என்பது நமக்குத்தெரியும்,

ஆனால் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கவிஞர் வாலிக்கு பாலூட்டியவரும் இஸ்லாமிய தாய்தான் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்..?

“நான் முத்தமிழ்ப் பாலருந்த, மூல காரணம்
முஸ்லீம் பால்தான்!”
-சொன்னவர் வாலி !

"நினைவு நாடாக்கள்”

-வாலியின் அனுபவங்கள் ...!

இதோ..வாலியின் வார்த்தைகளில் :

“என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே,
என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் நினைவழிக்கும் கொடிய நோய் அது!
இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்..?

அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம் புழக்கத்திற்கு வரவில்லை.

இந்த நிலையில் என் தந்தையுடன் பணி புரிந்த இப்ராஹிம் என்பவரின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார்.
Read 10 tweets
Apr 6
சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருந்தது ஒரு கட்சி. அதற்குப் பெயர் "மாநில அரசு"

இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப் போட்டபடியே, இந்த அரசைக் காப்பாற்றிய இடத்திற்குப் பெயர் "மத்திய அரசு"
பெரிய மனிதர்களுக்குப் விருந்தளிக்க, மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "பேராசிரியர்"

அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே, தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார்
ஒருவர். அவருக்குப் பெயர் "மாநில ஆளுனர்"

குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு, அவர்களது மருத்துவ கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "நீட் தகுதி தேர்வு"
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(