சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
#கள், #அரியல், #தேறல், #தோப்பி, #நறவு, #நறவம், #நறா, #நனை, #மட்டு, #மது, #பிழி, #வெப்பர், #மட்டம், #மகிழ், #மகிழ்பதம், #வேரி, #கந்தாரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.

இந்த வகையினம் ஒவ்வொன்றும், வெவ்வேறு செய் நேர்த்தியால் தயாரிக்கப்பட்டது, சுவையாலும் வேறுபட்டிருந்தது.
சங்க காலத்தில் கள்ளின் பயன்பாட்டைப் பார்க்கும்போது, அது உணவின் ஒரு கூறாகவே இருந்துள்ளதைக் காண்கிறோம்.

• நாட்டை ஆண்ட மன்னன், தன் சக வீரர்களுக்குக் கள் ஊற்றிக் கொடுத்துள்ளான் (புறம். 289)
• மன்னன் அளித்த விருந்தில், புலமைமிக்கப் புலவர்களும் கலந்துகொண்டு மதுவைச் சுவைத்துப் பருகியுள்ளனர் (புறம். 381,396, 397)

• சங்ககாலப் புலவர்களில் பேராளுமை செலுத்திய பெண்பாற் புலவரான #ஔவை கள் உண்டு மகிழ்ந்தார் (புறம்.235, 376)
• கடின உழைப்புக்குப் பின்னர், கள்ளை மாந்திய தந்தைக்கு மகள் ஒருத்தி மீன் பொரித்து ஊட்டிவிட்ட குறிப்பும் உள்ளது (அகம். 216)

• இல்லறப் பெண்கள் கள் உண்டு மகிழ்ந்தனர் (கலி.73; அகம்.221, 336: 6-11, பொருநர். 85-87)

• வீட்டிற்கு வரும் விருந்தினருக்கும் கள் கொடுத்து மகிழ்ந்தனர்
#நள்ளி எனும் சீறூர் மன்னர் தன்னிடம் வந்தவர்க்கு, வேட்டையாடிய மான் இறைச்சியைத் தானே தீயில் சுட்டுத் தந்தான் (புறம்.150)

'ஓரி மான்' கறியோடு, மதுவையும் வழங்கிப் பசி தீர்த்தான் (புறம்.152)
#பாரி கண்ட மலைநாட்டில் புல்வேய்ந்த குடிசைகளில் வாழ்ந்த சாதாரண குடியினர்கூட,

விருந்தினருக்கு நிலத்தில் புதைத்து விளைந்த #மட்டு எனும் தேறலையும், வறுத்த நறுநெய்க் கடலையும், சோறும் கொடுத்து உபசரித்தனர் (புறம். 120).
• கள்ளைக் காய்ச்சிய பெண்கள் #நுளைமகள் எனப்பட்டனர் (சிறுபாண். 158)

• கள் விற்கும் பெண்டிர் #அரியலாட்டியர் எனப்பட்டனர் (அகம். 245: 7-10).

• பெண்கள் தம் இல்லங்களிலேயே கள் தயாரித்தனர் (பெரும்பாண். 275-282, 339-340; அகம். 245: 7-10, 348: 7-10).
மேற்கூறிய தரவுகளைக் கருத்தூன்றி கவனிக்கும்போது,

சங்க காலத்தில் அரசர், வீரர், புலவர், பாணர், விருந்தினர், ஆண்கள், பெண்கள் என அனைவரும் கள்ளை விரும்பிக் குடித்துள்ளனர்.

உணவின் ஒரு கூறாகவே அது இருந்துள்ளது.
பெண்கள் கள்ளுண்டு மகிழ்ந்தனர். மயக்கம் வருமளவிற்கு அதிகமாகவும் உண்டனர் என்பதை,

#ஐங்குறுநூறு (42:1-2) பாடல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் #கள்ளுணவு உணவின் ஒரு பகுதியாக இருந்தது. அது வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

பெண்களே தயாரித்தனர். வீட்டிற்கு வரும் விருந்தினர்க்குப் பெண்களே கள்ளைப் பரிமாறினர்.

சங்க இலக்கியத்தில் காணப்படும் மது வகைகளில் #கள் பற்றிய குறிப்புதான் அதிகம். அது 88 இடங்களில் வருகிறது.
#கள் பலவகையில் தயாரிக்கப்பட்டது. அவை,

அரிசிக் கள், தினைக் கள், மா பலாக் கள், தேன் கள் (தேக்கள்), பனங்கள் எனப் பலவாறு வேறுபட்டன.

இடுபொருளாலும், செய்முறையாலும் இதன் சுவை மாறுபட்டிருந்தது.

வேட்டையாடி உணவு சேகரித்தலின் போது, தேன் எடுத்தலை விரும்பி மேற்கொண்டனர்.
தொல்குடிகள் வாழ்வில் தேன் முக்கிய இடம்பெற்றிருந்தது.

தேனைச் சேகரித்த மக்கள் அதனை மூங்கில் குழாய்களில் இட்டுப் பாதுகாத்தனர்.

பல நாட்களுக்குப் பின்னர், அது புளிப்பேறி உண்பவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த அனுபவத்தின் ஊடாகத் தேனைப் பிழிந்து மூங்கில் குழாய்களில் அடைத்து மதுவாக மாந்தியது ‘பிழிமகிழ் வல்சி' (புறம்.269:7) எனப்பட்டது.

குன்றக் குறவர்கள் மூங்கில் குழாய்களில் வார்த்திருந்த மதுவை உண்டு வேங்கை மர முற்றத்தில் குரவையாடியதை,
பின்வரும் (புறம் 129:1-4) மூலம் அறியமுடிகிறது.
• தினைமாவிலிருந்து வடித்த கள்ளை #மறவர் உண்டனர் என்பதைத் 'தினைக்கள் உண்ட தெறிகோல் மறவர்' என்கிறது #அகநானூறு (284: 8),

• பருத்த பலாப் பழத்திலிருந்து பிழிந்த பிழியை உண்டு, களித்த கானவன் பற்றிய குறிப்பினை #அகநானூறு (172: 10-12) பின்வருமாறு குறிப்பிடுகிறது.
கள்ளினைத் தயாரிக்கும் முறையாலும், பயன்படுத்தும் பொருட்களாலும், தொடரிக் கள், தினைக் கள், பனைக் கள், விளை கள், தோப்பிக் கள் என அழைக்கப்பட்டன.

தொடரிக் கள் என்பதை 'விளை கள்' என்கிறது புறநானூற்றுப் பாடல்.
#தொடரி எனும் பழத்தையும், களாப் பழத்தையும் ஒன்றாகக் கலந்து, பதப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கள் வகையே 'விளை கள்'.

குறிஞ்சி நிலத்தில் குன்றின் அடிவாரத்தில், சிறுமனையின் முற்றத்தில் தினையிலிருந்து வடித்த கள்ளினையுண்டு, மானிறைச்சியை அறுத்துத் தின்னும் #மறவர் பற்றி, வர்ணிக்கிறது.
மருத நிலத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் கள் தயாரித்தனர்.

இங்குத் தினை, அரிசி முதலான தானியங்களைக் கொண்டு கள் தயாரித்த முறையைப் #பெரும்பாணாற்றுப்படை (275-281) விரிவாக விவரிக்கிறது.

அரிசியைக் களியாகச் சமைத்து அதனைக் கலத்தில் ஊற்றி ஆற வைப்பார்கள்.
பின்னர் நெல்லின் முளையை இடித்து அரிசிக் கூழில் கலப்பார்கள்.

இந்தக் கூழினை இரண்டு பகலும், இரண்டு இரவும் வைப்பார்கள்.

கூழ் நன்றாகப் புளிப்பேறிய பின்னர் வெந்நீரில் கலந்து வேக வைப்பார்கள்.

வெந்த அரிசிக் கூழினை வடிகட்டி விரலால் பிழிந்து எடுப்பார்கள். இதுவே #நறும்பிழி எனப்பட்டது.
#அகநானூறு (35) இன்னுமொரு குறிப்பினைத் தருகிறது.

உடன்போக்கில் சென்றுவிட்ட தன் மகளின் நிலையைத் தாய் பின்வருமாறு எண்ணிப் பார்க்கிறாள்.

'வெட்சி மறவர்களை வீழ்த்திய கரந்தை வீரர்கள் அவர்களின் ஆநிரைகளை மீட்டு வருகின்றனர்...
இந்த வெற்றிக்கு உதவிய #நடுகல் தெய்வத்திற்குத் துடியை முழக்கி, தோப்பிக் கள்ளோடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுத்து வழிபட்டனர்.

இப்படிப்பட்ட காட்டு வழியில் என் மகள் உடன்போக்கில் சென்றுள்ளாள்' என்பதாக அப்பாடல், பின்வருமாறு அமைகிறது.
வீடுகளில் தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் 'தோப்பிக் கள்' என்று பெயராகும் என்பதை,

‘இல்லடு கள்ளின் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி' (பெரும்பாண். 142-143) என்னும் வரிகள் மூலம் அறியலாம்.
'தோப்பி நெல்' என்றொரு வகையுண்டாம். இந்தத் தோப்பி அரிசியைக் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்பட்டது.

காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த #பரதவர் பனங்கள்ளைப் பருகிய செய்தி நற்றிணையில் (323), 'ஓங்கித் தோன்றும் தீம்கள் பெண்ணை' என்று வருகிறது.

புறநானூற்றில் #அவ்வையார் எழுதிய பாடல் (235).
'கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய' (பெரும்பாண். 339).

#நற்றிணை தரும் விளக்கம் குறிஞ்சித் திணையில் வேட்டுவரின் வாழ்வியலைக் குறிப்பிடுகிறது.

உடுப்பு, நுணல் (தவளை), புற்றின் ஈயல் (ஈசல்), முயல் ஆகியவற்றைப் பிடித்த #வேட்டுவன்...
அவற்றைப் பையில் கோர்த்துக் கொண்டு வந்து குடிசையில் போட்டுவிட்டு #கள் குடித்துச் செருக்குடன் இருந்துள்ளான்.

நன்கு முதிராத (புளிக்காத) இளங்கள் நாறும் படியாக இருந்தது என்பதை 'விளையா இளங்கள் நாற' என்கிறது #அகநானூறு (200: 22)
வழிப்பறி செய்த பொருள்களைக் கள்ளுக்கடையில் (கள்ளுடை நியமம்),

உரிய விலையாகக் கொடுத்துக் #கள் வாங்கி அருந்தினர் என்கிறது #பதிற்றுப்பத்து (75:10-11).

'புல்லிகல் படுத்துக் கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும்'
மான் கறிக்குப் பண்ட மாற்றாகக் கள் பெற்றனர் என்பதை,

'மான் குறையொடு மதுமறுகவும்' என்கிறது #பொருநராற்றுப்படை (217).

சாடியில் உள்ள கள்ளைப் பருகினால் செருக்குண்டாகும் என்பதைக் ‘கலிமடைக் கள்ளின் சாடி அன்ன' என்கிறது #நற்றிணை (295:7).
விழாக்கள் இல்லாத காலத்திலும்கூட உழவர்களின் உண்கலங்களில், உணவுடன் பெரிய மீனும் மணம்மிக்கக் கள்ளும் இருந்தன என்கிறது #புறநானூறு (384:8-9)!

'விழவின்று ஆயினும் உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து'
சங்க காலத்தில் கள்ளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்டி
(#சாகாடு) சேற்றில் புதையும்போது,

அதன் சக்கரங்களின் கீழே கரும்பை அடிக்கினார்கள் என்கிறது #அகநானூறு (116:2-3)!

'கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின் ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர'

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

May 30
சங்க கால பாண் சமூகத்தாரின் வாழ்வியல்...!

சங்க காலத்தில் #அலைகுடிகள் என அதிகம் அறியப்பட்டவர்கள் #பாண் சமூகத்தினர்.

பாணர், பொருநர்,துடியர், வயிரியர், கண்ணுளர், கோடியர், சென்னியர், இயவர், இனைஞர், குறுங்கூளியர், நகைவர், அகவர், அகவுநர், அகலவன், வேலன், கட்டுவிச்சியர், கடம்பர்...
முழவன், பறையன் எனப் பல்வேறு பாண் குடியினர் கலைச் சேவை செய்து வந்தார்கள்.

சங்க காலத்தில் ஒவ்வொரு திணையிலும் நிலையான குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களே #திணைக்குடியினர் எனப்பட்டனர்.

இந்தத் திணைக் குடிகளையும், சீறூர் மன்னர்களையும், முதுகுடி மன்னர்களையும், குறுநில மன்னர்களையும்...
சிற்றூர்களில் வாழ்ந்த கிழார்களையும் ஆதரவுச் சமூகத்தாராக ஏற்றுக்கொண்டு அவர்களை அண்டிப் பாண் சமூகத்தார் வாழ்ந்தார்கள்.

அதனால் இவர்கள் #அலைகுடிகள் எனப்பட்டனர்.

சங்க காலம் வீரயுகக் காலம். இக்காலகட்டத்தில் உலகம் முழுக்கப் பாண் சமூகத்தாரின் தேவை இருந்தது.
Read 35 tweets
May 24
சங்ககாலக் மருதத் திணை மக்களின் உணவு முறைகள்...!

வேளாண் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் பேசுகிறது.

#சேற்று நிலத்தில் #நெல்லை விதைத்துப் பயிரிட்டுள்ளனர்.

நாற்றங்காலில் #நாற்று வளர்த்துப் பின்னர் பெயர்த்தெடுத்துப் பயிரிட்டனர்.
#சேற்றுழவு செய்ததை பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

#விதை விதைத்து #நெல் பயிரிட்ட முறையை ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்' என்கிறது #ஐங்குறுநூறு (3:4).
ஒரு வேலி நிலத்தில், ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்துள்ளதைப் பின்வரும் #பொருநராற்றுப்படை வரிகள் பதிவிடுகின்றன.

மேலும், விளைந்த நெற்பயிரை அறுத்துக் களத்திற்குக் கொண்டு வந்து, அடித்துக் காற்றில் தூற்றி நெல்லைக் குவித்தனர் என்கிறது #அகநானூறு (30: 6-8).
Read 20 tweets
May 23
சங்ககாலப் பாலைத் திணை மக்களின் வாழ்வாதாரம்...!

பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.

குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.

கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.

வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.

இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,

அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.

இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
Read 26 tweets
May 22
சங்க கால #நெய்தல் திணை மக்களின் பன்மைத் தொழில் நுட்பங்கள்!

சங்க கால மீனவர்களின் தொழில்நுட்பம் பன்மைத் தன்மை வாய்ந்தது.

#பரதவர்கள் நள்ளிரவிலும் மீன் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு திண்ணிய திமிலில் அலைகடல் நடுவே சென்றுள்ளனர்.
விளக்கொளியைக் கண்ட சிறுமீன்கள் திரண்டெழும்; அவற்றைத் தின்ன வெஞ்சுறாக்கள் விரைந்து வரும்.

அவற்றைப் பரதவர்கள் பிடித்துத் திமிலில் ஏற்றி வந்தனர் - நற்.67:6-9

இரவில் மீன் வேட்டம் செய்வோர், கடலில் வெளிச்சம் வார் போடுவதற்குத் தாம் பிடித்த மீன்களின் கொழுப்பைச் சேகரித்து அதனை...
எண்ணெய்யாகப் பயன்படுத்தியுள்ளனர் என
பின்வரும் பாடலடிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இரவில் மீன் வேட்டத்திற்குச் செல்லும்போது, சுறா மீன்கள் கட்டுக் கடங்காமல் விரைந்து திரிவதுண்டு.

அவற்றைக் கனன்று எரியும் தீப்பந்தம் மூலம் கூர்ந்து நோக்கி, வலுவான கயிற்றில்... Image
Read 20 tweets
May 20
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!

மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.

இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.

இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.

#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 25 tweets
May 19
உப்பு விளைவித்தல்...!

சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.

▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.

▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.

சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(