Discover and read the best of Twitter Threads about #பதிற்றுப்பத்து

Most recents (6)

#நெகமம், #நிகமம், #நியமம்...!

சங்க இலக்கியத்தில் நியமம் என்ற சொல் பயின்று வரக்காணலாம். நியமம், #சேரர் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டில் இருந்துள்ளது.

முல்லை நிலம் சார்ந்த வன்புலத்தில் நியமம் இருந்தமை #பதிற்றுப்பத்து கூறும். அந்த நியமத்தில் கொடி நுடங்கும் படைகள் நிறைந்திருந்தன.
கள் நொடை தீர்ப்பதற்கு #வேட்டுவர்கள் யானைத் தந்தத்தைக் கொடுத்தனர்bஎன்றும் கூறப்பெறுகின்றது.

மேலும் கத்தும் கடல் ஓசை கேட்கும் செல்லூர்க்குணாஅது கோசர் நியமம் இருந்தமை பற்றி அகப்பாடல் ஒன்று கூறும்.

வடமொழி நிகமம் என்ற பெயரே தமிழில் நியமம் என்று திரிந்தது.
வடமொழி நிகம என்பது அம்மொழி நெகம என்பதின் திரிபு என்று கொள்வர்.

நெகம என்பதை நே + காம என்று பிரித்துப் பொருள் கொண்டால் கிராமமல்லாதது என்று பொருள் கூறலாம்.

#பதிற்றுப்பத்து நியமம் #பொள்ளாச்சி அருகில் உள்ள #நெகமம் என்று கருதப்பெறுகின்றது.
Read 6 tweets
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Read 31 tweets
சங்ககாலக் மருதத் திணை மக்களின் உணவு முறைகள்...!

வேளாண் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் பேசுகிறது.

#சேற்று நிலத்தில் #நெல்லை விதைத்துப் பயிரிட்டுள்ளனர்.

நாற்றங்காலில் #நாற்று வளர்த்துப் பின்னர் பெயர்த்தெடுத்துப் பயிரிட்டனர்.
#சேற்றுழவு செய்ததை பின்வரும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

#விதை விதைத்து #நெல் பயிரிட்ட முறையை ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும்' என்கிறது #ஐங்குறுநூறு (3:4).
ஒரு வேலி நிலத்தில், ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்துள்ளதைப் பின்வரும் #பொருநராற்றுப்படை வரிகள் பதிவிடுகின்றன.

மேலும், விளைந்த நெற்பயிரை அறுத்துக் களத்திற்குக் கொண்டு வந்து, அடித்துக் காற்றில் தூற்றி நெல்லைக் குவித்தனர் என்கிறது #அகநானூறு (30: 6-8).
Read 20 tweets
சங்ககாலப் பாலைத் திணை மக்களின் வாழ்வாதாரம்...!

பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.

குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.

கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.

வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.

இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,

அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.

இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
Read 26 tweets
சங்ககால கைவினைக் கலன்கள்!

குயவர்கள் 'கலம்செய் கோவே' என அழைக்கப்பெற்றனர்.
கலத்தினை வனைவதற்குத் #திகிரி (மலைபடு.474) பயன்படுத்தினர்.

#குயவர்கள் சமைத்த கலன்களைச் சூளையில் சுட்டு உருவாக்கினார்கள். Image
▪︎ #தாழி:

இறந்தோரை அடக்கம் செய்யும் 'தாழி'யினையும் இக்குயவர்களே செய்து கொடுத்தனர்.

'முதுமக்கள் தாழி' எனப்பட்ட இக்கலம் பெரிய வாயகன்ற பானை போன்று இருந்தது.

உயிர் நீந்த மன்னர்களையும், நிலக்கிழார்களையும், தலைவனையும் இத்தாழிக்குள் வைத்துப் புதைந்தனர். Image
இதனை #பதிற்றுப்பத்து பின்வருமாறு உணர்த்துகிறது.

சங்க காலத்தில் குறிஞ்சி, முல்லை, பாலை நில மக்கள் #ஈசல் பிடித்து உண்டனர்.

அவ்வீயலைப் பிடிக்கத் #தாழி பயன்பட்டது என்பதை

‘நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்கெண்டி' எனும் #நற்றிணை (59: 2) அடி குறிப்பிடுகிறது. Image
Read 23 tweets
#தமிழ்ஹிந்து #இலக்கியம் #திருமால்
எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம்,ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை.கண்ணை மூடிக் கொண்டு இந்து மத வெறுப்பை கொடுவதற்கு அந்த வார்த்தைகள் பயன்படும் கருவி அவ்வளவுதான்.(1)
பெளத்தம்,சமணத்தை பற்றி இவர்களுக்கு எள் முனையளவு கூட தெரியாது.

அத்திவரதர் புத்தர் சிலையாம் ஏனென்றால் படுத்திருக்கிறாராம் இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக் கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும்.(2)
இனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.சிலப்பதிகாரம் ஒரு சமண நூல் ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது.ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததை சொல்கிறது.(3)
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!