#அக்னிபத்

நாகன் என்னும் வேடன்

வேட்டையாட சென்றான், ஒரு யானை எதிர்பட்டது, பெருத்த வேட்டை கிடைத்தது என்று மகிழ்ந்த நாகன் ஒரு வழியாக யானையை கொன்று கீழே தள்ளினான்.

வேட்டை மும்முரத்தில் தன் காலடியின் கீழிருந்த சிறு புற்று ஒன்றை மிதித்துவிட்டான் நாகன்.
புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நாகனின் காலை கடித்தது. கையிலிருந்த வில்லால் பாம்பின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு நாகன் கீழே விழுந்து இறந்தான் அடிபட்ட பாம்பும் இறந்தது

சற்று நேரம் கழித்து அந்த பக்கமாக ஒரு நரி வந்தது.
அதன் கண்ணில் இறந்து கிடந்த யானை, நாகன், பாம்பு மூன்றும் தெரிந்தன.

நரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, யானையை ஆறு மாதம் வைத்து தின்னலாம், மனிதனை ஏழுநாள் வைத்து தின்னலாம், பாம்பை ஒரு நாள் வைத்து திண்ணலாம் என்று நினைத்தது
மகிழ்ச்சியில் ஊளையிட்ட நரி வேடன் கையிலிருந்த வில்லை அப்போதுதன் பார்த்தது.

தன் யோசனையை மறுபரிசீலனை செய்தது

அவற்றையெல்லாம் தின்பதற்கு முன்னால் இந்த வில்லில் உள்ள நரம்பை (நாண்) சுவைத்து திண்ணலாம் அதன்பின்பு பாம்பு மனிதன் யானை என வரிசையாக திண்ணலாம் என்று முடிவெடுத்தது
உடனே வில்லில் கட்டியிருந்த நாண் கயிற்றை பல்லால் கடித்தது நாண் அறுந்த அதே நொடியில் விஷ்க் என்று வில் நிமிர அதனால் தலையில் தாக்குண்ட நரி அப்போதே இறந்தது

மூன்று விதமான இரை கிடைத்தும் அவற்றை விட்டுவிட்டு சின்னஞ்சிறிய நரம்பின் மீது ஆசைப்பட்டு தன் வாழ்வையே இழந்தது நரி.
சின்னஞ்சிறியவைகளின் மீது ஏற்படும் ஆசை பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று மனதில் பதிய வேண்டிய இக்கதையை நரி விருத்தம் எனும் மிகபழமையான நூல் கூறுகிறது

#ஜெய்ஹிந்த்

#அக்னிபத்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jun 23
#கக்கன்

அரிஜனராக பிறந்து, பார்ப்பான் என கோஷமிடாமல் இருந்ததால் இன்று ஒரு தலித் சாதிய கட்சியிலும் இவர் படம் இல்லை, ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் .... ImageImage
தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது,
Read 23 tweets
Jun 23
சந்திரபாபு நாயுடு ஊடகத்தின் முன் கண்ணீர் விட்டு அழுத போதும், நேற்று உத்தவ் தாக்கரே என் மக்களே என்னை ஏமாற்றி விட்டார்கள் என நிலை குலைந்த போதும் கிஞ்சித்தும் அவர்கள் மீது பரிதாபமோ, இரக்கமோ வரவில்லை. காரணம், மோடி என்ற தனி மனிதன் மீது அவர்கள் கக்கிய வன்மம், Image
அவச்சொற்கள் எண்ணிலடங்காதவை. மோடியின் பெயரால் வென்று பிறகு மோடியையே அவர்கள் பேசிய வார்த்தைகள் நம்பிக்கை துரோகத்தின் உச்ச நிலை.

ஏனோ அச்சமயங்களில் நமக்கான நேரம் வரும் காத்திருக்கலாம் என ஒரு விளிம்புநிலை பா.ஜ.க தொண்டராக நாம் அடக்கிய ஆற்றாமை, Image
இன்று பீரிட்டு “இவர்களுக்கெல்லாம் இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என தோன்றுகிறது. நாமே தனிப்பட்ட முறையில் இவர்களை பழி தீர்த்தது போன்ற எண்ணம் வருகிறது..

நல்லவர்களுக்கு, நமக்கு ஒரு போதும் கெடுதல் எண்ணாதவர்களுக்கு, Image
Read 4 tweets
Jun 22
ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை தினம்

#நாயன்மார்

`தோழமை பாவமா... பக்தி வைராக்கியமா...' -நோய் தீர்க்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை

சைலபதி

ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை தினம்!

சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர். ImageImage
அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை பாவம் என ஈசன் எந்த பாவத்தில் நினைத்தாலும் அப்படியே அருள்பாலிப்பவர். ஈசனைப் பொறுத்தவரை இவற்றில் எது ஒன்றும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை. ImageImage
இதை உணர்த்த ஈசன் பல்வேறு லீலைகள் புரிந்ததுண்டு. அப்படி ஈசன் திருவிளையாடல் புரியும் ஓர் அற்புதமான வாழ்வைப் பெற்றவர், ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர், மானக்கஞ்சாறனாரது மருமகன். ஈசனுக்குத் திருப்பணிகள் செய்துவந்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர். ImageImage
Read 13 tweets
Jun 22
*பாட்டி அடிக்கடி சொல்லுவாள்*

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே
மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே
Read 4 tweets
Jun 21
ஒரு ஜெர்மனி ஆள் மதுக்கடைக்குள் நுழைந்து ஒரு பீர் ஆர்டர் செய்கிறான்.

மதுக்கடைக்காரர் அவரிடம் பீர் ஒன்றின் விலை "100 யூரோக்கள் என்று கூறுகிறார்..!"

ஜெர்மனியர் அதிர்ச்சியடைந்தார் - "100 யூரோவா..? நேற்றுவரை அது 10 யூரோக்கள் தானே..!"

"சரி, இன்று முதல் அது 100 யூரோக்கள்."
- "ஆனால் ஏன் 100 யூரோக்கள்..? ?"

பார் டெண்டர்: "நான் அதை விளக்குகிறேன்,
-10 யூரோ பீர் விலை,
-10 யூரோ உக்ரைனுக்கு உதவ,

-20 பொருளாதாரத் தடைகளை விதித்த மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இல்லாத ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ
.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இங்கிலாந்துக்கு 10 யூரோக்கள் உதவி.

-பின்னர் பால்கன் நாடுகளுக்கு உலை நிலக்கரி வாங்க உதவியாக 10 யூரோக்கள் அனுப்பப்படுகின்றன.
Read 5 tweets
Jun 21
😃😃😃....

உண்டி குளுக்கி அருமை பெருமை அறிவோம்

கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த மிகப்பெரிய தலைவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்,
நாட்டின் மிகச்சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வயிற்றுப் போக்கு நிற்கவில்லை, எனவே விரைவில் அவர் மரணமடையலாம் என்ற செய்தி பரவியது, இதனையடுத்து மருத்துவமனை முன் ஏராளமான தொண்டர்கள் கூடினர்,
அப்போது ஒரு முதிய கம்யூனிச தோழர் மருத்துவரை சந்தித்து தான்னால் தலைவரின் வயிற்றுப்போக்கை நிறுத்த முடியும் என கூறினார்
இதன் பின் அவர் ICU வில் செல்ல அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் வெளியில் வந்து மருத்துவர்களிடம் வயிற்றுப்போக்கு நின்று விட்டதாக கூறினார்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(