M.SivaRajan Profile picture
Jun 24, 2022 11 tweets 5 min read Read on X
#சாளக்கிராம_பூஜை

சாளக்கிராம பூஜை செய்பவன்
சித்தம் சுத்தமாகும்.

சாளக்கிராம பூஜை செய்பவன்
விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
கொலை செய்தவனின்
பாபத்தையும் போக்கும்.
சாளக்கிராமத்தை நினைத்தாலும்,
தரிசித்தாலும், பூஜை செய்தாலும்,
சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள்
தெறித்து ஓடுவதுபோல.

பாபங்கள் கழன்று ஓடும்.
இதனை பக்தியுடனோ அல்லது
பக்தியேஇல்லாது அல்லது
எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.
சந்தனம், புஷ்பம், தீபம், தூபம்,
நைவேத்தியம்
இப்பூஜையினை செய்பவர்கள்
விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம்
வாழ்வார்கள்.

சாளக்கிராமத்தை
பக்தியுடன்_நமஸ்கரித்தவன்
தேவனாகிறான்.

அவன் சாதாரண மனிதன்
அல்லன்.
சாளக்கிராமம்- பகவான் இருக்குமிடம்.

சர்வ பாபங்களையும நாசம்
செய்யவல்லது.

பாபங்கள் செய்தவர்கள் கூட
சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள்.

பக்தியோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.
அரணி கட்டையில் அக்னி
உண்டாவதுபோல, சாளக்கிராமத்தில்
ஹரி இருக்கின்றார்.

லஷ்மி மற்றும்
வைகுண்டத்தில் இருப்பதைவிட
ஹரி சாளக்கிராமத்தில் மிகவும்
பிரசன்னமாகவே உள்ளார்.

சாளக்கிராமத்தை பூஜை செய்தால்
அக்னிஹோத்தரமும் பூதானமும்
செய்த பலன்.
இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை
செய்த பலனுக்கு ஈடாகாது.

பன்னிரெண்டு சாளக்கிராமம்
கொண்டு பூஜை செய்தால்
பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம்
பூஜை செய்தபலன்
ஒரே நாளில் கிடைக்கும்.
காமக்குரோதம் உள்ள மனிதன்கூட
சாளக்கிராம பூஜையினால்
முக்திபெறுவான்.

தீர்த்த யாத்திரையோ,
யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும்,
சர்வ யக்ஞம் செய்த பலனும்
கிடைத்துவிடும்.
பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து
அருள்பாலிக்கின்றனர்.

விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம்அடைகிறான்.
சாளக்கிராமம் இருக்குமிடத்தில்
சமஸ்த லோகங்களும்,
சமஸ்த தேவதைகளும் இருப்பதாக
ஐதீகம்.பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்.

சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம்
உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும்
பிறவாநிலை கிடைத்துவிடும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 11
#குல_தெய்வ_சாபம்

ஜாதகப்படி யாருக்கெல்லாம் 'குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம்" இருக்கும் என்பதையும் இந்த சாபத்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் தர்ம சங்கடங்கள் ஏற்படும் என்பதையும் இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம். Image
ஜாதகத்தில் சுக்கிர பகவான் தான் குலதெய்வ சாபத்தை குலதெய்வ தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய கிரகமாகும்.

அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து (1,7,9) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிர பகவான் இருக்கின்றாரோ அவர்களுக்கு குல தெய்வ சாபம் உண்டு.
அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து (1,7,9) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிர பகவான் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குலதெய்வ சாபம் குலதெய்வ தோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.
Read 19 tweets
Nov 18
#கந்த_சஷ்டி_கவசம்

கந்த சஷ்டி கவசத்தை தினமும் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்...

கந்த சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்... Image
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது.

மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
Read 12 tweets
Oct 24
#திருப்புகழ்_கிடைத்த_வரலாறு

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

இன்று நாம் போற்றிப் புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த  24 நான்கு வருட உழைப்பை, அதற்கு யார் காரணம் என்ற வரலாற்றை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்.

அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும்.

திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.

அதாவது கிடைத்துள்ளன.

இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும்.
இவற்றுள் 1088 க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது.
Read 27 tweets
Oct 9
#இடைக்காடர்_ஜீவசமாதி

திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதி பற்றிய சிறப்பு பதிவு...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். Image
இடைக்காடர் சித்தர் 600 ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது.

கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
Read 28 tweets
Sep 21
#பூர்வ_புண்ணிய_ஸ்தானம்

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !

ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, Image
இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம்,
ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும்,
Read 31 tweets
Sep 20
#கூடலழகர்

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பதிவு :

மதுரை கூடலழகர் திருக்கோவில் வரலாறு.

கொஞ்சம் பெரிய பதிவு பொறுமையாக படித்து பயன் பெறுங்கள்.

12 ஆழ்வார்களில் ஒருவரான #பெரியாழ்வார் "வல்லபதேவ பாண்டிய" மன்னனின் ஐயம் தீர்த்து பொற்கிழி அறுத்து "திருப்பல்லாண்டு" பாடிய தலமான ,
108 வைணவத் திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான,

பெருமாள் மூன்று நிலைகளில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்
காட்சி தரும் தலமான,

வைணவத் தலங்களில் நவகிரக சன்னதி அமைந்த ஒரே தலமான , பழமையான
மதுரை மாவட்டத்தில் உள்ள
#திருக்கூடல் என்ற #கூடல்_நகர்
#மதுரவல்லி_தாயார் ஸமேத #கூடலழகர்
திருக்கோவில் வரலாற்றை காணலாம் வாருங்கள்.

கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும்.
Read 42 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(