Today in the 90th episode of #MannKiBaat, Our Hon PM Thiru @narendramodi avl spoke about an array of things beginning with the emergency in 1975 and mentioned Unsung heroes, Tamil personalities and his love for our culture & emphasised the significance of it.
(1/6)
(1) The success of Khelo India in attracting talents from ordinary families who struggled hard in their lives to reach success.
He appreciated Gold Medal Winning Weight Lifter Thiru. Dhanush from Chennai. (2/6)
(2) He shared the inspiring story of youths of Karaikal (Pondicherry) in initiating a ‘Recycling for Life’ Campaign by collecting & segregating plastic found on the sea-coast into compost, and the rest are recycled. (3/6)
(3) He also spoke about the Chess Olympiad to be conducted in Chennai from the 28th of Jul, in which players from 180 countries are participating.
(4) Further, he wished the best for the veteran Indian Cricketer from TN, Ms Mithali Raj, on her retirement. (4/6)
(5) He mentioned the Chennai & Hyderabad-based start-ups – Agnikul and Skyroot; involved in the developing launch vehicles that will take small payloads into space. (5/6)
(6) He expressed the significance of the Sabarimala Yatra and pilgrimage to seek Darshan of Bhagwan Ayyappa on the hills of Sabarimala. (6/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா திரு @mkstalin அவர்களே?
இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
திரு @mkstalin அவர்களே. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி. (1/4)
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு. (2/4)
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, ரூ.524 கோடி மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது. (1/6)
இதனையடுத்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பயனாளிகளுக்கும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், நவீன கழிவு நீரகற்றும் வாகனம் வாங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், கடந்த 12.08.2024 மற்றும் 19.08.2024 தேதிகளின் இடையே ஒரே வாரத்தில், ரூ. 65 லட்சம் வீதம், 54 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. (2/6)
புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, செக் புத்தகம் வழங்கிய அதே தினத்தில், கணக்கில் 65 லட்ச ரூபாய் வரவு வைத்து, பின்னர் இரண்டு செக்குகளில் கையொப்பம் வாங்கிவிட்டு பயனாளிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை, கடன் தொகையில், ஒரு ரூபாய் கூடத் திருப்பிச் செலுத்தப்படவில்லை. கடன் பெற்ற தினத்திற்குப் பிறகு, அந்தக் கணக்கில் எந்தவித பணப் பரிமாற்றங்களும் இதுவரை நடைபெறவில்லை. கூட்டுறவு வங்கிகள், எந்தவிதப் பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா ரூ. 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கியது? (3/6)
Our Hon PM Thiru @narendramodi avl, in his 111th episode of #MannKiBaat today, paid respects to Veer Sidhu and Kanhu, the great warriors belonging to our Tribal community who fought against the British in 1855. (1/8)
He expressed his happiness over the brisk progress of the nationwide movement named #PLANT4MOTHER, which was to plant trees with their mother or in her name to honour her. (2/8)
The PM took pride in talking about the Karthumbi Umbrellas made by the sisters of our Tribal community in Attapadi, Kerala, which has found its way to international markets - an exemplification of India’s Vocal For Local policy. (3/8)
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கரநாராயணர் அருள்பாலிக்கும் சங்கரன்கோவில் தொகுதியில், அரசியல் மாற்றம் வேண்டும் என்ற மாபெரும் எழுச்சியுடன் மக்களின் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சங்கரன் கோவிலில் மட்டும் நான்காயிரம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும் விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் உள்ளது. (1/12)
@NainarBJP @ponbalabjp
பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம். (2/12)
ஒரு கிலோ பருத்தி நூல் 320 ரூபாய். ஒரு கிலோ பாலியஸ்டர் நூலின் சந்தை விலை 160 ரூபாய். பருத்தி நூலில் நெய்ய வேண்டிய வார்ப் பகுதியை, பாலியஸ்டர் நூலில் நெய்து, கொள்முதல் செய்த 1.68 கோடி இலவச வேட்டியில் மட்டும், சுமார் 40 முதல் 60 கோடி வரை ரூபாய் ஊழல் செய்துள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி. மேலும் பெடல்தறியில் ஒரு வேட்டி நெய்ய 63 ரூபாய் வழங்கப்படுகிறது. விசைத்தறியில் நெய்த்தால் 23 ரூபாய். விசைத்தறியில் நெய்துவிட்டு, பெடல்தறியில் நெய்ததாகச் சொல்லி ஒரு வேட்டிக்கு 40 ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஞ்ஞான ஊழலுக்கு முழு உதாரணம் திமுகதான். (3/12)
இன்றைய #EnMannEnMakkal பயணம், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கும் தொகுதியான செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில், மறைமலை அடிகளாரின் பெயர் கொண்ட மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி பிரசித்தி சிங், 8 வகையான சிறிய பழமரங்கள் கொண்ட வனத்தை உருவாக்கி, 9000 மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். இந்தச் சாதனையை இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இளம் சாதனையாளருக்கு, நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார். (1/10)
தமிழகத்தில், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் வண்ணத்தில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு, மாரத்தான் போட்டிகளில் ஓடுவது, அமைச்சர் உதயநிதி பின்னால் ஓடுவது, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நடைபயிற்சி செல்வது, உதயநிதி நடித்த படங்களுக்கு விமர்சனம் கூறுவது என இத்தனை வேலைகளுக்கு நடுவில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அதை தடை செய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலமாக விற்பது சத்து மருந்தா? அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்தால், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவை வராது என சுகாதாரத் துறை சான்றிதழ் கொடுக்க முடியுமா? பிறகு ஏன் டாஸ்மாக்கில் சாராய விற்பனையை அரசே செய்து கொண்டிருக்கிறது? (2/10)
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியில், கடந்த 2019 ஆம் ஆண்டு கொடுத்த 295 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகள், நமது மத்திய அரசு, வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும் நோக்கிலான திட்டங்களை முன்வைத்து செயல்படும். ஆனால், திமுக தமிழகத்தில் கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முறையாக நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் தமிழக முதல்வர். (3/10)
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பிரசித்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டமன்ற தொகுதியில், பெரும் எழுச்சியோடு பொதுமக்கள் சூழ, ஒரு மாநாடு போல சிறப்பாக நடைபெற்றதில் பெரும் மகிழ்ச்சி.
நம் எல்லோரையும் காக்கும் ஆதி சக்தியாக அன்னை கருமாரி விளங்குகிறாள். ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் அவல நிலையில் உள்ளது. எப்படி பகுதிநேர ஆசிரியர், தற்காலிக செவிலியர்கள் நியமிப்பார்களோ, அதுபோல, கோவில் நிர்வாகம் தற்காலிக அர்ச்சகர் நியமித்து, அவர் நேற்று அம்மன் கழுத்தில் இருக்கும் 8 சவரன் நகையைத் திருடி பிடிபட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் காரணத்தினால் அவர் பிடிபட்டார். பழனி கோவில் தேவஸ்தான நிர்வாக கடையில், காலாவதியான பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 5,309 பசு மாடுகளைக் காணவில்லை. தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காணவில்லை. கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை. இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம். (1/9)
கடந்த 1961ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டுவரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும்தான். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை புத்துயிர் பெற்றுள்ளது. (2/9)
ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் அவர்கள். வாய் கோளாறு அமைச்சர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஆனால், தற்போதைய பால் வளத்துறை அமைச்சருக்கு, ஆவடி நாசரே பரவாயில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதிகபட்சம், கட்சிக்காரர்களை கல்லால் அடிப்பார், பலமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை ஏற்றி, அதற்கு மத்திய அரசு மீது பழியை போட முயற்சிப்பார். திருவள்ளூர் மாவட்டத்தில், இவருக்கு சம்மந்தமே இல்லாத துறையிலும் கமிஷன் வாங்குவார். திமுகவில் மற்றவர்கள் செய்யாததை ஒன்றும் இவர் செய்துவிடவில்லை. கூட்டமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கத்தானே திமுக என்ற கட்சியை நடத்துகிறார்கள். ஆவடி நாசரையும் உடனடியாக துறை இல்லாத அமைச்சராக திமுக அறிவிக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், கக்கன், லூர்தம்மா பிரான்ஸிஸ், பரமேஸ்வரன், சி.சுப்பிரமணியம் என கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று ஒரு அமைச்சரையாவது முன்னுதாரணமாக எடுக்க முடியுமா? உதயநிதியைப் போல தங்கள் குழந்தை வர வேண்டும் என்று எந்தப் பெற்றோராவது விரும்புவார்களா? (3/9)