இன்று ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.
நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்த *சுதர்ஸனருக்கு* இன்று திருநாள்.
வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்த சுக்ராச்சாரியாரின் எண்ணத்தை திசை திருப்பிய *சக்கரத்தாழ்வாருக்கு* இன்று திருநாள்
ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்ட *திருவாழியாழ்வானுக்கு* இன்று திருநாள்
சிசுபாலனை அழிக்க ஸ்ரீகிருஷ்ணருக்கும் கஜேந்திர மோட்சத்தில் முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றிட திருமாலுக்கும் ஆயுதமான *திகிரிக்கு* இன்று திருநாள்
புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திடவும், மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திடவும்,
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கைங்கர்யம் செய்த *ஹேதிராஜனுக்கு* இன்று திருநாள்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கிய *சக்கரராஜனுக்கு* இன்று திருநாள்.
சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும்,
இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ள ஸ்ரீ *சுதர்சனாழ்வாருக்கு* இன்று திருநாள்.
தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருக்கும் ஸ்ரீசுதர்சன்னுக்கு இன்று திருநாள்.
ஸ்ரீ அருணகிரிநாத ஸ்வாமிகள் இயற்றிய திருப்புகழ் தொகுப்பில் இருந்து,
அனைவரும் பாராயணம் செய்யும் வகையில்,
மிகவும் சிறிய அளவிலான திருப்புகழ் இந்த பதிவில் பதியப்படுகிறது.
அனைவரும் இந்த பதிவை Retweet செய்யவும்.
#திருப்புகழ்
அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும்
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே