இன்று ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்.
நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்த *சுதர்ஸனருக்கு* இன்று திருநாள்.
வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்த சுக்ராச்சாரியாரின் எண்ணத்தை திசை திருப்பிய *சக்கரத்தாழ்வாருக்கு* இன்று திருநாள்
ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்ட *திருவாழியாழ்வானுக்கு* இன்று திருநாள்
சிசுபாலனை அழிக்க ஸ்ரீகிருஷ்ணருக்கும் கஜேந்திர மோட்சத்தில் முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றிட திருமாலுக்கும் ஆயுதமான *திகிரிக்கு* இன்று திருநாள்
புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திடவும், மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திடவும்,
கிருஷ்ண பரமாத்மாவுக்கு கைங்கர்யம் செய்த *ஹேதிராஜனுக்கு* இன்று திருநாள்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கிய *சக்கரராஜனுக்கு* இன்று திருநாள்.
சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும்,
இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ள ஸ்ரீ *சுதர்சனாழ்வாருக்கு* இன்று திருநாள்.
தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருக்கும் ஸ்ரீசுதர்சன்னுக்கு இன்று திருநாள்.
அகத்தியர் சித்தர் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
அகத்தியர் - ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா.
அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது,
அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்,
அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால்,
இரணியன் தன் மடியில் கிடத்தி,
வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை,
`#தட்சிண_அஹோபிலம்’
என்று போற்றுவர்.
வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன்,
அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு,
சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ நரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
புலவர் காளமேகத்திடம் விதண்டாவாதம் செய்யும் வகையில் ஒரு புலவர் கேட்டார்.
" ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே.
உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”
"முருகன் அருளால் முடியும்.
வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?"
என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம்.
மயிலிலும் தொடங்க வேண்டாம்.
செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்"
என்று விளையாட்டாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை?
இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?
அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.