#பாரதம்
#மகா_பாரதம்

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14 ஆம் நாள் போர் தொடங்க இருந்தது.

அதற்காக பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், போர்க்களம் புறப்பட்டுக் கொண்டி ருந்தனர்.
அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.

அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“கிருஷ்ணா..

நீ அனைத்தும் அறிந்தவன்.

உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.

இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீ..

வீழ்பவனும் நீயே..
எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.

அது யாதெனில்..

இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்.?”

அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,

“எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம் திரவுபதி.?
இன்றையப் போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் உனக்குச் சொல்வேன்.

இன்றையப் போரில் இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்” என்றார்.

கிருஷ்ணன் அவ்வாறு சொன்னதும், பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய
நால்வரும், தன் மூத்த சகோதரனான தர்மனை பார்த்தனர்.

அவர்களின் முகத்தில் சோகம் குடிகொண்டது.

திரவுபதியின் கண்களும் கலங்கிப் போய், என்ன சொல்வதென்று அறியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

அனைவருக்கும் தெரியும்..
இந்த உலகத்திலேயே தர்மன் தான் மிகவும் நல்லவன் என்று பெயர் பெற்றவன்.

அதனால்தான் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள்.

பின்னர் ஒருவாறாக சமாளித்தபடி பாண்டவர்கள் ஐவரும் மனம் நொந்தபடி போர்க்களம் சென்றனர்.
போர்க்களத்தில் துரியோதனனையும், துச்சாதனனையும் கொல்ல வேண்டும் என்பதே பீமனின் குறிக்கோளாக இருந்தது.

அதனால் அவன் தன்னுடைய தேரை, அவர்கள் இருவரையும் நோக்கி செலுத்தினான்.

அப்போது அவனது தேருக்கு முன்பாக வந்து நின்றான், #விகர்ணன்.

இவன், துரியோதனனின் தம்பிகளில் ஒருவன்.
அவனைக் கண்டதும், பீமனின் முகத்தில் அன்பு படர்ந்தது. (பீமனுக்கும் தம்பி தானே)

“என்ன பீமா..

அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறாய்..

உன்னுடன் போரிடத்தான் நான் வந்துள்ளேன்.”

“விகர்ணா..

என் வழியை விடு..

நான் உன்னைக் கொல்வதற்காக களத்தில் இறங்கவில்லை.
உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் கொல்ல வந்திருக்கிறேன்.”

“ஏன் பீமா..

என்னை வென்று விட்டு அவர்களை வெல்ல இயலாதா?

இல்லை என்னை வெல்லவே முடியாது என்று எண்ணுகிறாயா?”

விகர்ணனின் அந்த பேச்சைக் கேட்டதும் பீமன் வெகுண்டான்.

“விகர்ணா..
உன்னைக் கொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை.

அது உன் மீதான அச்சம் அல்ல..

அன்பு.

உன்னை நான் கொல்ல நினைத்தாலும், என் கதாயுதமே என்னை தடுத்துவிடுமோ என்ற பயம்தான் எனக்கு.

ஏனெனில் அன்று திரவுபதியை துகிலுரித்தபோது, நீ திரவுபதிக்கு ஆதரவாக பேசியதை நான் மட்டுமின்றி,
என் கதாயுதமும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தது.

அதனால்தான் உன்னைக் கொல்ல என் மனம் மறுக்கிறது.

பிழைத்துப்போ..

இல்லையெனில் என்னிடம் இன்னொரு யோசனையும் உள்ளது” என்றான்.

“அது என்ன மற்றொரு யோசனை” என்று கேட்டான், விகர்ணன்.
“நீ எங்களுடன் சேர்ந்து விடு. பாண்டவர்கள் ஐவருடன் உன்னையும் ஆறாவதாக சேர்க்கிறோம்.

போருக்குப் பின் உனக்கு அரசு பதவி வழங்கி அரசனாக முடிசூட்டுகிறோம்.

திரவுபதியின் மானம் காக்க குரல் கொடுத்த உனக்கு முடிசூட்டி பார்க்க நினைக்கிறது என் மனம்.”

விகர்ணன் நகைத்தான்.

“பீமா..
நான் அற வழியில் நிற்பவன்.

அன்று திரவுபதிக்கு நிகழ்ந்தது அநீதி.

பெண்ணின் மானம் சூறையாடப்படும் நேரத்தில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதுதான் அறம்.

அதைத்தான் அன்று நான் செய்தேன்.

இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணனுக்காக போரிடுவதே அறம்.
அதைத்தான் இன்றும் செய்கிறேன்.

மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்காதே..

என்னைத் தாண்டி தான் நீ துரியோதனனை அடைய முடியும்.

உன்னால் முடிந்தால் உன் கதாயுதத்தை என் மீது பிரயோகித்துப்பார்” என்று சவால் விட்டான்.
அந்த துடுக்குப் பேச்சு பீமனை ஆவேசப் படுத்தியது.

தேரை விட்டு இறங்கி, கதாயுதம் கொண்டு விகர்ணனுடன் போரிட்டான்.

அந்தப் போர் அவ்வளவு எளிதாக முடியவில்லை.

விகர்ணனை அழிப்பது, தான் நினைத்ததுபோல் சுலபம் இல்லை என்பதை, அவனுடன் மோதிய பிறகே பீமன் அறிந்தான்.
ஒரு மாபெரும் வீரனுடன் போரிடுவதை அவன் மனம் உணர்ந்தது.

அறத்தின் வழி வாழ்பவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே.

ஒரு கட்டத்தில் பீமன் வீசிய கதாயுதம், விகர்ணனின் நெஞ்சை தாக்கியது.

அதை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்ட விகர்ணன் தரையில் சாய்ந்து இறந்தான்.
அதைப் பார்த்து பீமனின் மனம், இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

சூரிய அஸ்தமனம் நிகழ்ந்ததும், போர் நிறுத்தப்பட்டது. தர்மனுக்கு என்ன ஆனதோ என்று கவலையில் ஆழ்ந்திருந்த திரவுபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் நலமுடன் வருவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள்.

இப்போது அவளுக்குள் பெரும் சந்தேகம்.

இன்று எல்லாரைவிடவும் நல்லவன் ஒருவன் இறப்பான் என்று கிருஷ்ணர் சொன்னாரே..

என் கணவர் நலமுடன் தானே இருக்கிறார்’ என்று நினைத்தவள், தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டாள்.

கண்ணன் புன்னகைத்தபடியே கூறினார்.

“திரவுபதி..
நல்லவர்களுக்கு மத்தியில் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல..

ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தவன்.

உன் மானத்தைக் காப்பதற்காக எதிர் அணியில் இருந்து குரல் கொடுத்தவன்.

இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும்,
அவனுக்காக போரிட்டு தன் உயிரையே கொடுத்திருக்கிறான்.

அரச பதவி அளிப்பதாக, பீமன் காட்டிய ஆசை கூட அவன் மனதை மாற்றமுடியவில்லை.

நான் எங்கு இருக்கிறேனோ அந்த இடத்தில் தர்மம் இருக்கும், நியாயம் இருக்கும் என்பதை விகர்ணன் அறிவான்.

ஆனாலும் கூட அறத்திற்காக தன் அண்ணனுக்காக போரிட்டான்.
தான் இறந்துபோவோம் என்று தெரிந்து தான் அவன் போர்க்களத்திற்கே வந்தான். இப்போது சொல், கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்த, விகர்ணன்தானே உலகத்திலேயே எல்லாரையும் விட நல்லவன்”

அதுவரை அமைதியாக இருந்த தர்மன், “ஆமாம்.. விகர்ணன் தான் எல்லோரிலும் நல்லவன்.
என்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்..

அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.

ஆனால் விகர்ணன் என்னைவிடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை.

இந்தப் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்து விட்டதே..” என்றான்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் விகர்ணனுக்காக மனம் கலங்கி நின்றனர்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jul 17
வேதம் சொல்லும் காலங்கள்

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுகிறோம்

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று நாம் கூறுகிறோம்

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
Read 6 tweets
Jul 17
ஜோசியர் ஐயா
இன்னைக்கு
ஆடி மாதம் பிறந்தாச்சு.
என் வூட்டம்மா அவிங்க வூட்டுக்கு போகச் சொன்னா, போக மாட்டேன் என்கிறார்.

நானாச்சும் எங்கேயாவது போகவா.
எங்கே போகலாம் என்று பார்த்து சொல்லுங்க ஐயா.

தம்ப்ப்ரி நீங்க கல்யாணம் பண்ணும் போதே லக்னத்தில் சைகோ அமர்க்களமாக உட்கார்ந்து விட்டார்.
அவர் அந்த இடத்தை விட்டு நகர்வது இயலாத காரியம்..

கூடவே ராகு என்ற மச்சினனும்
ஏழாம் இடத்தில் இன்னும் ஒரு மச்சினான கேதுவும் பாடாய் படுத்துகிறார்கள்.

சூரியன் என்ற மாமியார் மூன்றாம் இடத்தில் உக்காந்து கொண்டு உக்கிரமாக பார்க்கிறார்.
சந்திரன் என்ற மாமனார் அமாவாசை இருள் போல பவர் இல்லாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் புத்தி தரும் புதன், என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறுகிறார்.

செல்வத்திற்கு அதிபதியான சுக்ரனோ, வரும் பணத்தை எல்லாம், லக்னத்தில் உட்கார்ந்த சைக்கோ பிடுங்கி கொள்கிறார்.
Read 5 tweets
Jul 15
சீடன் ஒருவன், “குருவே! இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?” என்று சந்தேகம் கேட்டான்.

“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு.

சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான்.
அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக்கேட்டார்.

குழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக்கேட்டான்.
“இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?”

“கயிறை விட்டால் அது ஓடிவிடும்!”

“அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?”

“குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன்.
Read 8 tweets
Jul 15
விருதுப்பட்டி ஓட்டு வீட்டில் பிறந்தவன்...

நாடாளுமன்றக்
கூரைக்கு அடியில் அரியாசனத்தில்
யார் அமர வேண்டும் என்பதை இரண்டு முறை தீர்மானித்தான்!

ஏழைத் தாய்க்குக்
குழந்தையாகப் பிறந்தவன்
பாரதத் தாய்க்குத்
தவப் புதல்வன் ஆனான்!
அவன் கட்டி வைத்த பள்ளியில்
படித்த தற்குறிகளே
அவனைக் குறிவைத்து
அரசியலில் வீழ்த்தினர்!

அவன் எந்த ராணியை
ஏணியாக மாறி
அரியணையில் ஏற்றினானோ
அந்த ராணியே வில்லியாகி
ஏணியை எட்டி உதைத்தாள்!
உணவுக்கு வழியின்றி
உழவுக்குப் போன
பிள்ளைகளை
அழைத்து வந்து
பள்ளிக் கூடத்தையே
உணவுக் கூடமாக்கி
அன்னத்தோடு அறிவையும் படைத்தவன்!

அவன் கட்டிப்போட்ட
அரசுக் கல்லூரிகளே
மாடு மேய்த்தவர்களைப் பட்டதாரிகள் ஆக்கின!

கல்லூரி மதில்சுவரைத் தொட்டுப் பார்க்கவும் வசதியற்ற பலபேர்...
Read 8 tweets
Jul 14
#காமராசர்

முதல்வராக இருந்த சமயம்.*

அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.

சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.

உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர். ImageImage
*"என்ன ரெட்டியாரே, செளக்கியமா என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?* என அழைத்து அருகில் அமரச் செய்தார்.

இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல, முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.

*"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்"*
*"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்."* என தயங்க,

*"அடடே நல்ல சேதிதானே, இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க"* என்று தோளில் தட்ட......

*இல்ல, கல்லாணத்துக்கு நீங்க வரனும்.* நீங்கதான் தலைமை தாங்கனும். ஊரெல்லாம் சொல்லிட்டன்.
Read 16 tweets
Jul 14
*சிவ_சிவ*

இப்போதே சொல்லிவிடுகிறேன்.... இப்பதிவை வரி விடாமல் தொடர்ந்து படிப்பவருக்கு சிவபெருமானின்
"சிறப்பு பம்பர் பரிசு" காத்திருக்கிறது ஐயா....!

#அருள்மிகு_விருத்தாம்பிகை_பாலாம்பிகை_உடனுறை_அருள்மிகு_விருத்தகிரீஸ்வரர்_திருக்கோவில்,
#விருத்தாசலம். Image
ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை Image
முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(