#முண்டாசு_கவி_பாரதி

இவரின் பேனாவுக்கு அல்லவோ சிலை வைக்க வேண்டும்....

காலக்கொடுமை பாரீர்........

உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.
குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.

பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.

கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.

அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான்.
வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.

பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.
அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.

ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.

ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..
கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.
யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.

ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.
கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.
ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.

பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!
கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''

அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.
பாரதியும்
சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.

காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.

சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.

மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.

செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.
வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்
கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?

ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?
குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.

இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...
பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

ஓராயிரம் கவிதைகளை
உச்சரித்த உதடுகளை
ஞான வெளிச்சம் வீசிய
அந்த தீட்சண்ய விழிகளை
ரத்தம் வற்றினாலும்
கற்பனை வற்றாத
அந்த இதயத்தை...

தேடித்தேடித் தின்றன
தீயின் நாவுகள்.
மகா கவிஞனே!
எட்டையபுரத்து கொட்டு முரசே!

உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து
கொள்ளாத போது,
இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?

உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jul 24
#வறுமையிலும்_நேர்மை

பகுதி 2

”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு இந்த அளவுக்கு வந்திருக்கேன்.

யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே! அவன் நாளக்கி வர மாட்டான் பாரு…

இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா?
அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறூ கிராம் லாபம் கிடைக்கும்.

நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான்.

ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.”
”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க!

அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்”.

”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு…!”
என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.
Read 12 tweets
Jul 24
#வறுமையிலும்_நேர்மை

இரண்டு பகுதியாக

பாகம் 1

உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து.

வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த மணிவாசகம்

காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார்.
அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க!

அம்மா வர சொல்லியிருந்தாங்க என்றார்.

ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”

”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”
ரொம்ப கம்மியா யிருக்கே!”
”இல்லீங்க போனமாசம் 10 ரூபா 8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”

” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”
“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”
“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபா தான் கிடைக்குது..!”
Read 20 tweets
Jul 23
யார் இவர்?

ஒருவரைச் சொல்ல வேண்டும்; அவர் இன்னார் என்று சொல்லி அவரை அறியாதார்க்குப் புரிய வைக்க வேண்டும்; அவரால் என்ன நன்மை என்பதைச் சொன்னால், ஓ! அவரா? என உடனே உணரும் படியாகச் சொல்ல வேண்டும்!

எப்படிச் சொல்வது?
மிகச் சமீபத்தில் என் தாய் வழிப் பாட்டியைச் சந்திக்கச் சென்றிருந்தேன்; அவருக்கு வயது 94. அவருக்கு சற்றே நினைவில் தடுமாற்றம்!

என் பெயரைச் சொல்லி, வந்திருக்கிறேன் என்று சொன்னேன்; புரியவில்லை; என் அம்மாவின் பெயரைச் சொல்லி என்னை அடையாளப் படுத்தினேன்; அதுவும் மறந்து விட்டது;
நான் இருக்கும் இடத்தைச் சொன்னேன்; லேசாகப் புரிந்தது; பின் என் தந்தையை நினைவு கூர்ந்தார்; பின்னரே என் தாய் நினைவுக்கு வந்தார் என்பது செய்தி!

ஆக, நம்மை அடையாளப் படுத்தவே இத்தனை விவரங்கள் தேவை எனும் போது,

இறைவனை அடையாளப் படுத்த எத்தனை அடையாளங்கள் தேவை?
Read 10 tweets
Jul 23
Ph.D. அலப்பறைகள் 😂😀 😀 😀....

காட்டில் ஒரு முயல் ஒரு குகையின் வாசலில் அமர்ந்து எதோ டைப் பண்ணிக்கொண்டிருந்தது.

அந்த வழியாக போய்க்கொண்டிருந்த நரி அதைப்பார்த்து, என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. முயல்: தெரியாதா உனக்கு,
னது Ph.D. ஆய்வு படிப்பு முடிவுறும் காலம் வந்து
விட்டது அதனால்தான் தீசிஸ் டைப் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

நரி: அப்படியா, நல்ல விஷயம் தானே, தீசிஸ் டாபிக் / டைட்டில் என்ன ?
முயல்: நரிகளை எப்படி முயல்கள் வேட்டையாடி தமது வாழ்வாதாரங்களை காப்பாற்றுகின்றன என்பதுதான் எனது தீசிஸ் டைட்டில்.
நரி: நான்சென்ஸ். முயல்கள் தாவரங்களைதான் உண்ணும். அது மட்டுமல்லாமல், அவை எப்படி நரியை வேட்டையாட வலிமை உடையவை?
Read 8 tweets
Jul 22
இவர்கள் தான் படங்களை தேர்வு செய்து விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு குழு ..

10-member jury for National Film Awards

Vipul Shah , Dhram Gulati , Sreelekha mukherjee , GS Bhaskar , A Karthikraaja , VN Aditya , Viji Thampi , Sanjeev Rattan , S. Thangadurai , Nishigandha ..
Ayyapan kosiyum கூட சில விருதுகள் வாங்கி இருக்கு ..

இவங்கள அப்படி அந்த சூரியா படத்தை ஹெவியா எது லைக் பண்ண வெச்சுதுனு தெர்ல ..

இதுல தங்கதுரை என்பவர் நாலடியார் மேனஜர்

#Question
Read 4 tweets
Jul 21
யாரோ தனது வீட்டு வாசலுக்கு வந்திருப்பதை பார்த்த அந்த பெண், வெளிய வந்து பார்க்கிறாள். அங்கே நீண்ட வெள்ளை தாடிகளுடன் மூன்று பேர் நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறாள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. பார்த்தால் மிகப் பெரிய யோகிகளை போல காணப்பட்டனர்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் குடும்பம் அது என்பதால், “நீங்கள் மூவரும் பசியோடிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். உள்ளே வாருங்கள். சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம்”

“உங்கள் கணவர் வீட்டில் இருக்கிறாரா?”

“இல்லை!”
“அப்போது நாங்கள் வரமுடியாது. நாங்கள் எதிரே உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறோம். உங்கள் கணவர் வந்த பின்பு எங்களை கூப்பிடு” என்று கூறிவிட்டு போய்விடுகின்றனர்.

சற்று நேரம் கழித்து அவள் கணவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் விஷயத்தை கூறினாள் அந்த பெண்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(