அன்பெழில் Profile picture
Jul 29, 2022 33 tweets 6 min read Read on X
#கனகதாரா_ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் மேல் #ஸ்ரீஆதிசங்கரர் அருளியது இந்த ஸ்லோகம். அவர் பாலகனாக பிக்ஷை எடுக்க சென்றபோது ஒரு வீட்டில் மிகவும் எழ்மையான நிலையில் இருந்த பெண்மணியிடம் பிக்ஷை இட ஒரு நெல் மணி கூட இல்லை. வந்து நிற்கும் குழந்தைக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று வீட்டில் தேடி Image
பார்க்க, ஓர் அழுகிய நெல்லிக்கனி மட்டுமே கிடைத்தது. அதை அவருக்கு பிக்ஷை இடுகிறார். அவள் நிலை கண்டு மிக மனம் வருந்திய சங்கரர் மகாலக்ஷ்மியின் மேல் மனமுருகி பாடுகிறார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, அப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து தங்க நெல்லிக்கனிகளாக வீட்டின் கூரையின் மேல் Image
பொழிகிறார் கருணையே வடிவான தாயார். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர ஸ்லோகங்களும் அதன் பொருளும்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல ததவதாயா:|l

'முகுலாபரணம் தமாலம்' - பச்சை வர்ணத்தில் இருக்கும் தமால Image
மரத்தில், சின்னச்சின்ன பூ மொட்டுகளால் ஆபரணமாக அலங்கரிக்கப்பட்ட மரத்தின் மேல்
'பிருங்காகனேவ' - பிருங்க: வண்டு. பிருங்காங்கனா- அந்த மொட்டுகளோடு கூடிய மரத்தின்மேல் வண்டுகள் அமர்ந்திருப்பது போல
'ஹரேஹே' - மஹா விஷ்ணுவினுடைய அங்கம், சரீரம், சரீரத்தில்
'புளக பூஷணம்' - புளகம் மயிர்
கூச்சல் ஏற்படறது. அது ஏனென்றால் தாயார் பார்க்கிறார். அந்த சந்தோஷத்தில் இவருக்கு மயிர் கூச்சல் ஏற்படுகிறது. மகாலக்ஷ்மியின் பார்வை மலர் மொட்டுகளில் உட்கார்ந்து இருக்கிற பொன்வண்டு போலுள்ளது என்று சொல்கிறார்.
'அங்கீ கிருதாகில' – அனைத்து ஐஸ்வரியங்களும் உலகத்தில யாருடைய அங்கமோ அப்படி
மகாலக்ஷ்மியின் வடிவமே ஐஸ்வர்யங்கள் நிரம்பியது. எப்படி பகவான் கீதையில் எல்லா விபூதிகளும் என்னிடமிருந்து உண்டானவை என்று சொல்கிறாரோ, அதே போல தாயாரும் ஐஸ்வரிய வடிவம்.
'மங்கள தேவதாயா' - பரம மங்கள வடிவம், லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்
'மாங்கல்ய தா அஸ்து' - மங்களங்களை அளிப்பதாக எனக்கு
'மம மாங்கல்யதா அஸ்து' எனக்கு தாயாருடைய கடாக்ஷம் மங்களங்களை அளிக்கட்டும்.

2. முக்தா முஹூர்:விதததீ வதனே முராதர:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருஷோ: மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||

'முராரி' - முரனை ஜெயித்தவன் 'ஸாகரஸம்பவாயா' பாற்கடலில் இருந்து
பிறந்தவள். விஷ்ணு பகவான் தேவர்களுக்கு சஹாயம் பண்றார். கருடனை கொண்டு, மந்திர மலையை கொண்டு வந்து கடல்ல வைக்கச் சொல்கிறார். கூர்மாவதாரம் எடுத்து தாங்குகிறார், தேவர்கள் பக்கம் நின்று, மோகினி அவதாரமெடுத்து, தேவர்கள் அந்த அமிர்தத்தை அடையும்படி செய்கிறார். இதற்கு அவருக்கு ஒரு பெரிய
பரிசு கிடைத்தது.
'ஸாகரஸம்பவாயா' பாற்கடலில் உதித்த மகாலட்சுமியே அவருக்கு மாலை இடுகிறார். இங்கேயும் மகாலட்சுமி மகாவிஷ்ணுவை பார்க்கறார்
'வதனே முராரேஹே' விஷ்ணு பகவானின் முகத்தில்
'த்ருசோஹோ' லட்சுமிதேவியின் பார்வை 'ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி' பிரேமை என்றால் அன்பு, த்ரபான்ன என்றால்
வெட்கம், இரண்டு உணர்வுகளும் மாறி மாறி உந்தப்பட்டு,
'கதாகதா' - வந்து வந்து போகின்றன. 'முஹுஹு:' மீண்டும் மீண்டும் இப்படி அந்த முகத்தில் போய் அமர்ந்து விட்டு வரும். இந்தப் பார்வையானது,
'மஹோத்பலே' உத்பலம் என்றால் நீலமான மலர்,
'மதுக்கரிவ' மதுகரி என்றால் தேனீ தான். தேனீ கூட்டம்
அந்த மலர்கள் மேலமர்ந்து ஒரு மாலை போலுள்ளது. தாயாரின் கடாக்ஷம்
'முக்தா' ரொம்ப அழகான மந்தஸ்மிதத்தோட இருக்கு அழகாக விளங்கும், மகாலட்சுமியின் பார்வை,
'மே ஸ்ரியம் திசது' சிரேயத்தை அளிக்கட்டும், செல்வங்களை அளிக்கட்டும். தாயாருடைய கடாக்ஷம் நமக்கு செல்வங்களை அளிக்கட்டும்.
3. விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம்
ஆனந்த3ஹேதுரதி4கம் முரவித்3விஷோபி ।
ஈஷன்னிஷீத3து மயி க்ஷணமீக்ஷணார்த4ம்
இன்தீ3வரோத3ர ஸஹோத3ரமின்தி3ரா யா: ॥

விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம் – இந்திர பதவியில் பலவிதமான போகங்கள், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் உள்ளது, Image
ஒளிமயமான தேகம், என்றும் இளமை, அளவற்ற செல்வம், இவ்வாறு இந்திர பதவியில் உள்ளது. அந்த இந்திர பதவியில் கிடைக்கிம் எல்லாவிதமான போகங்களும், அதற்கு மேலும்
தா3னத3க்ஷம் – இங்கேயே நமக்கு கொடுக்கக்கூடிய, தானம் பண்ண கூடிய திறமை கொண்ட லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்,
ஆனந்த3ஹேதுரதி4கம்
முரவித்3விஷோபி – முரன் என்ற அரக்கனுடைய, வித் விஷ: எதிரியான விஷ்ணு பகவானுக்கு, ஆனந்த3ஹேதுரதி4கம், அதிகமான ஆனந்தத்தை அளிப்பதில் காரணமாக இருப்பது தாயாரின் கடாக்ஷம். இந்திராதி தேவர்கள், நாம் அனைவரும், லக்ஷ்மி தேவியின் குழந்தைகள். நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கொடுக்கிறாள். தன் கணவரான
விஷ்ணுபகவானை பார்த்தால் தாயாருக்கு மகிழ்ச்சி. தாயாரை பார்த்தால் அவருக்கு ஆனந்தம் அதிகமாகிறது,
ஆனந்த3ஹேதுரதி4கம் – அந்த இந்திராயா: லட்சுமிதேவியினுடைய ஈக்ஷணம் அப்படி என்றால் பார்வை, ஈக்ஷணார்த4ம் – பாதி பார்வை, அதாவது கடைக்கண் பார்வை, ஈஷது – அந்தக் கடைக் கண் பார்வையில் ஒரு சொட்டு,
மயினிஷீத3து – என்மேல் விழட்டும். அந்தக் கடாட்சம் எப்படி இருக்கும் என்றால் இன்தீ3வர ஸஹோத3ரமின்தி3ரா யா – நீலோத்பல புஷ்பத்தினுடைய மத்திய பாகம் அது தனி அழகாக இருக்கும், அதுக்கு சமானமான அம்பாளுடைய கடாக்ஷம், அந்தக் கடைக்கண் பார்வையில் ஒரு துளி, என்மேல் அரை கணம் படட்டும்,
4. ஆமீலிதாக்ஷமதி4க3யம முதா3 முகுன்த3ம்
ஆனந்த3கன்த3மனிமேஷமனங்க3 தன்த்ரம் ।
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம்
பூ4த்யை ப4வன்மம பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: ॥
பு4ஜங்க3 ஶய: - பாம்பணை மேல் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் அனந்த சயனப் பெருமாள், அந்த பெருமாளின் அங்கனா- மனைவி லக்ஷ்மி தேவி.
பாற்கடல் இரண்டு பேருக்கும் பிடித்த இடம். பாற்கடலில் தான் லக்ஷ்மி தேவி பிறந்தாள். அதனால் அவளுக்கு அது பிறந்த வீடு. மகாவிஷ்ணு எப்பவுமே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே இருவரும் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன்,
ஆமீலிதாக்ஷம் – கண்கொட்டாமல் தன் பார்யையான
லக்ஷ்மி தேவியை, பர்த்தாவான மகாவிஷ்ணு பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
அதிகம்ய – நிமிர்ந்து பார்த்த உடனே அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து, ஆனந்த கந்தம் – ஆனந்தத்தை அளிப்பதும், அனிமேஷம் – அப்படியே வியப்பில் கண்கொட்டாமல் பார்த்து,
அனங்க தந்த்ரம் – ஆசையை உண்டு
பண்ணுவதுமான,
பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: –
மகாலக்ஷ்மி வெட்கத்தில் கண்ணை மூடிக்கொள்கிறாள்.
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம் – பாதி மூடிய கருவிழிகளோடும் இமைகளோடு அழகாக விளங்கும் லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்,
மம பூ4த்யை பவேத் – எனக்கு ஐஷ்வர்யத்தை அளிப்பதாக ஆகட்டும், என அருமையான பிரார்த்தனை.
5. பா3ஹ்வன்தரே மது4ஜித: ஶ்ரிதகௌஸ்துபே4 யா
ஹாராவலீவ ஹரினீலமயீ விபா4தி ।
காமப்ரதா3 ப4க3வதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயா யா:

மது4 ஜித: மது என்கிற அரக்கனை ஜெயித்த விஷ்ணு பகவானின், பாஹ்வந்தரே – பாஹு கைகள், பாஹ்வந்தரே என்றால் கைகளுக்கு இடையில், அதாவது திருமார்பில், Image
ஶ்ரிதகௌஸ்துபே4 - கௌஸ்துப மணி அணிந்து கொண்டிருக்கிறார், அந்த கௌஸ்துப மாலையை சுற்றி, ஹரிநீலமயி ஹாராவலீவ - ஹரி நீல ரத்னம் என்பது மிக அழகாக இருக்கும், அது இருக்கும் இடத்தில செல்வம் பெருகும். அந்த ஹரிநீலமயீ – அந்த ஹரிநீல கற்களாலான மாலை, ஹாராவலீவ – ஒரு மாலை இல்லை, வரிசையா மாலை, அந்த
கௌஸ்துப மணியை அலங்கரிப்பது போல, வரிசையாக அது மேல் ரத்னங்களாலான ஒரு மாலை, விபா4தி – ஒளி விடுகிறது என்கிறார். இது எந்த மாலை என்றால் கடாக்ஷ மாலா, கமலாலயாயா: – தாமரையில் உதித்த, லக்ஷ்மிதேவியினுடைய கடாக்ஷ மாலை, இப்படி பெருமாடைய மார்பில் கௌஸ்துபத்துக்கு மேல விளங்கிக் கொண்டிருக்கிறது.
காம பிரதா3 பக4வதோபி – நமக்கெல்லாம் ஆசையை பூர்த்தி பண்றதில்ல இந்த கடாக்ஷ மாலா, பகவதோபி – சுவாமிக்கே ஏதாவது ஆசை என்றால் இந்த கடாக்ஷம் தான் பூர்த்தி செய்கிறது, அந்த லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம்
மே கல்யாணமாவஹது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும்.

6. காலாம்பு3தா3லீ லலிதோரஸி கைடபா4ரே:
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ ।
மாதுஸ்ஸமஸ்தஜக3தாம் மஹனீயமூர்தி:
ப4த்3ராணி மே தி3ஶது பா4ர்க3வனந்த3னா யா: ॥

பிருகு என்கிற முனிவருக்கு மகளாக லக்ஷ்மி தேவி ஓர் அவதாரம் செய்ததால், தேவிக்கு பார்கவ நந்தனா என்று ஒரு நாமம். அந்த லக்ஷ்மி தேவி எங்க இருக்கிறார் என்றால் பெருமாளின்
திருமார்பில் இருக்கிறார். அதன் தோற்றம் காலாம்புதாலீ லலிதோரசி – நீருண்ட மேகம் போல் கருத்த அழகான,
கைடபா4ரே : கைடபன் என்ற அசுரனை ஜெயித்த விஷ்ணு பகவானின்,
உர – மார்பில்
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ – தடித்ன என்றால் மின்னல் மேகத்துக்கு,
தா4ராத4ரே அங்கனேவ அந்த மேகத்தின் இடையில்
கரிய திருமாலின் மார்பில், விளங்கும் லக்ஷ்தேவி ஒரு மின்னலைப் போல ஜொலிக்கிறார். அந்த தாயாரின் கடாக்ஷம்
ப4த்3ராணி மே தி3ஶது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும் என்கிறார்.
7. ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா:

மாங்கல்ய பாஜி- சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கும் திருக் கண்கள் கொண்டவளே
மது மாதினி - மது என்ற அசுரனைக் கொன்ற மகா Image
விஷ்ணுவினடத்தில்,
மன் மதேந யத்ப்ரபாவாத் ப்ரதமத: பதம் ப்ராப்தம் - முதல் முதலில் மன்மதனுக்கு விஷ்ணுவின் மனத்தில் இடம் பிடிக்க லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எப்படி உதவியதோ, அந்த கடாக்ஷம்
மய்யாபதேத் - என் மேல் கொஞ்சம் விழட்டும்
மகராலய - மகரம் போன்ற நீர் வாழ் பிராணிகள் நிரம்பிய கடலுடைய
கந்யகாயா: - மகளான லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எப்படி போகிறது என்றால்
மந்தாலசம் - மெதுவாக போகிறது,
தத் ஈக்ஷனார்த்தம் - கடைக்கண் பார்வை மனமதனுக்குக் கிடைத்து போல எனக்கும் கிடைக்கட்டும். பெருமாளிடம் பிரமையோடு இருக்கக் கூடிய கடாக்ஷம் என்னிடம் கருணையோடு இருக்க வேண்டும் என்கிறார்.
8. தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிஷௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மப நீய சிராய தூரம்
நாராயணப் பிரணயினி நயனாம்புவாஹ:
விஹங்க சிசு - சாதக பக்ஷியின் குஞ்சு போல, பசியில் குஞ்சு வீல் வீல் என்று கத்தும். அந்தமாதிரி இவாளுடைய கஷ்டம், வறுமை. துஷ்கர்மா - இருக்கு
தான், வினைகளினால் தான் கஷ்டப்படுகிறாள். ஆனா என் மேல் அன்பு காட்ட்டினாள். அதனால் நான் உன்னிடம் வேண்டுகிறேன். உன்னுடைய கருணையினால் இவ்வம்மையாருக்கு நீ செல்வத்தைப் பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதே மாதிரி தங்க நெல்லிக்காய் ஒரு முகூர்த்த காலம் திண்ணையில மழையா கொட்டுகிறது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 2
#கம்யூனிஸ்டுகளும்_வானமாமலை_30ஆவது_பட்ட_கலியன்_ஸ்வாமியும்

வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில் Image
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
Read 12 tweets
May 1
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்Image
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை Image
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி Image
Read 23 tweets
Apr 30
#நாலாயிரம்_பிள்ளையார்_கோவில் நாங்கூர் சீர்காழி அருகில்.

இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் Image
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். Image
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக
Read 14 tweets
Apr 30
#துர்க்கையின்_நவ_வடிவங்கள்
வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா என்று 9 வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை Image
#வன_துர்கா
பண்டைத் தமிழ் இலக்கியங்களால் #கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார். ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப் படுகின்றன.
#சூலினி_துர்கா
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் வசிக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி. முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தி இருப்பதால் சூலினி துர்க்கா எனப் படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலத்தில் மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.
Read 10 tweets
Apr 29
#திருவிசைநல்லூர்_சிவயோகிநாதர்_கோவில்
8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவாலயம்
கும்பகோணம் அருகில் உள்ளது திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில்
ஸ்தல விருட்சங்கள்
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு 8 ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.Image
இன்னும் சில அதிசயங்கள்: எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலிலும் பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. இறைவன் 7 முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனிImage
மேல் பகுதியில் 7 சடைகள் காணப் படுகின்றன. சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன்Image
Read 17 tweets
Apr 29
#திருவெண்காடர்
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தவர் சிவநேசர். பேருக்கேற்றாற்போல சிவனார் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். மனைவி ஞானகலா அம்மையார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக குழந்தை வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தைக்காக இறைவனை Image
வேண்டினார்கள். சிவனின் சித்தமாகவும் அது இருக்க, ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்த பெற்றோர், குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். திருவெண்காடனுக்கு 5 வயதிருக்கும் போது தந்தை காலமானார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பிலும் நல்ல குணமும் பக்தியும் கொண்டு வளர்ந்தார். நாளாக
ஆக, சிவபூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார் திருவெண்காடர். ஒருநாள் 'நாளைய தினம் திங்கட்கிழமை. சோமவாரம். திருவெண்காட்டுக்கு வா. அங்கே பெரியவர் ஒருவர் உனக்கு சிவலிங்கம் தருவார். அதைக் கொண்டு அனுதினமும் பூஜித்து வா' என அசரீரி கேட்டது. விடிந்ததும் அம்மாவிடம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(