#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்

*_பிங்களி வெங்கையா_*

நம் நாடு எத்தனையோ வகை தேசிய கொடிகளை கொண்டு இருந்த காலத்தில் 01.04.1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விஜயவாடா நகருக்கு வந்த பொழுது அவரிடம் பிங்களி வெங்கையா அவர்கள் காண்பித்து
மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புதலின் பேரில் இப்பொழுது புழக்கத்தில் உள்ள நமது தேசிய கொடி அதிகார பூர்வ அங்கீகாரம் பெற்றது.

எனவே தற்பொழுது புழக்கத்தில் உள்ள நம் தேசிய கொடி 102 ஆண்டுகள் பழமையானது.
அப்போதைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திர மாநிலம்) இருந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பட்லபெறுமண்ணு என்ற கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி வறுமை மற்றும் ஏழ்மை நிறைந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிங்களி வெங்கையா பிறந்தார்.
வறுமையை, ஏழ்மையை சமாளிக்க விவசாயம் செய்து வாழ்வை நடத்தினார்.

அவ்வளவு வறுமையிலும் மசூலிப்பட்டணத்தில் ஒரு கல்வி நிலையம் நிறுவி / நடத்தி அனைவருக்கும் இலவச கல்வி வழங்கி வந்தார்.

அவர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணி புரிந்தவர்.
அந்த சமயம் தென் ஆப்பிரிக்கா சென்று யுத்தம் புரிந்தவர்.

அங்கு தான் அவருக்கு முதன் முதலில் மகாத்மா காந்தி அறிமுகம் ஆனார்.

இவர் ஒரு புவியியலாளறும் கூட.

இராணுவ பணி முடித்து மசூலி பட்டணத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்தவர்.
அனைவருக்கும் ஏகப்பட்ட உதவிகள் செய்து அவரின் *_அனைத்து சொத்துக்களையும் இழந்து கடனில் உயிர் விட்டவர்._*

இவர் தனது 86 வயதில் 1963 ஆம் வருடம் ஜூலை மாதம் 4 ஆம் தேதி *_கடனாளியாகவே_* மறைந்தார்.

*_அரசு ஆவணங்களின்படி இன்றும் அவர் ஒரு கடனாளி._*

*_அவரை நம் இந்தியா எளிதில் மறந்தது._*
உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது.

நான் குறைந்தது ஒரு 100 முறையாவது தேசிய கொடியை முழுமையான விவரம் புரியாமல் தேசப்பற்றுடன் ஆர்வத்துடன் எனது சட்டையில் குத்தி மரியாதை செலுத்தி இருக்கிறேன்.

ஆனால் இவரைப் பற்றி இன்று தான் தெரியும்.
எனது தேசிய கொடியை வடிவமைத்தது யார் என்றே இன்று வரை தெரியாது.

உண்மையில் அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

2009 ஆம் ஆண்டு அவரின் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது.

2011 இல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.

#ஜெய்_ஹிந்த் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Aug 16
*சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள்* 

*வை மு கோதைநாயகி*

வை மு கோதைநாயகி *மடிசார் கட்டிக் கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி*

தமிழின் முதல் நாவலாசிரியர்.

116 நாவலகளை எழுதியவர். 

துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண். Image
நாடக ஆசிரியர், நாடக டைரக்டர், மேடை பேச்சாளர், 

சமூக சேவகர், பாடகர்.

தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை. 

காரணம் வறுமை அல்ல. அந்த கால பெண்களின் சூழ்நிலை.
பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியினால் இவர் சொல்ல சொல்ல எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திராமோகனா 1924.

பின் எழுதவும் படிக்கவும் அவர் அறிந்து கொண்டு எழுதிய நாவல்கள் ஏராளம். 

தான் இயற்றிய “அன்பின் சிகரம்” நாடகத்தினை சென்னை வானொலியில் ஒளிபரப்ப தானே டைரக்ட் செய்தார்.
Read 13 tweets
Aug 16
காழிச்சீராமவிண்ணகரம்

மூலவர் : திரிவிக்கிரம நாராயணர்

உற்சவர் : தாடாளன்

அம்மன்/தாயார் : லோகநாயகி

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : சங்கு, சக்கர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : வைகானஸம்

புராண பெயர் : பாடலிகவனம், காழிச்சீராம விண்ணகரம்

ஊர் : சீர்காழி

1 Image
மங்களாசாசனம்  பாடியவர்கள்: 

ஆண்டாள், திருமங்கையாழ்வார்

நான்முகன் நாள் மிகைத்தருக்கை இருக்கு வாய்மை நலமிகுசேர் உரோமசனால் நவிற்றி-நக்கன் ஊன்முகமார் தலையோட்டூண் ஒழத்த எந்தை ஒளிமலர்ச் சேவடியணைவீர்

2
உழுசேயோடச் சூல்முகமார் வளையனைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினையென்னச் சூழந்தியங்க-எங்கும் தேன்முகமார் கமலவயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே.

                       -திருமங்கையாழ்வார்

திருவிழா: 

     வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.  

3
Read 28 tweets
Aug 15
#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள் 🙏🇮🇳

*சுதந்திர தினத்திற்கும்* ( *Aug-15* ) , *குடியரசு* *தினத்திற்கும்* ( *Jan* - *26* ) கொடி ஏற்றுவதில் - பறக்கவிடுவதில்  உள்ள மூன்று வித்தியாசங்கள் :
*முதல் வித்தியாசம்* ...

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு " *கொடியேற்றம்* " அதாவது " *Flag* *Hoisting* " என்றழைக்கபடுகிறது.,
Read 8 tweets
Aug 15
*வைகுண்டநாதர்*

*மூலவர் : ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)*

*உற்சவர் : ஸ்ரீ கள்ளப்பிரான்*

*அம்மன்/தாயார் : வைகுந்த நாயகி, சோரநாத நாயகி*

*தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

ஸ்ரீ வைகுண்டம்*

🙏🇮🇳1
*பாடியவர்கள் : மங்களாசாசனம்*

*நம்மாழ்வார், மணவாள மாமுனிகள்*

🙏🇮🇳2
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.

நம்மாழ்வார்

🙏🇮🇳3
Read 36 tweets
Aug 14
ஸ்ரீ வேதவியாசருடைய ப்ரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் படி உரை (பாஷ்யம்) எழுத வேண்டும் என்பது சுவாமி ஆளவந்தாரின் விருப்பம். அவரது ஆசையை நிறைவேற்ற உறுதிபூண்டார் ராமானுஜர். Image
பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கெனவே ‘போதாயான மஹரிஷி’ எனும் வேதவியாசரின் சிஷ்யர் எழுதிய போதாயன விருத்தி எனும் நூலைக் கேள்விப்பட்டார். ஆனால் அது எங்கும் கிடைக்க வில்லை. போதாயன விருத்தியின் மூல நூல் 2 லட்சம் படிகளை உடையது.
ஆனால் காஷ்மீர் சரஸ்வதி பீடத்தில் 25,000 படிகளை மட்டுமே கொண்ட சுருக்கமான நூல் இருப்பது தெரிய வந்தது. உடனே கூரத்தாழ்வானுடன், ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார் ராமாநுஜர். மூன்று மாதங்கள் நடந்து சென்று இருவரும் காஷ்மீரை அடைந்தனர்.
Read 4 tweets
Aug 14
*வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு:*

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

🙏🇮🇳1
*இறைவன்:* வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்.

*இறைவி:* பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை.

*தல விருட்சம்:* வெள்வேலமரம்.

*தல தீர்த்தம்:* வேத தீர்த்தம், பாதித்திருக்கிறது, வேலாயுத தீர்த்தம்.

*ஆலயப் பழமை:*

ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

🙏🇮🇳2
*தேவாரம் பாடியவர்கள்:*

திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*

சென்னை, பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் பதினேழு கி.மி. பயணம் செய்தால், வேலப்பன் சாவடி என்ற இடம் வரும்.

🙏🇮🇳3
Read 47 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(