#பிரிவினை_ஆதரவாளர்கள்
கர்நாடக அரசின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்ட விளம்பரங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்கள் காட்டப்பட்டுகின்றன. ஆனால் நேரு படம் இடம் பெறவில்லை என்பது சர்ச்சையாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சிகளும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேருவின் பெயர் இடம் பெறாததற்கு 'தேசப்பிரிவினைக்கு அவர் பொறுப்பு,' என்பதுதான் காரணம் என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மத ரீதியில் இந்தியாவை பிரித்து வைக்க வேண்டும் என்று நேருதான் முதலில் முன்மொழிந்ததாக நான் படித்த வரையில் தகவலில்லை.
அப்படி ஒரு கோரிக்கை எழுந்த போதும் கூட அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை நேருவும் காந்தியும் முன்னெடுத்தார்கள். வேறு வழியே இல்லாது போன நிலையில்தான் அது தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் ஜின்னாவுக்கு முன்பே மத ரீதியாக தேசம் அமைவதை முன்னெடுத்தவர் யார் தெரியுமா?
வீர் சவர்க்கர்.
போலவே இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொன்னவர் தீன் தயாள் உபாத்யாய். பிரிவினை நடந்தே தீர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதியவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

1937ம் ஆண்டு இந்து மகா சபா மாநாட்டில் சவர்க்கர் பேசுகிறார்:
'இந்தியா ஒருமித்த, ஒருங்கிணைந்த தேசம் கிடையாது. மாறாக, இந்தியாவில் இரண்டு முக்கிய தேசங்கள் உள்ளன: இந்துக்கள்,முஸ்லிம்கள்'
அப்போது அவர்தான் அந்த இயக்கத்தின் தலைவர். இப்படி அவர் பேசி மூன்று ஆண்டுகள் கழித்து 1940ல்தான் முஸ்லிம் லீக் லாகூரில் தனி நாடு தீர்மானத்தை முன்னெடுத்தது.
தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்னெடுத்த பின்னர் கூட அந்தக் கோரிக்கையை ஆதரித்தே சவர்க்கர் இயங்கி இருக்கிறார். 1943ல் நாக்பூர் கூட்டம் ஒன்றில் பேசுகையில் அவர் கூறுகிறார்:
'எனக்கு மிஸ்டர் ஜின்னாவின் இரட்டை தேசக் கொள்கையுடன் வேறுபாடு இல்லை. இந்துக்களாகிய நாம் தனி தேசமாகவே இருக்கிறோம்;
இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு தேசத்தவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.'

இதுதான் சவர்க்கரின் நிலைப்பாடு. அதுவுமின்றி மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராக பாஜக பிம்பப்படுத்தும் சவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:
'அரசுக்கு எந்த விதத்தில் தேவைப்பட்டாலும் அந்த சேவையை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்'
'அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் கருணையுடன் நடந்து கொள்ள இயலும். தாயுள்ளம் கொண்ட அரசின் கதவைத் தட்டாமல் பொறுப்பின்றி வழிதவறிய இந்த மகன் வேறெங்கே போவான்?'

இப்படி எல்லாம் பிரிட்டிஷ் அரசுக்கு சோப்புப்
போட்டவர்தான் காந்தியை விடப் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஶ்ரீதர் சுப்ரமணியம் வெளியிட்ட நீண்ட கட்டுரையின் சாவர்க்கர் பகுதி இது

பிஜேபி முன்னிறுத்தும்
மற்ற இரு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி

Thread 2, thread 3 என வெளியிடுகிறேன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthanaraam

Keerthanaraam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Aug 15
நேற்று நோய் போக விளக்கு ஏற்ற
கை தட்ட சொன்ன அதே கூட்டம்,
இன்று நாட்டுப் பற்றை நிரூபிக்க கொடி கட்ட சொல்வார்கள்,
இன்று இதை செய்ய சொல்வார்கள்,
நாளை
இந்த கறியை சாப்பிட கூடாது என்பார்கள்,
உடை இதுதான் என்று அறிவிப்பார்கள்,
நாட்டை காட்டி கொடுத்தவர்களை போராளி என்பார்கள்,
இந்து தேசம் என்று
நம்ப சொல்வார்கள்,
சமஸ்கிரிதம்தான் இந்தியாவின் ஒரே ஆட்சிமொழி என்பார்கள்,
இந்தி கட்டாயம் என்பார்கள்,
நாளை பச்சை குத்த சொல்வார்கள்,
சாதிப் படி படிக்க சொல்வார்கள்,
மதப் படி குடி உரிமை என்பார்கள்,
மன்னிப்பு கேட்டவனையும் எதிர்த்து தூக்கு கயிரை ஏற்றுக் கொண்ட புரட்சியாளரையும் சுதந்திர
போராட்ட வீரர்கள் என்பார்கள்,
சாதி ஒழிப்பு களமாடியவர்களையும் சாதிய இந்து தேசியம் பேசியவர்களையும் நாட்டுப் பற்று கொண்டவராக கொண்டாட சொல்வார்கள்,
காந்தியை கொன்ற அமைப்பு சிந்தனையை ஏற்றுக் கொண்டவர்களையும் ஒரே கனோட்டத்தில் பார்க்க சொல்வார்கள்,
இந்த போலிக் கூட்டத்தை
கேள்வி கேட்போம்,
Read 4 tweets
Aug 14
மதுரையில் பெரும்பாலும் யாரும் அவர் பெயரை சொல்லி கூட மேடையில் அழைக்கமாட்டார்கள்...

ஏன் பிடிஆர் என்று கூட கூற மாட்டார்கள்..

“பண்பாளர்” என்று தான் அழைப்பார்கள்/அடையாளப்படுத்துவார்கள் என்பதை நாம் நடத்திய திராவிடம் 2.0 நிகழ்வில் மற்றவர்கள் பேசும்போது தெரிந்துகொண்டேன்.. Image
அப்படிப்பட்ட நபருக்கு அதுவும் பாஜகவை சார்ந்தவர்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு செயல் நடைபெற்றது மிகப்பெரியதொரு வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது…

அல வைகுந்தபுரம்லு படம் எடுத்த இயக்குநர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் அதற்கு முன்னர் எடுத்த படம் “அரவிந்த சமேத வீர ராகவா”… ஜூனியர் Image
என்டிஆர்-ஜகபதி பாபு நடித்த ஆக்‌ஷன் டிராமா..

இலண்டனிலிருந்து வந்த ஜூனியர் என்டிஆர் தன்னுடைய ஊருக்கும் பக்கத்து ஊருக்ககும் இடையேயான 30 வருட பகையை சுமூகமாக தீர்க்க முயல்வார்.. ஆனால் எதிரணியினர் ஹீரோயினையும் அவருடைய தம்பியையும் கடத்திவிடுவார்கள்.. கடத்திக்கொண்டு செல்லும்போது Image
Read 6 tweets
Aug 12
நன்றி தமிழ் சந்தே..

5 மாதத்தில் 6k followers அடைந்த போதும்..

ஐடி சஸ்பென்ட் ஆகி,
10 நாளில் 500 followers பெற்ற போதும்

என் இலக்கு ஒன்றே..

10 ஆண்டு போராட்டத்திற்கு பின், ஒரு நல்ல தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கிறார்

அவரை புகழ்ந்து எழுதா விட்டாலும்,

பிற்போக்கு சக்திகள்
கட்டவிழ்த்து விடும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

ஒரு தலைமுறையே தலைவர் கலைஞர் பற்றி அறியாமலே

இஸ்த்ரிக்காரியையும், பவுடர் டப்பாவையும் கொண்டாடி தீர்த்தது

இந்நிலை தலைவர் ஸ்டாலினுக்கு வரக் கூடாது

பிற்போக்கு சக்திகளின் போலி முகமூடிகளை கிழித்து, தாங்கள் மட்டும் உத்தமர்
தாங்கள் முன்னிறுத்தும் தலைவனே தூயவன்,

மற்றவர்கள் ஊழல்வாதிகள், வாரிசு அரசியல் நடத்துபவர்கள், தற்குறிகள் என கட்டமைக்கப்படும் போலி பிம்பங்களை உடைக்க வேண்டும்.

இதற்கு எதிர்கால தலைமுறையை சித்தாந்த ரீதியாக அணியப் படுத்த வேண்டும்.

நான் உங்களில் ஒருத்தி..
உங்களுடனே இருக்கிறேன்
Read 4 tweets
Aug 11
ஏன் பிரிட்டீஷ் அரசை பெரியார் விரும்பினார்

*பிரிட்டிஷார்*
*Vs*
*பிராமணர்கள்*

*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*

*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*

*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
*யூத பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,*

* பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*

*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*

*1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு, பல புதிய
சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*

*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*

*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*

* வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*

*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*

* வெள்ளையரால் வெளியிடப்பட்டது.*
Read 10 tweets
Aug 10
கலைஞருக்கு இல்லாத சிறப்பு லல்லுவுக்கு உண்டு.

அரசியலில் கூட்டணிகள் சகஜம் என்றாலும், பாஜகவுடன் கூட்டணி சேர்வது சமூக நீதிக்கு, மதச்சார்பின்மைக்கு, நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, கூட்டணி சேரும் கட்சிக்கும் ஆபத்து தான்.

இருப்பினும்,முஸ்லீம் கட்சிகள் கூட
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துன. Image
திமுகவும் ஒருமுறை பாஜக கூட்டணி அரசில் பங்குபெற்றது.

இதில் விதிவிலக்கு லல்லு மட்டுமே.

லல்லு போல் அவர் மகன் இருக்க வாய்ப்புண்டா? லல்லுவிடம் சிறுபான்மையினர் நலத்தை, மதச்சார்பின்மையை கற்றுக்கொண்டுள்ளேன் என்பதை தொடர்ந்து தேஜஸ்வி நிரூபித்து வருகிறார். Image
2019 மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை எதிர்த்து எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து களம் காண தயங்கியபோது, காங்கிரசோடு இணைந்து பாஜகவை வெல்வது மட்டுமே தற்போதைய நடைமுறை சாத்தியம் என்பதை உணர்ந்து, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என பிரகடனம் செய்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
Read 6 tweets
Aug 9
எளிமை என்றால் அம்பானி!
அம்பானி என்றால் எளிமை!!

ரிலையன்ஸ் அலுவலக வேலையை முடித்து விட்டு
அந்திப்பொழுதில் அருகிலுள்ள கையேந்தி பவனில் தட்டு கழுவி அதில் வரும் சம்பளத்தில் தான் குடும்பத்தையே நடாத்துகிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாத விஷயம் Image
தன்னை போன்றே தன் ஆருயிர் நண்பர் கஷ்ட பட்டு தேச சேவை ஆற்றுவது கண்டு பொறுக்காத ஏழைத் தாய் மகன் சில நாள் முன்பு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் அவருக்கு மாதம் 5 கிலோ தானியம் மற்றும் 1 கிலோ கொண்ட கடலை கிடைக்க வழி செய்தார்.
இருப்பினும் அம்பானி குடும்பம் மிக பெரியது Image
தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள் குஜராத்திகள் என்பதால் பிழைத்து தன் மாநிலத்தை சேர்ந்தவர் முன்னேற 5g அலைக் கற்றையை அடிமாட்டு விலைக்கு கொடுத்தார்.
பிரதமரின் தொழில் முனைவோர் ஊக்குவிப்பை புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு தற்குறிகள் #5G_Scam_Bjp என தன்னை அசிங்க படுத்தியதையும் பொறுத்தார் Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(