The Silent Patient is an interesting read. Alex Michaelides எனக்கு அறிமுகம் இல்லாத author. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை வாங்க ரொம்பவே யோசிப்பேன். விமர்சனங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவேன்.
ஆனா இப்போ அதுவுமே யோசனையாக தான் இருக்கு book க்கு over promotion, build up ஆனா வாங்கி படிச்சா கடியா இருக்கும். அப்படிதான் colleen hoover எழுதிய verity புத்தகத்தை ஆவலாக வாங்கி ஏமாந்து போனேன். அதே மாதிரி இதுவும் இருக்குமோ என்று ஆர்வமில்லாமல் இருந்தேன்.
அப்புறம் flipkart ல தள்ளுபடி விலைல கிடைக்கவும் 'சரி போ வாங்கி பாப்போம்' என்று வாங்கி, பக்கத்தை புரட்டினால் அடடே எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்கள் நாவலின் மையமாக இருந்தன ஒன்று psychology மற்றொன்று Greek mythology.
கதையின் மையமாக இருக்கும் Alicia தன் எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துகிறாள் அதுபோக ஒரு டைரி வேறு எழுதுகிறாள் (ஆனா ஒரு டைரியை இவ்ளோ detailed ஆ ஒருத்தங்க எழுதுவங்களா? and again ஒரு டைரி என்பது காலம்காலமாக எல்லா கதைகளிலும் நாம் பார்க்கும் ஒரு easy mystery reveal ஆ இருக்கு).
ஒரு psychotherapist இன் பார்வையில் இருந்து கதை விரிகிறது. நம்மை ஒரு கதையுடன் ஒன்ற வைப்பது எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நமது சாயலை காணுவது தான்.
இதில் பாதிக்கப்பட்ட Alicia மற்றும் psychotherapist Theo இருவரிடமும் என்னுடைய சாயலை காண முடிந்தது.
Michaelides எழுத்துநடை மிக எளிமையான நம்மை அப்படியே இழுத்து கதைக்குள் போட கூடிய எழுத்துநடை. அவரின் முதல் கதையாம் இது. ஆச்சரியமாக இருந்தது. இம்மாதிரியான thrillers ல எப்படியும் ஒரு plot twist இருக்கும். தெரிந்த விஷயம் தான்.
ஆனா அந்த plot twist கதைக்கு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க கூடியதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. "அட பாவி நீயா?" என்ற எண்ணத்தை தரணும். அதை Michaelides, perfectஆ செய்து இருக்கார்.
The perfect book for a weekend. Do read. @nual_reviews
முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் ‘செய்தி’ மட்டும்தான் சொல்வார்கள். கூடக்குறைய எதுவுமே இருக்காது. களத்தில் சேகரித்த தகவல்களைப் பகிர்வார்கள், அவ்வளவுதான். முடிவை நம் கையில் விட்டுவிடுவார்கள். எதையும் திணிக்க மாட்டார்கள்.
சமூக ஊடக காலத்தில் செய்தியோடு தமது கருத்துகளையும் இணைத்துச் சொல்லத் தொடங்கினர். கருத்து மோதலாக, விவாதக் களமாக அது மாறியது. சிறிது காலம் கழித்து, கருத்தையும் தாண்டி ‘நேரேடிவை’ வடிவமைக்கத் தொடங்கினர். கௌரவமாக இருக்கட்டுமே என்று நேரேடிவ் என்கிறேன். உண்மையில் அது ‘கதைவிடுவது’.
கதையாடல், மாற்றுக் கதையாடல், மாற்றுக்கு மாற்று என நாள்தோறும் அது புதுப்பது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
பஹல்கம் தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் ‘கதைகளைப்’ பாருங்கள். நேரேடிவின் உச்சகட்டம் இதுதான். எது உண்மை என்பது நேரடியாகக் களத்தில் இருந்தோருக்கே தெரியாது எனும் அளவுக்குக்
குழு இரண்டு விதம் shared survival ஒன்னா இருந்தா தான் உயிர் வாழ முடியும் என்பதால் குழுவாக இருப்பது. தீவுகளில் இருக்கும் சிறிய tribes கிட்ட இருப்பது shared survival அவர்கள் ஒரு குழுவாக இயங்கினால் தான் உயிர் வாழ முடியும்.
அபார்ட்மெண்ட் ஒரு குழு அவர்களுக்குள் சில வசதிகளை செய்து கொள்கிறார்கள். தனியா வீடு எடுத்தா என்னால electrician, plumbing என அலையமுடியாது. வயசானவங்க அபார்ட்மெண்ட் பாதுகாப்பு security maintenance குழு பார்த்து கொள்ளும் இது ஒரு shared survival.
இதுபோன்ற identity இல்லாத குழுக்கள் ஆபத்து இல்லாதவை. ஆனால், நாங்கள் ஒரே சாதி, நாங்கள் so and so குடும்பத்தினர், நாங்கள் இந்த மொழி பேசும் மக்கள் என்ற அடையாள குழுக்கள் ஆபத்தானவை. இந்த அடையாள குழுக்களில் ஒரு 10 குழு இருக்கு என்று வைத்து கொள்ளுவோம் அதில் கடைசி 10 வது குழு weak குழு.
பெண்கள் ஏன் தங்களை அடிமைப்படுத்தும் மதம் மற்றும் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள்? ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை என்ற கேள்விக்கான பதில்.
Shawshank Redemption படத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் Brooks பல ஆண்டுகள் சிறையில் இருந்து பழக்கப்பட்டதால்,
அதுவே அவருக்கு வசதியாக இருப்பதால், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சுவார். சிறை வாழ்க்கை oppressive தான். ஆனால், மணி அடிச்சா சோறு என்பதை போல ஒரு structured security அதில் இருக்கிறது. தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் பரவாயில்லை என்பதை போல
சுதந்திரத்திற்காக உணவு, இருப்பிடம், பாதுகாப்பு, போன்ற அடிப்படை தேவைகளை விட்டுகுடுக்க இவர்கள் முன்வருவதில்லை.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். நல்ல சம்பளம் அதை நம்பி வீடு கடன், வாகன கடன் எல்லாம் வாங்கி இருக்கிறீர்கள். ஆனால் மிக மரியாதை குறைவாக உங்களை நடத்துகிறார்கள்
காரண காரியமே இல்லாமல் சாதாரண விஷயத்துக்கு கூட தேவையின்றி அடிக்கடி பொய் பேசுபவர்கள் compulsive liar. எவ்வித நோக்கமும் இன்றி, இது பொய் என எளிதில் பிறரால் கண்டுபிடித்துவிட கூடியவற்றை கூட confident ஆ அடிச்சு விடுவாங்க.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய், அதை மறைக்க இன்னொன்று, என பொய் வலைகளுக்கு நடுவிலே இருப்பார்கள். எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவது இவர்களுக்கு மிக பிடிக்கும். compulsive liars களுக்கு பல சமயங்களில் தாங்கள் பொய் சொல்கிறோம் என்று கூட தெரியாது.
அதனாலேயே அவர்களுக்கு அதைப் பற்றிய குற்றவுணர்வும் இருக்காது. Compulsive lying க்கு மனசிதைவு தான் காரணம். narcissistic personality disorder கொண்டவர்களுக்கு இது இருக்கிறது. அதாவது தன்னை பற்றி மிக மேன்மையாக நினைத்து கொள்பவர்கள் பொய் பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
Haber-Bosch process மூலமாக விவசாயத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு உணவு உற்பத்தியை பெருக்கியவர் Fritz Haber என்னும் German-Jewish chemist. Haber-Bosch process மூலமாக வரும் nitrogen fertilizers ஐ நம்பிதான் இன்றைக்கு உலகத்தின் பாதி மக்கள் தொகை இருக்கிறது.
ஜெர்மன் தேசியவாதியான இவர் முதலாம் உலகப்போரின் போது நாட்டுக்காக chemical weapons ஐ உருவாக்கி தந்தார். மக்களை கருணையோடு கொல்ல (போரில்) chemical weapons ஒரு நல்ல tool என்று இவர் கண்டுபிடித்த chlorine gas முதலாம் உலகப்போரில் 1,100 படைவீரர்களுக்கு மேல் கொன்றது.
இவர் நினைத்தது போல chlorine gas கருணை கொலையாக இருக்கவில்லை. பயத்திலும் பாதத்திலும் தொண்டை நெஞ்சு எல்லாம் எரிந்து மூச்சுவிட முடியாமல் துடிதுடித்து தான் மக்கள் இறந்து போனார்கள். காற்றில் பரவிய chlorine gas ஆல் போர்வீரர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் அவதிக்குள்ளானார்கள்.
இன்னிய தேதிக்கு ஒரு ஆளு அறிவான ஆளுன்னு நாம எதை வச்சு எடைபோடுவோம்? உலக அறிவு, scientific மற்றும் technological அறிவு, அரசியல், etc இதை பற்றி எல்லாம் ஒருவருக்கு இருக்கும் knowledge ஐ வைத்து அடேங்கப்பா அவர் பெரிய புத்திசாலி என சொல்லுவோம்... அப்படியே rewind பண்ணி பின்னாடி போவோம்.
இதை பற்றி எல்லாம் தெரியாதபோது, மக்கள் ஒருவரை எதன் அடிப்படையில் அறிவாளி, எல்லாம் தெரிந்தவர் என சொல்லுவார்கள்? யாரிடம் நிறைய மூட நம்பிக்கைகள் உண்டோ... யாருக்கு சடங்கு சம்பிரதாயங்கள் நல்லா தெரியுமோ... யாரு கதைகள் சொல்வார்களோ... அவர்கள் தான் அன்னிய தேதிக்கு அறிவாளி.
அமாவாசை வெங்காயம் சேர்க்க கூடாது, அரச மரத்தை சுத்தினா குழந்தை பிறக்கும், இது போன்ற titbits யாரு நிறைய சொல்றாங்களோ அவங்கள தான் 'அடேங்கப்பா, இவங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கு பாரேன்' என அந்த காலத்தில் வியந்து இருப்பார்கள்.