The Silent Patient is an interesting read. Alex Michaelides எனக்கு அறிமுகம் இல்லாத author. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை வாங்க ரொம்பவே யோசிப்பேன். விமர்சனங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவேன்.
ஆனா இப்போ அதுவுமே யோசனையாக தான் இருக்கு book க்கு over promotion, build up ஆனா வாங்கி படிச்சா கடியா இருக்கும். அப்படிதான் colleen hoover எழுதிய verity புத்தகத்தை ஆவலாக வாங்கி ஏமாந்து போனேன். அதே மாதிரி இதுவும் இருக்குமோ என்று ஆர்வமில்லாமல் இருந்தேன்.
அப்புறம் flipkart ல தள்ளுபடி விலைல கிடைக்கவும் 'சரி போ வாங்கி பாப்போம்' என்று வாங்கி, பக்கத்தை புரட்டினால் அடடே எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்கள் நாவலின் மையமாக இருந்தன ஒன்று psychology மற்றொன்று Greek mythology.
கதையின் மையமாக இருக்கும் Alicia தன் எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துகிறாள் அதுபோக ஒரு டைரி வேறு எழுதுகிறாள் (ஆனா ஒரு டைரியை இவ்ளோ detailed ஆ ஒருத்தங்க எழுதுவங்களா? and again ஒரு டைரி என்பது காலம்காலமாக எல்லா கதைகளிலும் நாம் பார்க்கும் ஒரு easy mystery reveal ஆ இருக்கு).
ஒரு psychotherapist இன் பார்வையில் இருந்து கதை விரிகிறது. நம்மை ஒரு கதையுடன் ஒன்ற வைப்பது எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நமது சாயலை காணுவது தான்.
இதில் பாதிக்கப்பட்ட Alicia மற்றும் psychotherapist Theo இருவரிடமும் என்னுடைய சாயலை காண முடிந்தது.
Michaelides எழுத்துநடை மிக எளிமையான நம்மை அப்படியே இழுத்து கதைக்குள் போட கூடிய எழுத்துநடை. அவரின் முதல் கதையாம் இது. ஆச்சரியமாக இருந்தது. இம்மாதிரியான thrillers ல எப்படியும் ஒரு plot twist இருக்கும். தெரிந்த விஷயம் தான்.
ஆனா அந்த plot twist கதைக்கு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க கூடியதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. "அட பாவி நீயா?" என்ற எண்ணத்தை தரணும். அதை Michaelides, perfectஆ செய்து இருக்கார்.
The perfect book for a weekend. Do read. @nual_reviews
Mandela Effect என்பதொரு social phenomenon. நிறைய மக்கள் ஒரு சேர்ந்து பொய்யான ஒன்றை நடந்ததாக நம்புவார்கள் shared false memories. இந்த சொல்லை மற்றும் இந்த phenomenon ஐ முன்மொழிந்தவர் Fiona Broome என்னும் paranormal researcher.
பெரும்பாலான மக்கள் Nelson Mandela 1980 களில் சிறையிலேயே இறந்துவிட்டார் என நினைக்கிறார்கள். ஆனா Nelson Mandela 1990 ல் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் பிரதமராகி 2013 ல் இறந்து போனார்.
இருந்தாலும் பெருவாரியான மக்கள் அவர் சிறையிலேயே இறந்துவிட்டதாக ஒரு false memory யை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். நமது மூளை இருக்கும் தகவல்களை வைத்து ஒரு பொய்யான நினைவுகளை உருவாக்கிக்கொள்ளும் என்கிறார்கள்.
"விடு எல்லாம் சரியா போயிடும்" "நான் உனக்காக pray பண்ணிக்கறேன்" "கடவுள் இருக்கான் பார்த்துப்பான்" "ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க" "குடும்பம் என்றால் நாலு விஷயம் முன்ன பின்ன தான் இருக்கும்" "எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்" "விதி நாம என்ன செய்ய முடியும்"
இந்த மாதிரி வாக்கியங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது ' thought-terminating cliché' இதை முன்மொழிந்தவர் Robert Jay Lifton (Thought Reform and the Psychology of Totalism).
ஒரு conversation அ முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எதிராளியை கேள்வி கேட்க விடாமல் செய்வதற்கு,
மேற்கொண்டு அவர்களை யோசிக்க விடாமல் செய்வதற்கு இத்தகைய சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. unconsciously எல்லாருமே இத்தைகைய thought-terminating cliché' க்களை தினசரி வாழ்வில் பயன்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.
வாழ்க்கையே முடிந்து போனது என்னும் மிக கீழான இடத்தில் எல்லா நம்பிக்கைகளும் அற்று போய் இருக்கும் ஒருவர் சிறிது சிறிதாக அதிகாரத்தை கைக்கொள்ளும் போது அந்த அதிகார போதை அவர்களை திருப்பி பாதாளத்தில் தள்ளிவிடும்.
எப்படியாவது உயிர் வாழனும் என்ற survival நிலையில் இருந்து போராடி மேல வந்ததும், தான் எது செய்தாலும் அது சரி என்ற நிலைக்கு வருகிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் நடுவே மெல்லிய கோடு தான் இருக்கு என்பார்கள் அந்த கோடு இவங்ககிட்ட இருக்காது.
கடைசியில் ego, எல்லாருமே எதிரிகள் நம்மை attack பண்ண தான் வருகிறார்கள் என்ற paranoia இதெல்லாம் அவங்களை தனிமைப்படுத்தி அவங்க அழிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
முன்பெல்லாம் செய்தி ஊடகங்களில் ‘செய்தி’ மட்டும்தான் சொல்வார்கள். கூடக்குறைய எதுவுமே இருக்காது. களத்தில் சேகரித்த தகவல்களைப் பகிர்வார்கள், அவ்வளவுதான். முடிவை நம் கையில் விட்டுவிடுவார்கள். எதையும் திணிக்க மாட்டார்கள்.
சமூக ஊடக காலத்தில் செய்தியோடு தமது கருத்துகளையும் இணைத்துச் சொல்லத் தொடங்கினர். கருத்து மோதலாக, விவாதக் களமாக அது மாறியது. சிறிது காலம் கழித்து, கருத்தையும் தாண்டி ‘நேரேடிவை’ வடிவமைக்கத் தொடங்கினர். கௌரவமாக இருக்கட்டுமே என்று நேரேடிவ் என்கிறேன். உண்மையில் அது ‘கதைவிடுவது’.
கதையாடல், மாற்றுக் கதையாடல், மாற்றுக்கு மாற்று என நாள்தோறும் அது புதுப்பது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
பஹல்கம் தாக்குதலை ஒட்டி பரப்பப்படும் ‘கதைகளைப்’ பாருங்கள். நேரேடிவின் உச்சகட்டம் இதுதான். எது உண்மை என்பது நேரடியாகக் களத்தில் இருந்தோருக்கே தெரியாது எனும் அளவுக்குக்
குழு இரண்டு விதம் shared survival ஒன்னா இருந்தா தான் உயிர் வாழ முடியும் என்பதால் குழுவாக இருப்பது. தீவுகளில் இருக்கும் சிறிய tribes கிட்ட இருப்பது shared survival அவர்கள் ஒரு குழுவாக இயங்கினால் தான் உயிர் வாழ முடியும்.
அபார்ட்மெண்ட் ஒரு குழு அவர்களுக்குள் சில வசதிகளை செய்து கொள்கிறார்கள். தனியா வீடு எடுத்தா என்னால electrician, plumbing என அலையமுடியாது. வயசானவங்க அபார்ட்மெண்ட் பாதுகாப்பு security maintenance குழு பார்த்து கொள்ளும் இது ஒரு shared survival.
இதுபோன்ற identity இல்லாத குழுக்கள் ஆபத்து இல்லாதவை. ஆனால், நாங்கள் ஒரே சாதி, நாங்கள் so and so குடும்பத்தினர், நாங்கள் இந்த மொழி பேசும் மக்கள் என்ற அடையாள குழுக்கள் ஆபத்தானவை. இந்த அடையாள குழுக்களில் ஒரு 10 குழு இருக்கு என்று வைத்து கொள்ளுவோம் அதில் கடைசி 10 வது குழு weak குழு.
பெண்கள் ஏன் தங்களை அடிமைப்படுத்தும் மதம் மற்றும் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளியே வரமாட்டேன் என்கிறார்கள்? ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை என்ற கேள்விக்கான பதில்.
Shawshank Redemption படத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் Brooks பல ஆண்டுகள் சிறையில் இருந்து பழக்கப்பட்டதால்,
அதுவே அவருக்கு வசதியாக இருப்பதால், சிறையை விட்டு வெளியே செல்ல அஞ்சுவார். சிறை வாழ்க்கை oppressive தான். ஆனால், மணி அடிச்சா சோறு என்பதை போல ஒரு structured security அதில் இருக்கிறது. தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் பரவாயில்லை என்பதை போல
சுதந்திரத்திற்காக உணவு, இருப்பிடம், பாதுகாப்பு, போன்ற அடிப்படை தேவைகளை விட்டுகுடுக்க இவர்கள் முன்வருவதில்லை.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். நல்ல சம்பளம் அதை நம்பி வீடு கடன், வாகன கடன் எல்லாம் வாங்கி இருக்கிறீர்கள். ஆனால் மிக மரியாதை குறைவாக உங்களை நடத்துகிறார்கள்