#மாடு_மேய்க்கும்_குழந்தை

"அம்மா ! நான் நாளை முதல் வேலைக்குப் போகப் போகிறேன்"
சொன்னது மூன்றுவயதுக் குழந்தை.

"எதற்காக நீ வேலைக்குப் போகப் போகிறாய் " தாயின் முகத்தில் பரவசம். "பிள்ளை எப்படி பொறுப்பாக பேசுகிறது " என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். Image
"உங்களை எல்லோரையும் காப்பாற்ற "

"அதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது.எங்களுக்கு வயதாவதற்கு பல ஆண்டுகள் இருக்கின்றனவே "

"ஆனால் எனக்கு நேரமில்லை "

" அப்படி சொல்லாதே ..உனக்கு நேரம் இன்னும் வரவில்லை . Image
அப்படி வரும்போது நானே உன்னை வழி அனுப்புகிறேன் .இப்போது, போய் விளையாடு . "

"நான் கண்டிப்பாக போவேன் ". பிள்ளையின் குரலில் சிறிது அடம் தெரிந்தது. இப்போது தாயின் முகத்தில் கலவரம். பரவிகிறது அவள் .சிறிது இறங்கி வருகிறாள்.

"சரி ! என்ன வேலைக்கு போகப்போகிறாய் " Image
"மாடு மேய்க்கப் போகிறேன்".

"என்ன ! மாடு மேய்க்கப் போகிறாயா ? அது என்ன அவ்வளவு எளிதானது என்று நினைத்தாயா ? முதலில் மாடுகளை எங்கே மேய்ப்பாய் என்று சொல் பார்க்கலாம் "

"காட்டில் : Image
"அங்கே சிங்கம் , புலி , கரடிகள் , பாம்புகள் எல்லாம் இருக்குமே . அவற்றிலிருந்து நம் மாடுகளை எப்படி காப்பாய் ".

"அவற்றிடம் இருந்து மட்டுமல்ல. நரிகள், நாய்கள் , கழுகுகளிடமிருந்தும் நான் மாடுகளைக் காப்பேன் "

. "நன்றாக பேசுகிறாய் .எனக்குத்தான் நீ பேசுவது புரிவதே இல்லை . Image
சரி சரி . நீ பெரியவனாக ஆனதும் உன் விருப்பம் போல் காட்டுக்கு சென்று நம் மாடுகளை மேய்க்கலாம் . இப்போது சென்று கண்ணுறங்கு "

அடுத்தநாள் காலை .உதயத்திற்கு மூன்று நாழிகை முன்னரே தாய் எழுந்து விளக்கேற்றி வாயிலைக் கூட்டி கோலமிட்டு தன் பிள்ளையைப் பார்க்க வருகிறாள். Image
பிள்ளை படுக்கையில் இல்லை . ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சே நின்று விடுகிறது.

மனம் பதை பதைக்கிறது . "என் குழந்தை எங்கே ?எங்கே ?என்று நாற்புறமும் பார்க்கிறாள்.

"அம்மா" குழந்தையின் குரல் வாயில் பக்கம் கேட்கிறது. Image
பிள்ளை வாயிலில் ,கையில் ஒரு சிறு குச்சியுடன் நின்று கொண்டிருக்கிறது.

"அம்மா ! நான் மேய்ச்சலுக்கு புறப்பட்டுவிட்டேன். அதோ பார். நம் பசுக்களும் காளைகளும் என்னுடன் வருவதற்கு தயாராக உள்ளன ". Image
"என்னடா இது கொடுமை . நீ நேற்று ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாய் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மேய்ச்சலுக்கு போவேன் என்று உண்மையாகவே நிற்கிறாயே .உன் அப்பா வேறு ஊரில் இல்லை .இப்போது உன்னை எப்படி அனுப்புவேன் , நான் என்ன செய்வேன் " தாய் புலம்புகிறாள். Image
"நான் புறப்படுகிறேன் . என்னை வாழ்த்துங்கள் அம்மா"

"வேண்டாம் குழந்தாய், !நீ இங்கேயே வீட்டிலேயே விளையாடு ."

" மாடு மேய்ப்பதும் எனக்கு விளையாட்டுத்தான் அம்மா:"

"பால்குடியே இன்னும் மாறாத உனக்கு இப்படி மாடு மாய்க்கும் ஆசையை ஊட்டிவிட்டது யார் . Image
சொல் குழந்தாய். .அவனை நாலு சாற்றுகிறேன்".

"அப்படி யாரும் கிடையாது அம்மா. இது என் கடமை. நான் என் கடமையை செய்கிறேன். நீ உன் கடமையை செய்"

"எதடா என் கடமை ? உன்னை காட்டுக்கு அனுப்புவதா என் கடமை"

"என்னை வாழ்த்தி அனுப்புவது உன் கடமை "

"என்னால் முடியாது " Image
"நீ செய்கிறாய் "

"நான் மாட்டேன் :

"அப்படியானால் நான் சாப்பிடவே மாட்டேன் "..குழந்தைக்கு தாயின் பலவீனம் தெரிந்திருக்கின்றது.

"சாப்பிடமாட்டேன்" என்று சொன்னதும் தாயின் கண்களில் கண்ணீர் வழிகின்றது . "அப்படி சொல்லாதே செல்லமே !. Image
நீ மேய்ச்சலுக்குப் போய் வா. நான் உனக்கு சீடை , முறுக்கு , அப்பம், அவல், வெண்ணை ,ததி அமுது எல்லாம் கட்டித்தருகிறேன் காட்டில் பசிக்கும் போதெல்லாம் சாப்பிடு ..ஒன்றுமட்டும் சொல் எப்போது வருவாய் ?" Image
:"மீண்டும் மீண்டும் வருவேன் "

"என்ன !!! "

"இல்லை இல்லை! சில நாட்கள் கழித்து வருவேன்

குழந்தை நடக்க ஆரம்பித்தது. வெறும் கால்களுடன் தெருப் புழுதியில் நடக்க ஆரம்பித்தது.

பசுக்களும் , காளைகளும், அவற்றின் கன்றுகளும் முன்னே செல்ல ஆரம்பித்தன. Image
இடுப்புக் கச்சத்தில் ஒரு புல்லாங்குழலையும் , தலையில் ஒரு மயில் பீலியையும் செருகிக்கொண்டு அது கம்பீரமாக நடந்து சென்றது.

தாய் கொடுத்த தின் பண்டங்களை ஒரு மாட்டின் கழுத்தில் கட்டிவிட்டது. Image
குழந்தை நடந்து செல்லும் அழகைக் காண ஆதவன் வழக்கத்தை விட விரைவில் எழும்பிவர முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அன்று முன்தினம் முழு நிலவு நாள் என்பதால் நிலவும் மேற்கில் மறையாமல் குழந்தையில் அழகிலேயே தன்னைப் பறிகொடுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தது. Image
"நீ பார்த்து ரசித்தது போதும் . நான் பார்க்க வேண்டாமா. நீ சீக்கிரம் கீழே இறங்கு " என்று ஆதவன் நிலவைப் பார்த்து தன் உஷ்ணத்தைக் காட்டியது.

இந்த சூரியன் மேலே எழுந்தால் இந்தக் குழந்தைக்கு வேர்க்குமே என்று காற்று மெதுவாக குளிர்ந்து வீசியது. Image
பறவைகள் அந்தக் காற்றை தங்கள் சிறகுகளால் குழந்தையை நோக்கி விசிறின.

கல் முள் குத்தினால் குழந்தையின் பாதங்கள் வலிக்குமே என்று மண் தன்னை மென்மையாக மாற்றிக்கொண்டது.

மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து குழந்தையில் கால்களுக்கு மெத்தைகளை அளித்தன. Image
மாடுகள் தங்கள் தலையையும் , காதுகளையும் , வால்களையும் ஆட்டிக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருந்தன.

அவ்வப்போது குழந்தை பின்னே வருகின்றானா என்று திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றன.

சில மாடுகள் "நாம் வேண்டுமென்றே மந்தையை விட்டு விலகி செல்வோம் . Image
அப்போது இந்த குழந்தை என்ன செய்கிறது என்று பார்ப்போம் " என்று வழி மாறி நடக்க ஆரம்பித்தன.

பின்னர் அவை திருட்டுத்தனமாக பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தன.

"உங்கள் எண்ணமும் நான் அறிவேன் " என்பது போல குழந்தை அந்த மாடுகளைப் பார்த்து ஒரு புன் சிரிப்பு செய்ததும் Image
அந்த மாடுகள் தம்மை அறியாமல் தாமாக சரியான பாதையில் செல்ல ஆரம்பித்தன.

இப்படியாக அந்த குழந்தை மாடுகளை மேய்த்து வருகிறது. கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து மாடுகளைக் காப்பாற்றி வருகிறது. Image
"என்னையே சரண் அடை . நான் உன்னை எல்லாவிதமான
கட்டுகளில் இருந்தும் விடுவிக்கிறேன் " என்று சொல்கிறது.

தருமத்தைக் காக்க கையில் குச்சிக்கு பதிலாக சாட்டையை ஏந்தி நிற்கிறது. அப்படியே இன்னும் அல்லிக் குளத்தங்கரையில் நின்று கொண்டிருக்கிறது. . Image
குழந்தையாய், தாயாய் . தந்தையாய் , சகோதர சகோதரியாய் , நண்பனாய் , மந்திரியாய் , நல்லாசிரியனாய் , பண்பிலே தெய்வமாய் .......... ..

எங்கிருந்தோ வந்தான். இடைசாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன.....

கிருஷ்ணா கிருஷ்ணா
ராதே கிருஷ்ணா ...

#கோகுலம் ImageImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Aug 22
" ஹைதர் அலிக்கு தண்ணி காட்டிய உலக்கை தாய் #ஒனகே_ஓபாவ்வா ".

சித்ரதுர்கா கோட்டை பெங்களூருவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நம் சங்ககிரி துர்க்கத்தைப் போன்றே மலையில் அமைந்த கோட்டையாகும். ImageImage
ஊர் சுற்றியாகிய நான் இந்தக் கோட்டைக்கு சென்றிருந்த பொழுது அங்கிருந்த இந்திய சுற்றுலாத் துறையின் வழிகாட்டி இந்தக் கோட்டையின் மகத்துவத்தை கண்களில் கண்ணீர் கசிய சொன்னபொழுது நான் அப்படியே உறைந்து போய்விட்டேன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்டு வந்த இந்து மன்னர் தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக சித்ர என்ற மலையின்மீது மாபெரும் கோட்டை ஒன்றை கட்டி அதில் நூற்றுக்கணக்கான வீரர்களையும் தங்க வைத்திருந்தார்.
Read 25 tweets
Aug 22
கிழே உள்ள படத்தை நன்கு கவனியுங்கள்

கார்ல்சனை கொண்டாடிய மீடியா!
ஓரமாக நின்ற பிரக்ஞானந்தா!
அடுத்து நடந்த ட்விஸ்ட்!

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார். Image
இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் புளோரிடாவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது.

இந்த தொடர் செஸ் போட்டிகளில் முக்கியமான ஒரு தொடர் ஆகும்.
சர்வதேச அளவில் ரேங்கை உயர்த்திக்கொள்ள இது முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.

இதில்தான் கார்ல்சன் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அதே சமயம் இவர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொண்ட போட்டியில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
Read 11 tweets
Aug 22
#கர்மாவும்_கடவுளும்

*Interesting analogy & understanding -*

After Shri Krishna killed Kamsa, he went to the jail to release Vasudev and Devki, his parents.
Devki matha asked eagerly,
"Child, you are God yourself, and you have divine powers; then, Image
why did you wait fourteen years to kill Kamsa and release us"?

Shri Krishna replied,
′Respected mother, forgive me. But why did you send me to the jungle for fourteen years in my last birth? Image
Devki was very surprised and said,
′′Krishna, how is this possible?
Why are you saying this?"

Shri Krishna replied,
′′Mother, you will not remember anything about your previous birth. But you were Kaikayi in your last birth and your husband was Dashrath". Image
Read 5 tweets
Aug 21
சங்கர சந்திர சேகர

ராம ராம ராம.

இந்த பதிவைப் போடும் போதே இந்த அதிசயம் நடந்தது.

வாட்ஸ்அப்பில வந்த பதிவைப் படித்ததும் ஷேர் செய்ய நினைத்ததும் அதற்குப் பெரியவா படம் ஒன்றை இணைத்துப் போட நினைத்ததும், ImageImageImage
என் அக்கா தினமும் அனுப்பும் பெரியவா படத்தை இணைக்க நினைத்துப் பார்த்தால்

இன்று அவள் அனுப்பிய தண்டாயுதபாணியைப் பார்த்ததும் மிக வியப்பா இருந்தது. இதுவும் அவன் செயல்.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர.

பெரியவா பெரியவா இந்த சப்தம் இந்த நாமா
தவிர வேறு எதுவும் தெரியாத குடும்பம்
இவர்களது. ImageImage
இவர்கள் தாத்தா தீவிரமுருக பக்தி
உடையவர்.

ஆனால் பெரியவா பக்தி கிடையாது!

ஒரு சமயம் இவர்கள் வசித்த கிராமத்துக்கு
பெரியவா காம்ப் சென்ற போது

அனைத்து
வீடுகளிலும் பூர்ண கும்பம் கொடுத்து
வரவேற்றபோது

இவர்கள் தாத்தா மட்டும்
பெரியவாளுக்கு ImageImage
Read 14 tweets
Aug 20
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,

"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!

அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!

அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக
மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!

கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!

"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!

"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!

அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!

"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,

"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,

"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!

"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!

"
Read 13 tweets
Aug 19
#கோகுலாஷ்டமி
#பட்டத்ரியும்_குருவாயூரப்பனும்

"தாத்தா.. தாத்தா.. எழுந்துக்கோ..விடியப்போறது.."

"ஓ.. நாழியாயிடுத்தா.. செத்த கண் அசந்துட்டேன்.."

"நாராயணீயம் எழுதணுங்கற எண்ணமே மறந்துடுத்தா.. அப்புறம் எப்படி கண் அசறும்.."
"இல்லடா கிருஷ்ணா.. ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு வெளிச்சத்தில் எழுதினேனோன்னோ.. அதான்.."

"சரி சரி.. போய் குளிச்சுட்டு வா.."

"தோ.. இப்பவே.."

"தாத்தா.. நீ இப்ப பூஜை பண்ணனுமா.. எனக்கு பசிக்கறது.."

"அனுஷ்டானம் பண்ண வேண்டாமா.. கொஞ்சம் பொறுமையா இரு.. நைவேத்தியம் பண்றேன்.."
"நான்தான் உன்னோடயே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு பூஜை.."

"கொழந்தே... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவனடா நீ.. பூஜை என்பது உனக்கு அல்ல.. எங்களுக்கு.. எங்கள் மனம் என்னும் கோவிலை தூய்மைப்படுத்தி அதில் பரிசுத்தமான உன்னை குடியமர்த்த.."
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(