நாங்க எல்லாம் வேற மாதிரி (immortal jellyfish & Octopus)
மனிதர்கள் and பெரும்பாலான உயிரினங்கள் அதோட cell replicate ஆகும்போது... reproduce பண்ணும்போது... அதனுடைய DNA அப்படியே exact ஆ இன்னொரு copy எடுக்கும். அதிலிருந்து RNA அதிலிருந்து protein உருவாகிறது.
இப்படி copy எடுக்கும்போது, எதாவது சில மாற்றங்கள் copy எடுக்கப்படும் DNA வில் உருவாகலாம் அது mutation. இந்த mutation ஒரு visible மாற்றத்தை கொண்டு வரும்போது மேலும் அந்த mutation அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படும்போது அது evolution. இது normal ஆ எல்லா உயிரினங்களிலும் நடப்பது.
ஆனா இந்த octopuses மற்றும் இதர cephalopods என்ன பண்ணுது? புத்திசாலித்தனமா ஒரு வேலையை பண்ணுது. தனக்கு ஏற்ற மாதிரி லேசா சில கிம்மிக்ஸ் வேலைகள் பண்ணுது... genetic editing பண்ணுது. இப்போ தன்னோட நிறத்தை மாத்தணும் அப்படின்னா அதுக்கு ஒரு குறிப்பிட்ட protein தேவை இல்லையா?
அந்த குறிப்பிட்ட protein ஐ உற்பத்தி செய்வதுபோல தன்னோட RNA வை edit பண்ணுது. DNA வில் இருந்து RNA copy ஆனதுக்கு அப்புறம் RNA editing மூலமா அதை தனக்கு ஏற்றார் போல octopus மாத்திக்குது. (nautilus intelligence #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
octopus இப்படி பண்ணுது இந்த immortal jellyfish (Turritopsis dohrnii) என்ன பண்ணுது? இது எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சுக்கும். அடுத்து Telomere என்பது DNA molecule இன் இரண்டு முனைகளிலும் இருக்கும். ஒவ்வொரு முறை DNA copy எடுக்கும்போதும் Telomere அளவு குறைஞ்சுகிட்டே வரும்.
ஒரு கட்டத்துல ரொம்ப குறைஞ்சிரும் அதுக்கு அப்புறம் DNA இன்னொரு copy எடுக்க முடியாது. cell அப்படியே காலாவதி ஆகிடும். இப்படி ஒவ்வொரு cellஆ காலி ஆவது தான் வயசாகுதல். நம்ம jellyfish என்ன பண்ணுது? octopus RNAவை edit பண்ற மாதிரி இது ஒரு mutationஅ போட்டு இந்த Telomere உடையாம பாத்துக்குத
அப்போ DNA அதுபாட்டுக்கு replicate ஆகிட்டே இருக்கும். cell fresh ஆ இருக்கும். அடுத்து எதோ ஒரு external stress, ஒரு poison அ encounter பண்ணிடுச்சு அப்படின்னு வச்சுப்போம். டபக்குன்னு கடல் ஆழத்தில் போய் ஒரு cyst (dormant stage) மாதிரி form ஆகிடும்.
எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சு இருக்கும் ன்னு சொன்னேன்ல அதுல நல்ல copy யை வச்சுக்கிட்டு தன்னை தானே clone பண்ணிக்கும். நல்ல cell எல்லாம் clone ஆகிடும், பாதிக்கப்பட்ட cell எல்லாத்தையும் ஒதிக்கிரும். phoenix பறவை மாதிரி தான்.
இப்போ jellyfish எப்படி Telomere உடையாம பாத்துக்குது அதே மாதிரி மனிதனுக்கும் ஒரு mutation அ போட்டு இந்த Telomere உடையாம வச்சுக்க முடியுமான்னு ஆராய்ச்சிகள் நடக்குது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆல்பா ஆண் என்ற சிந்தனை ஆரம்பகால சிந்தனை. வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆரம்பத்தில் ஓநாய்களில் ஆல்பா ஆண் என்னும் தலைவன் இருக்கும் அதை பின்பற்றியே அதன் கூட்டம் இயங்கும். அந்த ஆல்பா ஓநாய் முரட்டுத்தனமானது, மற்ற ஆண் ஓநாய்களிடம் சண்டையிட்டு அதன் இடத்தை தக்க வைத்து கொள்ளும்,
தனது அதிகாரத்தை மற்ற ஓநாய்களின் மேல் செலுத்தும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த கருத்து தவறானது என தற்போதைய வனவிலங்கு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வனவிலங்கு ஆய்வாளர்கள் இப்போது ஆல்பா என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை.
மனிதர்களிடையே இருப்பதை போல ஓநாய்களிடமும் குடும்பம் என்ற அமைப்பு இருக்கிறது. மனித குடும்பத்தில் தந்தை எப்படி குடும்பத்தை வழிநடத்துகிறதோ அதே போல அங்கும் ஓநாய் தந்தை அந்த குடும்பத்தை வழிநடத்துகிறது.
இந்த ஆல்பா என்ற சொல், ஓநாய்களை பிடித்து, அடைத்து, அதை ஆராய்ந்த போது வந்த சொல்.
December 8 தேவமாதா கருத்தரித்த நாள் என காலண்டர்ல போட்டு இருக்காங்க இல்லையா அது இயேசுவை மாதா கருத்தரித்த நாள் இல்ல. மாறாக மாதாவை அவங்க அம்மா Anne கருத்தரித்த நாள். அதாவது தேவமாதா கருவாக உருவான நாள். 1/21
இயேசு கிறிஸ்து கன்னி மரியாளுக்கு பிறந்தார் என்பது ரொம்பவே முக்கியமான கிறிஸ்தவ கோட்பாடு. அது ஒரு அதிசயம், prophecy என்பதை எல்லாம் தாண்டி ஆதி பாவத்தினால் தீண்டப்படாத ஒரு நபர் இயேசு என்பதை வலியுறுத்துவதற்கு இந்த Virgin Birth மிகவும் அவசியமாக இருக்கிறது. 2/21
sex என்பது பாவமானது அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பாவத்துடன் பிறக்கிறார்கள். இயேசு sex மூலமாக பிறக்கவில்லை அவர் கன்னி பெண் மரியாளுக்கு பிறந்தார் அதனால் அவரிடம் பாவம் இல்லை. இதை பெரும்பாலான Christian denominations ஒப்புக்கொள்கிறார்கள். 3/21
Social constructs நமது மூளையில் ஆழமாக பதிந்து இருக்கும். நம்மை அறியாமல் சமூகம் விதித்திருக்கும் வரைமுறைக்குள் தான் இயங்கி கொண்டிருப்போம். அது குறித்தான விழிப்பு நமக்கு இருக்காது. உதாரணமாக நமக்கு கீழ் வேலை செய்பவர் முக்கியமாக வீட்டு வேலை செய்பவர்கள் நம்மிடம் பேசும்போது நின்றுகொண்ட
பேசுவார்கள் ஒருபோதும் அமர மாட்டார்கள். அது ஒரு பிரச்சினை என்று கூட நமக்கு தோணாது. நாம் முற்போக்கான ஆளாக இருந்தாலும், அவர்களுக்கு நாம் மரியாதை தருகிறோம் என்றாலும், அவர்கள் பக்கத்தில் இருக்கும் chair ல வந்து உக்காந்து பேசினால் அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றாலும்
அவர்கள் நின்று கொண்டு பேசும் போது அவர்களை உட்கார சொல்ல வேண்டும் என்று நமக்கு தோன்றாது. ஏனெனில் இது பார்த்து பழகிய காட்சி, அதில் நாம் பாதிக்கப்படாத நபராக இருக்கும் வரை அதில் இருக்கும் தவறு நமக்கு தெரியாது. யாராவது இதை சுட்டிக்காட்டினாலும்
நாடி சோதிடம், கைரேகை, குறி சொல்லுதல், tarot card reading இப்படி எல்லாமே பொய் தான். அதை செய்பவர்கள் மக்களை ஏமாற்றும் con man (short for confidence man) தான். திருடன் தன்னுடைய physical skill வைத்து திருடுகிறான்.
con man தன்னுடைய persuasion, charm, மற்றும் psychological tactics பயன்படுத்தி மக்களை manipulate பண்ணி பணம் பறிக்கிறான்.
சோதிடம் என்பது பெரும்பாலும் குலத்தொழில், அது ஒரு closely knitted circle. மக்கள், 'அவங்க பரம்பரையாக சோதிடம் பார்க்கிறார்கள் நன்றாக பார்ப்பார்கள்'
என்று தான் பாக்க செல்வார்கள். திடீரென்று புதுசா முளைத்த சோதிடர்களிடம் மக்கள் செல்வதில்லை. வைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நாடி சோதிடம் பரம்பரையாக சில குடும்பங்கள் பார்த்து வருகின்றன.
சிறு வயதில் இருந்தே இதில் ஈடுபடுகிறார்கள்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சின்ன விஷயத்தை சார்ந்து மட்டுமே இல்லை. புத்தி சொன்னா கேக்கல அடிச்சு வளக்கிறேன். இல்ல, அடிச்சு வளக்க கூடாது புத்தி சொன்ன போதும் என்று குழந்தை வளர்ப்பை simplify பண்ண முடியாது. நிறைய factors ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கிறது.
genetics, குடும்ப சூழல், நண்பர்கள், சமூகம், பள்ளி, கல்வி, media, பொருளாதாரம், வளரும் சூழல், பெற்றோர்களின் involvement, சமூகத்தில் இருக்கும் role model இப்படி பல விஷயங்கள் ஒரு குழந்தையின் நடத்தையை பாதிக்கிறது.
குழந்தையின் வளரும் சூழல் மோசமாக இருக்கும்போது, பெற்றோர்கள் மோசமாக இருக்கும்போது இந்த சமூகம் project பண்ணும் role model கள் மோசமாக இருக்கும்போது அவர்கள் அதை தான் பின்பற்றுவார்கள்.
நல்ல சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை ஒன்றை எழுதிவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல், இது கனவு என்று முடிப்பது ("it was all a dream" ending). அல்லது சுவாரசியமான காட்சிகள் வேண்டும் என்பதற்காக, ஒரு காட்சியை அமைத்துவிட்டு,
பின்னர் கதாபாத்திரம் திடுக்கிட்டு, 'ஓ கனவா' என விழிப்பது போல காட்சி அமைப்பது deus ex machina என்றழைக்கப்படும். deus ex machina என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள், god from the machine.
அன்றைய கிரேக்க roman மேடை நாடங்களில், தீர்க்க முடியாத plot conflicts வரும்போது கடவுள் கேரக்டரை மேடையின் மேலிருந்து ஒரு mechanical device மூலம் இறக்கி பிரச்சனையை முடித்து வைப்பதாக காட்சி அமைப்பார்கள். இது ஒரு weak storytelling ஆக கருதப்படுகிறது.