//பார்ப்பன - இந்துத்துவ கும்பலுக்கு களத்தில் & கருத்தியல் தளத்தில் அடியாள் வேலை பார்க்கும் சூத்திரவாளுக்கு இந்த பதிவு அர்ப்பணம்...//
கலவர இந்துத்துவா போஸ்டர் boy மாறியது எப்படி..? 2002க்கு 2019 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன..??
இஸ்லாமியர்களை வேட்டையாடிய கொடூரமான 2002
குஜராத் கலவரத்தின் இரு முகங்களாக அறியப்பட்டவர்கள், ரத்த காயங்களுடன் கைகூப்பி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் குத்புதீன் அன்சாரி, மறுபுறம் மதவெறி கொப்பளிக்க கத்தியை வெறிகொண்டு உயர்த்தி காண்பிக்கும் அசோக் பார்மர்...
இந்த அசோக் பார்மர் அகமதாபாத்தில் புதிதாகத் துவக்கி இருக்கும்
காலணி கடையை திறந்து வைத்தவர் குத்புதீன் அன்சாரி..
இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன??
"ஹிந்து வர்ண முறை எங்களை செருப்பு தைப்பவர்களாகவே வைத்திருக்கிறது.. வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்கவே இல்லை.. " என்ற உண்மையை அசோக் பார்மர் இந்த இடைக்காலத்தில் புரிந்து கொண்டதுதான் இந்த
மாற்றத்துக்கு காரணம்..
அதாவது 'ஹிந்துத்துவம்' தங்களை அடியாட்களாக, கலவரங்களை செய்யவும் வன்முறைகளை செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறது, அதன் பலனான அதிகாரத்தை, வெறும் குறைந்த சதவீதமான ஹிந்து மேல்தட்டு மக்கள் (பார்ப்பனர்கள்) மட்டுமே அனுபவிக்கிறார்கள், பெரும்பான்மையான இந்துக்களுக்கு
அந்த அதிகாரத்தின் பலன் கிடைக்கவில்லை... என்ற உண்மையை உணர்ந்து மாறியுள்ளார்.
இப்போது இங்கே உருவாகும் இந்துத்துவ காலாட் படைகளுக்கு இந்த உண்மை எவ்வளவு சீக்கிரம் புரியும்.
Mochi points out, "This is the Hindu varna system that continues to keep me stuck as a cobbler. They don't
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை #நீதியரசர்_M_M_இஸ்மாயில் அவர்களை தமிழுலகம் மறந்துவிட முடியாது அவரின் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் காலத்தால் அழியாதவை. அதில் ஒரு தீர்ப்புதான் இது..
இதனை நீக்கக்கோரி சில 'பார்ப்பன அமைப்புகள்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது இந்துக்கள் மட்டுமின்றி
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையையும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று முறையிட்டார்கள்.
இந்த வழக்கு அன்றைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 'நீதியரசர். M.M.இஸ்மாயில்' அவர்களின், இறுதி தீர்ப்புக்காக வந்தது. வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்ட
'தந்தை பெரியார்' அவர்கள் 'இராமாயணம்' பற்றி எழுதிய ஆங்கில நூல் 'Ramayana a True Reading' 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது.
நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ்
என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின்
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து RTI சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவிக்கு தந்தை பெரியார் தி. க துணைத்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். துரைசாமி அவர்கள் 19-08-2022 அன்று மனு அனுப்பியுள்ளார்.
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என
'ஆர்.எஸ்.எஸ்' பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம். நமது
அனுபவங்களையும், நாட்டின் அனுபவங்களையும் விலக்கி வைத்துவிட்டுப் பல சமூகப் பெரியார்கள் 'ஆர்.எஸ்.எஸ்' வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் எவரே வேண்டுமாயினும் ஆகுக; எக்கேடும் கெடுக!
இந்து-முஸ்லீம் பகைமை என்பது
இந்தியாவை அடிமை கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டது அது. காரணம் பற்றி அக்கால தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சே ஒற்றுமை என்பதாக ஒலித்தது. பாரதியாரின் பாடல்களும் கருத்துகளும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியே நிற்பதைக் காண்கிறோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் புதுச்சேரிக்கு விடுதலை வேண்டும் என, பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது. பிரெஞ்சு அரசிடமும், இந்திய அரசிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி
புதுச்சேரியை அரவிந்தர் ஆசிரமத்திடம் தானமாக ஒப்படைக்கவேண்டும் என "அன்னை" என்றழைக்கப்படும் "மீரா அல்பாசா" முயற்சி எடுத்தார். இந்தத் திரைமறைவு வேலைகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தவுடன், 24-11-1947 அன்று வெகுண்டெழுந்த புதுச்சேரி மக்கள், அன்னை மீராவின் சூழ்ச்சி ஒழிக, ஆசிரமம்
செய்வது ஆன்மீகமா, அரசியலா? அரவிந்தர் ஆசிரமமே புதுச்சேரியை விட்டு வெளியேறு என வீதிக்கு வந்து ஊர்வலம் நடத்தி போராடினார்கள். இது குறித்து 'புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்' அவர்கள் தனது "குயிலில்" எழுதியுள்ளார்.
இதையறிந்த நேரு அவர்கள் புதுச்சேரியில் மறைமுகமாய் விடுதலைப்போரை தூண்டினார்.
எல்லோரும் ஒன்றாகப் பயணித்த ரயிலில் தனி இடம் கேட்டவர்கள் யார் தெரியுமா...?
படியுங்கள்....
இந்தியாவில் ஆங்கில அரசில் இரயில்வே துறை துவக்கப்பட்டு தொடர் வண்டிகள் ஓடத் துவங்கியபோது, அதை சாத்தானின் கண்டுபிடிப்பு Devil's Invention என்று சொல்லி எதிர்த்த கூட்டம் ஒன்று இருந்தது.
1851 ல்
முதல்முறையாக இரயில்வே துறை துவக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.
1853 ஏப்ரல் மாதம் மும்பை போரி பந்தர் நிலையத்திலிருந்து தானே நிலையத்திற்கு முதல் முதல் ரயில் ஓடிய வரலாறு நாம் அறிவோம்.
தமிழகத்தில் அப்போது மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் இருந்து ஆற்காடு வரை 1856 ஜூலை மாதம் முதல்
ரயில் இயக்கப்பட்டது.
அடுத்து மதராஸ் -ல் இருந்து 1871-ல் அரக்கோணம் வரையும் 1883-ல் மேட்டுப்பாளையம் வரையும் ரயில்கள் ஓடத் துவங்கியது.
இந்த இரயில்களில் மக்கள் யாவரும் ஒன்றாக மதிக்கப்பட்டு 'சாதி மத வேறுபாடு' இல்லாமல் சமமாக உட்கார்ந்து பயணம் செய்தனர். அதனால் 'தீண்டாமை' என்னும்