M.SivaRajan Profile picture
Sep 9 17 tweets 3 min read
#நடராஜர்_அபிஷேகம்

நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.

சிறப்பு : வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிேஷக நாள்.
இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம்.
சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.
உடுக்கை படைக்கும் ஆற்றலையும், நெருப்பு அழிக்கும் ஆற்றலையும், வலக்கையின் உட்புறம் காட்டுவது அருளும் ஆற்றலையும், இடக்கை மறைக்கும் ஆற்றலையும், தூக்கிய பாதம் ஆணவத்தை அழித்தலையும், மற்றொரு பாதம் மனமாயை அழித்தலையும் குறிக்கின்றன.
நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அவை, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை, உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை ஆகியன.
தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூவுலகில் ஓர் ஆண்டாகும். தை முதல் ஆணி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம். உத்தராயனம் தேவர்களின் பகல் பொழுதாகவும் தட்சிணாயனம் இரவு பொழுதாகவும் கருதப்படுகிறது.
எனவே நாம் ஓர் ஆண்டில், தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்யும் நாள்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதீகம்.
எனவே அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.
குறிப்பாக, வறுமை நீங்கி செல்வ செழிப்புடனான வாழ்க்கை அமையும். பாவங்களிலிருந்து விடுதலையும் பிறவிப் பெருங்கடலை கடக்க நல்லருளும் ஸித்திக்கும்.
இன்று ஆவணி சதுர்த்தி திதி இன்று (9-09-2022) அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆடல் வல்லானுக்கு நடைபெறும் அற்புத அபிஷேகங்களை தரிசனம் செய்து நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவோம்.
கதலி கவுரி விரதம் வாழையடி வாழையாக குலம் தலைக்கும். வாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஷ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல் கதளி கவுரி விரதம், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.
உடலுக்கு உற்சாகத்தையும், மனத்துக்கு தெய்விக சக்திகளையும் அளிப்பவள் இந்த தேவி. இவளுடன் திரைலோக்கிய (மோஹன) கணபதி வீற்றிருப்பதால், சகல காரியங்களிலும் ஸித்தியையும் அளிப்பாள்.
இந்த விரத நாளில் ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம்.

கதலி கௌரி விரதம். இந்த விரதத்தின் மூலமாக பெண்களுக்கு அழகும் வசீகரமும் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்.
கதலி மரம் என்பது வாழை மரத்தை குறிக்கும். வாழை மரத்தடியில் கௌரி விரதம் இருக்க வேண்டும், அல்லது வீட்டில் பலகையில் வாழை இலையை வைத்து, அதன் மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும்.
108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர், அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும். அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்க தொரு விரதம்.
இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நாம் கர்ம வினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்ப பெற உதவும் நல்லதொரு விரதம் இது.

#நடராஜர்அபிஷேகம்

#சைவசமயம்

#சிவவழிபாடு

#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Sep 11
அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் பொங்கு சனீஸ்வரர்!

சனீஸ்வரர் சன்னதிக்கு செல்பவர்கள் அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது. திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர்.

நவக்கிரங்களை அடக்கி அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான் இராவணன். Image
அப்போது சனீஸ்வரர், தன் உக்கிரப் பார்வையால் ராவணனைப் பார்க்க அவனுக்கு சனி பிடித்தது. அதன் பின் இராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை.
இப்படி சனி என்றாலே ஒருவித பயம் இருக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் சன்னதியைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
Read 18 tweets
Sep 11
மங்களகரமான சுபகிருது ஆண்டு ஆவணி26தி 11.09.2022 முதல்மாஹாளய பட்சம் தர்ப்பணம் எப்போது ஆரம்பம் ஆயிற்று?

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும்.
அதன்படி இந்த வருடம் புரட்டாசி 8ம் தேதி (25-09-2022) ஞாயிறு அதிகாலை 4.05 முதல் மறுநாள் (26-09-2022) திங்கள் அதிகாலை 4.21வரை மகாளய அமாவாசை ஆகும்.

2022-23 சுபகிருது வருட முக்கிய விஷேசங்கள்
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
(உத்ஸவம்,பண்டிகை,பூஜை)
விபரம்
11.09.2022 ஞாயிறு
மஹாளயாரம்பம்
25.09.2022 ஞாயிறு
மஹாளயாமாவாஸ்யை
26.09.2022 திங்கட்கிழமை
நவராத்திரி ஆரம்பம்
04.10.2022 செவ்வாய்
சரஸ்வதி பூஜை
05.10.2022 புதன்கிழமை
விஜயதசமி

மாஹாளய தர்ப்பணம்

இதிகாச புராணங்களின் படி சொல்லப்பட்ட கதைகளில் உள்ள ஒரு நிகழ்வு.
Read 39 tweets
Sep 10
#அஷ்ட_லெஷ்மி_ஸ்தோத்திரம்

1.*ஆதிலக்ஷ்மி*

ஸுமனஸ வம்தித ஸும்தரி மாதவி, 

சம்த்ர ஸஹொதரி ஹேமமயே 
முனிகண வம்தித

மோக்ஷப்ரதாயனி, 
மம்ஜுல பாஷிணி வேதனுதே

பம்கஜவாஸினி தேவ ஸுபூஜித, 

ஸத்குண வர்ஷிணி ஶாம்தியுதே 

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, 

ஆதிலக்ஷ்மி பரிபாலய மாம்
2.*தான்யலக்ஷ்மி*

அயிகலி கல்மஷ னாஶினி காமினி, 

வைதிக ரூபிணி வேதமயே 
க்ஷீர ஸமுத்பவ மம்கள ரூபிணி

மம்த்ரனிவாஸினி மம்த்ரனுதே
மம்களதாயினி

அம்புஜவாஸினி, 
தேவகணாஶ்ரித பாதயுதே 

ஜய ஜயஹே மதுஸூதன காமினி, 

தான்யலக்ஷ்மி பரிபாலய மாம்
3.*தைர்யலக்ஷ்மி*

ஜயவரவர்ஷிணி வைஷ்ணவி பார்கவி,

மம்த்ர ஸ்வரூபிணி மம்த்ரமயே 
ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத, 

ஜ்ஞான விகாஸினி ஶாஸ்த்ரனுதே

பவபயஹாரிணி பாபவிமோசனி, 

ஸாது ஜனாஶ்ரித பாதயுதே 
ஜய ஜயஹே மது ஸூதன

காமினி, 
தைர்யலக்ஷ்மீ பரிபாலய மாம்
Read 9 tweets
Sep 9
ஒரு மணிநேரம் சிவபெருமான் மந்திரம் நாமம் சிவாயநம என சொன்னால்!

*1.ஒரு மணி நேரம்,*
*நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது*

*2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சமமாக வாழ்ந்ததாகிறது* .

*3. ஒரு மணி நேரம் உத்தமன் போல் உண்மையை பேசியதாகிறது .*
*4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிட்சைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .*

*5. ஒரு மணி நேரம் சிவவழிபாடு செய்ததாகிறது .*

*6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .*

*7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது*
*8. ஒரு மணி நேரம் நான்மறைகள் ஓதுவதாகிறது.*

*9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.*

*10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .*

*11. ஒரு மணி நேரம் நீங்கள் மகான்களால்
வாழ்த்தப்படுகிறீர்கள்.*
Read 10 tweets
Sep 8
#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 11 tweets
Sep 8
மந்திரம் உச்சாடனம் செய்தால்
ஆயுள் அதிகரிக்குமா?

அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(