M.SivaRajan Profile picture
Sep 18 11 tweets 2 min read
#பைரவர்_வழிபாடு

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான்.

ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.

எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர்.
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.

பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மகத்துவங்களை தந்தருளும்.
அதாவது தேய்பிறை அஷ்டமியில், அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஐதீகம்.
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.
இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.

பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற, பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும்.
குழந்தை செல்வம் பெற, திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார்.

எனவே, பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் மற்றும் தோஷங்கள் யாவும் நீங்கும்.
தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்றவை அகலும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

#பைரவர்வழிபாடு

#ஓம்பைரவாயநமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Sep 20
#மந்திரங்களும்_பலன்களும் .

இந்த மந்திரங்கள் அனைத்தும் தகுந்த முறையில் குருவிடமிருந்து உபதேசம் பெற்ற பின்னரே ஜெபம் செய்ய வேண்டும்.

ஆகையால் இங்கு மந்திரங்கள் கொடுக்கப்படவில்லை.

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - சர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம், மோட்சம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
Read 17 tweets
Sep 20
*பிறர் விட்ட சாபத்திலிருந்து* *தப்பிப்பது எப்படி*?

யாரோ விட்ட சாபம்
தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா?

மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும்.

அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம்.

எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு,
வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது.

ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால்,
Read 15 tweets
Sep 20
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

புராட்டாசி மாதம் பீடை மாதமா???

பீடுடை மாதம் மருவி பீடை மாதமாகி விட்டது பீடுடை என்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என பொருள்
பெருமாளை சேவித்து புலால் உணவை தவிற்த்து தாம்பத்ய உறவு கொள்ளாமல் இறை சேவை செய்து புராட்டாசி அமாவாசையான மஹளய பட்சத்தில் முன்னோர்களுக்கு
திதி தர்பணம் கொடுத்து பித்ருக்களின் ஆசிகளை பெறவேண்டும் என்பதற்காகவே இம்மாதத்தை சிறப்பு மாதமாக முன்னோர்கள் வழிநடத்தி இருக்கிறார்கள்
இம்மாத சிறப்புகளை பார்ப்போம்

புரட்டாசி மாதத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். அதே சமயம் மழைக்காலமும் தொடங்கக் கூடிய நேரம் இது. வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த சீதோஷண நிலை, வெயில் காலத்தை விட மிக மிக மோசமானது.
Read 16 tweets
Sep 19
🌹 🌿 திருமாலின் பத்து சயன தலங்கள் பற்றிய பதிவுகள் :

🌹 🌿 1. ஜல சயனம் :

107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.
🌹 🌿 2. தல சயனம்:

63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தல சயனம் . இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
🌹 🌿 3. புஜங்க சயனம் (சேஷசயனம்):

முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்). இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
Read 12 tweets
Sep 18
புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது - ஆன்மீக ரகசியங்கள்..!

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை.
அதே போல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள்.

பெருமாளுக்கு உகந்த மாதம், 15 நாட்கள் மகாளய பட்சம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விட்டனர்.
எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது.
Read 32 tweets
Sep 18
தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் !!!

மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ...

ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...

மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்...
கடக லக்னத்துக்கு பழனி முருகன்...

சிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம்...

கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்...

துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம்
வைக்கலாம் ...
விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம்
வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் . .

தனுசு லக்னத்தார் குருவாயூரப்பன் படம்

பாலாம்பிகா படம் வைக்கலாம் ..

கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ...

மகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(