#KB_சுந்தராம்பாள் நமக்கு ஔவையாராக மட்டுமே அறிந்த கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பற்பல துறைகளில் புகழ் ஈட்டியவர். அவர் கொடுமுடி கோகிலம் என்ற சிறப்புப்
பெயருடனும் அழைக்கப்பட்டவர் ஆவார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில்
பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு, 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் சுந்தராம்பாள் பிறந்தார். அவருக்கு
கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், தாயார் ஆதரவில் வளர்ந்தார். லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக
இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சுந்தராம்பாள்,இளம் வயதிலேயே பாடும்
ஆற்றலை வளர்த்துக் கொண்டார். வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் #நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்ல தங்காளின் மூத்தப் பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று, ஆண் வேடத்தில் முதன் முதலாக நடித்தார்.
அந்நாடகத்தில் பசிக்குதே வயிறு
பசிக்குதே என்றப் பாட்டை, மிக அருமையாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனக்கிருந்த ஆற்றலினால் சொந்தக்
குரலிலேயே பாடி நடித்தார்.
அதனைத் தொடர்ந்து 1920 களில் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின்
பல
ஊர்களிலும் அவர் நடித்த நாடகங்கள் நடைபெற்றன. 1925 இல் தாய்நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், பவளக்கொடி, ஞானசெளந்தரி போன்ற அக்காலத்தில் புகழ் பெற்ற பல்வேறு நாடகங்களில் சுந்தரம்பாள் நடித்தார். இந்நிலையில் மீண்டும் சுந்தராம்பாள் 1926 இல் தனது நாடகக் குழுவுடன்
கொழும்பு சென்றார். அவரின்
நாடகப் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா தனது குரல் வளத்தாலும், நடிப்பாலும் பலரது கவனத்தை ஈர்த்து, புகழுடன்
விளங்கி வந்தார். கொழும்பில் சுந்தரம்பாளுடன் இணைந்து நடிப்பதற்கு கிட்டப்பாவுக்கு வாய்ப்பு கிட்டியது. 1926 ஆம் ஆண்டு
சுந்தராம்பாள் - கிட்டப்பா நடித்த
வள்ளி திருமணம் நாடகம் அரங்கேறியது. நாடகங்களில் இணைந்து நடித்த இருவரும்,
பின்னர் திருமண பந்தத்திலும் இணைந்து தம்பதிகளாகினர்.
நாடகங்களில் சுந்தரம்பாள் பாடிய சுந்தரத் தமிழ்ப் பாடல்கள், இசைத் தட்டுகளில் பதிவாகி எங்கும் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில்
1933 டிசம்பர் 2 கிட்டப்பா அகால மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து சுந்தராம்பாள் வெள்ளை சேலை கட்டத் தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் இணை சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி
வரை காப்பாற்றி வந்தார். பின்னர்
நெடுங் காலமாக பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் 1934ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவற்றில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து, பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தி செயல்பட்டார். 1935 இல் நந்தனார் நாடகம் பக்தநந்தனார்
என்றப் பெயரில் திரைப் படமான போது, அப்படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 19 பாடல்கள். அடுத்ததாக மணிமேகலை என்றப் படத்தில் நடித்தார். 1938ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940இல் அப்படம் வெளிவந்தது. அப்படத்தில் 11
பாடல்களை அவர் பாடியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1953 இல் ஜெமினி பட நிறுவன தயாரிப்பில், ஔவையார் என்றப் படத்தில் அவர் அபாரமாக நடித்தார். அப்படத்தில் அவர் பாடியப் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஒலித்தன. பாமரர்கள் பலரும் அவரின் பாடல்களால் பரவசமடையும்
நிலை உருவானது. பொறுமை
என்னும் நகையணிந்து, கன்னித் தமிழ் நாட்டிலே,வெண்ணிலவே, போன்றப் பாடல்கள் அப்படத்தில் புகழ் பெற்றவை. ஒளவையார்
படத்தில் 48 பாடல்கள். அவற்றில் அவர் பாடியவை 30. 1964ல் சிலப்பாதிகாரம் கதையைத் தழுவிய கலைஞர் கருணாநிதியின், பூம்புகார்
படம் வெளி வந்தது. இப்படி பக்திப் படங்களில் நடித்துப்
பாடல்கள் பாடி நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாளின் வைராக்கியம் பெரிது. ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள். அதற்கு உதாரணமே கலைஞர் கருணாநிதி அளித்த பட வாய்ப்பை மறுத்த நிகழ்வு. பிறகு கடவுள் மறுப்பு வசனம் எதுவும் பேச மாட்டேன் என்று
ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்து இட்ட பிறகு கவுந்தி அடிகளாக நடிக்க ஒப்புக் கொண்டார். தொடர்ந்து,
திருவிளையாடல்- 1965
மகாகவி காளிதாஸ்-1966
கந்தன் கருணை-1967
உயிர் மேல் ஆசை-1967
துணைவன்-1969
சக்தி லீலை-1972
காரைக்கால் அம்மையார்-1973
திருமலை தெய்வம்-1973
மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில்
சுந்தராம்பாள் அடுத்தடுத்து அபாரமாகப் பாடி நடித்தார். அரசியல் ஈடுபாட்டில் காங்கிரஸ் பிரசாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியப் பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில்,
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பத்மஸ்ரீ விருதுடன் இசைப் பேரறிஞர் விருதும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. சுந்தராம்பாள் 1980 செப்டம்பர் 19, 72வது வயதில் வானகம் எய்தினார். நான் கண்ட நாடக கலைஞர்கள் என்ற புத்தகத்தில்
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்,
“நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர். ஆயினும் இவருடைய பெயரினை தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவருடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக, தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை என்னவென்றால் பக்க வாத்தியங்கள்
இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் காதுக்கு மிகவும் இனிமையாக
இருக்கும். இது ஒரு அரிய குணம்.” என்று சுந்தராம்பாள் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
இன்றும் மங்கா புகழுடன் இப்பூவுலகில் வாழ்கிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்