#குருபக்தி ஒரு மாலை வேளையில் சைதன்ய மகாபிரபு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று தனது சீடர்களோடு அகண்ட நாம பஜனை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஹரி தாஸ் தாகூர், சைதன்ய சைதன்ய என்று பஜனை செய்து கொண்டு Image
சைதன்ய மகா பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீரில் நனைந்தார். அப்போது அவரின் உயிர் பிரிந்து மோட்சம் கிட்டியது சைதன்ய மகா பிரபுவோ அந்த ஹரி தாஸ் தாகூர் சரீரத்தை தன் கையால் ஏந்தி ஆனந்த நர்த்தனம் செய்து மிக பரவசமாக ஆடினார். பின்னர் அந்த சரீரத்தை தன் கையால் சுமந்து கொண்டு பூரி சமுத்திரத்தில் Image
குளிபாட்டினார். அப்போது சைதன்யர், ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தூய்மையாகி மகா பவித்திரமாகி விட்டது என கூறி தம் கைகளாளே அவருக்கு சமாதி உண்டு பண்ணினார் இப்போதும் அச்சமாதியை பூரி சென்றால் தரிசிக்கலாம்.
ஜெய் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு Image
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 23
#மகாபெரியவா
ஒரு சமயம் மகா பெரியவா, காஞ்சி மடத்தில் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த பூஜை நடக்கும். நடுவில் எதற்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை செய்யும்போது பேசவும் மாட்டார். அவர் பூஜை செய்வதை தரிசிக்க வந்த கூட்டம் அன்று மிக அதிகம். Image
வழக்கமான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவா. பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்தில் ஒரு பாட்டி தன் பேத்தியுடன் தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தார். பெரியவா பூஜை பண்ணுவதை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் அந்தப் பாட்டி தன் பேத்தியிடம் ஏதோ சொல்வதும், அந்தக்
குழந்தை, "ஊஹூம் முடியாது இப்பவே” என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டு இருந்தது. குழந்தை வீட்டுக்குப் போக அடம் பிடித்து, பாட்டி சமாதானப் படுத்துவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை, "அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப்
Read 14 tweets
Sep 22
#தீட்சிதர் 'தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்து வருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில், சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள்' என்று பெரியபுராணத்தில், தில்லைவாழ் Image
அந்தணர் சருக்கம் எனும் பகுதியில், தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான். ‘தில்லை மூவாயிரம்’ என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது. தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச
நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர் பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ
Read 25 tweets
Sep 22
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #சாபமும்_வரமே சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார். அவற்றின் பின்னால் ஓடினார Image
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன. பிறகு முனிவர் அதை தேடி பிடித்து,
மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார். இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன் என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.
பிறகு சிறிது யோசித்து விட்டு, ஏ குரங்குகளே இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார். அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின. Image
Read 6 tweets
Sep 22
Important facts on #Saivism

1. The symbols of Saivism are Vibhuti, Rudraksha and the Namasivaya Mantra

2. Annabhishekam is done during
Aipasi Poornima to Lord Shiva

3. The form in which Shiva is a yogi and bestows wisdom Is #Dakshinamurthy

4. Where is Shiva who represents ImageImageImageImage
the soul?
Thiruperundurai (Avudayarkoil)

5. The place where Easan graces as the Kalasamhara Murthi is
#Thirukkadaiyur

6. The place where Lord Shiva asked Nandi to move to see Gnanasambandar is #Pattiswaram

7. The one who sang a song on Lord Siva once every year is #Thirumoolar
8. The shrine known as Muktivasal is Thiruvengadu (Navagraha Budhan Sthalam, Nagapattinam District)

9. Snanam of Shiva Parvati in Cauvery in the month of Aippasi is known as #Tulasanam

10. Bathing in Cauvery along with all the Gods on the last day of the month of Ippasi in
Read 8 tweets
Sep 22
#கருந்தார்குழலி_உடனுறை_அக்னீஸ்வரர்_திருக்கோவில்
திருப்புகளூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 75வது தலமாகும். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் Image
முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு Image
கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு #அக்னீஸ்வர_சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப் பட்டதால் #சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்து Image
Read 14 tweets
Sep 22
#ஶ்ரீசுதர்சனசக்ரம்
ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள
ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் ஸ்ரீ Image
பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் Image
செல்லும் வாகனமாகவும் அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், அனந்தாழ்வார் என ஆழ்வார் என்ற அடைமொழி இவர்கள் மூவர் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர் Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(