M.SivaRajan Profile picture
Sep 30 10 tweets 3 min read
*நவராத்திரியில், கொலுவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறுவது, பெண்களுக்கு வழங்கும் தாம்பூலம் தான்*

தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர்.
வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும்.

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்க படுகிறது,
எல்லா தெய்வ பூஜைகளிலும், தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை, பாக்கு மிகவும் அவசியம். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
அதுவும் நவராத்திரி நாட்களில், பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம் வழங்குவது, அம்பிகைக்கு வழங்கப்படுவது போல் ஐதீகம்.

சுமங்கலி பெண்கள் , கன்யா குழந்தைகள், வீட்டுக்கு வரும் போது, கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து கொடுக்க வேண்டும்.
நவராத்திரியில் தாம்பூலத்தை எப்படிகொடுக்க வேண்டும்?

பலகையில் உட்காரவைத்து, காலில் நலுங்கு இட்டு, சந்தனம் குங்குமம் பூசிய பின், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு,
தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, புடவை /பாவாடை சட்டை அல்லது ரவிக்கைத்துணி ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்து கொடுக்க வேண்டும்.

பெரியவர்களாக இருந்தால், கண்டிப்பாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அனைத்து பொருட்களையும் கொடுக்க முடியவில்லை என்றால், தாம்பூலம், தட்சணை, மஞ்சள், குங்குமமாவது கொடுக்க வேண்டும்.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

நலுங்கு இடுதல்: - வியாதிகள் நீங்கும்.
வெற்றிலை பாக்கு: - மஹாலட்சுமி அருள் கிடைக்கும்,.

மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு: - தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

சீப்பு: - கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.

வளையல்: - மனம் அமைதி பெறும்.

கண்ணாடி: - கணவனின் ஆரோக்கியம் காக்கப்படும்.
தேங்காய்: - பாவம் நீங்கும், (மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது. )

பழம் - அன்னதானப் பலன் கிடைக்கும்,.

பூ:- மங்கலம் பெருகும்.

மருதாணி: - நோய்கள் வராதிருக்கும்.

கண் மை: - திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.
தட்சணை: - செல்வம் பெருகும்

ரவிக்கைத்துணி அல்லது புடவை: வியாதிகள் நீங்கும்.

#நவராத்திரி_சிறப்பு

#தாம்பூலம்

#தாம்பூல_மகிமை

#சாக்தம்

#அம்பாள்வழிபாடு

#ஓம்ஐம்க்லீம்சௌம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Sep 30
#சக்தி_பீடங்கள்

மிக நீண்ட மற்றும் முக்கியமான பதிவு :

51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை *திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.
01) முதல் சக்திபீடம் ~ *அட்டஹாஸம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *கீழ்உதடு*

விழுந்தஇடம் ~ *அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்*

தேவியின் பெயர் ~ *புல்லரா*

பைரவர் பெயர் ~ *விஸ்வேஸ பைரவர்*
02) இரண்டாம் சக்திபீடம் ~ *உத்கலம் பீஹார்*

விழுந்த அங்கம் ~ *தொப்புள்*

விழுந்த இடம் ~ *உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *ஜகந்நாத பைரவர்*
Read 57 tweets
Sep 30
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய துர்க்கை :

நம்முடைய குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம். Image
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. 

பெரும்பாலான சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும்.

இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு.
இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில்  கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.
Read 9 tweets
Sep 30
#நட்சத்தித்ர_காயத்ரி

அவரவருடைய நட்சத்திர காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யும் போது அனைத்து வளங்களும் கிடைக்கும்.

27 நட்சத்தித்திரகாரர்களுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள் :

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
Read 10 tweets
Sep 30
#அஷ்ட_லெஷ்மி_வழிபாடு

*அஷ்ட ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மி வழிபாடு!*

அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற, தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு,
அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

*வழிபாட்டு முறை:*

லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை. பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.
Read 14 tweets
Sep 30
#நவகன்னிகா_வழிபாடு

நவகன்னிகா வழிபாடு என்பது நவராத்திரி ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி

ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா

ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா

என்று வணங்கப்படுவார்கள்.
Read 4 tweets
Sep 29
குழந்தாய்! “அண்டக்கல்” வாங்க வந்தாயா?

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஏழைக் குடியானவனுக்கு குடும்பம் நடத்த போதுமான பணம் இல்லை. அதனால், அவன் விரைவில் செல்வந்தனாக வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டான்.
பணம் இல்லை என்றால், இந்த உலகத்தில் ‘மகிழ்ச்சி’ என்பதே இல்லை என்பது இவனது சித்தாந்தம்.

அதற்காக அல்லும், பகலும் அயராது பாடுபட்டு, அதிக பணத்தைச் சேர்த்து, ஆனந்தமாக வாழ ஆசைப்பட்டான்.

அதனால், பார்ப்பவர்கள் கூறுகின்ற பலதரப்பட்ட வழி முறைகளைக் கையாண்டு,
அதிக பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருந்தான். அவ்வாறு பணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு, அன்று இரவு அவனது துக்கத்தில் ஒரு அருமையானக் கனவு வந்தது.

அந்த ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றோரத்தில் ஒரு ஆலமரம் இருந்தது.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(