அன்பெழில் Profile picture
Oct 5, 2022 10 tweets 4 min read Read on X
அனைவருக்கும் வெற்றியைத் தரும் #விஜயதசமி நல்வாழ்த்துகள்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னை மகிஷாசுரனை அழித்து வெற்றி பெற்றாள்.
இந்த நாளை விஜயதசமி (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகின்றனர். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் #ராம்லீலா என்றும் கொண்டாடுகிறார்கள். புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து
வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்த நாள் விஜயதசமி. இந்த நாளில் எந்த
ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது இந்து மத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். விஜயதசமி கல்வி
தொடங்க உகந்த நாள். இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல் முதலாக எழுத்தறிவிக்கப் படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு #வித்யாரம்பம் என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, இசை வகுப்புகள், இதர கலைகளை கற்க புதிய வகுப்புகள்
தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துகள் எழுதப்படும்). மேலும் அவரவர் அபிமான
தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். புதிய ஆரம்பம்! இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவர் என்பது ஐதீகம். விஜய தசமி நன்னாளில் சிவன் கோவில்களில் பரிவேட்டை எனும் உற்சவம் நடைப்பெறும். இந்த நாளில் வன்னி மரத்தில் இறைவன் அம்பு விடுவது வழக்கம். இதன் மெய்
பொருள் என்னவென்றால், வன்னி மரம் மனிதனாக கருதப்படுகிறது. இறைவன் வன்னி மரத்தில் அம்பு போடுவது, நமக்கு ஞானத்தை உபதேசிப்பதாக அர்த்தம். அம்புகள் தான் ஞானம். விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம். தேவி மாகாத்மியத்தில் மகா நோன்பு என்று
குறிப்பிடப்படும் நாள் இது தான். மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் புகுவதற்கு முன்பு பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்தில் மறைத்துவைத்து தாய் துர்கையை வணங்கி ஸ்தோத்தரித்தனர். பின் ஓராண்டு முடிந்து திரும்பி வந்து துர்கையை மீண்டும் போற்றி வழிபட தாய் துர்கை அவர்களின் ஆயுதங்களை வழங்கி
ஆசி அருளிய நாள் விஜயதசமி. விஜய தசமி அன்று பல கோவில்களில் நடக்கும் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது. சண்டி என்பது முப்பெரும் தேவியரை குறிப்பிடுவது ஆகும்.
புதிய ஆரம்பத்தை வரவேற்போம்! வெற்றியை பெறுவோம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#HappyVijayadashami

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 26
#பிராமணர்கள்_மேல்_சேற்றை_இறைக்கும்_அனைவரும்_படிக்க_வேண்டிய_பதிவு
குதர்க்கமாக கேள்வி கேட்கும் இளைஞனுக்கு திரு சோ அவர்கள் பதில் அளிக்கிறார்.

இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே?
சோ: அவை கற்பனை
Image
Image
என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!
சோ: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத்
தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?
இளைஞன்: ஆமாம்.
சோ: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?
இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.
சோ: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
இளைஞன்: என் தாத்தா
Read 12 tweets
Sep 26
#ராஜகாளி_அம்மன்
பாண்டிய வம்சத்தின் முதல் மன்னர் நம் அனைவருக்கும் கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய சிவபெருமான் தான். இந்த பாண்டி வம்சத்தின் 108 வது மன்னராக அன்னை மீனாட்சி பொறுப்புக்கு வந்தாள். அப்பேர்ப்பட்ட பாண்டிய வம்சத்தின் ராஜ தெய்வம் தான் ராஜகாளி அம்மன். மதுரையில் இருந்து Image
ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் கன்னிவாடி என்ற கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தெத்துப்பட்டி ஆகும். திண்டுக்கல்லில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை டவுன் பஸ் வசதி இருக்கிறது இது கோயில் வாசல் வரை செல்கிறது. அல்லது கன்னிவாடியில் இறங்கி நடந்தே Image
செல்லலாம். இந்த கிராமத்தில் இருந்து கொண்டு பாண்டிய வம்சத்திற்கு வழி காட்டியாகவும் பாதுகாவலாகவும் இருந்து அருள் வாழ்த்த வருபவள் அன்னை ராஜகாளி!
சோழர்களின் சாம்ராஜ்யம் தான் மிகப் பிரமாண்டமானது என்று நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் பாண்டியர்களின் சாம்ராஜ்யம் அதையும் விட பெரியது
Read 7 tweets
Sep 26
#அறிவோம்_சனாதனியை
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் Image
முடிந்ததும், திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர். கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில் ஆட்டோ டிரைவர் சுதர்சனம் வசிக்கிறார். கோவில் நடை சாத்தியிருந்தால் பக்தர்கள் இவர் இல்லத்தில் தங்கி இளைப்பாற அனுமதிப்பதுடன் காபி டிபன் கொடுத்து உபசரிக்கிறார். அவரைப் பற்றை அவரே சொல்கிறார்.
பெயர் சுதர்சன், வயது 64. கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். 'ஆட்டோ சாமி' என்றால் எல்லாருக்கும் தெரியும். அப்பா பெயர் ராமானுஜம். ஆசிரியர் மகா நேர்மையானவர். திடீரென இறந்து விட்டார். எனக்கு கீழே நான்கு தங்கைகள். அப்பாவோட, 'பென்ஷன்' மட்டுமே வருமானம்.
Read 11 tweets
Sep 25
#கர்மா
#அப்பைய_தீட்சிதர் (1520 – 1593)
இவர் ஒரு பெரிய மகான். தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கு சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து Image
வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வட நாட்டிலும் காசி வரையில் பரவியிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கர்மம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர். தீட்சிதருடைய கடைக்
காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேச வேண்டி இருந்தாலோ, ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி
Read 10 tweets
Sep 25
#மூன்று_கால்_முனிவர்
முனிவர்களும் மனிதர்கள்தான் என்பதால், உருவத்தில் பெரிதான எந்த வேற்றுமையும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் சக்தியோ அதீதமானது. மனிதர்களை விட வித்தியாசமாக ஒரு முனிவர் இருந்திருக்கிறார். அவர் தான் பிருங்கி முனிவர். 3 கால்களுடன் இருந்த இந்த முனிவரால் தான்Image
சிவனும் பார்வதியும் ஒரே உடலாய் அர்த்தநாரீஸ்வரராக மாறினார்கள் என்கிறது புராணம். சென்னையில் உள்ள பரங்கிமலை தான் இவர் தவம் செய்த இடம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பிருங்கி தவம் செய்த மலை என்பதால் அது பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டது. பிரிடிஷார் காலத்துக்குப் பிறகு அது பரங்கிமலை
ஆக திரிந்து விட்டது. அதற்கு ஆதாரம் அங்கிருக்கும் சிவன் கோயிலும், அங்கு இருந்த சோழர்கள் காலத்திய கல்வெட்டும் சாட்சிகள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதியை கூட வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு Image
Read 11 tweets
Sep 24
#சப்தபதி 7 அடிகள் - 7 வாக்குறுதிகள்
இந்து திருமணத்தின் போது அவரவரின் மரபு வழி நிறைய சடங்குகள் இருந்தாலும், சனாதன தர்மத்தின் படி ஒரு சில பொதுவான சடங்குகள் உள்ளன. அதிலொன்று தான் சப்தபதி. இந்த சடங்கில் கணவனும் மனைவியும் கைக் கோர்த்து அக்கினி சாட்சியாக 7அடிகள் வலம் வருவர். திருமணImage
வைபவத்தில் அக்கினி என்பது ஜோதி வடிவான பரம்பொருளைக் குறிக்கிறது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனே சாட்சியாக உள்ளார்.
திருமணத்தின் போது அக்னியை சுற்றி 7 அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? சம்ஸ்கிருதத்தில் இதன பெயர் சப்தபதி. அதாவது 7 அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்துImage
வருவதாகும். அவ்வாறு 7 அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த‌னது வாக்குறுதிகளை சொல்கிறான்! எனவே, இந்த 7 வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.
மணமகன் மணமகளிடம் சொல்வது:
ஸகா! சப்தபதா! பவImage
Read 37 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(