M.SivaRajan Profile picture
Oct 12 12 tweets 3 min read
#விபூதி

#திருநீறு

*விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விபூதி கோவில் கருவறையில் இருக்கும் விபூதிக்கு சமமாகும்.*
"ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான்.

கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம்.

அதே போலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம் வீட்டு தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜை அறையில் நாம் வைத்திருக்கக்கூடிய விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இப்படிப்பட்ட பொருட்களில் எல்லாம் இறை சக்தி நிரம்பியிருக்க அந்த பொருட்களில்,

வேறு எந்தெந்த பொருட்களை கலந்து வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு சிறிய சூட்சமமான குறிப்புகளை தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுடைய வீட்டில் குங்குமம் இருந்தால் அதில் காய்ந்த துளசி இலைகள் 3, பச்சை கற்பூர பொடியைப் போட்டு கலந்து வைக்க வேண்டும்.

குங்குமத்தின் மகிமை பல மடங்காக உயர இந்த இரண்டு பொருட்களும் குங்குமத்துடன் கலந்து இருப்பது மிக மிக நல்லது.
அடுத்தபடியாக மஞ்சள்தூள்.

இறைவனுக்கு பூஜைக்காக பயன்படுத்தக்கூடிய மஞ்சள்பொடி டப்பாவில் ஒரு சிறிய காட்டன் நூல், ஒரு சிறிய சூடம் போட்டு வைக்க வேண்டும். (இறைவனுக்கு ஏற்றும் சிறிய கற்பூர வில்லை.)

எல்லோராலும் பூஜைக்கு சுத்தமான சந்தன கட்டையை வாங்கி பயன்படுத்த முடியாது.
சில பேர் வீடுகளில் கட்டையில் உரசும் சந்தனம் இருக்கும். சில பேர் வீடுகளில் சந்தனப்பொடி தான் இருக்கும்.

அந்த சந்தனப் பொடியில் சிறிய துண்டு சந்தனக்கட்டையை போட்டு வைப்பது மிக மிக நல்லது.

சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதோ,
சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்க பயன்படுத்தும் போதோ அதில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

மீதமிருக்கும் சந்தனத்தை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள்.
பன்னீர் கலந்த சந்தனத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீட்டு பூஜை அறையை கோவில் போலவே வைத்திருக்கும்.

அடுத்தபடியாக விபூதி.

நெற்றியில் விபூதி பூசாமல் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.
குழந்தைகளாக இருக்கட்டும், பெரியவர்களாக இருக்கட்டும் விபூதியை தினந்தோறும் நெற்றியில் இட்டு வரும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

இந்த விபூதியில் ஒரு ருத்ராட்சம் போட்டு வைக்க வேண்டும்.

சிவன் கோவிலில் இருந்து வாங்கப்பட்ட ருத்ராட்சத்தை போட்டு வையுங்கள்.
விபூதியில் இருக்கக்கூடிய சக்தியே பலமடங்கு பெரியது.

அந்த விபூதியில் ருத்ராட்சத்தை போட்டு வைக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கும் விபூதி இறை சக்தி நிறைந்த விபூதியாக இருக்கும்.

சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் சுத்தமான பசுசான விபூதிக்கு உள்ள மகிமை
உங்கள் வீட்டு விபூதிக்கு நிச்சயம் கிடைக்கும்.

திடீரென்று குழந்தைகள் பயந்து அலறி அழும் போது தீராத நோயால் அவதிப்படுபவர்களுக்கு நெற்றியில் பூசப்படும் இந்த விபூதி மருந்தாகவும் இருக்கும்.

ருத்ராட்சமும் விபூதியும் எம்பெருமானுக்கு உகந்து பொருள்.
இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பூஜையறையில் வைத்தால் நிச்சயமாக அந்த பிரசாதம் கோவில் கருவறைக்கு சமமானது தான்.

#திருநீறு

#விபூதி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 12
#குழந்தை_பாக்கியம்_பெற

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கரைகண்டேஸ்வரம் ஸ்ரீ மஹாதேவர் திருக்கோவில். Image
பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி புதுப்பொலிவடையச் செய்திருக்கிறார்கள்.
ஈஸ்வரன் சுயம்புவகை அம்மை அப்பனாக நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார ஸ்தலம் திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மஹாதேவர் திருக்கோவில்.
Read 13 tweets
Oct 12
சொந்த வீடு இல்லாமல் பல
வருடங்களாக வாடகை வீட்டிலே இருந்து கஷ்டப்படுபவரா.?

சொத்து பாக பிரச்சனையா.?

கட்டிய வீடு பாதியிலே நிற்கிறதா.?

சொத்துப் பிரச்னையை சுபமாக்கும் பூமிநாத சுவாமி..!
மண்ணைக் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜிப்பதா..? என்று ஆச்சரியப் படுகிறீர்களா?

அத்தகைய அதிசயமான மண் வழிபாடு நடைபெறுவது, திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் தான்!
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனால் கட்டப்பட்ட இத்தலம், மண் அரக்கனால் வழிபடப்பட்டது என்பதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

அதன் காரணமாகவே மண் அரக்கநல்லூர் என்பது பின்நாளில் மருவி, மண்ணச்ச நல்லூர் ஆனது.

கருவறையில் வீற்றிருக்கும்
ஸ்ரீ பூமிநாத சுவாமி சுயம்பு மூர்த்தி.
Read 14 tweets
Oct 12
#அஷ்ட_லிங்க_வழிபாடு

திருவண்ணாமலை அஷ்ட லிங்க தரிசனத்தின் பயன்கள் பற்றிய பதிவு :*

1. இந்திரலிங்கம் :

இந்த லிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு நீண்ட
ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
2. அக்னிலிங்கம் :

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது.

வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.
3. எமலிங்கம் :

இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது.

எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம்.

இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.

இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.
Read 9 tweets
Oct 11
#உருத்திர_பசுபதி_நாயனார்_குருபூஜை

பல்வளம் செறிந்த சோழவள நாட்டிலே பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் அமைந்திருந்தது.

இவ்வூரில், எந்நேரமும், அந்தணர்களின் வேத பாராயணம் வானெட்ட ஒலித்த வண்ணமாகவே இருக்கும்.

இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும்.
அந்த அளவிற்கு அருளுடைமையும், பொருளுடைமையும் ஓங்கிட அன்பும் அறனும் ‌சால்பும் குன்‌றாது குறையாது நிலை‌பெற்று விளங்கின.

இத்தகைய சீரும், சிறப்பு மிக்கத் திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார்.
இவர் தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார்.
Read 10 tweets
Oct 11
#ஊதுபத்தி

ஊதுபத்தி பற்றிய பதிவு :

நம்முடைய பூஜை அறையாக இருந்தாலும் சரி அல்லது கோவில்களில் கடவுள் வழிபாடாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள்.

நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில் வழிபாடுகளை செய்யும் போது ஊதுபத்தியை ஏற்றி வைப்பதும் வழக்கம்.
கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே வாங்கிச் சென்று இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆலயங்களிலும், இல்லத்தின் பூஜை அறையிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஊதுபத்தியை ஏற்றி வைத்தவுடன், அதில் இருந்து நறுமணம் வெளிப்பட்டு, அறை முழுவதும் பரவுவதை உணரலாம். அது தெய்வீக சக்தியை இல்லத்திற்குள் பரவச் செய்வதாகும்.
Read 6 tweets
Oct 11
#நவ_பாஷாண_பைரவர்

சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர் !

இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்.

இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்.
இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..

அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..
பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு.. வரலாறு சரியாக தெரியவில்லை..

இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு..

பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(