கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...

காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா  பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள். இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார். தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில்
போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்". "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்
என்று வார்த்தைமழை விடுகிறார்.. இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர்  எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்..

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. திமுகவினர் சென்றமுறை
போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார். இதனை அறிந்த #கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை  #தஞ்சாவூரில்  போட்டியிட போகிறேன்" என்று கூறுகிறார்.. அதிர்ச்சியான அண்ணா தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா
போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார்..

"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்.. இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு
என்று வேண்டி விரும்பி தஞ்சையில் போட்டி இடுகிறார்
கலைஞர்.

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.

ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி, விருத்தாச்சலம் செல்வராஜ், மா.ப.சாரதி, அண்ணாமலை, நடிகர் ஆனந்தன், அன்பில்தர்மலிங்கம், மன்னைநாராயணசாமி, பிஎஸ்சந்தானம், இசப்பன்
என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்.

எதிர் முகாமில் உள்ள #பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களைஅழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும்
அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார். தொகுதி முழுவதும் பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே  வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர்
ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.
ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர்.

தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும்
எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன..

தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது.ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்கி
கலைஞரே வெற்றி பெற்றார்.

பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர் காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்.ஏன் அண்ணாவே ஆடிப்போய் விட்டார்.

"போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி"
என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.

காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது. அதன் எதிரொலியாக டெல்லிதலைமையே அவர்களை கடிந்து கொண்டது.
இந்தத் தேர்தல் வெற்றியை #முரசொலியில் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் "தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்."இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும்போல்
இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்.

கலைஞர் என்றால்  சும்மாவா?

காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு
கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
திமுகவை போன்று ஒரு உட்கட்டமைப்பு கொண்ட கட்சியை உலகத்தில் எந்த முளைக்கு சென்றாலும் காண முடியாது அதனால் தான் இன்றும் சிலர் அழிக்க
நினைத்து வீழ்ந்தும் போகிறார்கள்.. நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!
பஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! 🖤❤️

#KalaignarForever 💥💥💥💥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கலைஞரின் ஏழ்பரியோன்

கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Dmk_Writter

Feb 17
கண்ணாரமுத கடலே போற்றி..!

1996 நவம்பர் 6 தமிழகமெங்கும் ஒரு கொலை குற்ற வழக்கு அனலடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாமாண்டு மருத்துவம் படிக்கும் மாணவன் பொன். நாவரசு தனது சீனியர் மாணவன் டேவிட்டால் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்டு கொள்ளிடம் Image
ஆற்றில் வீசப்பட்டான். ஆதிக்க வெறி சாதியர்களின் புத்திரன்கள் பல்கலைகழகம் முதல் பாடசாலை வரை தங்களின் ஆதிக்கத்தை கோலோட்சிய காலம் என்றே சொல்லலாம். சரியாக எம் தலைவர் கலைஞர் முதல்வராக பதவியேற்று ஆறு மாத காலம். அதாவது ஜெயலலிதா பஞ்சாயத்துகளில் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் செய்ததாக Image
கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு முன். அந்த மாணவன் பகடிவதைக்கு இணங்க மருத்துகொலை செய்யப்பட்டான். பத்திரிகை ஊடகம் நாவரசுவை தேட ஆரம்பித்தது. மேலும், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அந்த நாவரசு வேறுயாருமில்லை அன்றைய சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் Image
Read 8 tweets
Mar 19, 2023
#சர்க்காரியா_கமிஷன் 1

1972ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு தனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் அடுக்கடுக்காய் அபாண்டங்களை அடுக்கினார் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர்.. சரியாக 4-11-1972ல் தலைவர் கலைஞர் மீது ஒரு அபாண்ட குற்றச்சாட்டை அன்றைய பிரதமர் இந்திராவுக்கு Image
அனுப்பினார் எம்.ஜி.ஆர்.. அவரைத் தொடர்ந்து 6-11-1972ல் இந்திய கம்யூன்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம். கல்யாணசுந்திரம், அக்கட்சியின் MLA திரு KTK தங்கமணி அவர்களோடு 5 கம்யூனிஸ்ட் தலைவர்களும் தலைவர் கலைஞர் மீது அபாண்டங்களை வரிசைப்படுத்தி குடியரசு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்... Image
MGRஉடன் இணைந்து கொண்ட மந்திரகோல் மைனர் என்று தலைவர் கலைஞரால் அழைக்கப்பட்ட திரு.நாஞ்சில் கி.மனோகரன் மற்றும் ஜி.விஸ்வநாதனும் தங்களை தற்காத்து கொள்ள கலைஞர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள்.அவர்களின் பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:-

1. தமிழ்நாடு அரசின் மொத்த அமைச்சரவை மீது, Image
Read 8 tweets
Feb 13, 2023
#கலைஞராற்றுபடை

தலைவர் கலைஞர் அவர்களின் வைரவேல் யாத்திரை என்பது திருச்செந்தூர் முருகப்பெருமான் சன்னிதியில் உள்ள உண்டியலை 1980ல் கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியப்பிள்ளை வருவதற்கு முன்பே கோவில் அறங்காவல் குழு உறுப்பினரும், 1980-ல் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான Image
திரு. சி. கேசவஆதித்தன் திறந்து அதில் உள்ள காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியன் சரியாக நவம்பர் 26 1980ல் மர்மமான முறையில் கோவில் பிரகாரத்தில் இறந்து கிடந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தப்ப- Image
பட்ட வைரவேல் ஒன்றும் காணாமல் போனது. இதை கேள்விபட்ட தலைவர் கலைஞர் சுப்பிரமணியப்பிள்ளைக்கு நீதி கேட்டு 1982 பிப்ரவரி 15 ஆம் நாள் மதுரையில் தொடங்கி, 1982 பிப்ரவரி 22 ஆம் நாள் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக சென்று அன்றைய முதல்வர் MGRன் ஆட்சிகட்டிலின் அஸ்திவாரத்தை ஆட்டம் போடச் Image
Read 8 tweets
Feb 5, 2023
கருணாநிதி நினைவாக பேனாவுக்கு பதில் ஏர்கூலரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் -டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி!

என்ன Mr. @DrShyamKK முழுக்க முழுக்க சாதியை மட்டுமே வைத்து பிழப்பு நடத்தும் நீங்களெல்லாம் சமூகநீதிக்கு சாரம்சத்தை வழங்கிய சரித்திர தலைவனாம் கலைஞரை வசைபடுவது மலையை பார்த்து நாய்
குரைப்பது போலல்லவோ! என் தலைவர் கலைஞர் சமூகநீதி என்னும் உருவத்தை எழுப்பும் போதெல்லாம் சாதி என்னும் பேர்வழியில் ஒரு சாட்டையடி விழத்தான் செய்கிறது. 23-7-1999ல் மாஞ்சோலையிலும் அப்படித்தான்.சில அரசியல் ஆதயவாதிகளின் செயலால் தன்மீது கறைபடியாத ஒரு குற்றத்தை தன்வாழ்நாள் முழுவதும் சுமந்த
ஒரு தலைவர் தான் எங்கள் திராவிட இயக்கத்தின் பிதாமகனான தலைவர் கலைஞர். 17 அப்பாவி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் முண்டியடித்துக் கொண்டு ஓடும் போது உயிரிழந்தார்கள். ஆனால், சில புல்லுருவிகள் அப்போதைய தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியின்
Read 10 tweets
Oct 28, 2022
ஆறடி நிலம் கூட நீ தந்ததாக இருக்கக் கூடாது. நான் போராடி பெற்றதாக இருக்க வேண்டும்.. ஆம், உலகில் எந்த தலைவனுக்கும் நடந்திடாத கொடுமை ஒரு தலைவனுக்கு மட்டுமே நடந்தது என்றால் அது தலைவர் கலைஞருக்கு மட்டுமே...

இந்திரா காந்தி நாடு முழுவதும் #எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய காலகட்டம் அது Image
தலைவர் கலைஞர் மீது குற்றம் சுமத்தி எப்படியாவது ஆட்சியை கலைக்க MGR காலில் கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்த காலமும் கூட.. அப்போது, இந்திராகாந்தி முன்பொரு நாளில் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் கொடுத்த பொய் வழக்கை சரியாக அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை தூசி தட்டி Image
எடுத்தார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி #ரஞ்சித்_சிங்_சர்க்காரிய தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து அந்த வழக்கை அவரிடம் ஒப்படைத்தார் இந்திரா காந்தி.. முதல் விசாரணையை MGRஇடமிருந்தே தொடங்கினார் சர்க்காரியா. அந்த ஆணையத்தில் MGR கூரிய வார்த்தை எனக்கு ஏதும் தெரியாது சேலம் வழக்கறிஞர் Image
Read 7 tweets
Oct 18, 2022
ஆறுமுகசாமி ஆணையம் என்னை தவறாக சித்தரித்துள்ளது...
- விஜயபாஸ்கர் பரபரப்பு

என்ன Mr.விஜயபாஸ்கர் கதறல் அதிகமாக இருக்கு..
2013 மார்ச் 19 இந்த தேதியை நினைவிருக்கிறதா?
உலகத் தமிழினத் தலைவர் கலைஞரை "தள்ளுவண்டி தாத்தா" என நீங்கள் விமர்சித்ததை திமுக தொண்டன் மறந்திடுவானா? Image
அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம் Image
எப்போது அவரை நீ "சர்க்கர நாற்காலி" என்று கேலி செய்யத் தொடங்கினாயோ அப்போது உன் அழிவிற்கு அச்சாரம் போட தொடங்கினாய் என்பதே நிதர்சன உண்மை."காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி" என்ற முதுமொழிக் கேற்ப தாம் தன்னுடைய பதவியாசைக்காக என் தலைவனை தரம் தாழ்ந்து விமர்சித்ததை ஒருக்காலமும் Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(