கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...

காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா  பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள். இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார். தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில்
போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்". "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்
என்று வார்த்தைமழை விடுகிறார்.. இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர்  எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்..

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. திமுகவினர் சென்றமுறை
போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார். இதனை அறிந்த #கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை  #தஞ்சாவூரில்  போட்டியிட போகிறேன்" என்று கூறுகிறார்.. அதிர்ச்சியான அண்ணா தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா
போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா" என்று கேட்கிறார்..

"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்.. இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு
என்று வேண்டி விரும்பி தஞ்சையில் போட்டி இடுகிறார்
கலைஞர்.

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.

ஆசைத்தம்பி, ஏ.கோவிந்தசாமி, விருத்தாச்சலம் செல்வராஜ், மா.ப.சாரதி, அண்ணாமலை, நடிகர் ஆனந்தன், அன்பில்தர்மலிங்கம், மன்னைநாராயணசாமி, பிஎஸ்சந்தானம், இசப்பன்
என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்.

எதிர் முகாமில் உள்ள #பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களைஅழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும்
அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார். தொகுதி முழுவதும் பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே  வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர்
ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.
ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர்.

தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும்
எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன..

தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது.ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்கி
கலைஞரே வெற்றி பெற்றார்.

பரிசுத்தநாடார் தோல்வியா?" செய்தியைக் கேட்ட முதலமைச்சர் காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்.ஏன் அண்ணாவே ஆடிப்போய் விட்டார்.

"போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி"
என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.

காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது. அதன் எதிரொலியாக டெல்லிதலைமையே அவர்களை கடிந்து கொண்டது.
இந்தத் தேர்தல் வெற்றியை #முரசொலியில் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் "தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்."இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும்போல்
இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்" என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்.

கலைஞர் என்றால்  சும்மாவா?

காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு
கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
திமுகவை போன்று ஒரு உட்கட்டமைப்பு கொண்ட கட்சியை உலகத்தில் எந்த முளைக்கு சென்றாலும் காண முடியாது அதனால் தான் இன்றும் சிலர் அழிக்க
நினைத்து வீழ்ந்தும் போகிறார்கள்.. நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க!
நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க!
பஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! 🖤❤️

#KalaignarForever 💥💥💥💥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹோட்டல் டுபாக்கூர்

ஹோட்டல் டுபாக்கூர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Hotel_Dubakoor

Oct 18
ஆறுமுகசாமி ஆணையம் என்னை தவறாக சித்தரித்துள்ளது...
- விஜயபாஸ்கர் பரபரப்பு

என்ன Mr.விஜயபாஸ்கர் கதறல் அதிகமாக இருக்கு..
2013 மார்ச் 19 இந்த தேதியை நினைவிருக்கிறதா?
உலகத் தமிழினத் தலைவர் கலைஞரை "தள்ளுவண்டி தாத்தா" என நீங்கள் விமர்சித்ததை திமுக தொண்டன் மறந்திடுவானா? Image
அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம் Image
எப்போது அவரை நீ "சர்க்கர நாற்காலி" என்று கேலி செய்யத் தொடங்கினாயோ அப்போது உன் அழிவிற்கு அச்சாரம் போட தொடங்கினாய் என்பதே நிதர்சன உண்மை."காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி" என்ற முதுமொழிக் கேற்ப தாம் தன்னுடைய பதவியாசைக்காக என் தலைவனை தரம் தாழ்ந்து விமர்சித்ததை ஒருக்காலமும் Image
Read 7 tweets
Sep 30
திமுக ஆட்சி எப்போதெல்லாம் இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சட்ட ஒழுங்கும் சந்தி சிரிக்கின்றது!
- எடப்பாடி பழனிசாமி

Mr.பழனிசாமி #சிதம்பரம்_பத்மினி யை நினைவிருக்கின்றதா? 1992 ஜெயாவின் காண்டுமிராண்டி ஆட்சியின் போது தன் கணவன் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்ட ஒரு
அப்பாவி பெண்.. அந்த வழக்கில் நீதிமன்றம் வரைச் சென்று நீதியை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் தான்.. அத்தோடு மட்டும் நின்றிடாமல் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது 1992களில் #வச்சாத்தி கிராமத்தில் புகுந்து பெண்களை மானபங்கம் படுத்தி, பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்தியதும் அந்த ஆட்சியில் தானே!
2001 திண்டிவனத்தில் அப்பாவி பெண் #ரீட்டாமேரி மீது பொய்வழக்கை சுமத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்து மனநிலை பாதிக்கும் அளவிற்கு சித்திரைவதை செய்த காண்டுமிராண்டிகள் உலாவியதும் ஜெயலலிதா ஆட்சியில் தானே! அப்பாவி பழங்குடியினர் மீது பொய்வழக்கை சுமத்தி கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தில்
Read 7 tweets
Sep 23
மாநில சுயாட்சியை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?
-பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!!

Mr.@JPNadda அவர்களே! இந்த படத்தில் உள்ளவரை யார் என்று தெரியுமா? தெரியவில்லை யெனில் அறிமுகப்படுத்துகிறேன்! இவர் பெயர் #பி_வி_ராஜமன்னார் சுதந்திர இந்தியாவின் முதல் நீதிபதி..ஆம், இன்றும்
மாநில சுயாட்சிக்கு பங்கம் நேரும் போதெல்லாம், ஒன்றிய அரசின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை #ராஜமன்னார்_குழு.. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காததை சாதித்துக் காட்டியவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜமன்னார்
தலைமையில் மூவர் குழுவை அமைத்தது அப்போதைய தலைவர் கலைஞர் தலைமையிலான பொற்கால அரசு.. அந்த குழுவில் P.V.ராஜமன்னார்,லட்சுமண முதலியார், சந்திரா ரெட்டி ஆகியோர் கூட்டாக இணைந்து ஒன்றிய-மாநில அரசுகளுடனான கூட்டாச்சி தத்துவத்தை விளக்கவும், மாநில அந்தஸ்த்தை வழங்கவும் தன்னிகரில்லா முயற்சியை
Read 7 tweets
Sep 19
‘பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே’.. பெரியார்

#அலைபேசி_புரட்சியாளன்

2010 நவம்பர் சமர்ப்பித்த அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தது.இது பெரும் பூதாகரமாக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கொந்தளித்தது.

ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வற்புறுத்தினர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசில் இருந்தும் திமுக மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தனது தலைவர் கலைஞரிடம் பேசினார் ஆ.ராசா.
//‘உன்னை நம்புகிறேன். நீ ராஜினாமா செய்து விட்டு வா
பார்த்துக் கொள்ளலாம்’//
என்று ராசாவை நெகிழ வைத்தார் கலைஞர். தகத்தாய கதிரவன் ராசா மீது பொய் களங்கம் சுமத்தப்பட்டதாக அறிவித்தார் கலைஞர்.

2010 நவம்பர் 14, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார் மத்திய அமைச்சர் ஆ.ராசா எதிர்பார்த்தது மாதிரியே!
Read 17 tweets
Sep 17
சமூகநீதிக் காவலன் ஆவடி.சா.மு.நாசரின் கதை!!

வாரிசு அரசியல் பிரச்சனை திமுகவின் மீது உள்ள பிரதான குற்றச்சாட்டு. தன் மகனை மேயராக்க சொந்த கட்சிகாரர்களே நெருக்கடி கொடுத்த போதும் அதற்கு சற்றும் செவிசாய்க்காத அமைச்சர் நாசர். தலைமையிடம் நேரடியாகவே பேசி ஆவடியை ஆதிதிராவிடர்களுக்கு
ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை
பேரம்பேசப்பட்டது! எதையும் எதிர்பார்க்காமல் மாதம் 10,000 சம்பளம் பெறும் கட்டிடத் தொழிலாளியை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர் சாமு.நாசர் அவர்கள்.. அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் ஆதிதிராவிடர்களை தன் உயிருக்கும் மேலான சொந்தமாகவே நினைத்து வருகிறார்.நம்மில் பலருக்கும் தெரியாத
Read 7 tweets
Sep 16
எனக்கு புத்தகத்தை கொடுத்த புண்ணியவான் தந்தை பெரியார்!!

சுமார் 2000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் மாட்டுத் தோலில் மேளம் கட்டி வாசிப்பது!
சுமார் 1500ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் பிணத்தை எரிப்பது!
சுமார் 1000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் Image
மலம் அல்லுவதும், சாக்கடை சுத்தம் செய்வதும் தான்!
சுமார் 500 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் செருப்பை தைப்பது!
சுமார் 300 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் ஆண்டான் அடிமை/கொத்தடிமை வேலை செய்து தான்!
சுமார் 150 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் Image
ரோட்டில் கிடக்கும் பிணத்தை காவல் காப்பது தான்!
ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் வழக்கறிஞர்,மருத்துவர்,பொறியாளர், ஆசிரியர், என்பதற்கு காரணம் ஒரு மேல்சாதிக்காரன் கீழ்சாதி மக்களுக்காக போராடியதன் விளைவு தான்! அந்த மேல்சாதிக்காரன் வேருயாருமில்லை அவர்தான் Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(