பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1
முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2
அவரின் ராமாயண நாடகம் ஒன்று பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் நடந்தது வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல ராமாயண கதைகளை தன் நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து எதிரிகள் வாயை அடைத்தார் ராதா 1/3
என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம் அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும் என்று விளம்பரத் தட்டி 1/4
ஒன்றை அரங்கத்தின் வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார் அப்படியே பெரியார் மீது விழுந்த கல்லும் செங்கல்லும் அவர் மீதும் விழுந்தது ஒரு முறை 1/5
கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா அப்போது ராமன் வேடத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காவல்துறையினரிடம் வேடம் கலையாது வில் கீழே விழாது, கலசம் கீழே வராது என்று கூறி ஒரு கையில் கள்ளுக் கலயமும் மறு கையில் சிகரெட்டுமாய் காவல் நிலையம் வரை நடந்தார் 1/6
கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே என்று திரை துறையில் இருந்து மிக தைரியாமாக கூறியவர் ராதா ஒருவரே தன் பெயரில் ஒரு மன்றம் திறக்க போவதாக பெரியார் கூறியபோது அதை கூச்சத்துடன் மறுத்தார் ராதா 1963ம் வருடம் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தை திறந்து வைத்தார் பெரியார் 1/7
அதில் பெரியார் கூறியது என்ன என்றால் மற்ற நடிகர்களுக்கு புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இந்த மன்றத்தை நான் திறந்து வைக்கிறேன் என்றார் பெரியார்
நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகளுக்காக இதை விட அதிக தொல்லைகள் வந்தாலும் ஏற்று கொள்வேன் 1/8
அதில் போவது எனது உயிராக இருந்தாலும் சரி அதற்கு நான் எப்போதுமே தயார் என்று 1964ஆம் ஆண்டு பகுத்தறிவு மலரில் ராதா எழுதினார் இப்படி சாகும் வரை பெரியாரின் பெரும் தொண்டராக சுயமரியாதை வீரனாக இருந்தார் பெரியாரின் கருத்தியல் கலை வடிவம் அவர் 1/9
நான் இராமாயண ஆய்வு செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவால் பத்திரிகையால் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடம் பரப்ப முடியாமல் போய் விட்டது இப்போது இராதா அவர்கள் அதை நாடகரூபமாக்கி நடிப்பது மிகுந்த பாராட்டத்தக்கது என பெரியார் வாழ்த்தினார் 1/10
தமிழகத்தில் இருந்த ஜாதி கொடுமைகளும் ஏழ்மையும் மக்கள் கூலிகளாக போக காரனமாக இருந்தன சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழை தமிழ் தொழிலாளர்கள் கங்காணிகள் மூலம் சேகரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த துறைமுகத்திற்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்து
1/5
வந்து இங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அங்கு நூறு பேர் செல்லக் கூடிய படகுகளில் 200 பேராக சென்றனர் தலைமன்னார் கரையில் இறங்கிய பின்னர் அங்குள்ள முகாம் ஒன்றில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்
2/5
அங்கிருந்து 131 கிலோ மீட்டர் கால்நடையாகவே மாத்தளை வரை அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு அடர்ந்த காட்டில் பாதைகளற்று மரங்களையும் முட்புதர்களையும் தாண்டி நடந்தனர் போதிய உணவும் தண்ணீரும் மருந்தும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டவர்களை அங்கேயே விட்டு சென்றனர் அவர்கள் தனியே கிடந்து வாடி
3/5
நான் என் வாழ்வில் பார்த்து பிரமித்த மனிதர் பெரியார் அடுத்து சேகுவேரா
மருத்துவம் படித்தவர் சேகுவேரா மக்களுக்கு சேவை செய்ய என்று ஒரு மோட்டர் வண்டியை எடுத்து கொண்டு தென் அமெரிக்கா முழுவதும் சுற்ற கிளம்பி விடுகிறார் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி முடித்து விட்டு ஓரிடத்தில் 1/7
அமர்ந்து யோசிக்கிறார் இந்த அடிமை மக்களுக்கு நாம் எதோ மருத்துவ சேவை மட்டும் செய்ய கூடாது வேறு ஒரு சேவை தான் செய்து முன்னேற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து ஆயுத வழி புரட்சியை தேர்ந்தெடுக்கிறார் இந்த பக்கம் பெரியார் ஈரோட்டில் செல்வந்தரின் மகனாக பிறந்து செல்வ செழிப்பை 2/7
மட்டும் நம்பி வாழாமல் இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் மத கோட்பாடுகளை சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் கேள்வி கேட்டு அதற்கு எதிராக சொந்த வீட்டில் கலகம் செய்து தந்தையால் அடித்து அவமானபட்டு பின் காசி செல்கிறார் காசியில் பிச்சை எடுத்து உண்டு உறங்கி அங்கிருந்த மத கொடுமைகளை 3/7
நமக்கு பதவி வந்தால் போதாது நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும் நமது இழிவை ஒழித்தாக வேண்டும்
இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன் எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் 1/4
என வைத்து கொள்ளுங்கள் உங்கள் கெதி என்ன என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான் வர விரும்புகிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்க போகிறீர்கள்
மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா அந்த மதிப்பை பெற எவ்வளவு பட்டாக வேண்டும் ஆகவே தோழர்களே நாளை எனக்கு ஏதாவது என்றால் 2/4
நம் கதி அவமானகரமானதாக போய் விடும் தலை எடுக்க முடியாது எனவே நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும் எனக்காக என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம் உங்களுக்காக உங்கள் பிள்ளை குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்
காங்கிரசை ஒழிப்பேன் என்று சூளுரைத்து காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜரை இங்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார் அவர் தேர்தல் பரப்புரையில் காமராஜரை ஆதரித்து பச்சை தமிழர் காமராஜருக்கு வாக்கு செலுத்துங்க என்றார் 1/4
இப்போது பலருக்கும் கேள்வி எழும் காமராஜரை ஏன் ஆதரித்தீர்கள் ? ஏன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தீர்கள் ? என்று ஆகவே அதற்கும் நானே பதில் சொல்கிறேன் என்று கூறி விளக்கம் ஒன்றையும் கூறுகிறார் பெரியார் 2/4
நான் மாறி மாறி முடிவு எடுத்திருக்கலாம் வெவ்வேறு கட்சிகளை கூட ஆதரித்திருக்கலாம் அது எல்லாமே மிகுதியான மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நன்மை செய்வதற்கு மட்டுமே அது இருந்திருக்குமே யல்லாது என்னுடைய சுய நலத்திற்கல்ல மக்கள் நலத்திற்கு மட்டுமே 3/4
1978ஆம் ஆண்டு கக்கன் ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார் மருத்துவமனை விண்ணப்பத்தில் அவர் வருமானத்தை பூர்த்தி செய்யும் போது மாதம் ரூ350 என்று குறித்து அவரை Cகிளாசில் விடுகிறார்கள் ஆனால் கக்கன் அதை மறுத்து எனது பென்சன் பணம் ரூ280 மட்டும் தான் அதை மட்டும்
1/4
போட சொல்கிறார் பிரச்னை டீனிடம் செல்கிறது அவர் வந்து அரசு விதிமுறைகளை விளக்குகிறார் எதுவும் எடுபடவில்லை இறுதியில் பொதுவார்டில் ஒரு பகுதியை திரைகளால் மறைத்து அறை உருவாக்கி கொடுக்கிறார்கள்
மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக எம்ஜிஆர் வருகிறார் கக்கன் மருத்துவமனையில் இருப்பதை
அறிந்து
2/4
பார்க்கிறார் தன் செலவில் அவரை சிறப்பு வார்டில் சேர்க்க அனுமதிக்க சொல்கிறார் அதோடு விடவில்லை ஒரு பாவமும் அறியாத அந்த டீனை உடனே இடமாறுதல் செய்தார் ஆர்எம்ஓவை சஸ்பெண்டு செய்தார் இது நேர்மையான கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கதை, பின் 2 ஆண்டுக்கு பிறகு கோமாவிலே சென்னை
3/4
1940 காலம் ஒருமுறை பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு பெரியார் கி.ஆ.பெ விசுவ நாதமும் ஒரு கூட்டத்திற்காக சென்றார் ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி நின்றனர் வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம் கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர் பார்த்தவுடனேயே 1/7
பெரியாருக்கு புரிந்து விட்டது
எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது அன்று அவர்கள் சத்தமிட்டனர் சரி, திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை காரை வீட்டுக் கீழே இறங்கினார் அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று அவர்களை பார்த்து பெரியார் 2/7
உங்களை மீறி உங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் ஊருக்குள் நாங்கள் ஒருநாளும் வரமாட்டோம்" என்றார் சத்தம் கொஞ்சம் தணிந்தது ஆனாலும் ஏன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போகிறோம் என்றார் 3/7