பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1
முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2
அவரின் ராமாயண நாடகம் ஒன்று பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் நடந்தது வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல ராமாயண கதைகளை தன் நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து எதிரிகள் வாயை அடைத்தார் ராதா 1/3
என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம் அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும் என்று விளம்பரத் தட்டி 1/4
ஒன்றை அரங்கத்தின் வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார் அப்படியே பெரியார் மீது விழுந்த கல்லும் செங்கல்லும் அவர் மீதும் விழுந்தது ஒரு முறை 1/5
கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா அப்போது ராமன் வேடத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காவல்துறையினரிடம் வேடம் கலையாது வில் கீழே விழாது, கலசம் கீழே வராது என்று கூறி ஒரு கையில் கள்ளுக் கலயமும் மறு கையில் சிகரெட்டுமாய் காவல் நிலையம் வரை நடந்தார் 1/6
கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே என்று திரை துறையில் இருந்து மிக தைரியாமாக கூறியவர் ராதா ஒருவரே தன் பெயரில் ஒரு மன்றம் திறக்க போவதாக பெரியார் கூறியபோது அதை கூச்சத்துடன் மறுத்தார் ராதா 1963ம் வருடம் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தை திறந்து வைத்தார் பெரியார் 1/7
அதில் பெரியார் கூறியது என்ன என்றால் மற்ற நடிகர்களுக்கு புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இந்த மன்றத்தை நான் திறந்து வைக்கிறேன் என்றார் பெரியார்
நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகளுக்காக இதை விட அதிக தொல்லைகள் வந்தாலும் ஏற்று கொள்வேன் 1/8
அதில் போவது எனது உயிராக இருந்தாலும் சரி அதற்கு நான் எப்போதுமே தயார் என்று 1964ஆம் ஆண்டு பகுத்தறிவு மலரில் ராதா எழுதினார் இப்படி சாகும் வரை பெரியாரின் பெரும் தொண்டராக சுயமரியாதை வீரனாக இருந்தார் பெரியாரின் கருத்தியல் கலை வடிவம் அவர் 1/9
நான் இராமாயண ஆய்வு செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவால் பத்திரிகையால் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடம் பரப்ப முடியாமல் போய் விட்டது இப்போது இராதா அவர்கள் அதை நாடகரூபமாக்கி நடிப்பது மிகுந்த பாராட்டத்தக்கது என பெரியார் வாழ்த்தினார் 1/10
இந்த ஆவணங்கள் இலங்கை
மலையகத்திலிருந்து 1964 ஸ்ரீமா
சாஸ்த்திரி ஒப்பந்தப்படி தமிழ்நாடு திரும்பிய மக்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதர் வழங்கும் ஆவணம் இதில் குடும்ப உறுப்பினர் விவரமும் இந்தியாவில் பூர்வீக குடும்பத்தின் ஊர் முகவரியும் இந்தியா வந்த தேதியும் பதிவும் இருக்கும் 1/8
இங்கு வந்த சேர்ந்த மக்களுக்கு ,
கல்வி, வேலைவாய்ப்பு வணிக கடன் வழங்கவும் விதிகள் வகுத்து
செயல்படுத்தவும் குடும்ப கார்டு என்ற
அடையாள அட்டையும் மத்திய அரசு இலங்கையில் இருந்த தூதர் மூலமே
வழங்கியது மத்திய அரசுகள் ஆண்டு தோறும் நிதி அளிக்கும் தமிழக அரசு அளவில்தமிழ்நாடு அரசின் வேலை 2/8
வாய்ப்பில் 80கள் வரை முன்னுரிமை வழங்கியது ஒன்றிய அரசு ஆண்டு தோறும் நிதி அனுப்புவதுடன் நிறுத்தி கொண்டது மலையக தமிழர் என்ற ஒரு பிரிவு மக்கள் இருப்பதே சில ஆட்சியாளர்களுக்கு தெரியாது அந்த தேயிலை தோட்டங்களை எல்லாம் வெள்ளையன் வைத்திருந்த போது தொழிலாளருக்கு குறைந்த பட்சம் 5ஆவது வரை 3/8
பெரியாரின் போர்ப்படை தளபதிகள் அதில் முக்கியமானவர் திராவிடர் இயக்கத்தின் அஞ்சா நெஞ்சன் தளபதி என்ற இரு அடைமொழிக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமான பெரியார் தொண்டர் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று நின்ற கொள்கை மறவன் 1/10
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை கட்டும் முன்பே பட்டுக்கோட்டையில் அழகிரி அவர்கள் சுயமரியாதை சங்கம் ஒன்றை நிறுவியவர் சாதி சமய சடங்குகள் சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து களப்பணி ஆற்றி பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்தவர் இவர் 2/10
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தில்லை நடராசனையும் சீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ? என்று முதன் முதலில் முழங்கியவர் இவர் அஞ்சாநெஞ்சர் என்ற பெயருக்கு ஏற்றவாறு அந்த கருத்துக்கு உரம் போட்டவர் அதனாலே கடுமையான தாக்குதலுக்கும் ஆளானார் 3/10
மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
யார் இந்த நாட்டை ஆள்கிறார்கள் நானா இல்லை இராமசாமி நாயக்காரா ? பார்த்து விடலாம் என்ற ஆணவத்தில் 1938- இல் இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்கிறார் இராசகோபாலாச்சாரியார் ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு 1/1
பெரியார் குடிஅரசு இதழில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேட பார்ப்பனர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார் 1930-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் 1/2
1938- பிப் மாதம் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட்டினார்
“இந்தி” கட்டாய பாடமாக்குவது ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார் தந்தை பெரியார் 1/3
பலருக்கும் தெரியாத ஒரு போராளி தான் பெரியாரின் தங்கை “கண்ணம்மாள்” பெரியார் காங்கிரசில் இருந்த போது ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது பெரியார் துணைவி நாகம்மையாரும் சகோதரி கண்ணம்மாவும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர் எப்படியாவது மறியலை நிறுத்த வேண்டும் என்று 1/1
காந்தியாரிடம் கேட்டபோது அது என் கையில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது என்று காந்தி கூறியதாக வரலாற்று குறிப்பு இருக்கிறது வைக்கத்தில் நடந்த போராட்டத்திலும் இவர்கள் கலந்து கொண்டனர் கொட்டும் மழையிலும் கலையாமல் போராடினார்கள் 1/2
குடிஅரசு ஏட்டில் 29.10.1933 இன்றைய ஆட்சி ஒழியவேண்டும் ஏன்? என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காக அதன் ஆசிரியர் பெரியார் அவர் சகோதரி கண்ணம்மா (பத்திரிகையின் பதிப்பாளர்) ஆகியோரின் மீது இராஜதுரோக வழக்கு தொடுக்கப்பட்டது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் இருவரும் 1/3
பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன் இவர்கள் நாட்டியமாடுவார்கள் இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டு பொம்மைகள் இவர்கள் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் ஆனால் தந்தை யாரென்று தாய்க்கு கூட தெரியாது இறைவனின் குழந்தைகள்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்தால், 1/1
அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும் இவர்கள் தான் தேவதாசிகள் இறைவனின் பெயரால் இந்த இழிவு நடந்தது இந்த இழிவு கோழி ஆடு மாடுகளை போல் பெண்கள் நேர்ந்துவிடப்படார்கள் செல்வந்தர்களின் போக பொருளாய் மாறி இவர்கள் தவித்த தவிப்பும் அனுபவித்த கொடுமையும் கொஞ்ச நஞ்சமல்ல 1/2
இதை ஒழிக்க சென்னை மாகாண சட்டசபையின் மேலவை துணை தலைவரான Dr. முத்துலட்சுமி அம்மையார் 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார் பலர் கொதித்து எழுந்தனர் நாட்டிய கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது கலை காப்பாற்றப்பட வேண்டாமா? 1/3