M.SivaRajan Profile picture
Nov 4 28 tweets 4 min read
வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?

பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது!

சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது!
ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா?

*தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்*

ஸ்லோகம் :-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி
தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!
நவக்கிரகங்கள் = ஒன்பது

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது
திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர);
இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது!

அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்!

சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!
வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!

பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது!

இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து கொண்டு இருப்பதாக ஐதீகம்!
படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது.

ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும்,
அவரை பாடிய ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்!
இதுவே அவரது அடியார்கள பெருமை!

பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன்?

அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும்,வலிமையும்
முன்னிறுத்தப்படும்.

அடியவரை முன்னிறுத்தினால் அன்பும், பக்தியும் தானே வளரும்!
அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!

பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது!

அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!
நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்;

அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!

அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு!

ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை!

அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிகாக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவரின் திருவுருவத்திலேயே நவ கிரஹங்களும் அடங்கி விடுகிறார்கள்!

பகவானின்
தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன். = கல்கி
வியாழன். = வாமானர்
வெள்ளி. = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு. = வராகம்
கேது. = மச்சம்
அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன

(திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்

சந்திரன் = திருவரகுணமங்கை

செவ்வாய் = திருக்கோளூர்

புதன் = திருப்புளிங்குடி

வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)

வெள்ளி = திருப்பேறை

சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே

ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)
தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும்,நவகிரஹங்கள்
கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது.
அவர்கள் தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,

த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்.....

சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்.

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்?

அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?

அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனை
சக தொண்டர்களிட
"மும்" காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது!
தொண்டர் அடிப்பொடி என்பர்!
( ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்)

பகவத் கைங்கர்யம்என்னும் திருத் தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம்!
அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும்!

அதை வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர்
மனோநிலையைப் பொருத்தது!

அதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...
சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றது!

இதை பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர்.

அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர்.
அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது, மற்றவர்களையும் சேர்க்க வேண்டும்.

நாம் மட்டும் தனியாக சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால்?
ஏனெனில் அது மனித குணம் தானே!

அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது!

சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது.

அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது.
அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!

துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!

பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா?

இல்லையே!
அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.

அதாவது.....
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்;

அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!

எப்படிக் கொடுக்கின்றன?

சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!

அடியார்க்கு அடியாராய்,
அவை நல்ல நல்ல நல்ல,
என்று கொடுக்கின்றன!

#வைணவத்தில்_நவகிரகங்கள்

#நவகிரகங்கள்_வைணவம்

#ஓம்_நமோ_நாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 5
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Nov 5
#நாகலிங்கப்_பூ

#நாகலிங்கப்_பூ_பூஜை

*சிவனுக்கு நாகலிங்கப்பூ பூஜை பலன்கள்*

"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.

பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான். Image
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
Read 12 tweets
Nov 5
*#சிவ_நாம_மகிமை :

க்ருத யுகமோ, த்ரேதா யுகமோ, துவாபர யுகமோ, கலியுகமோ எந்த யுகமானாலும்..
பிரம்மா கூறுகிறார்..

சிவ மஹாபுராணத்தில்..
"மீண்டும் மீண்டும் பேசுவதால் என்ன பயன், அனைத்து பாவங்களையும் நொடியில் நீக்க அருளும் சிவநாமத்தின் பெருமையை ஒரே ஸ்லோகத்தில் கூறட்டுமா?.."

"பாபாநாம் ஹரனே ஸம்போர்நாம்நி: ஸக்திர்ஹி யாவதீ|

ஸக்நோதி பாதகம் தாவத் கர்தும் நாபி நர: க்வசித்||"

வேறு என்ன வேண்டும்..
"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி"..

சிவ சிவ..இந்த இரண்டெழுத்து போதுமே..

அதேபோல் எந்த யுகமானாலும் சரி,

முறைப்படி தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களை செய்தால்தான் காரிய சித்தி கிடைக்கும்.
Read 5 tweets
Nov 5
*#மகாநந்தி_திருக்கோயில்!*

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி.

சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இவ்வூர், தலம்-தீர்த்தம்-மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
நந்த வம்சத்தைச் சேர்ந்த  உத்தங்க போஜன் என்பவரின் மகன் இந்தப் பகுதியை அரசாண்ட காலம்.

அப்போது இப்பகுதிக்கு அருகில் உள்ள கோபவரம் (முன்பு கோபிடவரம் என்று அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் இடையர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் மேய்ச்சலுக்கு அவர் அழைத்துச் செல்லும் மாடுகளில் ஒன்று மட்டும், தினமும் மடியில் பால் சுரக்காது இருப்பதைக் கவனித்தார்.

அதற்கான காரணத்தை அறிய விரும்பியவர், ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப் பசு புதர் மண்டிய இடத்துக்குச் சென்று அங்கிருந்த
Read 15 tweets
Nov 5
#பிரதோஷ_வழிபாடு

சிவ தரிசனம் கோடி புண்ணியம்..

சனி மஹா பிரதோஷம்..

சிவனை வழிபட மறவாதீர்கள்..!!

தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலமானது நித்ய பிரதோஷம் எனப்படும்.

மேலும் பல வகையான பிரதோஷங்கள் உள்ளன.
அவற்றில் சனிக்கிழமையன்று வருவது சனி பிரதோஷம் ஆகும்.

மற்ற பிரதோஷ வழிபாட்டு பலன்களை விட சனி பிரதோஷ வழிபாடு பல மடங்கு பலன்களை தரக்கூடியது.

பிரதோஷ நாள் என்றால் என்ன?

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாகும்
இந்த பிரதோஷ தினத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது.
Read 10 tweets
Nov 4
#ஸ்ரீ_ரங்கம்_திருக்கோயில்

ஸ்ரீ ரங்கம் கோவில் 1000-2000 வருடங்கள் பழமையானது, சந்திர தீர்த்தம், மற்றும் 8 தீர்த்தங்கள் கொண்டது.

ஸ்ரீ அரங்கநாதர், திருப்பாற்கடலில் தோன்றியவர்.

இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார்.
ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.

சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர்.

விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு, திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை.
Read 36 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(