M.SivaRajan Profile picture
Nov 4 36 tweets 5 min read
#ஸ்ரீ_ரங்கம்_திருக்கோயில்

ஸ்ரீ ரங்கம் கோவில் 1000-2000 வருடங்கள் பழமையானது, சந்திர தீர்த்தம், மற்றும் 8 தீர்த்தங்கள் கொண்டது.

ஸ்ரீ அரங்கநாதர், திருப்பாற்கடலில் தோன்றியவர்.

இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார்.
ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.

சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர்.

விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு, திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை.
அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.

அரங்கநாதரும் “காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம்” என்றார்.

விபீஷணனை தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை (இலங்கை) நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார்.
பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான்.

அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
அரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.

நாபியில் பிரம்மா இல்லை.

ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு அரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.
திருப்பாணாழ்வார் மீது முனிவர் ஒருவர் கல் எறிந்தபோது,
சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள்.
இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி(புரோட்டா)
நைவேத்யம் படைக்கப்படுகிறது.

சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று.

சயன கோலத்தில் மூலவர் பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார்.

மூலவரின் விமானம் தங்கத்தால்
வேயப்பெற்றது.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.

பெருமாளின் 108 திருப்பதிகங்களில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

இத்தலத்தில் பலகாலம் தங்கி அரங்கநாதருக்கு சேவை செய்த இராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார்.

அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.
சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார்.

இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.

இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி)
இரவில் நம்பெருமாளுக்கு
365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.

சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்தப் பரிகாரம் செய்கின்றனர்.
கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால்,
சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி அரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர்.
அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும்.

மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும்.
இந்த அபிஷேகத்தைக் காவிரியே செய்வதாக ஐதீகம்.

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது,

அதில் நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அறிஞர்கள், “இராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது” என்றனர்.
கம்பர், “அதை நரசிம்மரே சொல்லட்டும்” எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.

அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, “கம்பரின் கூற்று உண்மை” என ஆமோதித்துத் தலையாட்டினார்.
மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார்.

கையில் சங்கு மட்டும் இருக்கிறது.

சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும்
21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில்.

இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் ஆகும்.
மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.

கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது.

அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார்.

இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார்.
இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது.

கருடாழ்வாருக்கு பருப்பு,
வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை,
மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.

கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது.
இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.
பிரம்மோத்சவத்தின்போது பெருமாள்,
இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.

அன்னத்திற்கு
அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார்.

கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்குப் பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

அரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விசுவரூபக் காட்சி தருகிறார்.
அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார்.

இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர்.

அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.
இவரது சன்னதி முன்பு சுக்ரீவன்,
அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது.
மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர்.

தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது.

தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர்.

சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.
பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருக்கலாம்.

இங்குள்ள அரங்கநாயகி, தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என்று
வரிசையாகக் காட்சி தருகின்றனர்.

இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம்.

தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் ஒலிக்கப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசி:

ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும்.

பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில்
நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும்.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார்.

இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோத்சவம் (3 முறை) நடைபெறும் தலம்.
ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் “ஆடிப் பெருக்கு” உற்சவம் கொண்டாடப்படுகிறது.

சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.

அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும்.

இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.
சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோத்சவம் நடக்கிறது.

சத்தியலோகத்தில் அரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது.

இதை, “ஆதி பிரம்மோற்ஸவம்” என்கின்றனர்.
இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, அரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார்.

அரங்கநாதருக்கு, அயோத்தியில் இராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 5
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Nov 5
#நாகலிங்கப்_பூ

#நாகலிங்கப்_பூ_பூஜை

*சிவனுக்கு நாகலிங்கப்பூ பூஜை பலன்கள்*

"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.

பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான். Image
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
Read 12 tweets
Nov 5
*#சிவ_நாம_மகிமை :

க்ருத யுகமோ, த்ரேதா யுகமோ, துவாபர யுகமோ, கலியுகமோ எந்த யுகமானாலும்..
பிரம்மா கூறுகிறார்..

சிவ மஹாபுராணத்தில்..
"மீண்டும் மீண்டும் பேசுவதால் என்ன பயன், அனைத்து பாவங்களையும் நொடியில் நீக்க அருளும் சிவநாமத்தின் பெருமையை ஒரே ஸ்லோகத்தில் கூறட்டுமா?.."

"பாபாநாம் ஹரனே ஸம்போர்நாம்நி: ஸக்திர்ஹி யாவதீ|

ஸக்நோதி பாதகம் தாவத் கர்தும் நாபி நர: க்வசித்||"

வேறு என்ன வேண்டும்..
"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி"..

சிவ சிவ..இந்த இரண்டெழுத்து போதுமே..

அதேபோல் எந்த யுகமானாலும் சரி,

முறைப்படி தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களை செய்தால்தான் காரிய சித்தி கிடைக்கும்.
Read 5 tweets
Nov 5
*#மகாநந்தி_திருக்கோயில்!*

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி.

சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இவ்வூர், தலம்-தீர்த்தம்-மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
நந்த வம்சத்தைச் சேர்ந்த  உத்தங்க போஜன் என்பவரின் மகன் இந்தப் பகுதியை அரசாண்ட காலம்.

அப்போது இப்பகுதிக்கு அருகில் உள்ள கோபவரம் (முன்பு கோபிடவரம் என்று அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் இடையர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் மேய்ச்சலுக்கு அவர் அழைத்துச் செல்லும் மாடுகளில் ஒன்று மட்டும், தினமும் மடியில் பால் சுரக்காது இருப்பதைக் கவனித்தார்.

அதற்கான காரணத்தை அறிய விரும்பியவர், ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப் பசு புதர் மண்டிய இடத்துக்குச் சென்று அங்கிருந்த
Read 15 tweets
Nov 5
#பிரதோஷ_வழிபாடு

சிவ தரிசனம் கோடி புண்ணியம்..

சனி மஹா பிரதோஷம்..

சிவனை வழிபட மறவாதீர்கள்..!!

தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலமானது நித்ய பிரதோஷம் எனப்படும்.

மேலும் பல வகையான பிரதோஷங்கள் உள்ளன.
அவற்றில் சனிக்கிழமையன்று வருவது சனி பிரதோஷம் ஆகும்.

மற்ற பிரதோஷ வழிபாட்டு பலன்களை விட சனி பிரதோஷ வழிபாடு பல மடங்கு பலன்களை தரக்கூடியது.

பிரதோஷ நாள் என்றால் என்ன?

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாகும்
இந்த பிரதோஷ தினத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது.
Read 10 tweets
Nov 4
#ஏகாதசி_வழிபாடு

#பெருமாள்_108_போற்றி

1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(