மேற்கு தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ரயில்வேயில் வேலை செய்யும் கணேசன் தனது மகன் வைத்தீஸ்வரனை எப்படியாவது ரயில்வேயில் பணிக்கு.. அமர்த்திட படிக்க வைக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருகிறார் வைத்தீஸ்வரன். கை நிறைய சம்பளம்.
இன்சூரன்ஸ் ஏஜெண்டான கோபாலன் தனது மகன் ராமனை தன்னைப் போலவே.. ஏஜெண்டுகளாக்கிட முயன்று அதில் வெற்றி பெறுகிறார்.
கோவில் அர்ச்சகராக பணியாற்றி வரும் மாதவன் தனது மகன் ராகவனையும் வேதங்கள் பயிலவைத்து அர்ச்சகராக்குகிறார்.
ஆனால் இவர்களது அடுத்த தலைமுறைக்கு தங்களது தந்தையார் போல அதே பணியை செய்ய விரும்பவில்லை.
வங்கியில் வேலைக்கு முயலும் வைத்தீஸ்வரனின் மகள் அலமேலு. அவள் தந்தைக்கு மாதம் 64000 சம்பளம்.
மகளை படிக்கவைக்க பயிற்சி நிறுவனத்தில் தனது சேமிப்பை எடுத்து செலவிடுகிறார்.
இரவும் பகலும் உழைத்து மாதம் சுமார் 40000 சம்பாதிக்கும் ராமன் தனது மகன் கௌஷிக்கை பயிற்சி வகுப்பில் சேர்த்து நீட் எழுத வைக்கிறார்.
கோவில் வருமானம் மட்டுமே வெறும் 20000 வரை ஈட்டும் ராகவன் 1180 மார்க் வாங்கிய மகன் ஹரீஷை வசதி இல்லாத காரணத்தால் அவன் விருப்பபட்ட ஐஐடியில் படிக்க பயிற்சி வகுப்புக்கு அனுப்ப இயலவில்லை.
முறையே மாதம் 64000, 40000 மற்றும் 20000 சம்பாதிக்கும் ஒரே வகுப்பினருக்கு கல்வியோ, வேலையோ..
அவர்கள் நினைத்தபடி அமைத்துக் கொடுக்க முடியவில்லை. இது இப்படித்தான் தொடரும். இவை ஒரு உதாரணம் தான்.
அங்கு அதை நிர்ணயம் செய்வது அனைவரும் நினைப்பது போல 'தகுதி'யால் இல்லை அது 'வசதி'யால் அமைகிறது. ஒரே மாதிரியான சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதங்களை காண முடியுமென்றால்
படிக்கின்ற வாய்ப்பை அமையாத மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்?
வாக்கை பெருக்கிட ஒரு கும்பல் ஒரு சிலரை மட்டும் குறிவைத்தும், காசு பெருமளவில் கொழிக்கும் என ஆய்ந்து, பெருமுதலாளிகளின் பயிற்சி நிறுவனங்கள்
என சிலர் மட்டுமே பயனடையைப் போகும் இந்த கல்வித்திட்டமும் ஒரு நாள் இல்லை .
ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். உண்மையாகவே தேவைக்கான பயனாளிகள் அப்போதும் ஏமார்ந்து, பின் தங்கி இருப்பார்கள். இன்று யாரெல்லாம் இந்த 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பயன் உண்டு என குதூகலிக்கிறார்களோ அச்சமுகமே வாய்ப்புகள் இல்லாது இருட்டில் தவிக்கும் போது உணரும்.
எனவே வெகு மக்களுக்கானது அல்ல. வெகுசிலருக்கானது.
இதை எழுதியது ஜூலை 2019 அன்று. ஏழை பார்ப்பனர்களுக்கே இது பயன் பெறாது. நிச்சயமாக ஏழை முதலியார்,பிள்ளை,செட்டியார் இதர ஜாதிகள் உள்ளிட்ட உயர்ந்த சாதியாக தங்களை தாங்களாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.
ஆகவே உள்ளபடி ஏழைகளுக்கு இந்த 10% எட்டா கனியாக அமையும் என்பதே மெய்.
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது.
இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப்படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன { நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398, ..}
#தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை #பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது.
ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துல்லியமாக ஒரு நபரை பிடித்து போட்டிருக்கிறார். தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் மத்திய நிதியமைச்சராக இருப்பதற்கே தகுதியானவராக இருக்கிறார்.