#மெக்காலே வை பாப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் பாகம்-2

வில்லியம் பெண்டிங் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்
பெங்கால் சதி தடை சட்டம்.
ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது“சதி ஏறுதல்”எனும் கொடூரமான சம்பிரதாயம்.
இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.
ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.
பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?
அந்தப் பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்!
அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.
இதை விட்டுவிட்டு ஆரோக்கியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்!
என்ன லாபம் தெரியுமா?
கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய்,
அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புண்ணியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான்.
அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!
அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்! அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!....
என்று சொல்லி,
அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல,
கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!
ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள்.
உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால்,
அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண,ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை.அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால்,
அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறச்சீற்றம் பீறிட்டது.
அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை,
காசி புனித தளம் இல்லை,
ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்றோ,
பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

//பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள்.
அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது//

இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்!
சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின் படி,
அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

//இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,
ஆங்கிலமே கல்விக்கான மொழி!
ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை,
எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது//

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.
குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும்
மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.
ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835 ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848டில் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?
அதனால் 1858 ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்க பட்டன...
//இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது//

இப்போது சொல்லுங்கள்,
இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் லார்டு #மெக்காலே
ஹீரோவா? வில்லனா?”

சொல்லுங்கள் மக்களே!

அடிமுட்டாள் ! ஆரிய அடிமைகளே!
சூத்ர அடிமைகளே!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Nov 11
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

பாகம்- 2

BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா....
எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...

நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற..👇👇👇 பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்..
Read 5 tweets
Nov 11
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்...
பாகம்- 1
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் - இன்றுவரை தொடரும் பார்ப்பன தந்திர அரசியல்...

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்..

திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு..
செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி தான் துலாபாரம்.

இந்த பார்ப்பனர்களுக்கு துலாபாரம் கொடுத்து அதிகமான அரசர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றிப்பட்டுருக்காங்க. அதுல ரெம்ப அப்ராணியா, முட்டாளா ஏமாந்தவன்..👇
இந்த👇👇
சுந்தர பாண்டியன் ங்கிற மன்னன். இப்படி சொன்னா நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் னு சொன்னா தெரியும். நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரிய வைக்கணும்

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான்.
Read 25 tweets
Nov 9
#மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன? பாகம்-1

“1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று?என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. 🤔🤔
அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
Read 14 tweets
Nov 9
கேள்வி :
தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினருமே
நாங்கள் தான் ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மை?

'தமிழாய்வாளர்'
தொ.பரமசிவன் பதில் :
வரலாற்று ஆசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்லுவார்கள், "இராஜா என்பவன் சாதி கெட்டவன் "என்று. ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காக எல்லா சாதியிலும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
ஓர் அரசியல்வாதி அரசியல் செல்வாக்குள்ள சாதியிலே பெண் எடுத்துக் கட்டுவான். அந்த சாதியின் வாக்கெல்லாம் அவனுக்குக் கிடைக்கும்.

இதே போல் தான் அப்போதும்.
எனவே ராஜாக்கள் ஒரே ஜாதி இல்லை என்பதை விட உண்மை இருந்திருக்க முடியாது.
Read 4 tweets
Nov 9
"பாஸ் பாஸ் பெரியார் என்னத்த பாஸ் செய்தாரு.

தமிழ்நாட்டுல் எங்க சாதி ஒழிஞ்சது பாஸ். இன்னமும் இருக்கு பாஸ் சாதி”

“ஜி நீங்க ஒரு வீட்டுக்கு போறீங்க. அதாவது மூணு வருசமா பூட்டிக் கிடக்கிற வீடு”

“பாஸ் நான் பெரியாரப் பத்தி பேசுறேன்”

“நான் பாழடைஞ்ச வீட்டப் பத்தி பேசுறேன் ஜி”
“சரி பாஸ் நீங்க சொல்றதுக்கே வர்றேன். மூணு வருசமா பூட்டிக்கிடக்குற வீடு இருக்கு சரி, அதுக்கென்ன”

“அத எப்படி சுத்தப்படுத்துவீங்க ஜி”

“இது ஒரு கேள்வியா பாஸ்”

“அட சொல்லுங்க ஜி. ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க”
முதல்ல ஒட்டடை அடிப்பேன்.அப்புறம் எலிப்புழுக்கை,வவ்வால் புழுக்கை எல்லாம் அள்ளுவேன்,அப்புறம் இந்த பூனை பேண்டு கீண்டு வெச்சிருந்தா அத அள்ளுவேன் பாஸ்”

“வாங்க ஜி வந்துட்டே இருங்க”
“எல்லாம் அள்ளியாச்சா. அப்புறம் கரையான் அரிச்சி மண்ணா தரையில இருக்குமா அத எல்லாம் கூட்டிப்பெருக்குவேன்”
Read 11 tweets
Nov 7
திமுகவை வசைபாடும் 5அறிவு ஜீவன்கள்🐖🐕🐮🐩🙉 கவனத்துக்கு

#கலைஞர்_கருணாநிதி என்ன செய்தார் தமிழ்நாட்டிற்கு? என்று BBC அளித்துள்ள tv செய்திக் கட்டுரையில் இருந்து. கவனிக்க முரசொலி வெளியீடோ, தினகரன் வெளியீடோ அல்ல. பிரிட்டனின் அதிகரப் பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரை.
சிறிய அளவிலான பெரிய பெரிய சாதனைகளின் கோர்வை.

BBC news செய்தியில் இன்று தலைவர் பற்றி வந் கட்டுரை .............
தமிழகஅரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.
திராவிட இயக்கமானது, இடஒதுக்கீடு கொள்கை, பெண் சமத்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட உயர் நெறிகளை நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றி, டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(