சனாதன போஸ்ட் மேனுக்கு எச்சரிக்கை !

#Kerala #PinarayiVijayan #MohammadArifKhan #TNGovernor
#Gobackravi

சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்? - விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழக்கறிஞர் ஆர்டிஐ -யில் முறையீடு 🤭 Image
சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை, இந்துவின் அர்த்தம், பெரியாரின் கொள்கைகள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசுவது உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் அளிக்கும்படி  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு,
19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

(1) சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?

(2) சனாதன கொள்கைகளுக்கான உரைகள் ஏதும் உள்ளதா அல்லது செவி வழி தகவல் மட்டும் தானா?

(3) சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்?
(4) தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?

(5) சனாதன தர்மத்தை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலோ பின்பற்றுகிறார்களா?
(6) சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா?

(7) இந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?
(8) 1964ல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா?

(9) ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா?
(10) இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா?

(11) சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்துவிட்டார்களா?
(12) உயிருடன் இருக்கின்றார்கள் என்றால் எங்கு வசிக்கிறார்கள்? அவர்களுடைய அன்றாட பணிகள் என்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?

(13) ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா?
(14) மிகப்பெரிய தத்துவஞானியும், திராவிட இயக்கத்தின் நிறுவனருமான தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன்?

(15) நான்கு வர்ணங்கள் உள்ளதாக கூறும் இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்?
(16) நீங்கள் சதுர் வர்ண தர்மத்தை பின்பற்றி, அதை கடைபிடிக்கிறீர்களா?

(17) மற்ற மதங்களால் சதுர் வர்ண தர்மம் ஏன் பின்பற்றப்படவில்லை?

(18) தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?
(19) அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், அரசியலமைப்பு சட்டம் விலக்கு அளிக்காமல் உள்ள நிலையில், தன்னிச்சையாக (extempore speech) பேசுவது அரசியலமைப்புச் சட்ட மீறல் இல்லையா? ஆகிய கேள்விகளை எழுப்பிய வழக்கறிஞர் எஸ்.துரைசாமி,
இந்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்கும்படி ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார் ⁉️

``சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம்.
ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். மேலும், நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும்
இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்திலிருந்து வந்தவையே. இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப் போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். மேலும்,
வல்லரசு நாடக நாம் வளர்ந்துவரும் நிலையில், இங்கு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்

அதே போலக் குண்டு போடச் சொல்கிறாரா ? 'கிறிஸ்தவ' அமெரிக்கா - ‘சனாதன அமெரிக்காவாக ஆகிவிட்டது என்கிறாரா ⁉️
சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்

Murasoli : ”ஆளுநர் பேசவேண்டியது Rule Of Law தானே தவிர Rule Of Manu அல்ல..” :

போடா மயிரே
சனாதன தர்மம், இந்து மதத்தின்அர்த்தம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் தகவல் அறியும் சட்டத்தில் வராது.

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் சார்பு செயலாளர் சி. ரமா பிரபா, ஆளுனரிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் 🤭

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Nov 10
தலித் என்ற அடையாளம்

இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை
தலித் தீண்டா சாதிக்குள் அடைத்து ரசித்தது ஆர். எஸ். எஸ் -பாஜக எனும் இந்துத்துவ காம்போதிகள் எம்.பி. பதவி வழங்குவதற்காக.

நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த
2001 ஆம் ஆண்டில் இளையராஜா குறித்த கட்டுரைத் தொடரை எழுதினார். 'தலித் இசைக் கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி' என்று இளையராஜாவை அவர் அதில் புகழ்ந்திருந்தார். தலித் என்று தான் அடையாளப்படுத்துவதை விரும்பாத இளையராஜா கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
Read 5 tweets
Nov 8
இந்துக் கோயில்... ஆகம விதி !

இன்றைய இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டும், நிருவகிக்கப்பட்டும் வந்தன என்பது வரலாற்று உண்மையாகும். மதுரைக் கோயிலுக்குப் பல கிராமங்கள் சொந்தமாயிருந்தன. https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-
இந்தக் கிராமங்களையயல்லாம் முகமதிய அரசாங்கம் தனது சொந்தப் பொறுப்பில் 1790 வரையில் தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

இக்கோயிலுக் குள்ள கட்டளைகள் 1704 இல் இருந்து 1735 காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
பின்னர் மெட்ராஸ் அரசாங்கம் மதுரை மாவட்டத்தைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது. 1801 இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இக்கிராமங் களைத் தன் வசமாக்கிக் கொண்டது. 1849 வரை கிழக்கிந்தியக் கம்பெனி இக்கிராமங்களைத் தன் பொறுப்பில் வைத்திருந்தது.
Read 26 tweets
Nov 7
பார்ப்பன பனியா ஆதிக்கத்தில் உச்ச நீதி மன்றம். 🤭

உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

ஏற்க முடியாத வகையில் உச்ச நீதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிரதிநித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” – ராம்நாத் கோவிந்த, https://madrasreview.com/politics/social-justice-denied-in-t
இந்திய குடியரசுத் தலைவர் (2017ம் ஆண்டு தேசிய சட்ட நாள் மாநாட்டில் பேசியது)

மேற்குறிப்பிட்ட மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர்,”17000 நீதிபதி இடங்களில் 4700, அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வேறொரு சமயத்தில் பெண்கள் நீதிபதியாக பங்கேற்பது குறித்து கருத்துக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான SA பாப்தே, “பெண்கள் வீட்டு பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தால் உயர் மட்ட நீதிமன்ற பொறுப்புகளை ஏற்பதில்லை” என கூறினார்
Read 74 tweets
Nov 7
நீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்.

அய்க்கோர்ட் தீர்ப்பு என்றால் அது தீண்டத் தகாதது, பேசத் தகாதது என்று புனிதத்தன்மை இருந்து வந்ததைப் பொய்யாக்கிக் கனம் நீதிபதிகள் வாயினாலேயே எவருக்கும் விமர்சன உரிமை உண்டு என்று ஒப்புக்கொள்ளச் செய்தது நமது வெற்றி யல்லவா? https://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaa
1956-ஆம் ஆண்டு வாக்கில் இப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் திரு. ஆர் .எஸ் .மலையப்பன் என்பவர் மிகச் சிறந்த நிருவாகி எனப் பெயர் பெற்றவர்.

இவர் ஆட்சித் தலைவ ராக இருந்தபோது பெரம்பலூர் அருகில் உள்ள நாராயண மங்கலம் என்ற
ஊரில் நரிக்குறவ மக்களுக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வா தாரங்களுக்கு உதவிகள் செய்தார். இது போன்ற பல மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு மக்கள் ஆட்சியராக விளங்கிய அவர், அரசாங்கத்திற்காக ஒரு தனி நபரின் நிலத்தை எடுப்புச் செய்தது தொடர்பாக
Read 47 tweets
Nov 5
ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ https://www.keetru.com/inde...
ஏற்பை வழங்கியிருக்கிறது.

பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள்.
ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா?
Read 37 tweets
Nov 5
ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி?

ஆர்எஸ்எஸ் பற்றி கன்னட இலக்கியவாதி தேவனூர் மகாதேவா எழுதிய 'ஆர்எஸ்எஸ் ஆல மட்டு அகல' (ஆர்எஸ்எஸ் - ஆழமும் அகலமும்)' என்ற சிறு நூல் பற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது குறித்து
@vasantalic
ஆர்எஸ்எஸ் கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால் பாஜக இந்த புத்தகத்தை குப்பை என்று வர்ணித்துள்ளது.

அதன் அச்சுப் பிரதிக்கு அதிக கிராக்கி இருப்பதால் புத்தகம் கிடைப்பது அரிதாக உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்படாத பிடிஎப்கள் பகிரப்பட்டு,
அவசர அவசரமாக இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

64 பக்கங்கள் கொண்ட இந்த நூல், யார் வேண்டுமானாலும் வெளியிடும் அளவுக்கு புதிய வடிவில் உள்ளது. கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள பெண்கள் குழுக்களாலும்,
Read 55 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(