M.SivaRajan Profile picture
Nov 20 17 tweets 4 min read
#குலதெய்வத்தை_கண்டறிய

மிகவும் முக்கியமான பதிவு :

குலம் காக்கும் குலதெய்வத்தைக் கண்டறிய எளிய வழிகள்

முன் காலத்தில் கிராமப்புறங்களில் யாருக்கு தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் இருக்கிறதோ அவர்கள் நதியில் குளித்து விட்டு நதிக் கரையில் இருந்து ஒரு பிடி களி மண்ணை
எடுத்து வருவார்கள்.

வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தை இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள்.

நாளடைவில் அவர்கள் பிரார்த்தனையை ஏற்று அவர்களது குலதெய்வங்கள் அவர்களுக்கு தெரிந்து விடுமாம்.
அடையாளம் தெரியாத குலதெய்வத்தைக் கண்டு பிடிக்கும் பிரார்த்தனை முறை ஒன்றை  பார்ப்போம்.

நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செய்வாய் கிழமையில்தான் செய்யத் துவங்க வேண்டும்.

ஏன் எனில் செய்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும்
உகந்த நாளாகும்.

சடங்கை ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பு -திங்கள் கிழமை – ஒரு கைப்பிடி களி மண்ணை சேகரித்து அதை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

அதை எங்கிருந்து கொண்டு வருவது என குழம்ப வேண்டாம்.

வீட்டு தோட்டத்தில் உள்ள மண் இல்லை எனில் வெளியில் இருந்தும் கொண்டு வந்து
பத்திரமாக வைக்கலாம்.

ஒரு சிறிய மரப்பலகை மற்றும் ஒரு தாம்பாளத்தை தயாராக வைத்து இருக்கவும்.

பாதுகாப்பாக வைத்து உள்ள அந்த களி மண்ணை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாகக் பிசைந்து பிள்ளையார் பிடிப்பது போல பிரமிட் வடிவில் செய்து காய வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை அதாவது செய்வாய் கிழமை குளித்தப் பின்னர் அந்த மரப் பலகையின் மீது கோலம் போட்டு அதன் மீது தட்டை வைத்து அதன் மீது களிமண் பொம்மையை வைத்து விடவும்.

தாம்பாளத்தில் வைத்துள்ள களிமண் பொம்மையை அடையாளம் தெரியாத உங்கள் குலதெய்வமாக மனதார எண்ணி
அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு சிறிய மாலை ஒன்றை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த மந்திரம் இருந்தால் அதை கூறவும்.

அப்படி தெரியாது என்றால் அதன் முன் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ ” தெய்வமே நீங்களே எமது அடையாளம் தெரியாத குலதெய்வம்.
நீங்கள் விரைவில் எனக்கு உங்கள் அடையாளத்தையும், நீங்கள் அமர்ந்து உள்ள ஆலயத்தின் இடத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

அதுவரை நீங்கள் இங்கு எங்கள் குலதெய்வமாக இருந்து கொண்டு எங்கள் பிரார்த்தனைகளை இந்த பூஜை/ஆராதனை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும் ” என்று வாயால் கூறி மூன்று முறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு அதற்கு கற்பூர ஆரத்தி காட்டியபின், அதை நமஸ்கரிக்க வேண்டும்.

தினமும் காலை இந்த பிரார்த்தனையை குளித்தப் பின் தொடர்ந்து செய்யவும்.
காலை மற்றும் மாலையில் அதை செய்வது நல்லதே.

ஆனால் தினமும் அதற்கு மஞ்சள் குங்குமம் தூவி அர்ச்சனை செய்ய வேண்டியது இல்லை .

வாரம் ஒருமுறை அதாவது சனிக்கிழமை அந்த பொம்மையை வெளியில் எடுத்து வைத்து விட்டு தாம்பாளத்தை சுத்தம் செய்து மரப்பலகையில் கோலம் போட்டு
அன்று மட்டும் சந்தன குங்குமம் சிறிது தூவி பூஜை செய்யலாம். ஆனால் நம்பிக்கையுடன் செய்வது முக்கியம்.

மர பீடத்தின் முன் ஒரு உண்டியை வைத்து அதில் ஒரு ரூபாய் அல்லது நீங்கள் விரும்பும் காணிக்கையை போட்டு வைக்கவும்.

களிமண் பொம்மையை பத்திரமாக பாதுகாத்து வைக்கவும்.
எதோ ஒரு அஜாக்கிரதையினால் அல்லது வேறு காரணத்தினால் அது உடைந்து விட்டால் கவலைப் படவேண்டாம்.

அந்த அடையாளம் தெரியாத தெய்வத்திடம் தவற்றுக்கு மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு,

மீண்டும் களிமண் பொம்மையை முன்போல தயார் செய்து அந்த பூஜையை பழையபடி செய்யத் துவங்கவும்.
வேண்டும் என்றே நீங்கள் தவறை செய்யவில்லை என்பதினால் உங்கள் குலதெய்வம் உங்களை நிச்சயம் மன்னித்து விடும்.

நம்பிக்கையோடு ஆரம்பித்த பூஜையை வெறுப்பினாலோ அல்லது யாராவது குறை கூறுகிறார்களே என்பதற்காகவோ நடுவில் கைவிடாதீர்கள்.

உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரியும் வரை
ஒவ்வொரு வருட முடிவிலும் எந்த செய்வாய்க் கிழமையிலாவது உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து அருகில் உள்ள ஆலயத்தின் உண்டியலில் அதை உங்கள் அடையாளம் தெரியாத குலதெய்வத்திற்கு காணிக்கை என சேர்க்கவும்.
இந்த பிரார்த்தனையை செய்யத் துவங்கிய உடனேயே குலதெய்வத்தை உதாசீனப்படுத்தினீர்கள் என்ற சாபம் உங்களை விட்டு விலகிவிடும்.

நீங்கள் முழு மனதோடு பிரார்த்தனையை ஆரம்பித்த சில நாட்களிலேயே தன்னை அடையாளம் அதுவரை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உள்ள உங்கள் குலதெய்வம்
அந்த களிமண் சிலையில் புகுந்து கொண்டு உங்கள் குடும்பத்தின் பாதுகாவலராக மாறிவிடுமாம்.

எந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு காட்சி தர வேண்டும் என்ற பிராப்தம் உள்ளதோ அப்போது அந்த தெய்வம் உங்கள் கனவில் வந்தோ, யார் மூலமாவது எதேர்சையாக தன்னை அடையாளம் காட்டி விடும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 22
#கிருஷ்ணார்ப்பணம்

🌺 *கிருஷ்ணார்ப்பணம்* *என்பதன் அர்த்தம்*

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும்,

அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு,

அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.

கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..

ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும்.
Read 20 tweets
Nov 22
#பெரிய_பிராட்டியார்

*பெரிய பிராட்டியின் சம்பந்தம்*

பெரிய பிராட்டி என அழைக்கப்படும் திருமகளே (லட்சுமி) பெருமாளுக்கு அடையாளம்.

கோயில்களில் திருமார்பு நாச்சியார் என பெருமாளின் மார்பில் இவள் இருப்பாள்.

பக்கத்து நாச்சியாராக அவருக்கு அருகிலும் இருப்பாள்.
தனிக்கோயில் நாச்சியாராகவும் வீற்றிருப்பாள்.

ஆனால், பெருமாளுக்கு இப்படி தனித்தனி சந்நிதிகள் இருக்காது.

பெருமாள் நிஜம் என்றால், அதன் நிழல் தான் தாயார்.

பெருமாள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாயார் நிழல் போல தொடர்கிறாள்.

முக்தி பெற்ற உயிர்களை வைணவத்தில் "நித்யசூரிகள்'
என்று குறிப்பிடுவர். இந்த நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் பெரியபிராட்டி தான்.

நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர்.

ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது.

ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர்
Read 20 tweets
Nov 22
#பஞ்ச_நரசிம்ம_சேஷ்த்ரம்

தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே #திருமங்கை_ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார்.

அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. Image
அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் #திவ்ய_தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார்.

சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள
Read 39 tweets
Nov 22
#கனவில்_பாம்புகள்_வந்தால்

கனவில் பாம்புகள் தோன்றினால் நன்மையா ?
                       
கனவில் பாம்புகள் ஒரு சிலருக்கு  வந்து கொண்டேயிருக்கும்.

காரணம் அவர்களுக்கு இராகுதிசை, கேதுதிசை அல்லது இராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக  இருக்கலாம். Image
கனவில் பாம்பு வந்தால் அவர்களை போன்றவர்களுக்கு நன்மை தான்.

அதுபோல் 4 - 13 - 22 - 7 - 16 - 25 போன்ற ராகு கேதுக்களின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து கொண்டே இருக்கும்

ராகு - கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாக செய்வது நல்லது.
எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படப்போகிறது  என்பதை உணர்த்த ஒற்றை நல்ல பாம்பு உங்கள் கனவில் உண்டாகும்.

இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 
வீரதீரமாக பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
Read 7 tweets
Nov 21
#வில்வாஷ்டகம்

வில்வாஷ்டகம் தமிழில் :

ஈடு இணை இல்லாத பயனை தரகூடியது இந்த வில்வாஷ்க பாராயணம்.

முன்ஜென்ம கர்ம வினை நீங்கி முக்திக்கு வழிவகுக்க கூடிய வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்வோர்க்கு எந்த துன்பமும் வாழ்வில் இல்லை.
ஓம் நமசிவாய

மூன்று தளம் மூன்று குணம் முக்கண் மூவாயுதம் வடிவான வில்வதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிஜென்ம துயர் நீக்கும் முப்பிரிவாய் விரிந்திருக்கும் வில்ப மரம் துளிர்கின்ற ஏக வில்வம் சிவார்ப்பணம்.
பூச்சிகளால் அழியாத சிவபூஜைக்கு என்ற தளம் மங்களமாய் மாறும் தளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

கோடி கன்யா மகா தானம் வாஜபேயம் சோம யாகம் பலன் தருமே வில்பதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

வடகாசி புண்ணியவாசம் காலபைரவ தரிசனம் பலன் தருமே வில்பதளம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.
Read 9 tweets
Nov 21
#நமசிவாய

🌹"நமசிவாய' என்பதன் பொருள் என்ன..!!

'நமசிவாய' என்பதற்கு, சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். 

நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அகம் மற்றும் புறச்சாதனங்கள் :

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள்.

திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். 

திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம்.
இம்மந்திரமானது, உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால், நம்முள் இருந்தே நமக்குப் பயன் தருவதாக இருக்கும். 

மந்திரங்கள் பல இருந்தாலும், அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(