அன்பெழில் Profile picture
Nov 23, 2022 10 tweets 3 min read Read on X
#செளந்தர்ய_லஹரி
#உருவான_வரலாறு
ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார். கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம், பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள், கீழே பூலோகத்தில் இருந்து நம் கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்து Image
இருக்கிறது. இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று பேசிக் கொண்டார்கள். திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர். அவரின் இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் Image
அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, Image
பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார். அம்பாளை நோக்கி, அம்மா இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார்.
எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார். அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே. என்னைப் பார்த்து
தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது. நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள்” என்றாள். முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்து இருந்தார்.அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 Image
ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார். இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி! முதல் 41 ஸ்லோகங்கள் மந்திர, யந்திர, தந்திர, தத்துவ ரகசியங்களைத் தெரிவிக்கின்றன. மீதி உள்ள 59 ஸ்லோகங்களில் மிகுதியான பாகம் அம்பாளின் சௌந்தர்யத்தை துதிக்கும் வர்ணனை வடிவில்
உள்ளது. சௌந்தர்ய லஹரி வியாக்கியானங்களில் மனோரமா வியாக்கியானம், அப்பய்ய தீக்ஷிதரின் வியாக்கியானம், ஸ்ரீகண்ட தீக்ஷிதர் உரை, சுதா வித்யோதினி, ரங்கதாச வியாக்கியானம் போன்ற பல உள்ளன. சௌந்தர்ய லஹரியைக் கேட்கையில் ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இதனை எழுதுவதற்கு ஆதி சங்கரருக்கு அவருடைய பரம Image
குருவே ஸ்பூர்த்தி அளித்தார்.
சிகரிணீ என்றால் பர்வதம் என்று பொருள். அதே போல் இதன் ஸ்லோகங்கள் கூட மலை மேலே ஏறுவது போலவே இருக்கும். சிகரிணீ விருத்தம் கூட ஆரோஹண வரிசையில் நடப்பது போலவே இருக்கும். உண்மையில் யோக பரிபாஷையில் பர்வதம் என்றால் சுஷும்னா நாடியின் இறுதி பாகம் அல்லது சகஸ்ரார Image
கமலம் என்று பொருள். இன்னொரு உட்பொருள் என்னவென்றால் அம்பாள் பர்வத ராஜ புத்ரி. அம்பாளை பற்றிய ஸ்தோத்திரம் சிகரிணியில் படைக்கப்படுவது சிறப்பு. இந்த சந்தஸ்ஸில் அம்பாள் எப்படி இருப்பாள் என்றால், பிறந்த வீட்டில் பெண் குழந்தை எத்தனை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பாளோ அப்படி இருப்பாளாம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 27
DMK is not giving good governance, does not care for its state even though the ruling party, all their leaders are only working for their personal gains, yet is in a good position to win elections again. How?
1. Weak opposition
2. Money for votes.
3. King in spreading lies. Image
What should BJP do to gain vote share?
1. Grass roots level work is needed.
2. keep ambulances and vehicle for carrying the dead to the cremation area, in several areas throughout the state in cities and villages and provide them free of charge to those in need. BJP party sign
and symbol must be well posted on these vehicles.
3. Hire smart, proven professionals to advice strategy to combat the upcoming state election.
4. Revamp the BJP IT cell with smart people to rebut the false narratives set by DMK IT cell and its loyal followers.
5. Spend money
Read 7 tweets
Jul 27
#தவளகிரீஸ்வரர்
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப் பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை Image
தவளகிரி என்றும் அழைப்பார்கள். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவ பெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணியImage
தலங்களை தரிசிக்க எண்ணினார். அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, தவளகிரீஸ்வரர் என்றுImage
Read 15 tweets
Jul 26
#நெல்லை_சங்கரன்கோவில்_அறியாத_தகவல்கள்
அன்னை கோமதி தவம் செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் தீரும்.
இங்கே அதிகார நந்தி தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.
இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள்Image
Image
தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டு வந்த காய்கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து Image
விரதம் இருந்தால், கண்களில் வரும் நோய்கள் நீங்கும்.
சனிதோஷம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று, இத்திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், சனி தோஷம் நீங்கப் பெறுவார்கள். சனி தோஷத்தினால் விளையும் வியாதிகளும் நீங்கப் பெறுவார்கள். புதன்கிழமை அன்று இத்திருத்தலத்தில் விரதம்
Read 14 tweets
Jul 26
#மயிலை_ஸ்ரீஆதிகேசவ_பெருமாள்
ஆதிகேசவ பெருமாள் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது. அங்கு ஆலய மூலவர்களுடன் பேயாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. அவர் திருவவதாரம் செய்தத் தலம் இது. சித்ரை புஷ்கரணி என்ற பெயரில் இருந்த நீர் நிலை காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என தற்போது Image
அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன் வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். யாகம் முடிந்துImage
விட்டால் பிருகு முனிவருக்கு தங்களை அழிக்கும் சக்தி வந்துவிடும் என்பதினால் அந்த யாகம் நடந்து கொண்டு இருந்த போது அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது. தப்பி ஓடிய ரிஷி
Read 19 tweets
Jul 25
#வனபத்ரகாளியம்மன்
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.
முன்னொரு காலத்தில் ஈசனிடம் Image
இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில் Image
அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் கோவில். வனப்பகுதிக்குள் இருப்பதால் 'வன பத்ரகாளியம்மன்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம், ஆரவல்லி, சூரவல்லி கதையோடு தொடர்பு உடையதாக கூறப்படுகிறது.

ஆண் வாடையே அறியாமல் வாழ்ந்தவர்கள், ஆரவல்லி, சூரவல்லி ஆகியோர். இவர்கள் இருவரும் மந்திரம், சூனியம் Image
Read 16 tweets
Jul 25
#சோ_விளக்கம் #இந்துமகாசமுத்திரம்

படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன்?

சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இது போன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார். “இந்த மாதிரி கேள்விகள் கேட்கப்பட Image
காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம். இதை நான் என்னுடைய பாணியில் விளக்குகிறேன். சம்ஸ்கிருதம் தமிழ் 2 மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. ஒரு சொல், பல பொருள். உதாரணம் திருக்குறள்.
மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல்
என்று எழுதியிருப்பதை தமிழ் சரியாக படிக்காத தமிழ் மேல் துவேஷம் கொண்ட ஒரு வெளிநாட்டு அறிஞர்
மகனே தன் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று அர்த்தம் கற்பித்தால் திருக்குறள் எவ்வளவு அனர்த்தம் ஆகுமோ அதேதான் சமஸ்கிருதத்தை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(