M.SivaRajan Profile picture
Nov 25 10 tweets 3 min read
#ஜெய்_ஸ்ரீராம்

வல்வில் ராமர் கோவில்
பூதங்குடி..

திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம்.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார்.

அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.

புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு.
பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார்.

இவர் யோக நரசிம்மர்.

இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது.
இந்த ராமருக்கும் மூலவர் வல்வில் ராமருக்கும் கண் திருஷ்டி பட்டு விடாதபடி இந்த நரசிம்மர் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, பக்தர்களின் உத்தியோகம், திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீர்த்து வைக்கிறார்.
காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக்கைங்கர் யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும் திருப்புள்ள பூதங்குடியைப் பொறுத்த வரை பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது.
இப்படி தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்தி மக்கிரியைகளை நிறைவேற்றிய ராமன் இத்தலத்தில் ஓய்வு கொண்டான்.

ஏற்கனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்து விட்ட சோகம் எல்லாமுமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது.
ஆகவே இந்த புள்ள பூதங்குடியில் ஓய்வெடுத்து கொண்டான்.

அந்த நிலையே சயனக்கோல ராமபிரானாக இன்றளவும் நமக்கு தரிசனம் கிடைக்கிறது.

ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்ச கதி அளித்து, அதன் பூத உடலுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ராமன் செய்ததால் இந்தத் தலம் புள்ளபூதங்குடி என்றாகியது.
ஸ்ரீரங்கம் போலவே இந்தத் தலமும் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது.

நீத்தார் கடன் நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும், வடநாட்டில் உள்ள பிரபலமான கயா தலத்தில் அதனை மேற்கொண்டால் என்ன நற்பலன்கள் கிட்டுமோ
அந்தப் பலன்கள் எல்லாம் கொஞ்சமும் குறைவின்றி, இந்தத் தலத்தில் மேற்கொள்பவர்களுக்கும் கிட்டும்..

அமைவிடம்..

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைக்காவூர் செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புள்ள பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது வல்வில் ராமர் கோவில்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 26
#ரம்பா_திரிதியை

இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !

ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற  நன்னாளே ரம்பாதிரிதியை.

இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை. Image
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’

இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.

தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
Read 37 tweets
Nov 26
#பஞ்ச_வர்ணேஸ்வர_சுவாமி

குறைகளை தீக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் :*

திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில், ஈக்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். Image
இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமான் காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் மற்றும் மாலை நேரம் என ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் காட்சியளித்து, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதால் இப்பெருமானுருக்கு ‘பஞ்சவர்ணேஸ்வரர்' என்பது திருப்பெயர்.
இந்த சிவலிங்கப் பெருமான் அமிர்தமயமானவர் என்பதால் இவ்வாறு நிறம் மாறிக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, சிவலிங்கத் திருமேனி கரிய நிறத்தில் வழுவழுப்புடன் காணப்படும்.

ஆனால், இங்குள்ள மூர்த்தி கருப்பும் வெள்ளையு மாய், மேலிருந்து கீழாகக் கோடுகள் பதிந்து காட்சியளிக்கிறார்.
Read 6 tweets
Nov 26
#கிருஷ்ணர்_கூறிய_நீதிக்கதை

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். Image
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன்.

அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையா சமைப்பது,
அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
Read 11 tweets
Nov 26
#குற்றம்_பொறுத்த_நாதர்

*முல்லை வடிவில் அமைந்த தலைஞாயிறு கொகுடிக்கோயில்*

மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் திருக்கருப்பறியலூர் உள்ளது.

இத்தலம் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்குகிறது. Image
இங்குள்ள ஆலயம் கொகுடிக்கோயில் என்று பெயர் பெறும்.

கொகுடி என்பது ஒருவகை முல்லை.

இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது.

சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது.

பிராகாரத்தில் சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.
Read 11 tweets
Nov 26
#ஸ்வாமி

*ஸ்வாமி என்றால் என்ன?*_

ஸ்வாமி என்றால் என்ன? 'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று
அர்த்தம்.

'ஸ்வம்' என்பதே தெலுங்கில் 'ஸொம்மு' என்றாகியிருக்கிறது. 'ஸொம்மு'
என்றால் 'சொத்து'.

ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. Image
கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் 'தேவஸ்வம்' என்கிறார்கள் அல்லவா?
உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு

குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை 'உடையவர்' என்றே சொல்கிறார்கள்.
'ஸ்வாமி' என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன்.

எந்தச் சொத்து? சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான்.

உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடமையாகும்.

அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.
Read 8 tweets
Nov 26
#நந்தி_பகவான்

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நந்திகள் :

எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது.

அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது. Image
இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.
சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது.

கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(