M.SivaRajan Profile picture
Nov 26 11 tweets 3 min read
#கிருஷ்ணர்_கூறிய_நீதிக்கதை

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.

கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன்.

அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையா சமைப்பது,
அவரை பிரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது.

அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான்.
தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர்,

அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார்.

அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..
அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார்.

ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.

அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.

அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியது தான்.

சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.
ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.

அப்புறம் உனக்கு கண் எதற்கு?

அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது.
அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்.

#பகவான்_ஸ்ரீ_கிருஷ்ணர்

#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா

#கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 27
*ஏழுமலையானுக்கு கெளஸ்துப மாலை எதற்கு?*

தினமும் நாம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் ‘சாந்தாகாரம் புஜக சயனம்...’ பாடலைச் சொல்லி வழிபட்டு வருகிறோம் எனினும் அதற்கான பொருள் தெரியாது.

அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? Image
‘சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேசம்
விஸ்வாகாரம் ககன சத்ருசம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்’

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வரிகள்.
பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம்.

அவர் புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம்.

தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக் கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம்.

அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம்.
Read 10 tweets
Nov 27
அகிலாண்டேசுவரியின் காதில் இரண்டு தோடுகள் போட்டிருப்பதன் ரகசியம்...!

திருவானைக்காவல் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம். Image
பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்)தலமாக விளங்குவது திருவானைக்காவல். மூலவர் ஜலகண்டேசுவரராகவும்,
அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

வராகி அம்சமான அகிலாண்டேசுவரி, ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.
எனவே,பூஜை செய்பவர்களும்,பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.
Read 7 tweets
Nov 27
#நவகிரக_மந்திரம்

*ஒன்பது நவகிரகங்களுக்கும்*
*ஒரே மந்திரம்*

நமது வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கு நவகிரகங்களின் முக்கிய பங்கு உண்டு.

நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் நாம் நமது வாழ்வில் சரியான இடத்தில் இருப்போம்.
சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் இருக்கும்.

அதனால் தேவையற்ற பல பிரச்சனைகளும் வரும்.

அந்த தோஷங்களை போக்கி வாழ்வை சிறப்பாக மாற்ற உதவும் நவகிரக மந்திரம் ஒன்றுண்டு.
நவகிரக மந்திரம்

‘ஓம் ஹரீம் ஆதித்யாய ச

சோமாய மங்களாய புதாயச

குரு சுக்கிர சனிப்யச்ச

ராகவே கேதவே நமக.’

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிப்பது நல்லது.

இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் ஒரு சேர ஒன்பது நவகிரகங்களின் அருளை பெற முடியும்.
Read 5 tweets
Nov 27
#லட்சுமி_நாராயணர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.

இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது. Image
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.

குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
Read 8 tweets
Nov 27
#கங்கையில்_நீராடிய_புண்ணியம்_பெற

* சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தஞ்சை பெரியகோவில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது.

இந்த தீர்த்தங்களில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியம் வந்தடையும். Image
* திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு பெற்றது.

இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் மூழ்கி எழுந்த பலன் உண்டாகும்.

* திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரம் என்ற இடத்தில் முக்கூடல் தீர்த்தம் என்னும்
திருவேணி சங்கமத்திற்கு சமமான தீர்த்தம் உள்ளது.

இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெற முடியும்.

* சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர்.

இங்கு சவும்யநாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது.

இந்த ஆலயத்தில் மகா கிணறு ஒன்று இருக்கிறது.
Read 5 tweets
Nov 26
#ரம்பா_திரிதியை

இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !

ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற  நன்னாளே ரம்பாதிரிதியை.

இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’

இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.

தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
Read 37 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(