அன்பெழில் Profile picture
Nov 30, 2022 13 tweets 7 min read Read on X
#திருக்கூடலூர்_வையங்காத்தபெருமாள் #ஜெகத்ரட்சகன்
மூலவர்: #வையங்காத்தபெருமாள் (#ஜெகத்ரட்சகன்) #உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்
திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதே போல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் #ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே
வழங்கப்படுகிறது. திருமால் #வராஹ அவதாரமெடுத்துப் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து #ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் பாடலும் சான்று காட்டும். பூமாதேவியை காக்கும் பொருட்டு வராஹ
அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி கொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர். ஒரு சமயம் அம்பரீஷன் என்னும் மன்னன் மிகச்சிறந்த திருமால்
பக்தனாகி கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். அவன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் ஏகாதசி அன்று அம்பரீஷனின் இடம் வந்து அவரும் துவாதசி பாரணம் செய்ய வருவதாகச் சொல்லி ஆற்றில் குளிக்க சென்றவர் பாரணை நேரம்
முடியும் வரை திரும்பி வரவில்லை. ஏலாரசி விரத மகிமை கிடைக்க அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி பாரணையை முடித்துக் கொண்டு அவர் வந்ததும் உணவருந்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நீர் அருந்தி பாரணையை இவர் வரும் முன்னே முடிக்கும் கொண்டதை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட துர்வாசர்
கோபம் கொண்டு அம்பரீஷுக்கு சாபம் கொடுக்க, மஹா விஷ்ணு தன் பக்தனுக்குக் கேடு நேர்வதைக் கண்டு பொறுக்காமல் துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது குணத்தை
நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான். பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னி ஆற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான் அம்பரீஷன். அம்பரிஷனுக்கு அருளியதால்
#அம்பரிஷ_வரதரென்றும் #வையங்காத்த_பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை. ஒரு சமயம் #பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து
மண்மேடாகி விட்டது. கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும் பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச் சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின்
சேரியில் அமர்ந்தனர். வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில் நிலா முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த #ராணிமங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக் கொள்ள தனது தளபதி கிருஷ்ண ராஜுநாயக்கருடன் படை
பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு அழிந்த கோவிலைப் பார்வையிடும் போது, சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பவன் ஓடிவந்து இறைவன் தன் சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடு செய்து தெய்வங்களை பெற்றுக் கொள்ள, எவ்விடத்தில் கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கு அருகில்
பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால் உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (#ஆடுதுறைகிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.
சென்று தரிசிப்போம். அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 8
#பக்த_பானுதாசர்
பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைடன் என்னுமிடத்தில் 1370- ல் பிறந்தவர். இதற்கு பிரதிஷ்டாபுரம் என்று பெயர். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார், எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டி இருந்தது. ஒருImage
நாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி 2 நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப் பிரகாசமாக வந்த ஒரு பெரியவர், சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு 5 நாட்கள் பால் அருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத் பக்தி, பஜனை,
ப்ரவசனம் என்று நாட்கள் நகர்ந்தன. இளைஞரானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரம் ஆனது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்துவிட்டுத் திரும்பிய அவர், அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே, சக வியாபாரிகளிடம் உடமைகளை
Read 9 tweets
Jul 8
அக்ஷதை (அட்சதை) மகிமை
க்ஷதம் என்ற வார்த்தைக்கு குத்துவது அல்லது இடிப்பது என்று பொருள். அக்ஷதம் என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி அக்ஷதை எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு அக்ஷதை தயாரிப்பது உசிதமல்ல. பூமிக்கு மேல் விளையும்Image
பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய். சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும்

Image
Image
Image
என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப் படுகிறது. அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் சொல்கிறார்கள். இப்படி
Read 9 tweets
Jul 8
#திருக்கடையூர்_அபிராமி_கோவிலின்_ஹோமங்கமள்_அவற்றின்_பலன்கள்:
அறுபதாம் கல்யாணம் என்ற உடனே நம் எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது திருக்கடையூர்தான். சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் தை அமாவாசையை முழு பௌர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச் Image
செய்த தலம். எமன் வீசிய பாசக்கயிற்றின் தடத்தை இன்றும் அமிர்தகடேஸ்வரர் மேல் பால் அபிஷேகம் செய்யும் போது பார்க்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஹோமங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை.
உக்ரரத சாந்தி பூஜைகள்
59 முடிந்து 60Image
வயது ஆரம்பம்.
ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் 120 ஆகும். இதில் பாதிவயதான 60 வயதில்தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்கள் ஆயுளை நீட்டிக் கொள்வார்கள்.Image
Read 11 tweets
Jul 7
#புன்னைநல்லூர்_கோதண்டராமர்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். மூலவர்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் சுக்றிவன் விக்ரகங்கள் Image
சாளக்கிராமக் கல்லால் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், புனிதமான சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட அனைத்து மூலவர்களையும் கொண்ட ஒரே ராமர் கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம Image
கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். சாளக்கிராமம் என்பது நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் சம்பந்தியானார்கள். அப்போது, நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு Image
Read 8 tweets
Jul 6
ஸ்ரீமதே ஸ்ரீவன் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் (46வது அழகியசிங்கர்)
ஜூன் 23, 1955, மன்மத வருஷம் ஆனி மாதம், திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகத்தில் கௌண்டினிய கோத்திரத்தைச் சேர்ந்த வைதீக குடும்பத்தில் விசேஷமான நாளாகும். பக்தவத்சல ஆச்சாரியார் மற்றும் ஸ்ரீமதி ராஜலட்சுமிImage
ஆகியோருக்கு 4வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரங்கராஜன் என்று பெயர் சூட்டப்பட்டு உரிய நேரத்தில் முறையான வேத சம்ஸ்காரம் செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் தந்தை ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (பேஷ்கர்) இருந்தார். குழந்தை தாய்வழி
மற்றும் தந்தைவழி வைதீகர்களின் அசாதாரண பரம்பரையைச் சேர்ந்தது. தந்தை வழி தாத்தா, திருமக்கோட்டை இச்சம்பாடி கிருஷ்ணமாச்சாரியார் புகழ்பெற்ற ப்ருஹஸ்பதி & பிரயோகங்களில் முன்னணி அதிகாரியாக இருந்தார். தாய்வழி தாத்தா பருத்திச்சேரி வெங்கடாச்சாரியார் 40 மற்றும் 41 ஆம் அழகியசிங்கர் காலத்தில்
Read 46 tweets
Jul 6
#பூரி_ஜெகன்னாதர்_கோவில்_மகாபிரசாதம்
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை 7 ஜூலை 2024

ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம் எனவே இங்கு மதிய உணவு மிகவும் தடபுடலான விருந்தாகசமைக்கப் Image
படும். இங்கு சமைக்கும் முறையே வித்தியாசமானது. பூரி ஜெகநாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. அத்துடன் பாரம்பரியம் மிக்கது. கோயிலின் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது. இங்கு 56 வகையான சைவ உணவுகள் சமைக்கப் படுகின்றன. கங்கா, யமுனா Image
எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு மண் பானைகளில் சமையல் செய்யப்படுகிறது. இங்கு விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக 7 மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. அப்படி Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(