#பக்குவம்

தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு வாகனத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.
அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர்.

சில சமயம் பலாப்பழமும்.

வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார்.

மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது,
ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.

ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.

கோபத்தோடு முகம் சிவக்க,
அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு,
வேகமாக சென்று விட்டார்.
என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும்,
அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.

ஸ்கூட்டர்,
அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது.
முகத்தில் வருத்தத்துடன்,
உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி சென்றார்.

இது நேற்று நடந்தது.
இன்று அதே நேரத்தில்,
அங்கு எனக்கு இருக்கும் சூழ்நிலை. அவரிடம் பலாச்சுளைகளை வாங்கிக் கொண்டிருந்தேன்.

எனக்கு சுளைகளை கவரில் வைத்து கொடுக்கும் போது கூட,
தெருவையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு.
அதே பெண் தூரத்தில் ஸ்கூட்டரில் வருவதை பார்த்ததும், ஒரு நிமிஷம் சார்,
என்று என்னிடம் கூறிவிட்டு வந்து கொண்டிருந்த பெண்ணை நிறுத்தச் சொல்லி கையசைத்தார்.
அந்த இளம் பெண்ணும் முகத்தில் சற்று கலவரத்தோடு,
நேற்று திட்டியதற்கு சண்டை போடப் போகிறாரே? என்று வண்டியை நிறுத்திவிட்டு, என்ன? என்று கோபமாக கேட்டாள்.

நான் கூட நேற்று நடந்ததற்கு ஒரு சத்தம் போடப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் நடந்தது மனதை நெகிழ வைத்தது.
தாயி, நேற்று போன அவசரத்தில் இதை தவற விட்டு விட்டு போய் விட்டாய்" என்று விலையுயர்ந்த செல்போனை தன் மடியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

அந்த இளம்பெண்ணுக்கு பேச்சே வரவில்லை.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு

"ஐயா இந்த போனை தொலைத்தில் இருந்து நிம்மதியே இல்லை.

நான் பேங்கில் பணிபுரிபவள்.
முக்கியமான நெம்பர்ஸ் எல்லாம் இதில்தான் இருக்கிறது.
மிக்க நன்றி" என்று கூறிவிட்டு கண் கலங்கினார்.
நேற்று அவ்வளவு அவமரியாதையாக பேசி இருக்க கூடாது. கொஞ்சம் டென்சன்,
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விட்டேன்" என்று கைகூப்பினாள்.

அட விடு தாயி.

எல்லாருக்கும் கோபம் வர்றதுதான்.

இதை போய் பெரிசுபடுத்திக்கிட்டு, ஜாக்கிரதையாக போ தாயி" என்று அன்போடு அனுப்பி வைத்தார்.
நேற்று அப்படி திட்டிய பெண்ணை, நாலு வார்த்தை கேட்டிருக்கலாமே" என்றேன்.

சின்ன பொண்ணு சார்.
இன்னும் கல்யாணம், காட்சி, குழந்தைன்னு ஆலவிருட்சமா வாழ வேண்டிய பொண்ணு சார்.

வயசாயி பக்குவம் வந்தா எல்லாம் சரியாயிடும்.
எனக்கு பேத்தி வயசு.
என் பேத்தியா இருந்தா சண்டை போடுவேனா?

நல்லா இருக்கட்டும் சார்.

நம்மை சுத்தி எல்லோரும் மனுஷங்கதான் சார்.

இருக்கிற வரைக்கும் அன்பா பாசமா இருந்துட்டு போவேமே." என்றார்.
என்னால் பேசவே முடியவில்லை.
அசந்து விட்டேன்.

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்..

#படித்ததில்_பிடித்தது

#பக்குவம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Dec 2
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
சென்னையில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலமான
மயிலாப்பூரின் காவல் தெய்வமான
கோலவிழிஅம்மன் ( பத்ரகாளிஅம்மன்) திருக்கோயில்:

1 Image
சென்னை மாநகரின் மயிலாப்பூர் பகுதியில் வீற்றிருப்பவள்தான் கோலவிழி அம்மன். அருள்நிறைந்த அழகிய விழியால் ஆட்சி செய்யும் இந்த அன்னை மயிலாப்பூரின் கிராமதேவதை என போற்றப்படுகிறாள்.

2
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்,கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
3
Read 37 tweets
Dec 1
*தமிழகத்தில் உள்ள முக்கியமான குரு பரிகார தலங்கள்*

ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன.
குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.
தென்குடி திட்டைதிட்டை திருத்தலம்,

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும்.
Read 23 tweets
Dec 1
விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்...

பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை. Image
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (அதாவது சிவபெருமான்) தான் உச்ச சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக கருதப்படுகின்றனர். இந்தியா, நேபால் மற்றும் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த மூன்று கடவுள்களுக்கும் பல கோவில்கள் உள்ளது.
சிவபெருமானுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். அதேபோல விஷ்ணுவும் பிரம்மனும் கூட இந்து மதத்தில் மிக புகழ் பெற்றகடவுள்கள்தான்.

காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார்.
Read 16 tweets
Dec 1
*சகல சவுபாக்கியங்களும் அருளும் சொர்ண காலபைரவர்*

இந்த ஆலயத்தின் கருவறையில் கற்பக விருட்ச மரத்தின் கீழ், வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்டபடி காலபைரவரும், அவருக்கு அருகில் இடதுபக்கம் பைரவி தேவியும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
இது போன்று பைரவரும், பைரவியும் ஒரே கருவறையில் இணைந்து அமர்ந்தபடி காட்சி தரும் ஆலயம் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள்.
நான்கு கரங்களுடன் அருளும் சொர்ண கால பைரவர் தன்னுடைய மேல் இரு கரங்களில், நவ நிதிகளில் இருபெரும் நிதிகளாக விளங்கும் சங்கநிதி, பத்மநிதிகளை தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களும், அபய, வரத முத்திரைகளை காட்டுகின்றன.
Read 13 tweets
Dec 1
*வெள்ளை நிற லிங்கம்! அரிய தரிசனம் நல்கும் ஆச்சர்ய பால்வண்ணநாதர் ஆலயம்.*

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவப்புரியில் அமைந்துள்ளது.

1
இங்கிருக்கும் மூலவருக்கு பால்வண்ணநாதர் என்றும் அம்பாளுக்கு வேதநாயகி என்றும் பெயர். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். 

2
ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. அதில் ஊன்றீஸ்வரர் மற்றும் மின்னொளி அம்மன் சந்நிதி முதன்மையானதாக கருதப்படுகிறது.

3
Read 10 tweets
Nov 30
*கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார்*

நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார்.
வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(