புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமெஸானில் வெளியாகியிருக்கிறது 'வதந்தி'.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனை இழந்த ஆங்கிலோ - இந்தியப் பெண்ணான ரூபி (லைலா), தன் மகள் வெலோனியை (சஞ்சனா) மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கிறாள்.
ஆனால், ஒரு நாள் வெலோனியின் சடலம் வேறெங்கோ கிடைக்கிறது. வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குடிகார இளைஞன், அவளைக் காதலித்த இளைஞன், ஒரு காதாசிரியர் (நாசர்), நடுக்காட்டில் வசிக்கும் மூன்று பேர் என சந்தேக வலை பலர் மீது படிகிறது.
இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் துணை ஆய்வாளரான விவேக் (எஸ்.ஜே. சூர்யா). வழக்கு ஒரு கட்டத்தில் காவல்துறையால் முடித்துவைக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தொடர்ந்து உண்மையான கொலைகாரனைத் தேடுகிறார் விவேக். அது அவருக்கு ஒரு obsession ஆகவே மாறிவிடுகிறது.
இதனால் குடும்பத்திலும் வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். முடிவில் கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை.
குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதைவிட, ரஷோமான் பாணியில் பல்வேறு நபர்களின் பார்வையில் ஒரு கொலையைப் புரிந்துகொள்ள.....
வைப்பதுதான் இயக்குநரின் நோக்கம்போலவே கதை நகர்கிறது.
ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஏகப்பட்ட சுவாரஸ்யமான திருப்பங்களோடு கதை நகர்கிறது. மொத்தமுள்ள எட்டு எபிசோட்களில் ஏழாவது எபிசோடைத் தவிர மற்ற எபிசோட்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்கின்றன.
ஆனால், இந்த படத்தில் வெலோனி குறித்த, ரூபி குறித்த சில சித்தரிப்புகள் மிக sickஆக இருக்கின்றன. குறிப்பாக, ஏழாவது எபிசோடில் வெலோனி குறித்த காட்சிகள், அதற்கு முன்பு அந்தத் தொடர் ஏற்படுத்தியிருந்த பாசிட்டிவான எண்ணத்தையே மாற்றும் வகையில் இருக்கின்றன.
மாநாடு படத்திற்குப் பிறகு இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது எபிசோடில் மனைவியுடன் அவர் பேசும் காட்சி அட்டகாசம். தொடரில் இவரைவிட சிறப்பாக நடித்திருப்பது வெலோனியாக வரும் சஞ்சனா. லைலா, நாசர் ஆகியோரும் தொடரில் உண்டு.
வீக் எண்டிற்கு நல்ல சாய்ஸ்தான். மொத்தம் எட்டு எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக முக்கால் மணி நேரம். ட்ரை பண்ணுங்க.
நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளிவந்த பழங்கால Docudramaகளில், அலெக்ஸாண்டர்: தி மேக்கிங் ஆஃப் எ காட், குயின் க்ளியோபாட்ரா ஆகியவை மிக முக்கியமானவை. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் மற்றொரு docudrama தொடர்தான் Testament: The Story of Moses.
(1/8)
பாரோக்கள் ஆளும் எகிப்தில் துவங்குகிறது கதை. மோசஸ் பிறந்தது, பாரோக்களின் அரண்மனையில் வளர்ந்தது, பிறகு தனது எகிப்தியர் ஒருவனைக் கொலைசெய்ததால் தேடப்பட்டு, எகிப்திலிருந்து வெளியேறி மீடியான் என்ற இடத்தில் வசிப்பது, அங்கே சினாய் மலையில் கடவுளைச் சந்திப்பது,...
(2/8)
கடவுளின் ஆணையால் பாரோவிடம் அடிமையாக உள்ள தனது மக்களை விடுவிப்பது என்ற கதையை மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆபிரஹாமிய மதங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பவர் மோசஸ். டோரா, விவிலியம், குரான் ஆகிய மூன்று புனித நூல்களிலும் மோசஸின் கதை இருக்கிறது.
(3/8)
சிந்துச் சமவெளி குறியீடுகள் சொல்வது என்ன? விடுபடும் புதிர்
-------------------------------
சிந்துச் சமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது நூறாண்டுகளுக்கும் மேலாகவே புதிராகவே இருந்த நிலையில், ஆய்வாளர் ஒருவர் அந்த குறியீடுகளைப் படித்துள்ளார்.
(1/10)
சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளைப் பொறுத்தவரை அவை ஒரு மொழியின் எழுத்துகளா அல்லது மொழியல்லாத குறியீடுகளா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மென்பொருள் பொறியாளரான பஹதா அன்சுமாலி முகோபாத்யாய், இவை வணிகக் குறியீடுகள் என்று கண்டறிந்திருப்பதாகக் கூறுகிறார்.
(2/10)
இது தொடர்பாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை 'Semantic scope of Indus inscriptions comprising taxation, trade and craft licensing, commodity control and access control: archaeological and script-internal evidence' நேச்சர் குழும இதழில் வெளியாகியுள்ளது.
(3/10)nature.com/articles/s4159…
ஜவஹர்லால் நேரு: இந்திய வானின் துருவ நட்சத்திரம்
---------
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 30 லட்சம் பேரைக் காவுகொண்ட பஞ்சத்தின் நினைவுகூட ஆறவில்லை. 1950. முதல் ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டது. விவசாயத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ய முடிவெடுத்தார் முதல் பிரதமர் நேரு.
(1/25)
மூன்று மிகப் பெரிய அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டது: 1. பக்ரா நங்கல், ஹிராகுட், நாகார்ஜுன சாகர். இப்போது பக்ரா நங்கல் அணை ஒரு கோடி ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது. 1,500 மெகா வாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
1949ல் அமெரிக்காவில் உள்ள...
(2/25)
மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு விஜயம் செய்த நேரு, அதே போன்ற உயர்கல்வி அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க நினைத்தார். இதில் மௌலானா ஆஸாத்தின் ஊக்கமும் சேர்ந்துகொள்ள ஐஐடிக்கள் பிறந்தன. நேருவின் காலத்திலேயே காரக்பூர், பம்பாய், மெட்ராஸ், கான்பூர்,...
(3/25)
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது.
(1/9)
இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(2/9)
அந்த அளவுக்கு அந்த பட்ஜெட் பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது.
வி.பி. சிங் தலைமையிலான அரசு, சந்திரசேகர் தலைமையிலான அரசு என இரு அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்திருந்தன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது.
(3/9)
வைகை என்ற கனவு ரயில்
------------------------
47 வருடங்களாக ஒரு ரயில், iconic ரயிலாக இருக்க முடியுமா? முடியும் என காட்டியிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ். 1977ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயிலுக்கு இன்றோடு வயது 47.
(1/7)
மதுரைக்கும் சென்னைக்கும் இடையில் பகல் நேர ரயில் வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையின் அடிப்படையில் இந்த ரயில் விடப்பட்டது.
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை ஆறு மணிக்கு மீட்டர் கேஜ் பாதையில் மதுரையிலிருந்து கொடியசைத்துத் துவக்கிவைக்கப்பட்டது வைகை.
(2/7)
ரயிலின் முகப்பில் பாண்டியர்களின் சின்னமான இணை கயல்களும் செண்டையும் பொறிக்கப்பட்டிருந்தன.
மஞ்சள் நிறத்தில் மொத்தம் 16 பெட்டிகள். ஆறு மணிக்குப் புறப்பட்ட ரயில் சென்னை எழும்பூரை மதியம் 1.05க்கு சென்றடைந்தது. மொத்தம் ஏழு மணி நேரம் 5 நமிடங்கள்.
(3/7)
பானகல் அரசர் ராமராய நிங்கர்: சீர்திருத்தவாதியான ஜமீன்தார்
---------------------------
சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமரும் பெரும் சீர்திருத்தவாதியுமான பானகல் அரசர் பி. ராமராய நிங்கரின் பிறந்த நாள் இன்று. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி... (1/11)
காளகஸ்தியில் பிறந்த ராமராய நிங்கரின் குடும்பத்தினர் காளகஸ்தி அரச குடும்பத்தோடு மண உறவு பூண்டவர்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு, மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. (2/11)
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக் கட்சி, தனது அறிக்கையிலேயே, எல்லோருக்குமான சம வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 1920 டிசம்பர் 17ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் பதவியேற்றது. (3/11)