#பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இம்மலை. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும்
சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இம்மலைமீது சிவன் தனது பாதம் வைத்ததாக வரலாறு. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாகக்
கல்வெட்டுகள் உள்ளன. இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத் தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியில் இருந்து வரும்
பாதையும் தென்மகாதேவ மங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதற்கு
அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்து உள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்
படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம், விக்ரகங்களுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில்
சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது சிரமத்தைப் பாராமல் அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்தில்
இருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப் பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான, கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று
வீசி தீராத நோயையும் தீர்க்கும். நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்து உள்ளார்கள். மலை ஏறும்போது துணைக்கு பைரவர்கள் வருகிறார்கள். இவர்கள் சித்தர்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி
நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையில் இருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர
ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம் - சூலம் மற்றும் உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக் காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம். சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம்
உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும். இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும், கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை
மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி மற்றும் அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயையும்
தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு. மலைக்கு வருபவர்கள், உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப
விமோசனம். 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஓம்' எனும் பிரணவ ஒலி கேட்பதாக இங்கு
இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஓம் என்ற ஒலி எழுப்பப்படுமென்றால் அந்த இடம் யோகம் செய்ய உகந்த இடமாகும். அது மட்டுமின்றி கோயில் கருவறையை போன்ற இடம் இதுவாகும். மனதில் குறையுடன் வந்தால் மன அமைதி வந்து வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உடலில் சக்தி உள்ள போதே இது போன்ற இடங்களுக்கு போய் வர வேண்டும். ஆன்மீக தேடல் உடையோர் செல்ல வேண்டிய தலம் இது.
திருசிற்றம்பலம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பனம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான ஆலயங்கள்:
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையான ஆலயங்கள், தமிழகத்தில் ஏராளம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீகாமாட்சி, திருவொற்றியூர் மற்றும் ஸ்ரீமூகாம்பிகை ஆகிய புண்ணியத் தலங்கள் புகழ்பெற்றவை! இங்கெல்லாம், ஸ்ரீசக்ரத்துக்கு சக்தியூட்டி பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதுகளை அலங்கரிக்கும் ஸ்ரீசக்ர ஆபரணத்தின் தெய்விக கிரணங்கள், பக்தர்களின் குறை தீர்க்கும் ஆற்றல் மிக்கது!
பாஸ்கரராயர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து, தஞ்சையில் வாழ்ந்த மகான்- ஸ்ரீ பாசுரானந்தநாதர் எனும் பாஸ்கர
ராயர். இவர் வாழ்ந்த தலம், தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜபுரம் எனும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது. இங்கே பாஸ்கர ராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸனை மற்றும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.
#நற்சிந்தனை
மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப் பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு
வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் 3 வருடங்களாக தொடர்ந்து 15 வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்து இருந்தது. பஞ்ச
பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் என்ற ஒரு மகாபேரி மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை
#HappyFathersDay
அன்னையர் தினத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தந்தையர் தினத்துக்கு எப்பவும் இருப்பதில்லை. குடும்பத்துக்காக உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் இருந்தால்
போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து
கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுக்க வேண்டும். பென்ஷன் வராதவராக இருந்தால் அவர் கைச் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். பேரன் பேத்திகளை அவரிடம்
#பட்டீஸ்வரம்_துர்க்கை
இங்கு வந்து துர்கைஅம்மனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள், நன்மைகள் ஏராளம்.
1.ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்
2.மன துக்கம் விலகும்
3.காரிய வெற்றி கிடைக்கும்
4.பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள்
பெண்களுக்கு விலகும்
5.குடும்ப வாழ்கை அமைதியாகும்
6.எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும்.
பட்டீஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும். காரணம் ராகு
தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில் தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது. சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் அரண்மனையைப் பாதுகாக்க 4
#சில_விஷ்ணுகோவில்களின்_சிறப்புகள்
திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.
சோளிங்கரில் நரசிம்மர்
யோக நிலையில் மலை மேல் காட்சித் தருகிறார். சப்த ரிஷிகள் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் கடிகாசலம் என்று வழங்கப்
படுகிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டு உள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும்
#ஆனிமாத_விசேஷங்கள்
இன்று ஆனிமாதப் பிறப்பு.
உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில்
சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம்/ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.
ஆனித்திருமஞ்சனம்!
சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின்
நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப் படும். ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.