பிராமண உயிர்கள்
.
முந்தாநாள் ஜேஎன்யூ வளாகத்தில் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' 'பிராமண, பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்', 'பழி வாங்கியே தீருவோம்' போன்ற வாசகங்கள் கொண்ட சுவர்கள் சமூக ஊடகங்களை அலங்கரித்தன.
விளைவு, நேற்று #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக் உலா வந்து மதியத்துக்குள் டிவிட்டரில் முன்னணியில் டிரெண்டிங் ஆனது. இந்த ஹேஷ்டேக் ஒரிஜினல் இல்லை. அமெரிக்காவில் அப்பாவி கறுப்பர்கள் போலீசாரால் கொலையுறுவதை கண்டிக்க துவங்கப்பட்ட #BlackLivesMatter ஹேஷ்டேக்கின் உல்டாதான்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் 'பிராமணர்கள் இந்தியாவின் யூதர்கள்' என்று பதிவுகள் இடத் துவங்கி விட்டார்கள்.

எந்த ஒரு உயிரும் பறிக்கப்படக் கூடாது என்பதில் நம்மில் பெரும்பாலானோருக்கு மாற்றுக் கருத்து இருக்காது.
அதிலும் குறிப்பாக தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் உயிர்கள் பிரத்தியேகமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒரு ஹேஷ்டேக் போட்டுப் புலம்பும் அளவுக்கு பிராமணர்கள் இந்தியாவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்களா?
பல ஒடுக்குமுறைக்கு ஆளாகி, ரோமன், எகிப்தியர், முஸ்லிம்களால் வன்முறைகளுக்கு ஆளாகி சொந்த ஊரிலேயே வாழ இயலாமல் துரத்தப்பட்டு ஐரோப்பாவில் அகதிகளாக வாழ்ந்து பல நூறாண்டுகள் கேவலமாக நடத்தப்பட்டு பின்னர் அங்கும் கொடும் வன்முறைகளை, இ*ன ஒ*ழிப்பை எதிர்கொண்ட யூதர்களும் பிராமணர்களும் ஒன்றா?
இந்தியாவில் வரலாற்று ரீதியாக பிராமண உயிர்கள் சிறப்புப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்திருக்கின்றன. யாராலும் சுலபமாக கை வைத்து விட இயலாத லெவலுக்கு கெத்து காட்டி வந்தவர்கள் பிராமணர்கள். அதற்கு முக்கிய காரணம் பிரம்மஹத்தி தோஷம் எனும் சாபம்.
பிராமணர்களை கொலை செய்பவர்களுக்கு இந்தப் பாவம் வந்தடையும். அது அவர்களுக்கும் அவர்கள் வம்சாவளிகளுக்கும் தீரா வலிகளை ஏற்படுத்தும் என்று இந்துப் புனித நூல்கள் விவரிக்கின்றன. ரிக் வேதத்தில் விரித்ரா எனும் கொடூரனை இந்திரன் கொலை செய்கிறான்.
விரித்ரா ஒரு பிராமணன் என்பதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து பக்கவாதம் வந்து நகரவே இயலாமல் பாதிக்கப்படுகிறான். பின்னர் பிரம்மா தலையிட்டு அதை சரி செய்ய வேண்டி வருகிறது. (இந்தக் கதையில் அந்த பிரம்மஹத்தி ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள் என்பது கூடுதல் விசேஷம்!)
போலவே அரை-பிராமணன் ராவணனைக் கொல்லும் ராமனையே பிரம்மஹத்தி தோஷம் பீடித்து அதன் மூலம் பல பரிகாரங்கள் செய்ய வேண்டி வந்தது என்பது ஐதீகம். பிரம்மாவின் ஒரு தலையை கொய்த சிவனைக் கூட அந்த தோஷம் விடவில்லை.
பல்வேறு புராணங்களிலும் இலக்கியங்களிலும் இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டே வந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டு இலக்கியமான 'பத்மாவத்' தில் ராணி பத்மாவதி குளிக்கும் போது ராஜகுரு அவளை மறைந்திருந்து ரசித்து விடுகிறான். அது ராஜாவுக்கு தெரிய வந்து விட அந்த ராஜகுருவை நாடு கடத்தி விடுகிறான்.
'என்னை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து விடக் கூடாது என்பதால்தான் உன்னை சும்மா விடுகிறேன், இல்லையேல் இந்நேரம் உன் தலை தரையில் வீழ்ந்து இருந்திருக்கும்!' என்று எச்சரிக்கிறான். என் அப்பாவே கூட என்னை திட்ட நேர்ந்த தருணங்களில் பயன்படுத்திய ஆகப்பெரிய வசை 'போடா பிரம்மஹத்தி' என்பதுதான்.
இப்படி பல்வேறு வகைகளில் பிராமண உயிர்கள் பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றன. சும்மா அப்படி இப்படியெல்லாம் பிராமணர்கள் மீது கை வைத்து விட முடியாது என்ற லெவலில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் புராணங்கள்தானே என்று சொல்லலாம். ஆமாம் இவை எல்லாமே வெறும் கற்பனைக்கதைகள்தான்.
ஆனால் பல்வேறு விதங்களில் கதைகள் நிஜ வாழ்வை பிரதிபலிக்கவே செய்கின்றன. அவற்றைத் தாண்டியும் பிராமணர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகள் இந்தியாவில் அரங்கேறியதாக தகவல்கள் இல்லை.
அப்படி எல்லாம் இல்லை, வரலாறு முழுக்க பிராமணர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் அவற்றுக்கான ஆதாரங்களை புராணங்களில் அல்லது வேறு வரலாற்று நூல்களில் இருந்து எடுத்துக் கொடுக்கலாம்.
சுதந்திரத்துக்குப் பின்னும் கூட பிராமணர்களுக்கு எதிராக இன ஒழிப்பு மாதிரி பெரிய முயற்சிகள் நடந்ததாக தகவல் இல்லை. பிராமணர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பெரியார் கூக்குரல் விடுத்தாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அவரைக் கடுமையாக விமர்சிக்கும் பிராமணர்களே கூட புகார் வைக்கையில் மயிலாப்பூரில் சிலர் பூணூலை அறுத்தார்கள். திருநெல்வேலியில் பலர் குடுமியைப் பிடித்து இழுத்தார்கள் என்றுதான் சம்பவங்களை சொல்வார்கள்.
ஒரு பக்கம் பிராமணர்களுக்கு எதிரான வன்முறைகள் இப்படி சில்லறைத்தனமாகவே இருந்தது. மறுபக்கம் பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களின் மக்கள் தொகையை விட பற்பல மடங்கு அதிகமாக இன்றளவும் இருக்கிறது.

இந்தியாவில் எந்தத் துறையிலும் பிராமணர்கள் ஆதிக்கம் சுமார் 30-35% வரை இருக்கிறது.
இந்தியாவின் செல்வங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் பிராமணர்கள் வசம் இருக்கிறது. சராசரி ஆண்டு வருமானத்தில் ஜெயின்களுக்கு அடுத்து பிராமணர்கள்தான் இடம் பெற்றிருக்கின்றனர். வருவாய் சமநிலையின்மை பிராமணர்கள் மத்தியில் மிகவும் குறைவாக இருக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் பிராமண சமூக முன்னேற்றத்துக்காக (!) பிரத்தியேகமாக அரசுத் துறை வைத்து சிறப்பு திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டு வர முயலும் அரசு கூட முன்னேறிய சாதியினருக்கு மிக அதிக வரம்பு வைக்க வேண்டிய நிலைதான் நிலவுகிறது.
அப்படிப்பட்ட பெரும் செல்வாக்குடன்தான் இன்றும் பிராமணர்கள் வாழ்கின்றனர். அதுவும் எவனோ ஒரு மூடன் சுவற்றில் கிறுக்கி விட்டான் என்பதையே டிவிட்டரில் டிரெண்டிங் செய்யக் கூடிய அளவில் அவர்கள் செல்வாக்கு இருக்கிறது.
இதெல்லாம் போதாது என்று யூதர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டு அங்கலாய்த்துக் கொள்ளும் தடித்தனமும் கூட பிராமணர்களுக்கு இருக்கிறது.

மாறாக, பெண்கள், ஒடுக்கப்படும் சமூகத்தினர் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
தேசிய குற்றவியல் ஆவண அறிக்கையில் Crime Against Women, Crime Against Dalits, Crime Against Scheduled Tribes என்று தனியாக செக்சன்கள் உள்ளன.

2021 ஆண்டறிக்கையின்படி ஒரே ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான 51,000 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (உபியில் மட்டுமே 13,000.)
பட்டியலின ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 9,000. இவை இரண்டுமே முந்தைய ஆண்டுகளில் இருந்து அதிகரித்துள்ளன. வரதட்சிணை இறப்பு, குடும்ப வன்முறை, வன்புணர்வு, பாலியல் கொடுமைகள் போன்ற பெண்களுக்கு எதிராக 4,28,000 குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. இது சென்ற ஆண்டை விட 15% அதிகம்.
இந்தியாவில் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, ஆதிவாசிகளுக்கு எதிரான சுவர்க்கிறுக்கல்கள், இலக்கியங்கள், திரைப்படங்கள், புனித நூல்களை கணக்கிட ஒரு கமிட்டி பத்தாது. அதற்காக பிரத்தியேகமாக ஒரு படையை நியமிக்க வேண்டி இருக்கும்.
ஆகவே, பிராமணர்களே, சும்மா எவனோ ஒரு லூசு சுவரில் எதையோ கிறுக்கி விட்டான் என்று பயப்படாதீர்கள். நூற்றாண்டுகளாக அரசர்கள் பிராமணர்களைப் போற்றிப் பாடும் கலாச்சாரம் இன்னமும் முடிவுக்கு வந்து விடவில்லை. நமது அரசுகள் அந்த ஆளை விட மாட்டார்கள்.
அவன் கிடைக்கவில்லை எனினும் வேறு ஒரு அப்பாவியைப் பிடித்து உங்கள் முன் நிற்க வைத்து அவனுக்கு தண்டனை அளித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். பெண்கள், தலித், ஆதிவாசிகளுடையது போல அற்பமானதா என்ன பிராமண உயிர்?
இந்திரனையும் ராமனையுமே நீங்கள் சும்மா விடவில்லை. ஒரு தில்லிக்கார லூசுப் பயலை விட்டு விடுவீர்களா? போங்க, ரொம்ப டென்ஷன் ஆகாம போய் உங்கள் சிம்மாசனத்தில் திரும்ப உட்கார்ந்து கொள்ளுங்கள். யாராவது தூக்கிக் கொண்டு ஓடி விடப் போகிறார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sridhar Subramaniam

Sridhar Subramaniam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sridharfc

Dec 4
யாருமே கேக்கலையே!
====
.
'பிராமணர்களுக்கு எதிரான வன்முறைகள்,' என்றால் பண்டிட் படுகொலைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

பண்டிட்டுகள் பிராமணர்கள்தான். ஆனால் அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்துக்காக குறி வைக்கப்படவில்லை. இந்துக்கள் என்று அடையாளப்படுத்திதான் குறி வைக்கப்பட்டார்கள்.
இன்றளவும் இந்துத்துவர்களின் விவாத ஸ்டாக்கில் இருக்கும் முக்கிய ஆயுதம் 'பண்டிட்டுகள் தாக்கப்பட்டார்களே என்பதுதான். காரணம் இந்துக்களுக்கு எதிராக இந்தியாவிலேயே நடந்த ஆகப்பெரிய வன்முறை அது. எனவே இப்போது திடீரென்று அதனை பிராமணர்கள் கணக்கில் வரவு வைக்கக் கூடாது.
அது ஒரு புறம் இருக்க, பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறைகளைப் பேசும் யாருமே அதன் பின் நடந்ததை பேசுவதில்லை. பண்டிட் படுகொலையை இந்திய அரசு எதிர்கொண்டது போல சுதந்திர இந்தியா வேறு எந்தக் கலவரத்தையும் எதிர்கொண்டதில்லை. அது பற்றி எனது புத்தகம் 'ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்' பேசுகிறது.
Read 21 tweets
Dec 2
ஒரு கட்சி 27 ஆண்டுகள் இடைவெளியே இன்றி ஆட்சியில் இருந்தால் அவர்கள் பிரச்சாரத்தில் என்னென்ன விஷயங்கள் பற்றிப் பேச முடியும்? கட்டுமான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், சமூக நீதி, பெண்களின் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம் என்று பேசுவதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
50 வருடங்களில் காங்கிரஸ் இந்தியாவை நாசம் பண்ணி விட்டார்கள் என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் கட்சி, தான் 27 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தை இந்நேரம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்கி இருந்திருக்க வேண்டாமா?

ஆனால் குஜராத்தில் என்ன நடக்கிறது?
மோடியை காங்கிரஸ் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று பாஜக பேசுகிறது, ராமஜன்ம பூமியில் கோயில் கட்டும் சாதனை(!) பேசுகிறது. ராகுல் ஒரு பப்பு என்று வழக்கமான பல்லவியை பாடுகிறது. ஆட்சி குறித்து எதுவுமே பேச மறுக்கிறது. மார்பி பால ஊழல் 150 உயிர்களை பலி கொண்டது குறித்து பேச மறுக்கிறது.
Read 8 tweets
Dec 1
லட்சுமியும் கோயில் யானைகளும்
=================================
.
மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது செய்தியாகி இருக்கிறது. பக்தர்கள் யானைக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னும் சில மாதங்களில் அந்தக் கோயிலுக்கு இன்னொரு யானையை கொண்டு வந்து விடுவார்கள் என்று கணிக்கிறேன். அதற்கும் 'சித்ரா' அல்லது 'ரேவதி' என்று பெயர் வைத்து தும்பிக்கையை மக்கள் தலை மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க பயிற்சி அளித்து விடுவார்கள்.
அப்புறம் தெருத்தெருவாக போய் பிச்சை எடுக்கவும் வைக்கலாம்.

கோயில் யானை சிஸ்டம் பண்டைய நூற்றாண்டின் எச்சங்களில் ஒன்று. விலங்குகள் பற்றியும் அவற்றின் தேவைகள், உணர்வு நிலைகள், உணவுப் பழக்கங்கள் குறித்த பெரிய அறிவு எதுவும் இருந்திராத சமூகங்கள் உருவாக்கிய முறைமை.
Read 14 tweets
Nov 30
மகாவதார் பாபாஜி
=====================
.
பாபா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பரத்வாஜ் ரங்கனுக்கு ஒரு இன்டர்வியூ கொடுத்திருக்கிறார். அதில் பாபாஜி பற்றி நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டதை சிலாகித்துப் பேசி அதை மாபெரும் சாதனையாக பாராட்டி இருக்கிறார்.
அந்தப் படம் மூலம் 'மகா அவதார்' பாபாஜி பற்றி மாநிலமெங்கும் தெரிந்து கொண்டது எவ்வளவு பெரிய விஷயம் என்று கூறி இருக்கிறார்.

எனக்குப் புரியவில்லை. பாபா என்பவர் யாரும் பார்த்திராத ஒரு சாமியார். அப்படி ஒருவர் உண்மையில் இருந்தாரா என்பதே யாருக்கும் தெரியாது.
அவர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் என்கிறார்கள். வெகு சிலரின் கண்களுக்கு மட்டுமே தென்படுவார். அவர் இயேசு கிறிஸ்துவுடன் நல்ல நட்பில் இருப்பவர். நவீன உலகின் தீங்குகளை நன்கு அறிந்தவர்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(