#சிதம்பரம்_நடராஜர்
#Chidambaram_Natarajar
ஸ்ரீ சிவபெருமானை லிங்கமாக வடித்தே அனைத்து கோவில்களில் வழிபடுவது வழக்கம். சில தலங்களில் சிவ பார்வதி உருவம் வடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. அனைத்து கோவில்களிலும் உற்சவராக பார்வதி தேவியுடன் சிவபெருமான் வீதியுலா வருவார், ஆனால் மூலவரே
உற்சவராக வீதியுலா வரும்
ஒரே ஆலயம் இந்த பூலோக கைலாயம் ஆன சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம் மட்டுமே!
மூலவரான ஸ்ரீ நடராஜ பெருமானின்
வேறு பெயர்கள், திருமூலநாதர் மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன். அம்பாள் இங்கே
உமையாம்பிகை என்றும் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப் படுகிறார். இத்தலத்தின் தல விருட்சம்
தில்லைமரம் ஆகும். இந்த தலத்தின் தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
ஆகியவை. தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற மூவகையாலும் சிறந்து விளங்குகிறது இக்கோவில். ஸ்ரீ நடராஜர் ஆலயம் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிர்வகிக்கப் படுகிறது. அவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள், தீக்ஷிதர்கள், தில்லை மூவாயிரவர் என அழைக்கப் படுகின்றனர். திருமணமான ஒவ்வொரு
தீட்சிதரும் சிதம்பரம் நடராசர் கோயிலின் அறங்காவலர் ஆகவும் அர்ச்சகர் ஆகவும் உரிமை பெறுகிறார். பதஞ்சலி முனிவர் தமக்கு வகுத்துத் தந்த பூஜா பத்ததிகளின் வழியாகவே நடராஜரைப் பூஜித்து வருகின்றனர். இப்பூஜை முறைகள் பெருமளவு மகுடாகமத்தை ஒட்டியுள்ளதாகக் கூறுகின்றனர். சித் என்றால் ஞானம்,
அம்பரம் என்றால் ஆகாசம்.
சித் + அம்பரம் - சிதம்பரம் ஆகும். திருமந்திரத்தில் #திருமூலர்

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது, மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே
சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகிறது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டு இருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் #cosmic_dance என பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப் படுகிறது. இந்த தலத்தின் சிறப்பே சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கே மூலவராக
ஒரே தலத்தில் இருப்பது ஆகும். சிதம்பரம் முதலில் தில்லை வனங்கள் சூழ்ந்த காடாய் இருந்தது
ஆதலால் #தில்லை எனப் பெயர் பெற்றது. இறைவன் சிதம்பரம் தலத்தில் விராட்புருஷனின் வடிவத்தில் இருக்கிறார். திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா உந்தியாகவும், திருவண்ணாமலை மணிபூரகமாகவும்,
திருக்காளத்தி கழுத்தாகவும், காசி புருவமத்தி ஆகவும், சிதம்பரம் இருதயஸ்தானம் ஆகவும் இருக்கிறது. சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் எனும் பெரும்பற்றப்புலியூர் என்றே அழைக்கப் பட்டது. சமயக் குரவர் நால்வராலும் தேவார
பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். இக் கோலில் வழிபட்டோர் திருமூலர், பதஞ்சலி, வியாக்கியபாதர், ஜைமினிஆகியோர். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம். பஞ்ச பூதத் தலங்கள்
நீருக்காக திருவானைக்காவல்,
நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, ஆகாயத்துக்காக சிதம்பரம்,
பூமிக்காக காஞ்சிபுரம் ஆகியவை.
இத்தலத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.
ஆகையால் இத்தலம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப் படுகிறது. 108 திவ்யதேசங்களில்
இத்தலமும் ஒன்று. சிற்றம்பலம் நடராசப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம் #தப்ரசபா எனப்படும். இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதல் பராந்தகசோழன் பொன் வேய்ந்தார் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
இவருக்கு முன்
இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயில் புராணம் சொல்கிறது.
இக்கோவில் பூமத்தி ரேகையின் மையமாக உள்ளது. ஒட்டு மொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சர்வதேச ஆன்மீக அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக சில கோடி டாலர்கள்
செலவு செய்து, தீவிர ஆராய்ச்சிக்குப்பின் பூமியின் காந்த மையப்புள்ளி சிதம்பர நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாக கண்டுபிடித்தது. பஞ்சபூத கோயிகளில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் ஒரே
நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி 41 கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மனித உடலை அடிப்படையாகக் கொண்டே இந்த கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அவை,
மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.
விமானத்தின் மேல் இருக்கும்
பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு செய்யப் பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்குச் சராசரியாக 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டு மொத்த
நாடிகளைக் குறிக்கிறது.
இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்குச் சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். பொன்னம்பலம் கோவில் சற்று இடது புறமாக அமைக்கப் பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகளை பஞ்சாட்சர
படி என்று அழைக்கப் படுகிறது. அதாவது சி.வா.ய.ந.ம என்ற ஐந்து எழுத்தே அது. கனகசபை பிற கோயிலிகளில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்தக் கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது நான்கு வேதங்களைக் குறிக்கிறது. பின்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. அவை 28
ஆகமங்களையும் சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளைக் கொண்டுள்ளது. இந்த 64 கலைகளைக் குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றது. சோழ மன்னன் இரணிய வர்மன் கனவில் ஒருநாள் நடராஜர்
தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு
தில்லை நடராஜரைக் கலப்படம் இல்லாத சொக்கத் தங்கத்தில் விக்கிரகமாக உருவாக்க வேண்டும் என்று மன்னர் இரணிய வர்மன் உத்தரவிட்டார். சிலையைப் பொன்னால் செய்து தர வேண்டும் என்று சிற்பிகைளை வரவழைத்து ஒரு தூலம்
பொன்னை நிறுத்துக் கொடுத்தான். செம்போ அல்லது வேறு உலோகமோ கலக்காமல் 48 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் மன்னர் கூறினார். ஆனால் சிற்பிகள் முயன்றும் விக்கிரகத்தைச் செய்ய முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் முடிந்து விட்டிருந்தது. தில்லையில் நடராசர்
திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், கரூவூராருக்கு விக்கிரகம் செய்யும் வழிமுறைகளைச் சொல்லி வழியனுப்பினார். 48-வது நாளும் வந்ததால் சிற்பிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தனர். மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார்
போய் நின்றார்.
“கவலை வேண்டாம். மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளிடம் கூறினார்.
சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாதபோது உன்னால் எப்படி முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.
“என்னால் முடியும். இன்னும் ஒரு மணி
நேரத்தில் செய்கிறேன்” என்றார் கருவூரார். விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார் கருவூரார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அறைக்
கதவு திறந்தது. “சிற்பிகளே! உள்ளே வாருங்கள். சிலை தயாராகி விட்டது”என்றார். நடராஜப் பெருமானை பார்த்தமாத்திரத்தில். ஆச்சரியம்
அடைந்தனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தார். ஸ்ரீ நடராஜரைப் பார்த்ததும், தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ, அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை பாராட்டினார். அங்கே இருந்த அமைச்சர், தங்கத்தை பரிசோதிக்கும் அலுவலரைக் கொண்டு சிலையை பரிசோதித்தார். அதில் செம்பு கலக்கப்பட்டிருந்தது
தெரிய வந்தது. மன்னரிடம் தகவல் சொல்லி, சிற்பிகளைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டார். சிற்பிகள் நடுங்கியபடி எங்களால் தங்கத்தில் சிலை வடிக்க முடியவில்லை என தங்களிடம் உண்மையைச் கூறியிருந்தால் கூட எங்களுக்கு உயிர்ப்பிச்சை கிடைத்து இருக்கும். ஆனால், இதோ இந்த துறவிதான், இரண்டே
நாழிகையில் சிலை வடிப்பதாகச் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டார் என்றனர். மன்னனுக்கு கோபம் தலைக்கேறியது. “துறவி வேடத்தில் தகாத செயல் செய்த இந்தக் கயவனை இழுத்துச் சென்று சித்ரவதை செய்து சிறையில் அடையுங்கள். மேலும் சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் அடையுங்கள்” என்றார் மன்னர்.
போகர் தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து ஆகாய மார்க்கமாக பறந்து வந்து மன்னன் முன் நின்றார். மன்னனிடம் அசல் தங்கத்தில் சிலையை யாராலும் செய்ய முடியாது அசல் தங்கம் அதிகமான அளவில் ஜொலித்து கண்ணுக்கு கெடுதல் உண்டு பண்ணும். இந்த ஒரு தோலாக்கு தங்கத்தை வைத்துக் கொண்டு அந்த நடராஜர்
சிலையை என்னிடம் தாருங்கள் என்றார். மன்னன் தவறை உணர்ந்தார்
போகரிடம் மன்னிப்பு கேட்டார்.
போகர் மன்னரை மன்னித்து,
சிறையில் உள்ள கருவூர் தேவரை இங்கே அழைத்து வர வேண்டுகிறேன் என்றார். சிறை காவலர்கள் சிறையில் கருவூரார் இல்லை என கூறினர். போகர் கருவூரா வா என அழைக்க உடன் போகரின் காலை
வணங்கி எழுந்தார்.
ஆனந்த திருக்கூத்தினை தாமும் காண பல ஆண்டுகள் தவம் செய்த புலிக்கால் முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களுக்காக தை பூசம் குருவாரத்தோடு கூடிய சித்த யோக நன்னாள் ஒன்றில் உச்சி காலத்தில் இத் திருக்கூத்தினை ஆடியருளினார். அவரே பொன்னம்பலத்தில் ஆடி அருளும்
ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆவார். சிவகாமி அம்மையார் காண ஸ்ரீ நடராஜர் ஆடி அருளிய ஐந்தொழில் இன்பத் திருக்கூத்தினை இந்த முனிவர்கள் இருவரும் மற்றும் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள், மூவாயிரம் முனிவர் பெருமக்களும் கண்டு மகிழ்ந்த்தனர். அப்பொழுது இந்த இரு பெரும் முனிவர்களும்
இந்தத் திருக்கூத்தினை எல்லா மக்களும் எக்காலமும் காண ஆடி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க இது அன்று முதல் இன்று வரை எவ்வித இடையீடின்றி அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகிறது. நடராஜப் பெருமானின் வலது மேல் திருக்கரத்தில் உள்ள உடுக்கை உலகின் தோற்றத்தையும், அபயம் அளிக்கும் திருக்கரம்
காத்தலையும், இடது மேல் திருக்கரத்தில் உள்ள நெருப்பு அழித்தலையும், முயலகன் என்னும் பூதத்தின் மேல் உள்ள கால் மறைத்தலையும், தூக்கிய கால் முக்தி அருள் புரிதலையும் நிகழ்த்துகின்றன.
இந்த நடனம் ஐந்தெழுத்து மந்திரமாகிய #நமசிவாய என்பதைக் குறிக்கும். சுற்றியுள்ள திருவாச்சி ஓங்காரத்தைக்
குறிக்கிறது. இவர் அசைந்தால் தான் உலக உயிர்கள் அசையும். இவர் தமது ஆட்டத்தை நிருத்தும் பொழுது உலக இயக்கமே நின்றுவிடும். சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படுகிறது.
1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.

இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு 5 சபைகள் உள்ளன.

சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
கூறுகின்றன.

கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.

ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில்
இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.

தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.

நிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு
தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.

சிவன் கோவில் என்றாலே விநாயகரை வணங்கி, கோவிலின் உள்ளே செல்வது வழக்கம். முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர்
தனிச் சன்னிதி கொண்டு அருள் பாலிக்கின்றனர். சிதம்பரம் கோயிலுக்குள் திருமுறைச் சுவடிகள் இருப்பதை இங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்தாராம்.
பொள்ளா என்றால் உளியால் பொள்ளப்படாதவர், சுயம்பு என்று அர்த்தம். #பதஞ்சலிமுனிவர் பாம்பு உருவமும், மனித ரூபமும் கொண்டவர். ஆதிசேஷன்,
அதற்காக ஒரு அவதாரம் எடுத்ததே பதஞ்சலி. சிதம்பரம் கோவிலுக்கு வந்து, ஆனந்த நடனத்தை, பதஞ்சலி முனிவர் கண்டதாக கூறப்படுகிறது.
வாழ்வியலுக்கு ஆதாரமாக உள்ள, யோக சூத்திரத்தை, பதஞ்சலி அருளினார்.
#வியாக்கிரபாதர், புலி உடலும், மனித தலையும் கொண்டுள்ளார்.
புலி உடலும், மனித தலையும் கொண்டவர்
வியாக்கிரபாதர், மத்தியந்தின முனிவரின் குமாரர் வியாக்கிரபாதர். இவரின் சிறுவயது பெயர் பாலமுனிவர். இவர் சிவ பூஜை செய்வதற்காக மலர்களை கொய்து வழிபாடு செய்து வருவது வழக்கம்.
பகல் பொழுதில் அந்த மலர்களில் வண்டுகள் வந்து உட்கார்ந்து தேன் அருந்துவதால் அந்த மலர்கள் எச்சில்படுத்த படுவதால்
அதைக் கொண்டு சிவபூஜை செய்ய முடியாது என்று எண்ணினார். எனவே இவர் சிவனிடம் வேண்டி, தனக்கு புலியின் கண்ணும், புலியின் காலும் வேண்டி அதைப் பெற்றுக் கொண்டார். இரவில் புலிக்கு கண் நன்றாகத் தெரியும். அதைக் கொண்டு இரவில் தில்லைவனம் சென்று அங்குள்ள பூக்களை பறித்து வந்து வைத்துக்கொண்டு,
பகலெல்லாம் பூஜை செய்வார். இதனால்தான் இவருக்கு 'வியாக்கிரபாதர்' என்று பெயர் ஏற்பட்டது. பதஞ்சலியும், வியாக்கிரபாதரும், தங்களின் தவ வலிமையால், சிதம்பரம் கோவிலில், நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர். தேவர்கள் செய்யும் பூசையாக ஆண்டுக்கு ஆறு பூசைகள் சிதம்பரம்
கோவிலில் நடைபெறுகின்றன.
அவை: சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அஷேகம்
ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராஜ சபையில் அதிகாலையில் அபிஷேகம்
ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்
புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக
சபையில் மாலையில் அபிஷேகம்
மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜ சபையில் அதிகாலையில் அபிஷேகம்
மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்
திருவிழாக்கள் மிக முக்கியமானவை.
1. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜ சபையில் சூர்ய உதயத்திற்கு
முன் நடைபெறும் அபிஷேகம்.
2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராஜ சபையில் சூர்ய உதயத்திற்கு முன் நடைபெறும் அபிஷேகம்.

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.

கும்பகோணத்தில் இருந்து 72km.
கும்பகோணம் கடலூர்
சாலையில் , மயிலாடுதுறை சீர்காழி அடுத்து சிதம்பரம்
திருசிற்றம்பலம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@UnrollThread unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 8
#மகாபெரியவா
ஒருசமயம் ஸ்ரீமடத்தில் மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தை உடன் ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர்கள் வந்து வரிசையில நின்றதில் இருந்து பலரும் குழந்தையைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். ரொம்பவே அழகாக Image
மூக்கும் முழியுமாக இருந்த அந்தக் குழந்தையிடம் இருந்து சின்ன சிணுங்கலோ, அழுகையோ அசைவோ ஏற்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு குழந்தையின் கண்கள் திறந்த நிலையில இருப்பதை பார்த்ததும் குழப்பமாக இருந்தது. குழந்தையுடன் பெரியவா முன் வந்து நின்ற அந்தத்
தம்பதி தங்களுடைய குழந்தையை அவர் திருவடிக்கு முன்னால் தரையில விட்டனர். குழந்தை அழாமலும் சிணுங்காமலும் கிடக்க, பெற்றவர்கள் இருவரும் கதறி அழுதனர். "பெரியவா, குழந்தை பொறந்ததுலேர்ந்து எந்த அசைவுமே இல்லை. இதுக்கு பார்வை தெரியுமா, காது கேட்குமாங்கறதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியலை. எந்த
Read 14 tweets
Dec 7
Today is #DattatreyaJayanti #DattaJayanti
Lord Dattatreya is one of the 24 Vishnu’s Incarnations. Lord Dattatreya was born of Rishi Atri and Anausya. The name Dattatreya can be divided into two words, Datta (means Giver) and Atri (Sage Atri). Lord Dattatreya considered as guru Image
of environmental education, gained enlightenment by his observation from surrounding, which provided him 24 gurus. These gurus explain the problems of mundane attachments, and teach the path towards the spiritual self-realization of the Supreme. The core message of Dattatreya is: Image
“Never judge by surface appearances but always seek a deeper Truth”.
Lord Dattatreya has three faces, six hands. The three faces represented the Trinity (Brahma, Vishnu and Shiva). Each pair of hands carries two of the symbols of the three deities. The four dogs who are with Him
Read 34 tweets
Dec 7
#கார்த்திகை_தீப_ஸ்பெஷல் #கணம்புல்ல_நாயனார் தில்லை வீதியெங்கும் மூவாயிரவர் திருமனைகளில் கார்த்திகை தீபங்கள் வைக்க தொடங்கி இருந்தனர், அவற்றை கண்டதும் நாயனாருக்கு இதயம் வேகமெடுத்து துடித்தது. சர்வேஸ்வரா! தீபம் வைக்கத் தொடங்கி விட்டார்களே உங்கள் ஆலயம் தீபமின்றி இருளுமே, என்ன செய்வேன் Image
என்று வாய்விட்டு பதறினார். வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்குத் தலைவனாக விளங்கியவர் சிவனருட்செல்வர் என்னும் நாயனார். அவர் கோவில்களுக்கு விளக்கேற்றுவதை தம் பணியாக செய்து வந்தார். நற்பணி செய்து வந்த இவருக்கு
நாளடைவில் வறுமை தொற்றியது. தன் நிலபுலன்களை விற்று அங்கே இருக்க பிடிக்காமல் தேசாந்திரியாக சென்ற அவர் தில்லை வந்தார். அவ்விடம் மிகவும் பிடித்து போக அங்கேயே தங்க முடிவு செய்தார். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள #திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை
Read 14 tweets
Dec 6
#Kashi_Visit
If one goes to Kashi on a pilgrimage it is said that one must give up eating a fruit, a vegetable, and a leaf forever! What’s the reason behind that?
According to the Shastras, nowhere it is said if one goes to Kashi one must give up these.
Whatever was told in the
Shastras has been either knowingly or unknowingly changed by some one in their favor with half knowledge.
What do the scriptures say about Kashi Kshetra?
Go and take a holy dip in the Ganges at Kashi. Leave #Kayapeksha (Kaya means the physical body and Apeksha is desire) and
#Phalapeksha (Phalapeksha means the desire on the results of the activities that we are supposed to do). So the elders said, be with the thought of devotion on God alone. Over time it has become
literally the Kaya (in Telugu, a Vegetable or an unripe fruit)
and Phala (a ripened
Read 6 tweets
Dec 6
நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியான அருணாச்சல புராணம் எனும் பழைய புத்தகத்தில் வெளியான அருணாச்சல புராண படங்கள். படங்களுக்கான விளக்கக் குறிப்புகள் படங்களின் அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ImageImageImageImage
ImageImageImageImage
ImageImageImageImage
Read 5 tweets
Dec 6
#MahaPeriyava Maha Periyava’s message on Karthigai Deepam

We light up a series of earthen lamps on the day of the star of Kruttika in the month of Kaartigai. At that time we are to sing this sloka as given in the Shastraas:

Keedaa: Patangaa: Masagaascha Vrukchaa: Jale Stale Ye
Nivasanti Jeevaa: I Drushtvaa Pradeepam Na Cha Janma Baajaa Bavanti Nityam Svabasaa Hi Vipraa: II

This means, “We pray that, whosoever sees this lamp that we are lighting, they be worms, birds or mosquitoes or trees and such plants; all life forms which live in water or on earth
or may be human beings of whatever caste or creed; seeing this light may have the effect on them that all their sins are washed away and they may transcend the cycle of life and death and reach everlasting happiness”
Not only life forms in land and water. By saying ‘patangaa:’
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(