M.SivaRajan Profile picture
Dec 14 18 tweets 3 min read
மஹாபாரதம் இறுதி காலம்.

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் கூட அதைத் தடுக்க முடியவில்லை.
தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்.

அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
யாதவர்களும் க்ருஷ்ணரும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது.

தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான்.

உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான்.

அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள்.
எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை.

அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த க்ருஷ்ணரின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
அர்ச்சுனனின் மகன்- அபிமன்யுவின்
மகன்- பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள்.

வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள்.

உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து
மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள்.

மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து
வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள்

தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவு செய்த படி கிளம்பினார்கள்.

அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்து வந்த நாயும் உடன் சென்றது.
பின் தொடர்ந்த நாய்

மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி.

தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.

பாண்டவர்கள் பல நாட்கள் பயணம் செய்து
இமயமலையை அடைந்தார்கள்.

அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர்.

மேரு மலையில் பயணம் சென்ற போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான்.
தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்:

“ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள்.

அதனால் தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்.
“சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன்.

“தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.

பீமன் மீண்டும் காரணம் கேட்டான்.
தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம் தான் காரணம் என்றான் தருமன்.

இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான்.

“தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான்.

தள்ளாடி விழும் சமயத்தில்

“என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான்.

“உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.
ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான்.

நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.

மேரு மலையின் உச்சியை அடைந்தான்.

அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான்.
தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது.

“நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான் தருமன்.
“என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.

அப்போது நாய் மறைந்தது.

அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக் கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன்.
எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை.

இது நான் உனக்கு வைத்த சோதனை.

முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன்.

இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன்.

இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய்.
மகிழ்ச்சியாக சொர்க்கம் செல் என்று தருமதேவர் கூறி மறைந்தார்.

#கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 15
#ஞானி

ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார்.

ரொம்ப பெரிய ஞானி.

மிகவும் வயதாகி விட்டது.

கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.

உங்கள் குரு யார் ? என்று கேட்டார்கள்.

அவர் நிமிர்ந்து பார்த்தார். எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு. Image
அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது.

ஆனால் முக்கியமான மூன்று பேரைப் பற்றி மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

அந்த மூன்று பேரில் ஒருவன் திருடன்.

ஒரு சமயம் ஒரு பாலைவனம் வழியாக நான் போய்க் கொண்டிருந்தேன்.
அப்போது வழி தவறி போய் ஒரு கிராமத்துக்கு போய்விட்டேன்.

அது இருட்டும் நேரம். நடு ராத்திரி ஊரே உறங்கிக் கிடந்தது.

அந்த நேரத்தில் ஒரு ஆள் மட்டும் வீட்டு சுவற்றில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

அவன் உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தான்.
Read 14 tweets
Dec 15
#ஜோதிட_பரிகாரம்

ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.

ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .

அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் . Image
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,

ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
Read 7 tweets
Dec 14
#கதிராமங்கலம்_வன_துர்க்கை

மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று.

மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
சுமார்  2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.  

மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே  இல்லை என்றும்  கூறுகிறார்கள்.

மற்றும் ஒரு விசேஷம்.
எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து  தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம்.
Read 4 tweets
Dec 14
*போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில் போத்துராஜமங்கலம்*

திருவண்ணாமலை

மகாபாரதப் போர் நிகழவிருக்கிற காலம்…

பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவை.

அதை சேகரிப்பதற்காக கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வருகின்றனர்.
அந்த ஊரை ஆட்சி செய்யும் போத்துலிங்கம் என்ற மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன.

அந்த ஆயுதங்களையும், போத்து லிங்க மன்னரையும் பாண்டவ படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.

ஆனால் போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது.
அதிலும், பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்த்ததில்லை.

நினைத்ததை முடிப்பதற்காக கிருஷ்ண லீலை தொடங்கியது.

கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும், அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும், பீமன் விறகுவெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர்.
Read 12 tweets
Dec 13
#கோரக்கர்_சித்தர்_ஜெயந்தி

இன்று கார்த்திகை - ஆயில்யம்.

கோரக்கர் சித்தர் ஜெயந்தி.

இன்று 13/12/2022 செவ்வாய்க்கிழமை கோரக்கர் அவதரித்த நாள் கோரக்கர் ஜெயந்தியாக (கார்த்திகை மாதம் - ஆயில்ய நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது.
சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன்.

ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர்.
என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே.

அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்த போது
Read 14 tweets
Dec 13
#ஓம்_குமாராய_நமஹா

முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது முத்துக்குமார சுவாமி திருக்கோவில்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் ஆறுமுகனாக காட்சியளிக்கிறார்.
இந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்சி பூஜை நடைபெறுவதே இந்த ஆலயத்தின் சிறப்பாக உள்ளது.

இது போன்று ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக எந்த ஆலயத்திலும பூஜை நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கு முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் இல்லை.

இடும்பன் வாகனமாக இருக்கிறார்.

ஆலய விழாக்களின் போதும், இடும்பன் மீது அமர்ந்தே முருகப்பெருமான் வீதி உலா வருகிறார்.

இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(